Jump to content

ஜெ., நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம்?


Recommended Posts

மௌனம் கலைத்த ஓ.பன்னீர்செல்வம்.... பின்னணி என்ன?

பன்னீர் செல்வம்

டந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கட்சியின் சட்டமன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்நேரமும் சசிகலா முதல்வராகப் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நேற்று டெல்லி விரைந்து ஜனாதிபதியைச் சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வராமல் அங்கிருந்து மும்பைக்கு பயணமானார். அதனால் சசிகலா பதவியேற்கும் நாள் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்தது. 

ஜெ. நினைவிடத்தில் நிகழ்ந்தது..

இந்த நிலையில் எதிர்பாராவிதமாக இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சுமார் 9 மணிக்கு வந்த ஓ.பி.எஸ் தொடர்ந்து நாற்பது நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார். அப்போது அவரது முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது. மேலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தபடி இருந்தது. நாற்பது நிமிடங்கள் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டு ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்துவிட்டு பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசினார்.  

பன்னீர் செல்வம் மெரினா

அப்போது பேசிய அவர், தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்ததாகவும். ஜெயலலிதாவின் இறப்பை அடுத்து நிகழ்ந்தவற்றைப் பற்றியும் கூறினார். தனக்கு முதல்வராகும் எண்ணமே இல்லாத நிலையில் தான் முதல்வராக்கப் பணிக்கப்பட்டதையும், பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமிக்க வேண்டும் என்று திவாகரன் கூறியதையும், அதைத் தொடர்ந்து எழுந்த வர்தா சிக்கல், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என பல பிரச்னைகளிலும் தான் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்ட போதும் அது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை என்றும். திடீரென அவர்களே முதல்வராக வேண்டும் என்று எண்ணி தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும். ஜெ.வின் நினைவிடத்திற்கு சென்று வந்துவிட்டு ராஜினாமா கடிதம் தருவதாகக் கூறியபோது கூட கையைப் பிடித்துக் கொண்டு கட்டாயப் படுத்தி அவர்கள் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறி சில மணி நேரத்தில் தமிழக அரசியலில் மிகப் பரபரப்பான சூழல் ஒன்றை உருவாக்கினார் பன்னீர் செல்வம். தொண்டர்கள் விரும்பும் ஒருவர்தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மக்கள் விரும்பும் ஒருவர்தான் முதல்வராகவும் இருக்கவேண்டும் இதற்காக தனியொருவனாகப் போராடவும் தான் தயார் என்றும் பகிரங்க அறிவிப்பு கொடுத்துவிட்டு அவ்விடத்திலிருந்து சிரித்தபடி நகர்ந்தார். 

ஜெயலலிதா

திடீர் பேட்டி ஏன்?

சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்க வேண்டும் என வற்புறுத்தி அவரைச் சந்திக்கச் சென்ற முதன்மையான இருவருள் தம்பிதுரையுடன் ஓ.பி.எஸ்ஸும் அடக்கம்.இந்நிலையில் திவாகரன் கேட்டுக் கொண்டதால்தான் அந்தப் பதவி அவருக்குத் தரப்பட்டது. இல்லையெனில் மதுசூதனன் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்கிறார் பன்னீர் செல்வம். பிரச்னை தொடங்கியது வர்தா புயல் சமயம் தொடங்கிதான். சென்னை முழுக்க வர்தா புரட்டி எடுத்திருந்தாலும் அது மொத்தமாக அமைதியாக மையம் கொண்டிருந்தது போயஸில்தான். தற்போது சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என்கிற பேச்சுகளுக்கிடையே புயல் வலுவடையத் தொடங்கி இருக்கிறது. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தாலும் சசிகலா பின்னணியில் இயங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வர்தா, ஜல்லிக்கட்டு போராட்டம் என அடுத்தடுத்து பன்னீர் அடித்த விளாசிய பந்துகள் சிக்ஸர்களாக விழ அது ஓ.பி.எஸ்ஸுக்கான இமேஜைக் கூட்டியதே ஒழிய மன்னார்குடிக் குடும்பத்தினர் பொதுச்செயலாளர் பதவி இருந்தும் பின்னணியில் மௌனமாகவே இருந்துள்ளார்கள்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு குழு பிரதமரை சந்திக்கச் சென்ற அதே சமயம் சசிகலா கூறியதற்கு இணங்க தம்பிதுரை தலைமையில் சிலர் பிரதமரைச் சென்று சந்திக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மோடி முதன்மைப் படுத்தியது ஓ.பி.எஸ் உடனான சந்திப்பைதான். தம்பிதுரையை சந்திக்க மறுத்துவிட்டார். இது தொடங்கி பன்னீர்செல்வத்தின் கை கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வலுபெறுவது தெள்ளத் தெளிவானது. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுத்தது மக்களிடையேயும் அவரது இமேஜை பல மடங்கு உயர்த்தி இருந்தது. இதுநாள் வரை எதிர்துருவமாகவே இருந்துவந்த எதிர்கட்சித் தரப்பு கூட பன்னீரைப் பாராட்டிப் பேசியது இதற்கெல்லாம் நிச்சயம் ஒரு உச்சாணியாய் அமைந்தது.   

சசிகலா

சசிகலா கட்டாயப்படுத்தியது ஏன்?

எண்ணூர் எண்ணெய் விபத்து தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களில் பன்னீர் செல்வம் பங்கேற்றிருந்த அதே சமயத்தில்தான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்தேறியிருக்கிறது. இதையடுத்துதான் தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் ஓ.பி.எஸ் கூறிகிறார். ஆனால் சசிகலாவோ முதலில் ஓ.பி.எஸ்ஸின் நிர்பந்தத்தின் பேரில்தான் தான் சட்டமன்றத் தலைவர் பதவியையும் முதல்வர பதவியையும் ஏற்றுக் கொள்ள இருப்பதாக முரண்பட்ட தகவல் ஒன்றை தெரிவித்தார். ஓ.பி.எஸ்ஸுக்கு உருவாகிவந்த இந்த தனிமனித இமேஜ்தான் சசிகலாவிற்கும் இடையூறாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் முதல்வர் பதவியையும் கேட்டு எழுதிப் பெற்றிருக்கிறார். 

’சின்னம்மா’ எங்கே?

சசிகலா முதல்வராவதற்கு பரவலாகவே எதிர்ப்பு வலுத்துவந்த சூழலில் உடனிருந்த பன்னீர் செல்வமும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பலமுறை அவர் ’மாண்புமிகு அம்மா’ என்றாரே ஒழிய கட்சியில் பிறர் சொல்லுவது போல ஒரு இடத்திலும் ’சின்னம்மா’ என்று குறிப்பிடவில்லை. தொடர்ந்து அவர்கள் என்றே விளித்தார்.

