Jump to content

விசிறி வீடு: காலத்தின் வாசனை


Recommended Posts

விசிறி வீடு: காலத்தின் வாசனை

தஞ்சாவூர்க் கவிராயர்

 

 
kavirayar_3128334h.jpg
 

நாட்டு மருந்துகளும் பூஜை சாமான்களும் விற்கும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பனை ஓலை விசிறி என் கவனத்தை ஈர்த்தது. நான் அப்படியே ஐம்பது வருடங்கள் பின்னால் போய்விட்டேன். ஆசையாக அதைத் தொட்டேன். என் உடம்பு சிலிர்த்தது.

பத்திரமாக அதை வீட்டுக்கு வாங்கி வந்தேன். ஓரத்தில் முக்கோணம் முக்கோணமாகப் பூ பின்னிய விசிறி. பச்சை ஓலை வாசனை இன்னும் விசிறியில் ஒட்டிக்கொண்டிருந்தது. விசிறும்போது ஆஹா.. முகத்தில் மோதும் அந்த பச்சை வாசனை!

எங்கள் வீட்டு உறுப்பினர்கள் ஒருவர் கூட எடுத்து விசிறிப் பார்க்கவில்லை. அதற்குத் தேவையும் இல்லை அல்லவா? வீட்டில் எங்கு பார்த்தாலும் மின்விசிறிகள்!

கத்தியைப் போல் நீட்டிக்கொண்டிருந்த மின்விசிறியின் றெக்கைகள் காற்றை ஏன் இப்படி வெட்டிச் சாய்க்கின்றன? மென்மையாக நம்மைச் சுற்றி மிதந்துகொண்டிருக்கும் காற்றை இப்படித்தான் வெட்டிக் கூறுபோட்டுத் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டுமா?

காற்றின் துண்டுகள்

என் பேரன் கேட்டான்: ‘‘தாத்தா! இந்த விசிறியில் காத்து வருமா?’’

‘‘விசிறிப் பாரேன்!’’

விசிறியின் காம்பைப் பிடித்து எப்படி விசிறுவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

கண் மூடி ரசித்தான்.

‘‘எப்படி இருக்கு ராசா?’’

‘‘ஒரு துண்டு காத்தைக் கட் பண்ணி எடுத்து, அதுக்குக் காம்பு வெச்சி விசிறிக்கிறாப்ல இருக்கு!’’

ஒரு ஜப்பானியக் கவிஞரின் ‘ஹைக்கூ’ ஞாபகத்துக்கு வந்தது.

தெருவில் விசிறி விற்பவன்

‘கூடை நிறைய

காற்றின் துண்டுகளைச்

சுமந்துகொண்டு போகிறான்!’

விடைபெற்றது விசிறி

இன்று வீடுகளில் இருந்து விசிறிகள் விடைபெற்றுக்கொண்டுவிட்டன. அப்போதெல்லாம் வயதானவர்கள் விசிறியும் கையுமாகத்தான் இருப்பார்கள். விசிறிக்கொள்வது மட்டுமின்றி, வேறு விசித்திரமான பயன்பாடுகளும் விசிறிக்கு உண்டு.

விசிறியின் நீளக் காம்பால் முதுகைச் சொறிந்து கொள்வது, அடுப்புத் தணலை விசிறிவிடுவது. அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிப்பது. கோபம் வந்துவிட்டால் விசிறிக் காம்புதான் ஆயுதம். விசிறி அடி வைபவம் அரங்கேறாத வீடுகளே கிடையாது.

அப்பா குறுக்கிட்டுத் தடுப்பார்.

‘‘விசிறி பிஞ்சு போச்சு பார்!’’

அப்போதும் அவருக்கு விசிறி மீதுதான் அக்கறை!

விசிறி வீடு

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் ஃபேன் கிடையாது. அம்மாவுக்குக் காற்று இல்லாவிட்டால் மூச்சுத் திணறல் வந்துவிடும். அம்மாவுக்குத் தூக்கம் வரும் வரையில் விசிறுவேன். விசிறியில் தண்ணீர் தெளித்து விசிறியபடி ‘‘இது ஊட்டிக் காத்து.. இது கொடைக்கானல் காத்து!’’ என்பேன்.

அம்மா தூங்கிவிடும். நானும் தூங்கிவிடுவேன். விசிறியும் தூங்கும்.

தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோயில் ரஸ்தாவில் பாட்டி வீடு இருந்தது. பாட்டி வீட்டுக்கு எதிர் வீட்டில் விசிறிக்கு பூ பின்னுவதைத் தொழிலாகவே செய்துவந்தார்கள்.

நல்ல பெரிய திண்ணை. நடுவில் விசிறிகள் குவிந்து கிடக்கும். சுற்றிலும் பெண்கள் உட்கார்ந்திருப்பார்கள். கல்யாணமாகாத முதிர்கன்னிகள். விசிறியில் வேகமாகப் பூ வேலை செய்வார்கள். ஏ அப்பா.. அந்த விரல்களில்தான் என்ன வேகம்!

தஞ்சாவூர் கீழவாசலில் விசிறிக்காரத் தெரு என்று ஒரு தெருவே இருக்கிறது. விசிறிகளை வைத்துதான் அந்த வீதியே பிழைத்தது. எனக்கு விசிறி பின்னுவது பிடிக்கும். விசிறி பின்னும் அக்காக்களைப் பிடிக்கும். ‘‘கோபாலா… கோபாலா’’ என்று அவர்கள் என்னைக் கொஞ்சுவது பிடிக்கும்.

என்ன விசித்திரம் என்றால், எவ்வளவு புழுக்கமானாலும் புது விசிறியை எடுத்து யாரும் விசிறிக்கொள்ளவே மாட்டார்கள். விசிறினால் போச்சு. பழைய விசிறியாகிவிடுமாம்.

விசிறிப் பாட்டு

விசிறிக்குப் பூ பின்னுகிறபோதே அக்காக்கள் அழகாகப் பாடுவார்கள். எல்லாமே சினிமாப் பாட்டுகள்தான். பாட்டின் நடுவே ஒரு தேம்பல் வரும். அப்போது ஒரு நிஜமான விசும்பலும் கேட்கும். கல்யாணமாகாத சோகம், வறுமை. வறுமையால் அவர்களின் சிரிப்பை, குதூகலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம் அந்த விசிறி வீட்டைப் பார்க்க ஆசைப்படுவேன். சமீபத்தில்தான் அந்த ஆசை நிறைவேறியது.

விசிறி வீடு பாழடைந்து கிடந்தது. திண்ணை காரை பெயர்ந்து இடிந்து காட்சியளித்தது.

அங்கிருந்த அக்காக்களையும், அந்த விசிறிகளையும், அந்தப் பாடல்களையும் காலம் எங்கே அடித்துக்கொண்டு போயிருக்கும்?

- தஞ்சாவூர்க் கவிராயர்,

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.