Jump to content

10 செகண்ட் கதைகள் 7


Recommended Posts

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

 

p88_1.jpg

ஸீட்!

தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்!

 - கண்ணன்

பணம்

p88_2.jpg

பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்!

- கட்டுமாவடி கவி கண்மணி

தமிழன்டா!

p88_3.jpg

சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!”

- சுந்தரம் ராமசாமி

திருட்டு!

p88_4.jpg

``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டுவந்திருப்பேன்ல!” என்றார் அப்பா.

 - சி.சாமிநாதன்

நோ என்ட்ரி!

p88_5.jpg

மாடர்ன் டிரெஸ்ஸான ஜீன்ஸ், லெகிங்ஸ் போட்டுக்கொண்டு வந்தவர்களை அனுமதிக்காத கோயிலில், சி.டி-யில் ஓடிக்கொண்டிருந்தது நாகஸ்வர இசை!

- அஜித்

பழ(ங்)ம் கதை

p88_6.jpg

``தம்பிதானே... விட்டுக்கொடுப்பா”

என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் க்யூவில் நின்றிருந்த சேகர்!

- ஸ்ரீகேஷ்

திருட்டு டிக்கெட்

p88_7.jpg

‘பிளாட்பாரம்’ டிக்கெட் இரண்டு வாங்கிக்கொண்டு ரயில் நிலையத்துக்குள் சென்றான், ‘வித்அவுட்’டில் வரும் தன் நண்பனை அழைக்க!

- கி.ரவிக்குமார்

அக்கறை

p88_8.jpg

கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு `காணவில்லை’ என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!

- துரை.சந்தானம்

உதவி

p88_9.jpg

வங்கியில் ஃபார்ம் நிரப்பும்போது, வாலன்ட்டியராக பேனா கொடுத்து உதவியவரைத் தேடிப்போய் `நன்றி’ சொன்னேன். “சார், நான் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்...” என்று ஆரம்பித்தார் அவர்!

- எஸ்கா

விதி

p88_10.jpg

``துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?” என்றான் சக கைதி. ``செத்தவன் கத்திட்டானே!” - சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!

- கெளதம்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.