ஜெ. மரணப்படுக்கையில் இருந்த நிமிடங்கள் தொடங்கியே பலர் சசிகலாவை சின்னம்மா என்றே அழைத்து வந்த நிலையில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலர் சசிகலாவை அப்படி அழைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் ஜெ.யின் அண்ணன் மகளான தீபாவின் பக்கம் அவர்களில் பலருடைய ஆதரவு திரும்பியது. இன்றைய பேட்டியில் ஒரு இடத்தில் கூட சின்னம்மா என்று அழைக்காமல் அவர்கள் என்றே குறிப்பிட்டது, சசிகலாவுக்கான ஆதரவு தொடர்பான ஓ.பி.எஸ்ஸின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.  

பின்னணியில் மோடியா?

கட்சியைக் காக்கத் தனிமனிதனாகக் கூடக் கடைசிவரை போராடுவேன் என்றிருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் இந்த நிலைப்பாட்டிற்காக தீபா பக்கம் சென்ற பலர் தற்போது இவர் பின்னணிக்கு வரலாம். இவர் போலவே இதுநாள் வரை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சிக்கித் தவித்தவர்களும் இவருடன் இணையலாம். ஆனால் தனிமனிதனாக நிற்பேன் என்று சொன்ன குரலின் பின்னணியில் ஏதேனும் ஒரு ஆதரவு இல்லாமல் நிச்சயம் அப்படியொரு நிலைப்பாட்டை அவர் எட்டியிருக்கமாட்டார். தம்பிதுரையை சந்திக்கத் தவிர்த்த மோடி ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்தது வேண்டுமானால் முதல்வர் என்று மரியாதைக்காக இருக்கலாம். ஆனால் ஜெ.யின் உடல் ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டிருந்த நிமிடங்களில் அவரது கால்களைத் தவிர பன்னீர் செல்வம் கரமெடுத்துக் கும்பிட்டது மோடியிடம் மட்டுமே. இதனை ஊர்ஜிதப்படுத்தவது போலவே அதிமுகவின் மதுரை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பன்னீருக்கு மத்தியில் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆளுநர் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அவரும் தமிழகம் வராமல் மும்பையைதான் தேர்ந்தெடுத்தார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து உண்டான சூழல் காலச் சுழற்சியென மீண்டும் உருவாகி இருக்கிறது. ஜெ. தனியொரு ஆட்சியாளராக உருவெடுத்தது அதன்பிறகுதான். இந்த முறை சுழற்சி யாரை அந்த தனி ஒருவராக்கும்?.

http://www.vikatan.com/news/tamilnadu/80091-was-forced-by-sasikala-to-resign-says-o-panneerselvam-now-a-rebel.art

Link to comment
Share on other sites

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

 
 
 
 
பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு
 
சென்னை:

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா மீதும் அவரது குடும்பத்தினர் மீது அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

பன்னீர் செல்வம் பேட்டியால தமிழக அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் தம்பிதுரை பேசியதாவது:-

இந்த நாடகத்தை பின்னால் நின்று திமுக நடத்தியுள்ளது. அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் பின்னால் இருந்து இதனை செய்துள்ளனர். தலைவராக இல்லாமல், செயல் தலைவராக இருப்பதால இதனை செய்து வருகிறார்.

134 எம்எல்ஏக்ககளும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும். மத்திய அரசை சேர்ந்த கட்சிக்கு ஒரு எம்எல்ஏக்கள் கூட கிடையாது அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

இந்த தமிழ் நாட்டின் அரசியல் செய்திகளைப் பார்க்கும் போது சினம்  வருகிறது , இவர் சமாதியில் தியானம் இருந்தாராம், அவர் மும்பாயைக்குப் பொட்டாராம், பதவியேற்கும் திகதி தெரியாதாம்..... இது எல்லாம் எனக்கு எதுக்கு .... நேரம் கிடைப்பதே அரிது ... அதிலும் இந்த கோமாளிகளின் செய்திகளை வாசித்தே நமது நேரம் பாழாகிறது, ஒருவாரமோ ஒரு மாதமோ கழித்து தமிழ் நாட்டின் முதல்வர் யாரெனத் தெரியவரும் அது தெரிந்தால் போது மென நினைக்கிறேன், எனக்கு கவணம் செலுத்த தாயக , அறிவியல் செய்திகள் எவ்வளவோ இருக்கு.......

Link to comment
Share on other sites

என்னை யாரும் நீக்க முடியாது: ஓபிஎஸ்

opsss1_00575_01264.jpg

இன்று இரவு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியை அடுத்து, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி உத்தரவிட்டார் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், " பொருளாளர் பதவியை எனக்கு ஜெயலலிதா வழங்கினார்கள்.என்னை அந்தப் பதவியில் இருந்து நீக்க தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை " என கூறியுள்ளார். 

தற்போது சசிகலா, " ஓபிஎஸ் கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும், நீக்கப்படுவார் " என அறிவித்து இருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80094-no-one-has-the-right-to-dismiss-me-says-ops.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Athavan CH said:

இந்த தமிழ் நாட்டின் அரசியல் செய்திகளைப் பார்க்கும் போது சினம்  வருகிறது , இவர் சமாதியில் தியானம் இருந்தாராம், அவர் மும்பாயைக்குப் பொட்டாராம், பதவியேற்கும் திகதி தெரியாதாம்..... இது எல்லாம் எனக்கு எதுக்கு .... நேரம் கிடைப்பதே அரிது ... அதிலும் இந்த கோமாளிகளின் செய்திகளை வாசித்தே நமது நேரம் பாழாகிறது, ஒருவாரமோ ஒரு மாதமோ கழித்து தமிழ் நாட்டின் முதல்வர் யாரெனத் தெரியவரும் அது தெரிந்தால் போது மென நினைக்கிறேன், எனக்கு கவணம் செலுத்த தாயக , அறிவியல் செய்திகள் எவ்வளவோ இருக்கு.......

 

அட போங்க.. நீங்க ஒரு பக்கம்.

சும்மா ஜாலியா போயிட்டு இருக்குது...

சும்மா தமாசு தான்..

Link to comment
Share on other sites

ஓ.பி.எஸ்., பின்னணியில் தி.மு.க., : சசிகலா குற்றச்சாட்டு

 

சென்னை: பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். அவரின் பின்னால் இருந்து தி.மு.க., இயக்குகிறது என சசிகலா குற்றம்சாட்டி உள்ளார்.

மிரட்டல் இல்லை:
அ.தி.மு.க.,வில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்படுவார். பன்னீர் செல்வத்தை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.
 

