Jump to content

13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்


Recommended Posts

13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

 

 

கடற்­ப­டை­யினர் நிலை­கொண்­டுள்ள தமது காணி­களை மீள தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரிக்கை விடுத்து கேப்­பா­பு­லவு மக்கள் மேற் ­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது.

கேப்­பா­பு­லவு மக்­களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்ற போது தாம் அவுஸ்­தி­ரே­லிய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பி­யதும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

நல்லாட்சியே பதில் சொல்.!

 

 

கடற்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று காலை பாரிய ஆர்பாட்டம் இடம்பெற்றது.

1.jpg

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் காந்தி வோ.சங்க தலைவர் அ.செல்வேந்திரன் தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2.jpg

இராணுவமே வெளியேறு.! நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்

IMG_2284.jpg

தங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரைக்கும் தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தங்களின் சொந்த நிலங்களே தங்களுக்கு வேண்டும் எனவும் தெரிவித்து சத்தியாக்கிர போராட்டம் நடத்தின் 13ஆவது நாளான இன்று  அங்கு  வட. மாகாண சபையினர்  சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் கேப்பாப்பிலவிற்கு சென்று தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின்  தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் உறுதியாக நிற்கின்ற  இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்புகள், மாணவர் அமைப்புகள், பொது அமைப்புகள், மத அமைப்புகள்,சில  சிங்கள மக்கள், என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றதுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாகவும் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்றுடன் 10ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/17386

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13நாட்கள் யோசித்திருப்பார்களோ!
நிலத்திலும் புலத்திலும் ஒரு உறுதியான தமிழரது பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து முன்னகர்த்தக்கூடிய துணிச்சலான தலைமைத்துவமற்று அனாதையாக எமதினம் நிற்கிறது. 
தந்தை செல்வாவின் வரிகள் நிதர்சனமாகி வருகிறதா? வாராது வந்தவரையும் தொலைத்துவிட்டு நிற்கும்தமிழினமோ, இனி நமக்கு நாமே என்று போராடத்துணிய அதிலே குளிர்காய்கிறது மெத்தப்படித்த(?) அரசியல்(?) தலைமைகள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:

13நாட்கள் யோசித்திருப்பார்களோ!
நிலத்திலும் புலத்திலும் ஒரு உறுதியான தமிழரது பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து முன்னகர்த்தக்கூடிய துணிச்சலான தலைமைத்துவமற்று அனாதையாக எமதினம் நிற்கிறது. 
தந்தை செல்வாவின் வரிகள் நிதர்சனமாகி வருகிறதா? வாராது வந்தவரையும் தொலைத்துவிட்டு நிற்கும்தமிழினமோ, இனி நமக்கு நாமே என்று போராடத்துணிய அதிலே குளிர்காய்கிறது மெத்தப்படித்த(?) அரசியல்(?) தலைமைகள்.
 

16711510_750123065155233_122420132132689

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அரசுக்கு எதிராக போராடியதே சும் இன் பிரச்சனை. மக்கள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

16711510_750123065155233_122420132132689


அப்படியென்றால் இவர்கள் எதற்காக...


தாங்கள் தமிழினத்துக்காகக் கதைக்காது சிங்கள அரசியலையும் சிங்களத்தையும் காக்கவே தொண்டுசெய்வதை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட சுமந்திரன் மாமா(!) பாராட்டிற்குரியவரே.

Just now, MEERA said:

மக்கள் அரசுக்கு எதிராக போராடியதே சும் இன் பிரச்சனை. மக்கள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்.

 

 

அதுதான் இவரது கடுப்பு. 
அடுத்த வெளிவிவகார அமைச்சராகும் நோக்கோடு, இன்னொரு கதிர்காமராகவும் காக்கைவன்னியானாகவும் உருவெடுக்கத் துடிக்கிறார். அதன் வெளிப்பாடே. அடுத்த தேர்தலில் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலூடாக இவர் செல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:


அப்படியென்றால் இவர்கள் எதற்காக...


தாங்கள் தமிழினத்துக்காகக் கதைக்காது சிங்கள அரசியலையும் சிங்களத்தையும் காக்கவே தொண்டுசெய்வதை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட சுமந்திரன் மாமா(!) பாராட்டிற்குரியவரே.

அதுதான் இவரது கடுப்பு. 
அடுத்த வெளிவிவகார அமைச்சராகும் நோக்கோடு, இன்னொரு கதிர்காமராகவும் காக்கைவன்னியானாகவும் உருவெடுக்கத் துடிக்கிறார். அதன் வெளிப்பாடே. அடுத்த தேர்தலில் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலூடாக இவர் செல்வார்.

பின் கதவால் வந்தவர் வேற என்னத்தை சொல்ல செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

31 minutes ago, முனிவர் ஜீ said:

16711510_750123065155233_122420132132689

"அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

"அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. "

அதற்க்கான பதிலை ரணில்  தெரிவித்து விட்டாரே அண்ண காணாமல் போனவர்களை நாம் எங்கு போய் தேடுவோம் அவர்கள் சில வேலை வெளீநாடுகள் சென்று இருக்கலாம் என்று  அர்சிடம் பேசியாவது சில காரியங்களை சாதிக்கலாம் தமிழ் அரசியல் வாதிகளைடம் பேசி பலன் இல்லை ..................................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.