Jump to content

' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!' -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம்


Recommended Posts

' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!'  -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம்

சசிகலா-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

' முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சராகியிருக்க முடியும்' -இன்று போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்தான் சசிகலா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ' மத்திய அரசின் அழுத்தத்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் சீனியர்களை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. அடுத்த இரண்டே நாளில், 'என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டனர்' என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, எம்.எல்.ஏக்களை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்தார் சசிகலா. ' சட்டசபையில் எனக்குத் தனி மெஜாரிட்டி உள்ளது. என்னைப் பதவியேற்க அழைப்பு விடுங்கள்' ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை மனு அளித்தார். ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரிடம் தனியாகக் கடிதம் ஒன்றை அளித்தார். கடந்த ஐந்து நாட்களாக அதிகாரத்தை மையமாக வைத்து நடக்கும் போட்டியில், ஆளுநரின் கருத்து என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில், இன்று போயஸ் கார்டனில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சசிகலா,

செங்கோட்டையன்" முதலமைச்சர் ஆக வேண்டும் என ஒரு நொடிகூட நான் எண்ணியதில்லை. எம்.ஜி.ஆர் இறந்த போது அவரது இறுதி ஊர்வல வண்டியில் ஏற விடாமல் ஜெயலலிதாவைத் தடுத்து தள்ளிவிட்டபோது, அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரசியலை விட்டே ஜெயலலிதா விலகலாம் என்று நினைத்தார். அதை பலமுறை என்னிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். நான்தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அரசியலில் தொடர வைத்தேன். ஒரு பன்னீர்செல்வம் அல்ல, ஆயிரம் பன்னீர் செல்வத்தை நான் பார்த்திருக்கிறேன். 33 ஆண்டுகளாக நான் ஜெயலலிதாவுடன் இருந்ததால் பயமே இல்லாமல் போனது. தி.மு.க.வுடன் பன்னீர்செல்வம் மிகவும் இணக்கமாக சென்றது தவறாக தோன்றியது. அந்த காரணத்தினாலேயே நான் முதல்வராக முடிவு செய்தேன்' என மனம் திறந்து பேசினார். 

கோல்டன் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் மத்தியில் நேற்று அவர் பேசிய பேச்சுக்கும் இன்று அவருடைய வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். ' ஒருவேளை முதல்வர் பதவியை கட்சியின் சீனியர்கள் யாருக்காவது விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டாரா?' எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய கார்டன் உதவியாளர் ஒருவர், " ஆளுநர் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதில் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. ' நமக்குப் போதுமான பெரும்பான்மை இருக்கிறது என்றால்கூட, கட்சியை உடைக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்துகிறார்கள்' என உறவினர்களிடம் வேதனைப்பட்டார்.

இதையடுத்து, பா.ஜ.க மேலிடத்திற்கு நேரடியாக சில தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் தூது வேலைகளைத் தொடங்கினர் அவரது உறவினர்கள். இந்தப் பணியில் நான்கு குழுக்கள் ஈடுபட்டன. சொல்லிவைத்தார்போல, அந்த நான்கு குழுக்களும், பா.ஜ.கவின் டிமாண்ட் என்ன என்பது பற்றி விவரித்துள்ளனர். அதைக் கேட்ட சசிகலா அதிர்ச்சியோடு, ' அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது என்பது எந்தக் காலத்திலும் நடக்காத காரியம். அது தற்கொலைக்குச் சமம்' என ஆதங்கப்பட்டார். அந்தக் கோரிக்கையில் மிக முக்கியமானது, உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் பா.ஜ.கவுக்கான இடப் பங்கீடு முதல் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதன்பின்னர், 'அவர்களோடு பேசுவது சரியாக இருக்காது' என்ற நிலையில், சுப்ரமணியன் சுவாமியை நேரடியாக ஆளுநரை சந்திக்க வைத்தனர். அந்த சந்திப்பிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை" என விவரித்தவர், 

ops_new2_15436.jpg

" பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள அ.தி.மு.க எம்.பிக்களுக்கு பா.ஜ.க மேலிடம் சில உத்தரவாதங்களை அளித்துள்ளது. அதன் விளைவாகத்தான் ஓ.பி.எஸ்ஸை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அதுவும், ஒரேநாளில் அனைவரும் சந்திக்காமல் நாளொன்றுக்கு இருவர் வீதம் செல்லுமாறு உத்தரவு வந்துள்ளது. மீடியாக்களில் ஓ.பி.எஸ் செல்வாக்கு அதிகரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பது மிக முக்கியமான அசைன்மென்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் கட்சியின் பிடி கை நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்துவிட்டார். 'சசிகலா முதல்வர் ஆகக் கூடாது' என்பதுதான் மத்திய அரசின் முக்கிய நோக்கம். அதை எதிர்த்துத்தான் இவ்வளவு நாட்கள் போராடிக் கொண்டிருந்தார். ஆளுநர் தாமதிப்பதையும் இன்னொரு வெளிப்பாடாகப் பார்க்கிறார். கட்சி நிர்வாகிகளும் எம்.பிக்களும் நாளுக்கு நாள் ஓ.பி.எஸ் நோக்கிச் செல்கின்றனர். எம்.எல்.ஏக்களையும் நீண்டநாள் சிறை வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். ரிசார்ட்டில் இப்போதே சிலர் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர். இப்போது அவர் முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று சசிகலா முதல்வராவது; இரண்டாவது சசிகலா சொல்லும் நபர் முதல்வராக பதவியேற்பது; மூன்றாவது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது. இதில் இரண்டாவது வாய்ப்பு குறித்துத்தான் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தற்போதுள்ள சூழலில், கட்சியின் சீனியர் யாரையாவது முன்னிறுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சசிகலா. இதற்கு நடராசன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அடுத்த முதல்வர் ரேஸில் கட்சியின் அவைத் தலைவரான செங்கோட்டையனை முன்னிறுத்தினால், பன்னீர்செல்வம் எதிர்ப்புக் குரல் அடங்கிப் போகும் என்பது அவருடைய எண்ணம். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி என்ற தோற்றமும் குற்றச்சாட்டுகளில் அடிபடாதவர் என்ற இமேஜும் இருக்கிறது. கட்சித் தொண்டர்களும் செங்கோட்டையனை ஏற்றுக் கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறார். இதற்கு தம்பிதுரை தரப்பில் இருந்தும் எடப்பாடி பக்கம் இருந்து எதிர்ப்புக் குரல் எழும்புவதையும் கவனத்தில் எடுத்து வருகிறார். தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார் சசிகலா" என்றார் விளக்கமாக. 

அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முற்படுகிறார் சசிகலா. ' இதற்கும் முட்டுக்கட்டை விழுந்தால், அடுத்தகட்ட போராட்டத்தை நோக்கி அவர் செல்லலாம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/80637-sasikala-plans-to-leave-the-chief-minister-race-as-a-safe-strategy.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.