Jump to content

விடிவெள்ளி


Recommended Posts

சிறுகதை - விடிவெள்ளி

ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

1.jpg

“யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள்.

“யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு.
24p2.jpg
“அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து.
வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல பார்த்தாள் வள்ளி. எட்டு ஊரிலேயே பெரிய பண்ணையக்காரரான கருப்புச்சாமி அய்யாவின் ஒரே மகள். அந்த ஊரிலேயே டவுனுக்குப் போய் பத்தாப்பு வரையில் படித்தவள். வெளியூரில் மாப்பிள்ளை பார்த்த அப்பாவிடம் சண்டை போட்டு சொந்த மாமனான பேச்சியப்பனையே ஆசை ஆசையாகக் கட்டிக் கொண்டவள்.

வள்ளிகூடக் கேட்டாள்… ``ஏக்கா, நீயோ அம்புட்டு அளகா இருக்க… பேச்சி அய்த்தானோ பேய்க் கரிசல் நெறம். நீ பட்டணம் போயி படிச்சிருக்க. அவரு நம்மூரு வயக்காட்டையே தாண்டுனதில்ல… அப்புறம் எப்படிக்கா கட்டிக்கிட்ட?”

அந்தக் கேள்விக்கு தையமுத்து சொன்ன பதில்தான் வள்ளியை பிரமிக்க வைத்தது. “வள்ளி… வாழ்க்கை எப்பவுமே ஒரு வயக்காடு மாதிரிதான்… பாத்தி கட்டிப் பயிர் போடற நாலுக்கு நாலு வயல் மாதிரி ஆத்தாவோட கர்ப்பப்பைல இருந்து ஜனிச்சு மறுபடியும் நாலு பக்க குழிக்குள்ள போறவகதான் மனுசப்பயலுக. வித போட்டு முளைச்சு வர நாத்து மாரி வந்து விழுற ஜென்மம் ஆடாத ஆட்டமில்லை… அறுத்துப் போட்ட கதிரு மாரி எல்லாமே ஒரு நா தவிடா மாறி மண்ணோட கலந்துரும். நானு அப்படி ஊருக்கே சோறு போடற மண்ணுல பொறந்தவ… எல்லாருக்கும் வயித்தை நிறைக்கற கையும், மனச நினைக்கற குணமும்தாண்டி பெருசு… நானு படிச்சவனு சொல்லிக்கறதவிட பத்துப் பேருக்குக் கஞ்சி ஊத்தர விவசாயி பொண்டாட்டினு சொல்லிக்கறதுதாண்டி இந்தப் பொறப்புல எனக்குப் பெருமை...”

இப்படிப்பட்ட தையமுத்து இப்போது எட்டு மாச கர்ப்பிணியாக நிற்கிறாள். வயிற்றுப் பாரத்தின் பூரிப்பால் பொன் மஞ்சளாக உருவெடுத்து நிற்கும் அவள் வயலுக்கு வருவதை மட்டும் விட்டுவிடவே இல்லை.

“அக்கா... உன் முகமே சரியில்லையே? ஏதும் சுகவீனமா வருதா? இல்லை, வலியெடுக்குதுனாலும் சொல்லிடுக்கா… எனக்கு ரொம்பப் பயமா இருக்கு… நீ பாட்டுக்கு அரைக் கழனிய களையெடுத்திருக்க” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் வள்ளி.

