Jump to content

தனது நிலத்தை சசிகலா எப்படி அபகரித்தார் என்பதை கூறும் கங்கை அமரன்


Recommended Posts

சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டேன் - கங்கை அமரன்

 

திருப்பூர் : சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

அதிமுக., பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. சசிகலாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்ட்டதாக கூறியுள்ளார்.

 

பன்னீருக்கே ஆதரவு:

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா...?, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளி கொண்டு வர வேண்டும். பன்னீர் செல்வம் உண்மையான ஆம்பள. சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில் எதற்காக முதல்வராக வர வேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார். எம்எல்ஏ.,வின் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீருக்கு தான் உள்ளது என்றார்.
தன்னுடைய சொத்துக்களை சசிகலா அபகரித்து விட்டதாக ஏற்கனவே பல பேட்டிகளில் கங்கை அமரன் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706960

Link to comment
Share on other sites

பன்னீர்செல்வத்தின் துணிச்சல்! சசிகலாவை விளாசும் கங்கைஅமரன்

Gangai_amaran_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B

''சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்'' என, இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கங்கை அமரன், எங்களது சொத்துகளை சசிகலா மிரட்டி வாங்கினார் என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பையனூர் பங்களாவை சசிகலா தம்மிடமிருந்து மிரட்டிப் பெற்றதாகவும், பயத்தின் காரணமாகவே நாங்கள் அந்த பங்களாவைக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சசிகலாவை யாரும் எதிர்க்கத் துணிவில்லாதபோது, பன்னீர்செல்வம் எதிர்த்திருக்கிறார் என்றும், அவரது துணிச்சலை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80139-o-paneerselvam-has-enough-guts--gangai-amaran-slams-sasikala.art

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்...!' கங்கை அமரனின் அனுபவக் கதை

gangai_amaran_long_1_16109.jpg

''முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்'' என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்?

 என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது. 

உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்?

பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளனர். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்து விட்டார். ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், அப்படியா... நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை. 

சசிகலாவை நீங்கள் எதிர்ப்பதற்கு இதுமட்டும்தான் காரணமா?

சசிகலா குடும்பத்தினர் பலரிடமிருந்து சொத்துக்களை வாங்கி குவித்து விட்டனர். இதன்பிறகும் அவர்கள் தங்களது செயல்பாட்டிலிருந்து மாறவில்லை. மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பதவி ஆசையில் சசிகலா செயல்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் பதவியில் அமர ஆசைப்படலாமா. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, கட்சியினரிடையும், மக்களிடையையும் ஆதரவை பெறாமல் முதல்வராக சசிகலா ஆசைப்படுகிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் சசிகலா பதவியேற்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். இதுபோல சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நான் மட்டுமல்ல... மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. 

நீங்கள் பா.ஜ.க.வில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா?

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் அதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஒரு அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், தேச மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமை கொண்டு இருக்கிறேன். பா.ஜ.க.வில் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80271-this-is-how-sasikala-used-to-threaten---gangai-amaran.art

Link to comment
Share on other sites

‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala

சசிகலா

முதல்வர் பதவிக்கான சண்டையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வில் பதவிச் சண்டை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5-ம் தேதி  அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், திடீரென்று யாருமே எதிர்பார்க்காதபோது ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் அங்கே சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., ''சசிகலா நிர்பந்தித்த காரணத்தால்தான் நான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்'' என்றார். அதற்குப் பின் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தமிழக அரசியல் களத்தை அதிரச் செய்தது. அவருடைய பேச்சை மறுத்து... அவ்வப்போது சசிகலா பதிலடி கொடுத்தும் வருகிறார். இப்படி இரு தரப்புக்கான மோதல் வெளிப்படையாக அதிகரித்துள்ள நிலையில், அடுத்து முதல்வராக அமரப்போவது போவது நீயா?... நானா? என்ற நிலை தமிழகத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது.

''என் குடும்பத்தாரை மிரட்டினர்!''  