பின்னணியில் தி.மு.க.,:
சட்டசபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும், முதல்வர் பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி சிரித்தனர். பன்னீர் செல்வத்தின் பின்னணியில் இருந்து தி.மு.க., இயக்குகிறது. இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.
 

முதல் முறை:
அ.தி.மு.க., பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற பின் முதன்முதலாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையி்ல் நள்ளிரவு 1.15 மணிக்கு சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706596

Link to comment
Share on other sites

  • gallerye_010341273_1706562.jpg

 

கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார்.

 

Tamil_News_large_170656220170208010239_318_219.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின், மன்னார்குடி கும்பல் நடத்திய தில்லாலங்கடி வேலைகளை யும், பகிரங்கமாக அவர் பட்டியலிட்டார். மக்கள் விரும்பும் ஒருவரே, கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்க வேண்டும் என, ஆவேசமாக அறிவித்த பன்னீர்செல்வம், அதற்காக தன்னந்தனியே போராடுவதற்கும் தயார் என, சூளுரைத்தார். இதையடுத்து, முதல்வர் பன்னீர் வழிகாட்டுதலில், அ.தி.மு.க., செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர் செல்வம், நேற்று இரவு, திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று, 40 நிமிட தியானம் செய்தார். அப்போது, மிகவும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். திடீரென அவர், ஜெ., நினைவிடத்திற்கு வந்து, தியானத்தில் ஈடுபட்டுள்ளதை கேட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர் களும், அ.தி.மு.க.,வினரும் திரண்டனர்.

நாற்பது நிமிட மவுன அஞ்சலியை முடித்ததும், சமாதியை சுற்றி ஒரு முறை வலம் வந்தார். பின், கீழே விழுந்து வணங்கினார். அதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.
 

அவர் கூறியதாவது:


ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து, மவுன அஞ்சலி செலுத்தும்படி, என் மனசாட்சி உந்தியதால், இங்கு வந்தேன். சில உண்மை விபரங்களை, நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.க., தொண்டர்களுக்கும் தெரிவிக்கும்படி, ஜெயலலி தாவின் ஆன்மா என்னை உந்தியது.அதன் விளைவாக, உங்களுடன் நிற்கிறேன். ஜெயலலிதா நோய் வாய்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவரது உடல் நிலை, கிட்டத்தட்ட, 70 நாட்களுக்கு பின், மோசமான நிலையை எட்டியது.

அபோது, என்னிடம் வந்து, 'அம்மா உடல்நிலை மிக மோசமாக உள்ளது. கட்சியும், ஆட்சியை யும் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது' என, கேட்டபோது, 'ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; இப்போது, மாற்று ஏற்பாடு என்ன தேவை' என, கேட்டேன்.

'அசாதாரண சூழல் வந்தால், நல்ல முடிவை எடுக்க வேண்டும்' என, கூறினர். அவர்கள் சொன்னதை கேட்டு, ஜெ., நிலையை கண்டு, அரை மணி நேரம் அழுது புலம்பினேன். பின், 'என்ன கூற வருகிறீர்கள்' என, கேட்டபோது, பொதுச்செயலர், முதல்வர் என்ற நிலையில், கட்சியையும், ஆட்சியையும் ஏற்று நடத்த, மாற்று ஏற்பாடு செய்ய பணித்தனர்.

அப்போது, பொதுச்செயலராக, மதுசூதனன் இருக்க வேண்டும் என, கூறினர்; அதை நான் ஏற்கவில்லை. முன்னர், இக்கட்டான சூழல் ஏற்பட்டபோது, 'ஜெயலலிதா, என்னை அழைத்து, பதவியேற்கும்படி கூறினார். அதை ஏற்றுக் கொண்டேன்; பின், அவர் வந்ததும், அந்த பதவியை அவரிடம் திரும்ப கொடுத்த, மனநிறைவே போதும்.'இப்போது, அந்த பதவி எனக்கு வேண்டாம்; நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள், பொது மக்கள், கட்சியினர் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை தேர்வு செயயுங்கள்' என்றேன்.

அதற்கு அவர்கள், 'உங்கள் பெயரை சொன்னால் தான் ஏற்பர்; மாற்று ஆளை கூறினால், கட்சிக்கு பங்கு வரும்; பிரச்னை வரும்' என்றனர். நம்மால் கட்சிக்கு சிக்கல் வரக்கூடாது என்பதால், முதல்வர் பொறுப்பை ஏற்றேன்.முதல்வரான இரண்டு நாட்களில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்து, 'சசிகலாவை, பொதுச்செயலராக்க வேண்டும் என, அவர் தம்பி திவாகரன் சொல்கிறார்' என்றார்.

அந்த நேரத்தில், மூத்த அமைச்சர்களை அழைத்து, கருத்து கேட்டபோது, அவர்களும் ஒப்புக் கொண்டனர். பின், சசிகலாவிடம் சென்று கூறினோம். பொதுக்குழு கூடியது, பொதுச்செயலராக, அவர் தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின், என் பணியை, ஜெ., ஆட்சிக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல், என் கடமையை செய்ய உறுதி ஏற்று, அதன்படி செயலாற்றினேன்.

எதிர்பாராத விதமாக, 'வர்தா' புயல் வந்தது. நான் மற்றும் அமைச்சர்கள், பொது மக்கள் அனைவரும், அந்தப் பணியில் ஈடுபட்டு, அடிச்சுவடே தெரியாதபடி, நான்கு நாட்களில் சீரமைப்பு பணியை செய்து முடித்தோம்; நல்ல பெயர் கிடைத்தது.

எனக்காக நான் செய்யவில்லை. ஜெ., ஆட்சிக்கு கிடைத்த நற்பெயராக நினைத்தேன். இது,

அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி யது. தொடர்ந்து, சென்னை குடிநீர் தேவைக் காக, ஏழு மாதங்களுக்கு, குறைந்தபட்சம், 7 டி.எம்.சி., தண்ணீர் தேவை. அதிகாரிகளை கூப்பிட்டு ஆலோசித்தேன்.

ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் தரும், கண்டலேறு அணையில், 37 டி.எம்.சி., தண்ணீர் இருப்பதை அறிந்து, ஆந்திரா சென்று, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். 6 டி.எம்.சி., தண்ணீர் கேட்டோம்; அவரும் சம்மதித்து விடுவித்தார். இதன் மூலமும், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அடுத்து ஜல்லிக்கட்டு; தமிழகத்தின் பாரம்பரிய உரிமையை மீட்க வேண்டும் என, தமிழக மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் எழுச்சி மிகு போராட்டத்தை துவக்கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற் காக, பிரதமரை சந்தித்தேன். 'அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசின் ஒப்புதலோடு, ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்' என, கூறினேன். அதற்கு பிரதமர், 'நாங்கள் அவசர சட்டம் கொண்டு வர இயலாது. நாங்கள் கொண்டு வந்த சட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீங்கள், அவசர சட்டம் கொண்டு வந்தால், தடை வராது. நாங்கள் ஆதரவு தருகிறோம்' என்றார்.

