Jump to content

விடிவெள்ளி


Recommended Posts

சிறுகதை - விடிவெள்ளி

ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

1.jpg

“யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள்.

“யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு.
24p2.jpg
“அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து.
வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல பார்த்தாள் வள்ளி. எட்டு ஊரிலேயே பெரிய பண்ணையக்காரரான கருப்புச்சாமி அய்யாவின் ஒரே மகள். அந்த ஊரிலேயே டவுனுக்குப் போய் பத்தாப்பு வரையில் படித்தவள். வெளியூரில் மாப்பிள்ளை பார்த்த அப்பாவிடம் சண்டை போட்டு சொந்த மாமனான பேச்சியப்பனையே ஆசை ஆசையாகக் கட்டிக் கொண்டவள்.

வள்ளிகூடக் கேட்டாள்… ``ஏக்கா, நீயோ அம்புட்டு அளகா இருக்க… பேச்சி அய்த்தானோ பேய்க் கரிசல் நெறம். நீ பட்டணம் போயி படிச்சிருக்க. அவரு நம்மூரு வயக்காட்டையே தாண்டுனதில்ல… அப்புறம் எப்படிக்கா கட்டிக்கிட்ட?”

அந்தக் கேள்விக்கு தையமுத்து சொன்ன பதில்தான் வள்ளியை பிரமிக்க வைத்தது. “வள்ளி… வாழ்க்கை எப்பவுமே ஒரு வயக்காடு மாதிரிதான்… பாத்தி கட்டிப் பயிர் போடற நாலுக்கு நாலு வயல் மாதிரி ஆத்தாவோட கர்ப்பப்பைல இருந்து ஜனிச்சு மறுபடியும் நாலு பக்க குழிக்குள்ள போறவகதான் மனுசப்பயலுக. வித போட்டு முளைச்சு வர நாத்து மாரி வந்து விழுற ஜென்மம் ஆடாத ஆட்டமில்லை… அறுத்துப் போட்ட கதிரு மாரி எல்லாமே ஒரு நா தவிடா மாறி மண்ணோட கலந்துரும். நானு அப்படி ஊருக்கே சோறு போடற மண்ணுல பொறந்தவ… எல்லாருக்கும் வயித்தை நிறைக்கற கையும், மனச நினைக்கற குணமும்தாண்டி பெருசு… நானு படிச்சவனு சொல்லிக்கறதவிட பத்துப் பேருக்குக் கஞ்சி ஊத்தர விவசாயி பொண்டாட்டினு சொல்லிக்கறதுதாண்டி இந்தப் பொறப்புல எனக்குப் பெருமை...”

இப்படிப்பட்ட தையமுத்து இப்போது எட்டு மாச கர்ப்பிணியாக நிற்கிறாள். வயிற்றுப் பாரத்தின் பூரிப்பால் பொன் மஞ்சளாக உருவெடுத்து நிற்கும் அவள் வயலுக்கு வருவதை மட்டும் விட்டுவிடவே இல்லை.

“அக்கா... உன் முகமே சரியில்லையே? ஏதும் சுகவீனமா வருதா? இல்லை, வலியெடுக்குதுனாலும் சொல்லிடுக்கா… எனக்கு ரொம்பப் பயமா இருக்கு… நீ பாட்டுக்கு அரைக் கழனிய களையெடுத்திருக்க” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் வள்ளி.