“இல்ல வள்ளி… பயப்படாத. அதெல்லாம் இல்ல, எம் புள்ளைக்கு கழனியோட மகத்துவத்த சொல்லிக் கிட்டே களையெடுத்தேனா எப்படி இவ்ளோ தொலவு வந்தேன்னு எனக்கே தெரியலை… ஒரு வேளை எம்புள்ளை பிற்காலத்துல பெரும் கழனிக்காரனா வருவானு நினைக்கறேன்” என்று, முகத்தில் பூத்த வியர்வையைத் துடைத்த தையமுத்து, “இருட்டி… எனக்கு வயிறு ஏதோ பிசையுது.கொஞ்சம் வரப்புல உட்கார்ந்துட்டு, பையப் போலாம்” - நடந்தவளைக் கைப்பிடித்து இழுத்தாள் உடனே துரிதமாகச் செயல்பட்ட வள்ளி, “ஏலே, இங்கன வாங்கடி… முத்துவைக் கிணத்துக் கட்டைக்குத் தூக்குங்க… பிள்ள வலிதாண்டி எடுத்துப்போச்சு…” என்று வயலே அதிரக் கத்தினாள். சத்தம் கேட்ட அண்டை வயல் பெண்கள் வேகமாக ஓடி வந்தனர் பேச்சியின் வயல் நோக்கி. உழுதுகொண்டிருந்த ஆண்களும் சூழ்நிலை உணர்ந்து விலகிப் போக ஆரம்பித்தார்கள்.

கிணத்துக் கட்டைக்குத் தூக்கிச் சென்ற தையமுத்துவைச் சுற்றி அரைவட்டமாய்ச் சூழ்ந்துகொண்ட னர் பெண்கள். சாமியைக் கும்பிட்டுக் கொண்டே அம்சவேணி, தையமுத்து வின் இடுப்பெலும்பை மெதுவாக இளக்கினாள். அவ்வளவுதான், அத்தனை நேரம் முகத்தில் வலியைக் காட்டிக்கொள்ளாத தையமுத்து, “ஆத்தாஆஆஆஆ” என்று கத்திய கத்தில் நெற்கதிர் தின்ற கரிச்சான் குருவிகள் சிறகடித்துப் பறந்தன.
“ஆத்தா… உனக்கு அப்படியே நம்ம அளகர் சாமியே மகனா வந்து பொறந்துருக்கார்டி… என்ன கள முகத்துல… நீ நினைச்ச மாரி உன் வயக்காட்டுலையே புள்ளையைப் பெத்து இறக்கிட்ட… ஏ வள்ளி, இங்கன வந்து புள்ளையப் புடிடி மசமசனு நிக்காம… அப்படியே, அந்த வரப்புத் தண்ணிய தலைல தெளிங்கடி… நம்ம கழனியக் காக்க வந்த மவராசண்டி இவன்” என்று உற்சாகமாகக் கூச்சலிட்டாள் வேணி.

குழந்தைக்கு அழகர் என்று பெயர். இதோ, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவனை மேலே படிக்க வைக்க வேண்டும் என்று குடும்பமே உட்கார்ந்து பேசி முடிவெடுத்தது. இந்த நேரத்தில்தான் அழகரின் ஆசிரியர், “நீ எடுத்த மார்க்குக்கு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பே கிடைக்கும் அழகர். நல்ல வேலைக்கு உத்தரவாதம்…” என்றார்.

24p3.jpg

பேச்சியோ, “ஏ அழகரு, பேசாம நீ வைத்தியனுக்குப் படி… நம்ம ஊரில் வைத்தியம் பார்க்க பல மைல் தூரம் போவேண்டி இருக்கு…

நீ படிச்சுப்புட்டனா நானும் பெருமைப்பட்டுக்குவேன்.. ஊருக் கும் வைத்தியம் பார்த்தாப்பல ஆச்சு” என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தையமுத்து மட்டும் அமைதியாக இருந்தாள்.

இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தான் அழகர். பேச்சியோ, அழகரின் ஆசிரியர்களிடம் கேட்டு இன்ஜினீ யரிங், மருத்துவம் என்று அழகர் பெயரில் விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் காலையில் வீடு முழுவதும் அழ கரைத் தேடிய பேச்சி, தையமுத்துவைக் கூப்பிட்டு, “ஏ... எங்கடி அவனக் காணோம்… நாளைக்கு ஏதோ பரீட்சை எழுதணுமாம் அவன்… அவுக வாத்தியாரய்யா சொன்னாரு…கூட்டிப் போகலாமுனு பார்த்தா… இவ்வளோ வெள்ளனம் எங்கன போனான்?” என்று மகனைத் தேடிக் கிளம்பினான்.

