Jump to content

குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017)


Recommended Posts

குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017)

குமாரபுரம் திருகோணமலையின் கிழக்கே, மூதூர் கிளிவெட்டியின் அண்மைய தமிழ்க் கிராம்ம். மகாவலி கங்கையின் கரங்களால் நிதமும் குளிரூட்டப்படும் வரத்தைப்பெற்ற அழகிய பசுமை பூசிய கிராம்ம்.

எங்கும் அடர்ந்து செழித்த வேளாண் வயல்வெளிகள், பசுக்களும் ஏறுகளும் துள்ளி விளையாட எருமைகள் சகதி குளிர்க்க உழவன் உழவில் தலைநிமிர்ந்து தமிழன் வாழ்ந்த வளமிகு ஊராகும்.

செழிப்பான இக்கிராமம் கொடுமையான இனவழிப்பை எதிர்கொள்ள என்ன காரணங்கள் என பார்ப்போமானால்

1. இக்கிராமம் ஒரு திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றமாக உருவாக இருப்பதை அறிந்த அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்கள் இரவோடிரவாக தமிழ் மக்களை குடியேற்றி சிங்கள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தமை

2. ஈழப்போரில் ஏற்பட்ட சிங்கள இராணுவ இழப்பு:

இச்சண்டை உண்மையில் முஸ்லீம் கிராமத்திற்கு அண்மையில் தான் இடம்பெற்றது. இச்சண்டை இடம்பெற்ற களத்திற்கும் குமாரபுரத்திற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும்

இவ்வினவழிப்பானது திட்டமிடப்பட்ட பழிவாங்கலாகவே தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

நடக்கப் போகும் துயரமறியாத எங்கள் உறவுகள், உழைத்து களைத்த சோர்வும், பாடசாலை மாணவர்கள் பின்னேர வகுப்புகளை முடித்தும், சிறுவர்கள் விளையாடி வியர்வை குளிர்த்தும், பறவைகள் கூடு தேட, கறவைகள் வீடு சேர, கதிரவன் மேற்கில் மறைய சிங்கள பௌத்த காடையர்கள் தங்கள் பழிவாங்கலை அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டத்தொடங்கினர்

கோடரி, கத்தி மற்றும் இந்த்திர துப்பாக்கி என அனைத்து ஆயுதங்களும் அப்பாவி தமிழ் மக்களின் இரத்தம் குடித்தது. மதுபோதையில் வந்த புத்தனின் வாரிசுகள் நிறைமாத கர்ப்பிணித் தாயை வண்புணர்ந்து கொலை செய்து புத்த தர்மம் காத்தனர்

பன்னிரண்டு வயதுடைய என் தங்கை தனலட்சுமியை கூட பௌத்த காவாலிகள் விட்டு வைக்க வில்லை. தங்கள் ஆண்மைக்கு என் தங்கையை இரையாக்கி துப்பாக்கி குண்டுக்கு பலியிட்டனர்.

எத்தனை கொடூரம் அத்தனையும் விழிகளில் இரத்தம் வரும் துன்பம், இரவின் இரக்க குணம் இருள இருள மீதி மக்கள் மறைவிடத்தில் மறைந்து தம்மை பாதுகாத்தனர்.

இலங்கை சிங்கள பௌத்த இராணுவத்தின் காவலில் படுகொலை செய்துவிட்டு பாதுகாப்பாக சென்றனர் காடைச் சிங்கள சிப்பாய்கள். இப்படுகொலையின் போது
பெண்களும் சிறுவர்களுமாக இருபத்து நான்கு பேர் படுகொலை செய்யப்பட இருபத்தாறு பேர் படுகாயமடைந்தனர்.

IMG_0840.jpg

இம்மக்களுக்கு நீதி கிடைக்காமைக்கான காரணம் என்ன?

சிங்கள பௌத்த அரசிடம் தமிழருக்கு நீதி கிடைப்பதென்பது பகற்கனவாகி அறுபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் அதற்கான தூண்டுதலைச் செய்யாமல் அப்படி காலத்தை கடத்தியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சி தலைவரும் ஆகும். இதற்கு பல சான்றுகளுண்டு

1. எதிர்க் கட்சி தலைவர் சாணக்கியர் அவர்கள் அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களால் இரண்டுமுறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்

2. இக்கிராம்ம் ஐயா தங்கத்துரை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

3. மூதூர் மக்களிடத்தில் சாணக்கியருக்கு தகுந்த வரவேற்பின்மை.

போன்ற காரணங்களால் சாணக்கியர் இப்படுகொலைக்கான தனது குரலை உயர்த்தவில்லை

அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு மூதூர், திருகோணமலை மற்றும் அனுராதபுரமென மாற்றப்பட்டு கடைசியில் இருபது வருடத்திற்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

1996 இல் மூதூர் நீதிவான் நீதிமன்றில் தொடங்கப்பட்ட வழக்கு அனுராதபுரத்தில் ஜூரிகளால் தமிழ் மக்களின் நீதி மறுக்கப்பட்டது

இறுதியாக நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணை நயவஞ்சகத்துடன் நிறைவேறியது. தகுந்த சாட்சியங்கள் இருந்தும் மறுக்கப்பட்ட நீதியை தமிழ் மக்கள் ஏற்கவேண்டிய காலமாகிப்போனது.

எதிர்க்கட்சி தமிழ் அரசியற் கட்சிகள், ஆனால் தமிழருக்காக குரல்கொடுக்காத பச்ணோந்திகள். இவர்களால் தமிழருக்கு விடியுமென எழுக தமிழை புறக்கணித்த சாணக்கிய விசுவாசிகளுக்கு இன்னமும் சாணக்கிய சாயம் வெளுக்கவில்லை போலும்.

குமாரபுர மக்களின் நீதிக்காக அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களைத்தவிர எந்த ஒரு அரசியல்சார் நடவடிக்கைகளையும் அரசியியல்வாதிகள் எடுக்க தவறியது மிகவும் மன வேதனையான விடயமாகும்

எனவே இப்படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற மக்களாகிய நாம் ஒன்றாகி குரல்கொடுப்போம், உறவுகளை இழந்துவாடும் சொந்தகளுக்கு ஆறுதலாக இருந்து, புனித ஆன்மாக்களின் சாந்திக்காக பிராத்திப்போம்

http://www.tamilsvoice.com/archives/23718

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.