“இல்ல வள்ளி… பயப்படாத. அதெல்லாம் இல்ல, எம் புள்ளைக்கு கழனியோட மகத்துவத்த சொல்லிக் கிட்டே களையெடுத்தேனா எப்படி இவ்ளோ தொலவு வந்தேன்னு எனக்கே தெரியலை… ஒரு வேளை எம்புள்ளை பிற்காலத்துல பெரும் கழனிக்காரனா வருவானு நினைக்கறேன்” என்று, முகத்தில் பூத்த வியர்வையைத் துடைத்த தையமுத்து, “இருட்டி… எனக்கு வயிறு ஏதோ பிசையுது.கொஞ்சம் வரப்புல உட்கார்ந்துட்டு, பையப் போலாம்” - நடந்தவளைக் கைப்பிடித்து இழுத்தாள் உடனே துரிதமாகச் செயல்பட்ட வள்ளி, “ஏலே, இங்கன வாங்கடி… முத்துவைக் கிணத்துக் கட்டைக்குத் தூக்குங்க… பிள்ள வலிதாண்டி எடுத்துப்போச்சு…” என்று வயலே அதிரக் கத்தினாள். சத்தம் கேட்ட அண்டை வயல் பெண்கள் வேகமாக ஓடி வந்தனர் பேச்சியின் வயல் நோக்கி. உழுதுகொண்டிருந்த ஆண்களும் சூழ்நிலை உணர்ந்து விலகிப் போக ஆரம்பித்தார்கள்.

கிணத்துக் கட்டைக்குத் தூக்கிச் சென்ற தையமுத்துவைச் சுற்றி அரைவட்டமாய்ச் சூழ்ந்துகொண்ட னர் பெண்கள். சாமியைக் கும்பிட்டுக் கொண்டே அம்சவேணி, தையமுத்து வின் இடுப்பெலும்பை மெதுவாக இளக்கினாள். அவ்வளவுதான், அத்தனை நேரம் முகத்தில் வலியைக் காட்டிக்கொள்ளாத தையமுத்து, “ஆத்தாஆஆஆஆ” என்று கத்திய கத்தில் நெற்கதிர் தின்ற கரிச்சான் குருவிகள் சிறகடித்துப் பறந்தன.
“ஆத்தா… உனக்கு அப்படியே நம்ம அளகர் சாமியே மகனா வந்து பொறந்துருக்கார்டி… என்ன கள முகத்துல… நீ நினைச்ச மாரி உன் வயக்காட்டுலையே புள்ளையைப் பெத்து இறக்கிட்ட… ஏ வள்ளி, இங்கன வந்து புள்ளையப் புடிடி மசமசனு நிக்காம… அப்படியே, அந்த வரப்புத் தண்ணிய தலைல தெளிங்கடி… நம்ம கழனியக் காக்க வந்த மவராசண்டி இவன்” என்று உற்சாகமாகக் கூச்சலிட்டாள் வேணி.

குழந்தைக்கு அழகர் என்று பெயர். இதோ, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவனை மேலே படிக்க வைக்க வேண்டும் என்று குடும்பமே உட்கார்ந்து பேசி முடிவெடுத்தது. இந்த நேரத்தில்தான் அழகரின் ஆசிரியர், “நீ எடுத்த மார்க்குக்கு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பே கிடைக்கும் அழகர். நல்ல வேலைக்கு உத்தரவாதம்…” என்றார்.

24p3.jpg

பேச்சியோ, “ஏ அழகரு, பேசாம நீ வைத்தியனுக்குப் படி… நம்ம ஊரில் வைத்தியம் பார்க்க பல மைல் தூரம் போவேண்டி இருக்கு…

நீ படிச்சுப்புட்டனா நானும் பெருமைப்பட்டுக்குவேன்.. ஊருக் கும் வைத்தியம் பார்த்தாப்பல ஆச்சு” என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தையமுத்து மட்டும் அமைதியாக இருந்தாள்.

இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தான் அழகர். பேச்சியோ, அழகரின் ஆசிரியர்களிடம் கேட்டு இன்ஜினீ யரிங், மருத்துவம் என்று அழகர் பெயரில் விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் காலையில் வீடு முழுவதும் அழ கரைத் தேடிய பேச்சி, தையமுத்துவைக் கூப்பிட்டு, “ஏ... எங்கடி அவனக் காணோம்… நாளைக்கு ஏதோ பரீட்சை எழுதணுமாம் அவன்… அவுக வாத்தியாரய்யா சொன்னாரு…கூட்டிப் போகலாமுனு பார்த்தா… இவ்வளோ வெள்ளனம் எங்கன போனான்?” என்று மகனைத் தேடிக் கிளம்பினான்.