இந்தச் சூழ்நிலையில் பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சசிகலாவுக்கு எதிராகவும் அவர் பேசி வருகிறார். இதுகுறித்து கங்கை அமரனிடம் பேசியபோது, '' 'உங்களுடைய நிலம் முதல்வருக்குப் பிடித்துள்ளது. எனவே, அந்த நிலத்தை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்' என்று சசிகலா தரப்பினர் என்னிடம் கேட்டனர். அதற்கு நான், 'நிலத்தை விற்கும் அளவுக்கு எனக்கு எந்தப் பிரச்னையும் தற்போது இல்லை' என்று கூறினேன். சில நாட்கள் கடந்த நிலையில், 'ஜெயா டி.வி'-யில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்போது எனக்கு அரசியல் சாயம் வேண்டாம். பணியிலும் சேருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து முதல்வரின் அலுவலகத்தில் இருந்து பேசியதாகச் சொன்னவர்கள், 'கங்கை அமரன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? பின்னி எடுத்துவோம்' என்று என் குடும்பத்தாரை மிரட்டினர். பின்னர், சசிகலாவை... நான் தொலைபேசியில் அழைத்து, 'முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இப்படி மிரட்டல் வந்துள்ளதே' என்று கேட்டேன். அதற்கு அவர், அதிர்ந்துபோனவராக... 'என்ன அண்ணா சொல்கிறீர்கள்' என்று கேட்டார். பிறகு, 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார்.

கங்கை அமரன்

சில நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் நிலத்தைக் கொடுக்கச் சொல்லி சசிகலா தரப்பினர் அழுத்தம் கொடுத்தார்கள். எனது குடும்பத்தினர் பயந்தார்கள். 'பணியில் சேர முடியாது' என்று சொன்னதற்கே... இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்; 'நிலத்தைக் கொடுக்க முடியாது' என்று பிடிவாதம் பிடித்தால்.... ஆபத்து வரும் என்று கருதி நிலத்தைக் கொடுத்துவிட்டேன். என்ன செய்வது... நிலத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அந்த அளவுக்கு சம்பாதித்து தற்போது உயர்ந்துள்ளேன். மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் துடிக்கவில்லை மாறாக பணத்தைச் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் நிலையை தற்போது நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. உறவுகளைச் சந்திக்கவிடாமல் அவரைத் தனிமைச்சிறையில் வைத்திருந்திருந்தார்கள் என்பது அவருடைய அண்ணன் மகள் தீபா சொல்லியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் நலனை யோசிப்பவராக இருந்திருந்தால்... ஜெயலலிதாவின் மறைவை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்; அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சி செய்திருப்பார்கள்; அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்; தமிழக அரசியலை எண்ணி அயல் நாடுகளில் உள்ளவர்களும் சிரிக்கிறார்கள்.

பன்னீர்செல்வம்

''ஓ.பி.எஸ். செயல்பாடுகள் எனக்குப் பிடித்துள்ளன!'' 

'வர்தா' புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் போன்ற பிரச்னைகளில் ஓ.பி.எஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்குப் பிடித்துள்ளன. சசிகலா மீண்டும் பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை. என்னையும் மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள். அதேபோன்று பன்னீர்செல்வத்தையும் மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அவரை ஒடுக்கிவைக்கப் பார்த்தார்கள். அவரும் பொறுமையாகத்தான் இருந்தார். எத்தனை நாள் பொறுமையாக இருப்பார். வெடித்துவிட்டார்'' என்றார்.

http://www.vikatan.com/news/coverstory/80343-this-is-why-i-am-supporting-o-panneerselvam-says-gangai-amaran-opsvssasikala.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் பெயரால் சகலதும் சுபம். இனிமேல் தான் கலகம்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ரெடி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

திறக்கலாம் , அப்போது  ஒரு  விலை பேசி விற்றிருப்பார் , இப்போது  இலவசமாக  திரும்ப பெற யோசிக்கிறார் ,

Link to comment
Share on other sites

12 hours ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

வடிவேலு ஞாபம் இருக்கா? அவரோட நிலைமைதான் இவருக்கும் கிடைச்சிருக்கும்.. இவர் பெரிய நட்சத்திரம் இல்லை என்றாலும் இருக்கிறதை எல்லாம் உருவி விட்டு ஓட விட்டிருப்பார்கள். :D:

Link to comment
Share on other sites

18 hours ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

உண்டு இல்லை என்றாக்கி இருப்பார் அம்மா. அம்மா இல்லாத போது ஏதாவது திருப்பி கிடைக்கும் என முயற்சிக்கிறார். சசியும் லேசுப்பட்டவர் இல்லை. அவரின் திரிசங்கு நிலையில் கங்கை அமரன் மீன் பிடிக்க நினைக்கிறார். கங்கை கடலில் போட்ட காசாக இதனை நினைக்க வேண்டியது தான்.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.