Jump to content

டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து அலஸ்டெயார் குக் இராஜினாமா!


Recommended Posts

டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து அலஸ்டெயார் குக் இராஜினாமா!

 

 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்டெயார் குக் தனது அணித்தலைமையை  இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

249313.jpg

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையடுத்து குக்கின் தலைமையின்  மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த காரணத்தால் இவர் அணித்தலைமையிலிருந்து இராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

இங்கிலாந்து அணி சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள குக் அதில் 24 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இதில் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்திபெற்ற ஏசஷ் தொடரையும் இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதுமாத்திரமின்றி 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குக் 11057 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அடுத்த டெஸ்ட் தலைவராக ஜோ ரூட் தெரிவுசெய்யப்படலாம் என எதிர்பார்க்ப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/16299

Link to comment
Share on other sites

டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து குக் விலகல்

 

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து அலிஸ்டெர் குக் விலகியுள்ளார்.

அலிஸ்டெர் குக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான அலிஸ்டெர் குக், 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தை வெற்றி பாதையில் அழைத்து சென்றிருக்கிறார்.

இருப்பினும், இந்தியாவில் 4-0 என்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியபோது, தன்னுடைய அணித்தலைவர் பதவி தொடர்பாக கேள்விகள் எழுந்திருப்பதாகக் கூறியிருந்தார்.

அலிஸ்டெர் குக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2012 ஆண்டு முதல் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற அலிஸ்டெர் குக் தற்போது அதில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

"அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு மிகவும் கடுமையானதாக இருந்தாலும், இங்கிலாந்து கிரிகெட்டு அணியின் நன்மைக்காக உகந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று குக் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது பெரும் பாக்கியம் என்றும், டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடுவதை தொடர்ந்து, முழு பங்களிப்பை வழங்கி, என்னால் முடிந்தவரை அடுத்த இங்கிலாந்து அணித்தலைவருக்கு உதவ தயாராக இருப்பதாக குக் தெரிவித்திருக்கிறார்.

மகாராணியுடன் கைகுலுக்கும் அலிஸ்டெர் குக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதும், 30 சதங்களை விளாசியிருப்பதும் இங்கிலாந்தின் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வேளையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11,057 ஓட்டங்கள் எடுத்திருக்கும் அலிஸ்டெர் குக், அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

குக்கிற்கு இங்கிலாந்து அதிக நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று அலிஸ்டெர் குக் அணித்தலைவராக ஆவதற்கு முன்னர் இந்த பொறுப்பில் இருந்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆன்ட்ரூ ஸ்ட்ரோஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை உறுதியுடனும், நம்பிக்கையுடனும், மாபெரும் பெருமையுடனும் குக் வழிநடத்தியதாக ஸ்ட்ரோஸ் புகழ்ந்திருக்கிறார்.

நாட்டின் சிறந்த கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவராக அவர் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

http://www.bbc.com/tamil/sport-38879945

Link to comment
Share on other sites

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கேப்டன் பதவியில் சாதித்த குக்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்த அலைஸ்டர் குக் கேப்டன் பதவியில் சாதித்த பட்டியல் குறித்து விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கேப்டன் பதவியில் சாதித்த குக்
 
லண்டன்:

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் அலஸ்டர் குக் பதவி விலகினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த பிறகு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அணியில் ஒரு வீரராக விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார்.

32 வயதான குக் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 59 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 24-ல் வெற்றி பெற்று கொடுத்தார். 22-ல் தோல்வி ஏற்பட்டது. 13 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

2013 மற்றும் 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று முத்திரை பதித்தார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தார்.

இங்கிலாந்து அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்தார் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்தப்படியாக மைக் ஆதாடன் 54 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதிக வெற்றி பெற்றவர்களில் ஸ்டாரசுடன் இணைந்து 2-வது இடத்தில் உள்ளார். வாகன் தலைமையில் அதிகமான 26 வெற்றி கிடைத்தது.

குக் 2010 முதல் 2014 வரை ஒருநாள் கேப்டனாக பணியாற்றினார். இதில் 69 போட்டியில் 36-ல் வெற்றி கிடைத்தது. 30 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 2 போட்டி முடிவு இல்லை.

இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஜோரூட் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/07105718/1066778/Achieved-in-England-Test-team-captain-Cook.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.