ஊர் முழுவதும் சுற்றி அலுத்துப் போனான் பேச்சி. இதற்குள் வள்ளியும் வெரசலா தையமுத்துவைத் தேடி வந்தாள். “என்னக்கா அழகரைக் காணோம்னு அய்த்தான் சல்லடை போட்டு ஊரை சலிச்சுக்கிட்டு இருக்காரு…. ஆனா, நீ சலனப்படாம உட்கார்ந்திருக்க” என்றாள்.

அவளோ, “இல்லைடி வள்ளி, எனக்கு என்னன்னே தெரியலை. மனசுக்குள்ள ஏதோ நிரம்பி வழியுது. என் புள்ள எங்கனயும் போக மாட்டாண்டி… அவன் நல்லதையேதான் செய்வான்” என்றாள்.

அதற்குள் மூணு மணி பேருந்தும் ஊருக்குள் வந்து விட, இறங்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த அழகரை ஒருவழியாகப் பார்த்தான் பேச்சி.

“ஏ அழகரு, சொல்லிக்காம கொள்ளிக்காம எங்க போன? என்னையும் ஆத்தாளையும் இப்படி பயமுறுத்திப்புட்டியே” என்றான் பேச்சி. “நீ வேணா பயந்திருப்ப… ஆனா, ஆத்தா கண்டிப்பா பயந்திருக்காது… சரி வா, வீட்டுக்குப் போவோம்… எல்லாம் சொல்றேன்” என்றபடி வீட்டுக்கு விரைந்தான் அழகர்.

அதற்குள் வீட்டில் கூடியிருந்த உறவின் முறைகள், “ஏய்யா அழகரு... எங்கய்யா போன? ஊரு சனமே கூடி நிக்கறோம் உனக்காக…”  என்றனர். அந்த எளிய மனிதர்களின் பாசம் அழகரை உருக்கியது.

“அய்த்த… சித்தி… பெரியப்பா எல்லார் கிட்டயும் மொதல்ல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். தகவல் கூட சொல்ல முடியாத ஊருல நான் அவ்வளவு வெரசா காலையில வெளில போனது தப்புதான். ஆனா, நான் ரொம்ப நல்ல முடிவு எடுக்கத்தான் போயிருந்தேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் தையமுத்து.

“அப்பா... என்னை மன்னிச்சுடுங்க. ஏன்னா, நீங்க நினைச்ச மாரியோ, என் வாத்தியார் நினைச்ச மாரியோ, இல்லை தாத்தாவோட ஆசைப்படியோ எதுவும் படிக்கப் போறதில்லை”என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் பேச்சி.

“ஆமாப்பா…. என் ஆத்தாவோட ஆசைப்படி விவசாயமும் விட்டுப் போகாம, அதே நேரத்தில் என் மேல் படிப்பும் கெடாம நான் விவசாயக் கல்வியத்தான் படிக்கப்போறேன்” சொன்னவனை பெருமிதமாகப் பார்த்தனர் பேச்சியும் ஊராரும்.

 அவ்வளவு நேரம் அசையாமல் நின்றிருந்த தையமுத்து கரகரவெனக் கண்ணீர் கொட்டிய கண்களுடன் வேகமாக மகனைக் கட்டிப் பிடித்து உச்சி மோந்தாள். “உண்மையிலேயே அம்சவேணி அக்கா சொன்னாப்புல நீ கழனியைக் காக்க வந்த என் கரைமேல் அழக ரய்யாதான்யா” என்றாள், அந்த விவசாயக் கிராமத்தின் விடிவெள்ளியாக மின்னிய அழகரைப் பார்த்து!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.