Jump to content

அம்மா சமாதி


Recommended Posts

அம்மா சமாதி

ன்னீர் வடிக்கும்
கண்ணீரில்
அம்மா சமாதியே
அரை அடி உயரும்.

opsசசி துடைக்கும்
கைக்குட்டையில்
காவிரி டெல்டா
ஒருபோகம் விளையும்.

அம்மாவை நினைத்தாலே
அழத்தான் முடியும்.
அவர்களுக்கோ,
அழுகை
சிரிப்பின் முக்காடு
சிரிப்பு
அழுகையின் வேக்காடு.

அழுகைப் போட்டியில்
யாருக்கு முதல் பரிசு?.
தடுமாறுது தமிழகம்
அழுகாச்சி காவியத்தில்
அமுக்கி எடுக்குது ஊடகம்.

சிரித்ததனால்
நான் மனிதன் என்பது
பன்னீரு
சிரித்ததனாலேயே
நீ மனிதனில்லை
என்பது வெந்நீரு.

நீ
பெரிய  குளமென்றால்
நான்
மன்னார் குடி!

அம்மாவுக்கே
நான்தான் ஆன்மா
அடைக்கலம் தருமோ
அம்மா ஆன்மா?
மெரினா தியானத்தை
கலைக்கும்  சின்னம்மா!

பேயைப்  பற்றி
அதன் பாட்டியிடம்
புகார் சொல்வது போன்றது
சின்னம்மாவைப் பற்றி
பெரியம்மாவிடம்
முறையிடுவது.

sasikalaமுதலில்,
எனக்கு எதிரே
உட்காரும் தைரியம்
உங்களுக்கு எப்படி வந்தது?
கடைக்கண் பார்வைக்கு
கிடையாசனத்திலேயே கிடந்தவர்
அரியாசனத்திற்காக
பத்மாசனமா?
கோபத்தில் குமுறுது
அம்மாவின் ஆவி!

பேய்களை சமாளிக்க
ஒரே வழி
பேயாகி விடுவதுதான்.
பேய்களுக்கு கால்களில்லை
நிமிர்ந்து நிற்க முடியாது
நேரத்திற்கேற்ப நெளியலாம்.
இடம் தாவி அலைகின்றன
கரைவேட்டி ஆவிகள்.

பிணைக்கைதிகளோடு
ஊரையே சுற்றுது
மன்னார்குடி பஸ்.
அம்மாவைச் சுற்றிவந்து
பழத்தைக் கேட்கிறார்
ஒ.பி.‍எஸ்.

நாம்
வாழ்வுக்கு வழி தேடுகிறோம்
அவர்களோ
சமாதி தேடுகிறார்கள்.

செத்தாலும் விடமாட்டார்
ஜெயலலிதா!
எச்சரிக்கைத் தமிழகமே
ஏய்ப்பவருக்கு
அம்மா சமாதி
ஏமாந்தவனுக்கு
அடுத்த சமாதி!

 துரை. சண்முகம்

http://www.vinavu.com/2017/02/10/ops-and-sasikala-played-drama-at-jaya-memorial/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கங்கையை வென்றவன்,
கடாரம் பிளந்தவன்..!
...,
பிடாரித் தெய்வத்துக்கு....,
கிடாய் வெட்டி வேள்வி செய்தவன்...!

உலகெல்லாம் ,
உன் பெருமை பேசுகிறாய்!

ஒரு கோப்பை பிளேன் டீயும்,
ஒரு சுருட்டும் போதும்,
உன்னை வாங்க...!

சொன்னவன் வேறு யாருமல்ல..!
நம் ஊரவன் தான்..!

மகா ராணியின் கவுன்சிலர்கள்,
மண் கவ்விய வரலாறு!

அது மட்டுமா?
இணுவில் திருவிழா பார்த்தேன்!
இரத்தம் கொதித்தது..!
ஏனெனில்..,
கோவிலடியில் குடியிருந்தவன் நான்!

கேரளத்தின் கொட்டுக்கு..,
நீ தாளம் போடுகிறாய்!

சிங்களத்தின் மேளத்துக்கு மட்டும்,
பொங்கி எழுகிறாயே?
ஏன்..?

அதுவும் கலாச்சாரத்தின்..,
பரி மாற்றம் தானே!

அனுமானுக்குச் சிலை எடுக்கிறாயே!
அவன் யார்?
உன்னை அழித்தவனின் தூதுவன் அல்லவா?

சரி... அதை விடுவோம்!

ஒரு கோப்பைத் தேனீர்,..
இன்று ஒரு கோடி ரூபாயாகி,
ஒரு எம்.எல்.யின் விலையாக உள்ளது!