அதை ஏற்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதற்காக, மத்திய சுற்றுச்சூழல், உள்துறை, சட்டத்துறை ஒப்புத லோடு, ஜனாதிபதி ஒப்புதலும் பெற வேண்டும். அதன்படி ஜனாதிபதிஒப்புதலோடு, கவர்னர் ஒப்புதல் பெற்று, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

மாணவர்கள் நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கூறியபோது, சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்திய அன்று மாலையே, சபை கூடி, சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும், ஜனாதிபதி ஒப்புதுல் பெறபட்டு சட்டமாக்கப்பட்டது.

நான், ஒருபுறம் பிரதமரை பார்க்க செல்கிறேன். மற்றொருபுறம், லேக்சபாக் துணை சபாநாயகர், 50 எம்.பி.,க்களுடன் பிரதமரை சந்திக்க, நேரம் கேட்டார். அப்போது ஏற்பட்ட மன உளைச்சலை, போயஸ் கார்டனில் தெரியப்படுத்தினேன்; அதற்கு, உரிய பதில் கிடைக்கவில்லை. சட்ட சபை கட்சி தலைவராக, என்னை தேர்வு செய்து, கவர்னரிடம் பரிந்துரை தரப்பட்டு, முதல்வராக பொறுப்பேற்றுள்ளேன். என் பரிந்துரையின்படி அமைச்சரவை அமைத்து, பணியை மேற்கொண்டோம்.

அப்போது, வருவாய் துறை அமைச்சர் உதய குமார், 'சசிகலா தான் முதல்வராக வேண்டும்' என, பேட்டி கொடுத்தார். இதை சசிகலா கவனத்திற்கு கொண்டு சென்றேன். 'என் அமைச் சரவையில் இருக்கிறவர், இன்னொரு வர் தான் முதல்வராக வர வேண்டும் என, பேட்டி கொடுத்தால், நியாயம் தானா; உங்களுடைய அமைச்சரே, இப்படி கருத்து தெரிவிக்கிறபோது, உங்கள் பலத்தை நிரூபியு ங்கள் என, கவர்னர் கூறினால், தேவையில் லாத பிரச்னை ஏற்படுமே' என்றேன்.

அதற்கு, 'அவரை கண்டித்து விட்டோம்; இனி மேல், யாரும் பேச மாட்டார்கள்' என, தெரிவித் தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் ராஜ், என் அறைக்கு வந்து, 'இப்படி பொறுப்பற்ற முறையில், உதயகுமார் பேட்டி கொடுக்கலாமா' என்றார். மதுரைக்கு சென்று, அவரும், சசிகலா முதல்வராக வேண்டும் என, பேட்டி கொடுத்தார்.

அடுத்த நாள், லோக்சபா துணை சபாநாயகர், அவரது கடிதம் வாயிலாக, அதே கருத்தை வலியுறுத்தினார். செங்கோட்டையனும், அதே கருத்தை கூறினார். நான், சில அமைச்சர்களை, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து, 'கருத்து வேறு பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, முதல்வர் பதவி வேண்டாம் என, கூறினேன். என்னை பதவியில் அமரவைத்து, ஏன் கேவலப்படுத்து கிறீர்கள்' என்று கேட்டேன்.

'கட்சி தொண்டர்கள், பொது மக்கள் அதிருப்தி யில் உள்ளனர். கட்சியையும், ஆட்சியையும், நம்மிடம் தந்து சென்றுள்ளார் ஜெயலலிதா; அதை நாம் கட்டுக்கோப்பாக, நமக்குள் எந்த வேறுபாடும் இல்லாமல், பொறுப்பாக நடத்திச் செல்ல வேண்டும்' என்றேன்.

என்னால் சிறு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது. சரித்திரம், நம்மை வேறு மாதிரி உருவகப்படுத் தும் என்பதால், யாரிடமும் பகிர்ந்து கொள்ள வில்லை. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்ட தகவல் கிடைத்தது. எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற, தகவலும் கிடைத்தது.

கடற்கரையில் பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை பார்ப்பதற்காக, நான் சென் றேன். அங்கிருந்து, தலைமைச் செயலகம் வந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி னேன். பின், போயஸ் கார்டன் சென்ற போது, மூத்த அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், சசிகலா குடும்பத்தினர் இருந்தனர். என்னை உட்கார சொன்னார்கள். 'சசிகலாவை முதல்வ ராக்க, அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.

'என்ன அவசரம் வந்தது?' என, கேட்டேன். அவர் கள், 'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூடி உள்ளது. முதல்வர் என்ற பொறுப்பையும், பொது

 

செயலரிடம் தர வேண்டும். நீங்கள் தான், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, தெரிவித்தனர்.

'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டியதே எனக்கு தெரியாது. எனக்கு தெரியாமல், கூட்டத்தை கூட்டிவிட்டு, இந்த ஏற்பாடு செய்வது நியாயமா...' என வருத்தத்துடன் கூறியபோது, யாரும்எதுவும் பேசவில்லை.

கடைசியாக, என் கையை பிடித்து, அந்த நிலையிலும், 'கட்சியின் கட்டுப்பாட்டை காப் பாற்றுங்கள்' என, கட்டாயப்படுத்தினர். 'ஜெ., நினைவிடத்திற்கு சென்று வந்த பின் கூறுகி றேன்' என்றதற்கும், இடம் கொடுக்க வில்லை. என்னை கட்டாயப்படுத்தியதால், ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய, இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஜெ., ஆன்மா இருக்கும் இடத்தில் கூறுகிறேன். இதை நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என, அவர் ஆன்மா கூறியதால், இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.
என்னை பொறுத்தவரையில், அ.தி.மு.க., அடிமட்ட தொண்டர்கள் விரும்புகிற ஒருவரே, பொதுச்செயலராக வேண்டும். ஒட்டுமொத்த மக்கள் விரும்புகிறவர் தான், முதல்வராக வர வேண்டும்.

தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி, கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்துகிற ஒருவரும், ஆட்சியின் நல்ல பெயரை காப்பாற்றுகிற ஒருவரும் தான், பொதுச்செயலர் மற்றும் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற அடிப் படையில், இந்த கருத்தை பதிவு செய்கிறேன். இந்த கருத்தில், நான் உறுதியாக இருப்பேன். இதற்காக, யார் வந்தாலும், வராவிட்டாலும், தன்னந்தனியாக நின்று போராடுவேன்!இந்த பிரச்னைகளுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கரே காரணம். மக்கள் விரும்பினால், ராஜினா மாவை திரும்பப் பெறுவேன்.
 

பன்னீர் முடிவுக்கு பின்னணி என்ன?


முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், பன்னீர்செல்வத்தை, சசிகலாவும், அவரது உறவினர்களும் கண்டுகொள்ளவில்லை. அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும், அவரை பார்க்க செல்லவில்லை.

அவர், நேற்று முன்தினம் தலைமை செயலகம் வரவில்லை. வெளியில் எங்கும் செல்லாமல், தன் வீட்டிலேயே இருந்தார்; நேற்றும், அவர் தலைமை செயலகம் வரவில்லை. அதேநேரம், சசிகலா, முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பதவியேற்பு விழாவிற்காக, சென்னை பல் கலையில் உள்ள, நுாற்றாண்டு விழா அரங்கம் தயார் செய்யப்பட்டது. ஆனால், கவர்னர், தமிழகம் வர மறுத்து விட்டார். இதனால், பதவியேற்பு தள்ளிப்போனது.இதற்கு, முதல்வர் பன்னீர்செல்வமே காரணம் என, சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் சந்தேகித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு, அவரை மொபைலில் தொடர்பு கொண்டு, 'நீங்கள், எங்களுக்கு விசுவாசமாக இருப்பது போல் நடிக்கிறீர்கள்; மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். இப்படி இரட்டை வேடம் போடாதீர்கள். எந்த பதவியும் வேண்டாம் எனக்கூறி விட்டு, அரசியலை விட்டே போய் விடுங்கள்' என, கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சிக்குள்ளான பன்னீர்செல்வம், நேற்று இரவு, 9:00 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, ஜெ., நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மலர் வளையம் வைத்துவிட்டு, புறப்பட்டு விடுவார் என, உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நினைத்தனர்.

ஆனால், அவர் திடீரென, நினைவிடத்தில் சம்மணமிட்டு அமர்ந்தார், தன் கைகளை அணைத்த படி, கண்களை மூடி, தியானத்தில் அமர்ந்தார். திடீரென அவர் நினைவிடம் வந்து, தியானத்தில் அமர்ந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு, 9:39 மணிக்கு, அவர் கண்களை திறந்தார். அப்போது, அவரது கண்களில் இருந்து, கண்ணீர் கொட்டியது. அதன்பின் எழுந்து, நினைவிடத்தை, ஒரு முறை வலம் வந்தார்.
 

சர்வதேச ஹீரோவானார் ஓ.பி.எஸ்.,


'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழ மொழிக்கேற்ப, ஜெ., நினைவிடத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, முதல்வர் பன்னீர் செல்வம் பொங்கியதன் மூலம், சர்வதேச ஹீரோவாகி உள்ளார். தமிழகத்தில், கட்சி தலைமைக்கு விசுவாச மாகவும், பணிவுக்கு பெயர் பெற்றவராகவும் திகழ்ந்தவர், முதல்வர் பன்னீர்செல்வம்.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்தினர் கொடுத்த, டார்ச்சரை தாங்கிக் கொண்டு, முதல் வராக சிறப்பாக செயல்பட்டார்.அவரது செல்வாக்கு அதிகரித்ததால், அவரை மிரட்டி, சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா செய்ய வைத்தனர். அமைதியாக இருந்த பன்னீர் செல்வம், நேற்று இரவு திடீரென, ஜெ., நினைவிடம் வந்தார்.

ஜெ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், நடந்த நடவடிக்கைகளையும், மனதில் உள்ள ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்.'சசிகலா குடும்பத்தினர் மிரட்டியதால், பதவியை ராஜினாமா செய்தேன்' என்றார். அவரது பேட்டி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், அவருக்கு ஆதரவாக, மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீபா பேரவை சார்பில் ஆரம்பிக்கப்பட்ட, வாட்ஸ் - ஆப் குழுக்களின் பெயரில், ஓ.பி.எஸ்., என, பன்னீர்செல்வம் பெயரும் சேர்க்கப்பட்டது. நம் நாடு மற்றும் சர்வதேச மீடியாக்கள், நேற்று அவரது பேட்டியை, உன்னிப்பாக கவனித்து, 'தமிழக அரசியலில், இதுவரை நடந்திராத வகையில், அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள் ளார் பன்னீர்' என புகழ்ந்தன.எப்போதும் அமைதிக்கு பெயர் பெற்ற, அவரது துணிச்ச லான பேட்டி மூலம், பன்னீர்செல்வம், சர்வதேச ஹீரோவாகி உள்ளார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706562

 

பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார்: சசிகலா

 

சசிகலா

அதிமுக-வில் எந்த பிரச்னையும் இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கின்றனர். பன்னீர்செல்வம் எப்போதும் இணக்கமாகவும், அவருடனான உறவு சுமூகமாகவே இருந்தது. சட்டமன்றக் கூட்டத் தொடரில் பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். பன்னீர்செல்வம் பின்னால் திமுகவினர் செயல்படுகின்றனர். பன்னீர்செல்வத்தை மிரட்டியதாக சொல்லப்படுவது உண்மையில்லை. அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் தன் அருகில் அமர்ந்து மகிழ்ச்சியாகவே பேசினார். அவர் தற்போது பேசுவதற்கு பின்னால் ஸ்டாலின் இருக்கிறார். அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80093-o-panneerselvam-removed-from-aiadmk-sasikala.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoonops_00531.jpg

“பேரிருளின் மீது ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சிய சிறு வெளிச்சம்!”

