Jump to content

கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது


Recommended Posts

கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது
 
 

article_1486819654-a.jpg

வா.கிருஸ்ணா

வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது.

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது, கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சினை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளவும் மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும், இக்கட்சி செயற்படவுள்ள அதேவேளை, வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

article_1486819663-b.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/191372/கர-ண-தல-ம-ய-ல-ப-த-யக-கட-ச-உதயம-னத-#sthash.hMyS9zfE.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரின் நிகழ்ச்சி நிரலோ தெரியலை 

இருக்கிற கட்சியினராலே எதுவும் செய்ய முடியலை இதில நீங்கள் வேறா போங்க ....................இந்தியா போல் இங்கைக்குள் கன கட்சி வந்துடும் போல இருக்கே சபா முடியலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாய் வழியா சிரிப்பு வரல ...:cool:

Link to comment
Share on other sites

 

எனக்கு பாதுகாப்பும் தேவை இல்லை எதுவும் தேவை இல்லை, நான் திரும்பி போவேன் யாழ்ப்பாணத்திற்கு - விநாயகமூர்த்தி முரளிதரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் .....அந்தாளும் என்ன செய்வது ...கல்லா கட்டவில்லையே 
சர்வ வல்லமை பொருந்தியவருடன் இருந்த போது ராஜ வாழ்க்கை வாழ்ந்தார் ...
இப்போது எல்லோரும் இவரை செல்லாக்காசாக்கி மூலையில் உட்கார வெச்சிட்டினம் 
ஒவ்வொரு நாளும் அடிக்கிற தண்ணிக்கே பென்சன் காசு காணாது 
அதுதான் புதிய பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார் ....பார்ரா இவருக்கும் பின்னாடி கொஞ்ச எடுபிடிகளும் திரியுது 
அதுக்குள்ளே நாம் திராவிடர் வேற ....யாருங்கடா நீங்க எங்கிருந்து கிளம்பி வர்ரீங்கோ ...கிந்தியாவுக்கு எதுவோ தேவைப்படுது போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா இவங்க அலப்பறையை..!

எந்த "லெட்டர் பேட்" கட்சிக்கும் ஈழத்தில் இருபது பேர் கூடுவாங்க போல இருக்கே..! :):grin:

article_1486819674-c.jpg

Link to comment
Share on other sites

"விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே த.தே.கூட்டமைப்பு" : கருணா

 

 

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதன் உருவாக்கத்தில் எனக்கும் பங்கிருக்கிறது. ஊடகவியாளர் சிவராமின் தலைமையிலேயே முதன் முறையாக இக்கட்சி தோற்று விக்கப்பட்டது. அதை வெளியில் சொல்வதற்கு கூட சம்பந்தன் மறுக்கிறார். இவ்வாறு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

11.jpg

மட்டக்களப்பில் அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி உருவாக்கம் தொடர்பாக இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போதே இதனைத் தெரிவித்தார். 

மட்டக்களப்பு போகஸ் மண்டபத்தில் இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

தொடர்ந்து பேசிய அவர், இன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்கொரு கட்சி தேவை என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பாரிய குழப்பநிலை தலை தூக்கியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சிவி .விக்னேஸ்வரன் ஒன்றைச் செய்தால் மற்றவர்கள் அதற்கு தடைவிதிக்கிறார்கள். கேபாபுலவில் எங்களின் நிலங்களைப் பெற்றுக் கொடுப்போம் என்று ஒத்துழைக்கப்போனால் அதற்குள்ளும்  எதிர்ப்பு. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்களின் அரசியல் சூழல் சென்று கொண்டிருக்கிறது.

நீங்கள் இவ்வளவு காலமும் ஏன் கருணா அம்மான் வெளியே வராமல் இருந்தார் என்று சிந்தித்திருக்கலாம். கவிஞர் காசி ஆனந்தன் அடிக்கடி கூறுவார் நிறைவாகும் வரை மறைவாக இரு என. இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு தலமை தாங்கும் தகுதியான தலைவர்கள் இன்றில்லை. அதற்காகத்தான் இவ்வாறாதொரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. என்றார்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

தமிழ்மக்களைக் காட்டிக்கொடுத்த, கருணா போன்ற கடைந்தெடுத்த துரோகிகளும், அதே தமிழ் மக்கள்முன் எதுவிதத் தயக்கமும் இன்றி வரமுடியும் என்றால்....! அந்தத் தமிழ்மக்கள் எத்தனை உயர்வானவர்கள்....!!  அப்படியான தமிழர்களையா பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வருகிறார்கள்.??? :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா...தலைவர் பாசறையில் வளர்ந்த, துணிச்சல் மிக்க உங்களால் மட்டும் தான் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெளலானாவுடன் ஓடிப் போனதோடு துணிச்சலும் ஓடி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/02/2017 at 5:21 PM, நவீனன் said:
கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது
 
 

article_1486819654-a.jpg

வா.கிருஸ்ணா

 1 -வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

2 - தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு விடயங்களுக்கும்

முரளிக்கும் வெகு தூரம்..

பாவம்

நம்மை காட்டிக்கொடுத்து உழைச்ச பணத்தை

நம்மிடமே தர வாறார்

நல்ல விடயம் தானே...

Link to comment
Share on other sites

On 2/11/2017 at 0:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கு வாய் வழியா சிரிப்பு வரல ...:cool:

புரட்சி முடியல.:102_point_up_2:tw_blush:

Link to comment
Share on other sites

On 2/11/2017 at 9:51 PM, நவீனன் said:

மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது.

1jk8im.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இவர் எப்ப வெளிய வந்தவர். இவர் இப்ப உள்ள போறதும் வெளிய வாறதுமாவே இருக்கிறார். இதில இவருக்கு இன்னொரு கட்சி. இருந்த கட்சிகளின் எண்ணிக்கையே..உலக சாதனக்கு உதவுமே. tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.