தமிழா...!
நீ வெட்கமில்லாதவன்!

இருந்திருந்தால்,
கோப்பா புலவின் கண்ணீரில்,
நீயும் கரைந்திருப்பாய்!

மதுரையை எரித்திருப்பாய்!

வேஷங்கள்...!
உனக்கு விலை பேசுகின்றன!

நீயும் விலை போகின்றாய்!
இது தானே உனது வரலாறு?

அரிவரிக் காலத்தில்..,,
ஆசிரியர் ஒருவர்....!

எனது 'ரிப்போர்ட்' புத்தகத்தில்..,
எப்போதும் எழுதுவது...,
'இன்னும் திருந்த இடமுண்டு" !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

கங்கையை வென்றவன்,
கடாரம் பிளந்தவன்..!
...,
பிடாரித் தெய்வத்துக்கு....,
கிடாய் வெட்டி வேள்வி செய்தவன்...!

உலகெல்லாம் ,
உன் பெருமை பேசுகிறாய்!

ஒரு கோப்பை பிளேன் டீயும்,
ஒரு சுருட்டும் போதும்,
உன்னை வாங்க...!

சொன்னவன் வேறு யாருமல்ல..!
நம் ஊரவன் தான்..!

மகா ராணியின் கவுன்சிலர்கள்,
மண் கவ்விய வரலாறு!

அது மட்டுமா?
இணுவில் திருவிழா பார்த்தேன்!
இரத்தம் கொதித்தது..!
ஏனெனில்..,
கோவிலடியில் குடியிருந்தவன் நான்!

கேரளத்தின் கொட்டுக்கு..,
நீ தாளம் போடுகிறாய்!

சிங்களத்தின் மேளத்துக்கு மட்டும்,
பொங்கி எழுகிறாயே?
ஏன்..?

அதுவும் கலாச்சாரத்தின்..,
பரி மாற்றம் தானே!

அனுமானுக்குச் சிலை எடுக்கிறாயே!
அவன் யார்?
உன்னை அழித்தவனின் தூதுவன் அல்லவா?

சரி... அதை விடுவோம்!

ஒரு கோப்பைத் தேனீர்,..
இன்று ஒரு கோடி ரூபாயாகி,
ஒரு எம்.எல்.யின் விலையாக உள்ளது!

தமிழா...!
நீ வெட்கமில்லாதவன்!

இருந்திருந்தால்,
கோப்பா புலவின் கண்ணீரில்,
நீயும் கரைந்திருப்பாய்!

மதுரையை எரித்திருப்பாய்!

வேஷங்கள்...!
உனக்கு விலை பேசுகின்றன!

நீயும் விலை போகின்றாய்!
இது தானே உனது வரலாறு?

அரிவரிக் காலத்தில்..,,
ஆசிரியர் ஒருவர்....!

எனது 'ரிப்போர்ட்' புத்தகத்தில்..,
எப்போதும் எழுதுவது...,
'இன்னும் திருந்த இடமுண்டு" !

மிக நீண்ட காலத்தின் பின்.... அருமையான கவிதை ஒன்றை எடுத்தியிருக்கின்றீர்கள் புங்கையூரான். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

மிக நீண்ட காலத்தின் பின்.... அருமையான கவிதை ஒன்றை எடுத்தியிருக்கின்றீர்கள் புங்கையூரான். :)

 

நன்றி.... தமிழ் சிறி அண்ணா!:mellow:

உங்கள் ஊக்குவித்தலை வாசிக்கும் போது..ஒரு அழகிய 'அப்சரஸ்' முதுகில் தடவுவது மாதிரி இருக்கும்!:112_lips:

யாழில் கொஞ்சம் முன்போல எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

நன்றி.... தமிழ் சிறி அண்ணா!:mellow:

உங்கள் ஊக்குவித்தலை வாசிக்கும் போது..ஒரு அழகிய 'அப்சரஸ்' முதுகில் தடவுவது மாதிரி இருக்கும்!:112_lips:

யாழில் கொஞ்சம் முன்போல எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்! 

புங்கையூரான்..... நீங்கள் யாழில் தொடர்ந்து கவிதை எழுத, முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சியான விடயம்.
உங்கள் கவிதைகள்... யதார்த்தமான பல விடயங்களையும், தொட்டுச்  செல்லும் என்பதால்...
அதனை ஒரு முறை அல்ல, பல முறை வாசித்து, ரசிப்போம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் ..... மீண்டும் உங்கள் ஆக்கங்களைக் காணும் ஆவலுடன்........ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.