நிச்சயம் இந்த இரவின் தொடக்கம் இப்படியாக இருக்குமென்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.  கடந்த ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதியிலிருந்தே, தமிழக அரசியல் களம் தெளிவாக இல்லை தான். நாளொரு நாடகங்களும் பொழுதொரு களேபரங்களும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. எப்போதும் எல்லாவாற்றையும் தள்ளி நின்று பார்த்துப் பழகிய சாமான்ய தமிழன்... இந்த முறை கொஞ்சம் விரக்தியுடன் தூரப் போனான். மனதுக்குள் புழுங்கி தவித்தான். ஏதாவது ஒன்று நிகழாத... எங்கிருந்தாவது ஒருவன் வந்து நம்மை இந்த சாக்கடையிலிருந்து மீட்க மாட்டானா என்று தனக்குள்ளேயே வெம்பினான்.  அதன் வெளிப்பாடுதான் மெரினாவில் கூடிய கூட்டம். ஆம், மெரினாவில் கூடிய கூட்டம் நிச்சயம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் கூடிய கூட்டம் இல்லை... தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடம் அல்லது அந்த வெற்றிடத்தை நிரப்ப துடிக்கும், மக்கள் பணியை என்றுமே செய்யாத தன்நலனை மட்டுமே முதன்மையாக நினைக்கும் அறமற்ற மனிதர்களுக்கு எதிரான கூட்டம். ஆனால், அந்த போராட்டங்களும் அதிகாரத்தின் சுழ்ச்சியால் வரலாற்றுப் பக்கங்களிக் செங்குருதியைச் சிந்திச் சென்றது.  மீண்டும் மீண்டும் தோல்வி... மீண்டும் மீண்டும் விரக்தியென்று துவண்டு போன சூழலில் தான்... இந்த இரவின் மீது கொஞ்சம் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சிருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். 

அந்த வெளிச்சம் எத்தகையது என்று பார்ப்பதற்கு முன்... எந்த தைரியம் மன்னார்குடியை இப்படி செயல்பட வைத்ததென்று பார்ப்போம்.

“எது சசிகலாவை தொடர்ந்து முன்னேற வைக்கிறது....?” 

பெரும்பான்மை தமிழ்ச் சமூகம் எக்காலத்திலும் சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் ஏற்றுக் கொண்டதே இல்லை. தமிழ் சமூகத்தை விடுங்கள்... ஜெயலலிதாவே சசிகலாவை தன் தோழியாக ஏற்றுக் கொண்டாரே தவிர, ஒரு அரசியல் தலைவியாகவெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதற்கான சான்றுகளை நீங்கள் எங்கும் தேட வேண்டாம்.  அதிமுக பொதுச் செயலாளாராக பொறுப்பேற்கும் போது சசிகலா ஆற்றிய உரையை கூர்ந்து கவனித்தாலே போதும், ஜெயலலிதா சசிகலாவிடம் என்ன விவாதித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரியும். புரியும். இத்தகைய சுழலில் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதால் நான் அதிமுக பொதுச் செயலாளாராக பொறுப்பேற்கிறேன் என்று சசிகலா சொன்னதை யாரும் நம்பவில்லையென்பது மன்னார்குடியின் மனசாட்சிக்கு நன்கு தெரியும். 

பின் எது சசிகலாவை தொடர்ந்து முன்னேற வைத்தது....? எது சசிகலாவை முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்த்தியது...? எங்கு காணினும் மக்கள் எதிர்ப்பு...  சமூக ஊடகங்களில்  மீம்கள்...  போயஸ் வீதியில் கைகளில் சங்குடன் ராப் இசை கலைஞர்கள். ஆனால், எதற்கும் அசைந்துக் கொடுக்காமல் தன் இஷ்டத்திற்கு காய்களை நகர்த்த எது சசிகலாவை தூண்டியது...?  

நிச்சயம் அழுக்கான கரங்களின் அரண்தான் சசிகலாவை காத்தும், தாங்கியும் நின்றது. ஆம், இங்கு எல்லோரும் தம் அதிகாரங்களை பாழ்படுத்தி, பயன்படுத்தி சம்பாரித்து வைத்திருக்கிறார்கள். அதில் சிறு சிராய்ப்பும் வர யாரும் விரும்பமாட்டார்கள். இந்த அழுக்குகரங்களை வைத்தே தன்னை பலப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைதான், சசிகலாவை, அவரது குடும்பத்தை தங்கள் இஷ்டத்திற்கு ஆட வைத்தது.  அரசியலில்  காய்களை நகர்த்த வைத்தது.  மக்களின் விருப்பம் குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைக் கொள்ளவில்லை. மக்களை வெறும் மாக்களாக மட்டுமே கருதினர்.  மக்களுக்கும் அரசுக்கும், ஆட்சிக்கும் சம்பந்தமில்லை... இதுவெல்லாம் மேலிட விவகாரம், இதிலெல்லாம் அவர்களை இழுக்க வேண்டாம் என்பது போலவே இருந்தது அவர்களது நடவடிக்கை. 

“பேரிரவின் மீது படர்ந்த சிறு ஒளி”

இன்று அந்த அரணில் ஒரு ஓட்டை விழுந்திருக்கிறது. தாங்கி நின்ற ஒரு கரம் வெடுக்கென்று எடுத்திருக்கிறது. உண்மையின் ஒரு பக்கத்தைமட்டும் சொல்ல தொடங்கி இருக்கிறது.  நிச்சயம் இது இருள் சூழ்ந்த ஒரு பேரிரவின் மீதான் சிறு ஒளிதான்.   அங்கு அனைத்து கரங்களும் அழுக்கு கரங்கள்தான். நிச்சயம் இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. தங்கள் நலன் பாதிக்காத வரை அங்கு யாருமே பேசியதில்லைதான். ஒப்புக்கொள்கிறேன். இன்று ஓ. பன்னீர்செல்வம் பேசியது பின்னால் பல சதிகள் இருக்கிறதுதான். ஆம், சந்தேகிக்கலாம். 

ஆனால், இதையெல்லாம் கடந்து முதன்முதலாக மக்கள் எண்ணத்திற்கு மாற்றாக நடந்துக் கொள்ள நினைத்தவர்களுக்கு எதிராக ஒரு வலுவான குரல் ஒலித்திருக்கிறது.  

“இதையெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது... வற்புறுத்தினார்கள் என்றால் அதை இப்போதா சொல்வது. அவரிடம்தானே அதிகாரம் இருந்தது. அவர்தானே முதல்வர். இதைகூட அவருக்கு கையாள தெரியவில்லையென்றால் எப்படி அவர் ஆட்சியை நடத்துவார்...?” நியாயமான கேள்விதான்... கோபம்தான்.  ஆனால், இப்போது இந்த கேள்விகளைவிட முதன்மையாக இருப்பது அவர் சொல்லி இருக்கும் பிற விஷயங்கள். 

அவர் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். அது எல்லாவற்றுக்கும் மையமாக இருப்பது மன்னார்குடி குடும்பத்தின் அதிகாரம்.  ஆட்சியில், அரசில் எந்த பங்கும் வகிக்காத ஒரு குடும்பம் அனைத்திலும் அதிகாரம் செலுத்துகிறது என்கிறார்.  இது எதுவும் சாமன்யனுக்கு தெரியாதது இல்லைதான். ஆனால், முதல்வாராக இருப்பவரே இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்.  இப்போது நாம் சரமாரியாக கேள்வி எழுப்ப வேண்டியது... பலவீனப்படுத்த வேண்டியது யாரை...?  

