Jump to content

ஐ.பி.எல். கிரிக்கெட்: இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி


Recommended Posts

ஐ.பி.எல். கிரிக்கெட்: இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி
 
பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். 8 அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்துள்ளனர். இதில் எந்த அணிகளும் விரும்பி கேட்கப்படாத 8 நாடுகளை சேர்ந்த 160 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது 639 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தான் போட்டி தொடருக்கான வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலையாகும். இதேபோல் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், இயான் மோர்கன், இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஜான்சன், கம்மின்ஸ் ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட், ஆஸ்திரேலிய வீரர்கள் பிராட் ஹாடின், நாதன் லயன், தென் ஆப்பிரிக்க வீரர் கைல் அப்போட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

சர்வதேச போட்டியில் விளையாடிய 24 இந்திய வீரர்களின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். அணிகள் வீரர்களை தேர்வு செய்ய மொத்தம் ரூ.143.33 கோடியை செலவிட முடியும். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 9 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 27 பேர் இடம் பெறலாம். இந்த சீசனில் மொத்தம் 28 வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 76 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/07022012/1066727/IPL-2017-auction-Ishant-Sharma-Eoin-Morgan-among-players.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். ஏலத்தில் 5 ஆப்கானிஸ்தான் வீரர்கள்

பதிவு: பிப்ரவரி 09, 2017 11:07

 
 

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். ஏலத்தில் 5 ஆப்கானிஸ்தான் வீரர்கள்
 
பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந் தேதிவரை நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். ஏலத்தில் 750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 8 அணிகளிலும் சேர்த்து மொத்தம் 79 வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள்.

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். முகமது சஷாத், முகமது நபி, ரஷீத்கான், தவ்லத் சர்தான், நஜீப்சர்தான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இதில் விக்கெட் கீப்பரான முகமது சஷாத் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அவர் 20 ஓவர் உலக கோப்பையில் 222 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 19 பந்தில் 44 ரன் எடுத்தார். இதனால் அவர் ஏலத்தில் விலை போவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றன. இதேபோல் இடது கை வேகப்பந்து வீரரான தவ்லத் சர்தானும் ஏலத்தில் விலை போவார் என்று கருதப்படுகிறது.

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் ஸ்டோக்ஸ், மார்கன், வோக்ஸ், இஷாந்த் சர்மா, குட்மின்ங் மேத்யூஸ், மிச்சேல் ஜான்சன் போன்ற வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேர்ஸ்டோவ், போல்ட், ஹாடின், நாதன் லதன், அபோட், ஹோல்டா, போன்ற வீரர்களுக்கு ரூ.1½ கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/09110732/1067217/IPL-Auction-2017-Five-Afghanistan-Players-Are-Up-For.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஓளட் போடும் ஶேர்யக்ஹ் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.