ஊர் முழுவதும் சுற்றி அலுத்துப் போனான் பேச்சி. இதற்குள் வள்ளியும் வெரசலா தையமுத்துவைத் தேடி வந்தாள். “என்னக்கா அழகரைக் காணோம்னு அய்த்தான் சல்லடை போட்டு ஊரை சலிச்சுக்கிட்டு இருக்காரு…. ஆனா, நீ சலனப்படாம உட்கார்ந்திருக்க” என்றாள்.

அவளோ, “இல்லைடி வள்ளி, எனக்கு என்னன்னே தெரியலை. மனசுக்குள்ள ஏதோ நிரம்பி வழியுது. என் புள்ள எங்கனயும் போக மாட்டாண்டி… அவன் நல்லதையேதான் செய்வான்” என்றாள்.

அதற்குள் மூணு மணி பேருந்தும் ஊருக்குள் வந்து விட, இறங்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த அழகரை ஒருவழியாகப் பார்த்தான் பேச்சி.

“ஏ அழகரு, சொல்லிக்காம கொள்ளிக்காம எங்க போன? என்னையும் ஆத்தாளையும் இப்படி பயமுறுத்திப்புட்டியே” என்றான் பேச்சி. “நீ வேணா பயந்திருப்ப… ஆனா, ஆத்தா கண்டிப்பா பயந்திருக்காது… சரி வா, வீட்டுக்குப் போவோம்… எல்லாம் சொல்றேன்” என்றபடி வீட்டுக்கு விரைந்தான் அழகர்.

அதற்குள் வீட்டில் கூடியிருந்த உறவின் முறைகள், “ஏய்யா அழகரு... எங்கய்யா போன? ஊரு சனமே கூடி நிக்கறோம் உனக்காக…”  என்றனர். அந்த எளிய மனிதர்களின் பாசம் அழகரை உருக்கியது.

“அய்த்த… சித்தி… பெரியப்பா எல்லார் கிட்டயும் மொதல்ல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். தகவல் கூட சொல்ல முடியாத ஊருல நான் அவ்வளவு வெரசா காலையில வெளில போனது தப்புதான். ஆனா, நான் ரொம்ப நல்ல முடிவு எடுக்கத்தான் போயிருந்தேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் தையமுத்து.

“அப்பா... என்னை மன்னிச்சுடுங்க. ஏன்னா, நீங்க நினைச்ச மாரியோ, என் வாத்தியார் நினைச்ச மாரியோ, இல்லை தாத்தாவோட ஆசைப்படியோ எதுவும் படிக்கப் போறதில்லை”என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் பேச்சி.

“ஆமாப்பா…. என் ஆத்தாவோட ஆசைப்படி விவசாயமும் விட்டுப் போகாம, அதே நேரத்தில் என் மேல் படிப்பும் கெடாம நான் விவசாயக் கல்வியத்தான் படிக்கப்போறேன்” சொன்னவனை பெருமிதமாகப் பார்த்தனர் பேச்சியும் ஊராரும்.

 அவ்வளவு நேரம் அசையாமல் நின்றிருந்த தையமுத்து கரகரவெனக் கண்ணீர் கொட்டிய கண்களுடன் வேகமாக மகனைக் கட்டிப் பிடித்து உச்சி மோந்தாள். “உண்மையிலேயே அம்சவேணி அக்கா சொன்னாப்புல நீ கழனியைக் காக்க வந்த என் கரைமேல் அழக ரய்யாதான்யா” என்றாள், அந்த விவசாயக் கிராமத்தின் விடிவெள்ளியாக மின்னிய அழகரைப் பார்த்து!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.