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது: பன்னீர்செல்வம்

 

ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து தன்னை யாரும் நீக்க முடியாது என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 
ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது: பன்னீர்செல்வம்
 
சென்னை:

சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதும், கட்சியின் சில அமைச்சர்கள் மீதும் அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். கட்சியின் தலைமை தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுச் செயலாளர் சசிகலா நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அதிமுகவில் எந்த பிரச்சனை இல்லை என்றும் சசிகலா நிச்சயம் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் தம்பிதுரை உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08015314/1066948/Nobody-can-not-remove-me-from-the-post-which-was-given.vpf

Link to comment
Share on other sites

ஸ்டாலினிடம் சிரித்தது குற்றமாகாது: சசிகலாவுக்கு ஓபிஎஸ் பதில்

 
 
ஓ.பன்னீர்செல்வம் | படம்: எல்.சீனிவாசன்
ஓ.பன்னீர்செல்வம் | படம்: எல்.சீனிவாசன்
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்த பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.

இதையடுத்து அதிமுகவின் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் கூறுகையில் ஸ்டாலினைப் பார்த்து நேரில் சிரித்தது குறித்து சசிகலா குற்றச்சாட்டு எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, ''மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் சிரிக்க முடியும். ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பொருளாளராக நியமிக்கப்பட்டேன். அந்தப் பணியை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவனாக, என் மனதுக்கு நிறைவாகச் செய்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமையில்லை.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. கழகம், தொண்டர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஸ்டாலினிடம்-சிரித்தது-குற்றமாகாது-சசிகலாவுக்கு-ஓபிஎஸ்-பதில்/article9527374.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தமிழ்நாடு கொழுந்து விட்டெரிய போகுது போல.

Link to comment
Share on other sites

16602764_612816625577453_904212456149902

:D:

16665076_973124742787220_599198568005386

Link to comment
Share on other sites

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரபலங்களிடையே குவியும் ஆதரவு! என்ன சொல்கிறார்கள்

மெரினாவில் மவுனம் கலைத்து கலகக் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரின் இந்த அதிரடி பேட்டிக்கு அ.தி.மு.க கட்சியினரிடையே ஆதரவும் எதிர்ப்பு மாற்றி மாறி எழுந்து வருகின்றன. ஆனால் சமூக வலைதளங்களிலோ காற்று ஓ.பி.எஸ் பக்கம் பலமாய் அடிக்கிறது. சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இது!

ops_new_02585.jpg

சமீப காலமாக ட்விட்டரில் அதிரடியாக கருத்துகளை தெரிவித்து வரும் கமல், 'சில ஆண்டுகளுக்கு முன் இதே பிப்ரவரி ஏழாம் தேதிதான் மக்களின் அன்பிற்கு முன்னால் அதிகாரம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன். அப்படியே இப்போதும் இருக்கவேண்டும்' எனக் கூறியிருக்கிறார். பிப்ரவரி ஏழாம் தேதிதான் விஸ்வரூபம் வெளியானது. மற்றொரு ட்வீட்டில் 'நிம்மதியாய் தூங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்பாக முழித்துவிடுவார்கள்' எனக் கூறியிருக்கிறார். 

 

7 th of februarya few years back made me understand how people's love can make an artiste win against tyranny. Was humbled & stay that way

— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2017

 

ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை குஷ்பு, 'தமிழக மக்களில் ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற அனைவரும் நிம்மதியாக தூங்குவார்கள், 'ஒரு நாயகன் உதயமாகிறான்' எனக் கூறியுள்ளார்.

People in TN will have a peaceful sleep tonight except a bunch of few..

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுப.வீரபாண்டியன், 'சாது மிரண்டது, சுயமரியாதை வென்றது' என ட்வீட்டியுள்ளார்.

சாது மிரண்டது. சுயமரியாதை வென்றது.

— SubaVeerapandian (@Suba_Vee) February 7, 2017

 

சமீப காலமாக அரசியலில் ஆர்வம் செலுத்திவரும் நடிகை கெளதமி, 'இதற்காகத்தான் அம்மா ஓ,பி.எஸ்ஸை தேர்ந்தெடுத்தார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்' எனக் கூறியுள்ளார்.

 

இதற்காகத்தான் அம்மா OPSஐ தேர்ந்தெடுத்தார்

நடிகர் ஆர்யா, 'சரியான நேரத்தில் துணிச்சலாக பேசியுள்ளார் ஓ.பி.எஸ். வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார். 

Great bold speech by OPS sir at the right time

தயாநிதி அழகிரி, 'ஓ.பி.எஸ் இவ்வளவு துணிச்சலாய் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் முதல்வரே! ஆனால் எந்நேரமும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்' என ட்வீட்ட, அடுத்த சில நிமிஷங்களிலேயே ஓ.பி.எஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது.

didn't know OPS had it in him.. but well done CM ! he will be dismissed from the AIADMK party anytime.. coming soon..#BoldSpeech

— Dhaya Alagiri (@dhayaalagiri) February 7, 2017

 

நடிகர் அருள்நிதி, 'தைரியமான பேச்சு ஓ.பிஎஸ் சார். உண்மையை உரக்கச் சொன்னதன் மூலம் தமிழக மக்களுக்கு உங்களின் நேர்மையை நிரூபித்துவிட்டீர்கள்' எனக் கூறியுள்ளார்.

 

Bold speech ops sir ...u have been honest to the ppl of tn by letting them know the truth ..

— arulnithi tamilarasu (@arulnithitamil) February 7, 2017

அவ்வப்போது பரபர கருத்துகளை சொல்லும் நடிகர் சித்தார்த், 'ஓ.பி.எஸ் மெரினாவில் இருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் போன்ற சீரியல்களை நேரில் பார்ப்பது போல இருக்கிறது' என ட்வீட்டினார்.

#OPS in Marina! TN politics.
#GOT ha! Live Game of Thrones! And House of Cards!

— Siddharth (@Actor_Siddharth) February 7, 2017

இசை அமைப்பாளர் இமான், 'தமிழக அரசியலில் இப்போதுதான் நம்பிக்கை பிறக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியாக பேசியிருக்கிறார். நீதி வாழ்கிறது' என ட்வீட்டியுள்ளார். 

There it goes! Shows signs of hope in Tamilnadu Politics! Right speech at the right time from right place! Justice prevails! #OPS

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'எவன் வந்து அடக்குவான் மறத்தமிழ் மகன் உனை, இறப்பினி ஒரு முறை, துணிந்து நீ பகை உடை. உலகுக்கு உரக்க சொல்!' என ட்வீட்டியுள்ளார்.

எவன் வந்து அடக்குவான் , மறத்தமிழ் மகன் உனை , இறப்பினி ஒரு முறை , துணிந்து நீ பகை உடை .உலகுக்கு உரக்க சொல்! #அடங்காதே

— G.V.Prakash Kumar (@gvprakash) February 7, 2017

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், 'இறுதியாக ஓ.பி.எஸ் நிமிர்ந்து நிற்கிறார்' என ட்வீட்டியுள்ளார். 

OPS finally stands up

— Karti P Chidambaram (@KartiPC) February 7, 2017

இந்நிலையில் ட்விட்டரில் #OPannerselvam, #ISupportOPS, Poes Garden, AIADMK போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டடித்து வருகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/80099-celebrities-support-ops-via-social-media.art

Link to comment
Share on other sites

16508385_480629482060904_726801082518072

Link to comment
Share on other sites

சிரிப்பது பெரிய குற்றமில்லை: ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் பன்னீர்செல்வம்

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலினை பார்த்து நீங்கள் சிரித்ததாக குற்றம் சொல்கிறார்களே?

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வேறுபாடே சிரிப்புதான். மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும். எனவே சிரிப்பது மிகப்பெரிய குற்றம் ஆகாது. 

உங்கள் மேல் எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது என்பதால்தான், எதிர்கட்சித் தலைவரைப் பார்த்து சிரித்ததை குற்றமாக சொல்கிறார்களா? 

என் மடியில் கனம் இல்லை. அதனால் பயம் இல்லை.

உங்களை கட்சிப் பணியில் இருந்து நீக்கியிருக்கிறார்களே?

எனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மாதான்(ஜெயலலிதா) பொருளாளர் பொறுப்பு கொடுத்தார். அந்த பொறுப்பை நான் திறம்பட செய்திருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. என்னை அந்த கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க தமிழகத்தில் யாருக்கும் உரிமையில்லை.

புதிய கட்சி தொடங்குவீர்களா?

நான் அதிமுகவின் அடிமட்டத் தொண்டன். பொறுத்திருந்திருந்து பாருங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/80097-laughing-not-great-offense.art

Link to comment
Share on other sites

16473951_1483131825032565_17098962851743

tw_blush:

16508003_1214916675295433_88659130295905

Link to comment
Share on other sites

காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

பதிவு: பிப்ரவரி 08, 2017 01:17

 
 

காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.

 
 
 
 
காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
 
சென்னை: சென்னையில் நாளை காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஓ.பன்னீர்  செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து  ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் காலை நடைபெற உள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08011740/1066945/ADMK-MLA-meet-at-10-AM-Imp-decisions-will-taken.vpf

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்.. அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 

சென்னை: சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை வரவேற்று தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குறிப்பாக சசிகலா எதிர்ப்பாளர் கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ், பி.ஹெச்.பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடிடனர்.

 

 அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- வீடியோ 05:46 அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை அதிமுக பெண் தொண்டர்கள் பலரும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.

சிவகாசி அம்பேத்கார் சிலை அருகே பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாடியதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-busted-crackers-after-watching-cm-o-pannerselvam-inte-273544.html

Link to comment
Share on other sites

நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்

பதிவு: பிப்ரவரி 08, 2017 03:31

 
 

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்
 
சென்னை:
 
பரபரப்பான அரசியல் சூழலில் நள்ளிரவு 2.30 மணியளவில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு முதல்வர் பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று கூறினார். 
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை. 
 
வேறு எந்த முக்கிய தலைவர்களும், மத்திய மந்திரிகள் யாரும் சந்தித்து பேசியதாக நான் கேள்விப்படவும் இல்லை, பார்க்கவும் இல்லை. 
 
அவரை பார்க்க நான் பலமுறை முயற்சி செய்து இருக்கிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க முடியாத ஒரு துர்பாக்கியசாமி என்று வருந்தி இருக்கிறேன். சந்தேகத்திற்கிடமான கேள்விகளை முன் வைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
 
அம்மா இறந்துவிட்டதாக செய்தி கேள்வி பட்டது முதல் எங்களுக்குள் இருந்த அனைத்து சக்திகளும் மறைந்து விட்டதாகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்வதே நன்றிக் கடனாக இருக்கும். 
 
இவ்வாறு தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08033105/1066952/I-went-to-hospital-for-all-75-days-but-could-not-see.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அட போங்க.. நீங்க ஒரு பக்கம்.

சும்மா ஜாலியா போயிட்டு இருக்குது...

சும்மா தமாசு தான்..

வன்முறையில்லாமல் ஏதாவது விறுவிறுப்பு இருந்தால்தான் (அரசியல்)வாழ்க்கையில் சுவை இருக்கும்..! :)

Link to comment
Share on other sites

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?

 

 
 
download_3129771f.jpg
 
 
 

கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' சீரியல்களைப் போலவே இருக்கிறது.

ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள்.

அருள்நிதி: தைரியமான பேச்சு. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியச் செய்து, அவர்களிடத்தில் நேர்மையாக நடந்திருக்கிறார் ஓபிஎஸ்.

இமான்: இதுதான் சிறந்த வழி. தமிழ்நாட்டு அரசியலில் நம்பிக்கையை துளிர்விட்டிருக்கிறது. சரியான இடத்தில் இருந்து, சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. #OPS

ஆதிக் ரவிச்சந்திரன்: 'கண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்!' #OPS வீரப்பேச்சு. எங்களின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். ரகசியமாகப் புதைந்துகிடக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். #OPSsirappu

தயா அழகிரி: ஓபிஎஸ் இத்தனையையும் புதைத்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆகச் சிறப்பு முதல்வரே!எப்போது வேண்டுமானாலும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படாலாம். ஆனாலும் துணிவாகப் பேசியிருக்கிறார். #OPS #Modi தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை மோடி அலை.

குஷ்பு: திகைப்புடன் காத்திருக்கிறேன். ஓபிஎஸ் மவுனத்தைக் கலைப்பார் என்று நம்புகிறோம். போராட்டமா இல்லை வெறும் அஞ்சலியா? நாடகத்தின் முடிச்சு முழுமையாக அவிழட்டும். ஒரு தலைவர் உதயமாகிறார்.

எஸ்.வி.சேகர்: 'அதிமுகவில் ஓர் ஆண் மகன்'. ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் ADMK எனும் கட்சி. வரலாறு திரும்புகிறதா?!

http://tamil.thehindu.com/tamilnadu/ஓபிஎஸ்-பேச்சு-தமிழ்-திரையுலகம்-என்ன-சொல்கிறது/article9528312.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.