Jump to content

ஹைதராபாத்தில் இன்று வங்கதேசம் - இந்தியா ஏ பயிற்சி ஆட்டத்தில் மோதல்


Recommended Posts

ஹைதராபாத்தில் இன்று வங்கதேசம் - இந்தியா ஏ பயிற்சி ஆட்டத்தில் மோதல்

 

 

வங்கதேசம் - இந்தியா ஏ அணிகள் இடையிலான இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப் படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டிக்கான பயிற்சின்போது ஹர்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து குணமடைந்த அவர், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முடிவடைந்த குறுகிய வடிவிலான தொடர்களில் பங்கேற்றார்.

அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜெயந்த் யாதவ், சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் அரியாணா அணிக்கு எதிராக களமிறங்கினார். இவர்களுடன் கேப்டன் அபிநவ் முகுந்துக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள அவர் இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிப்பார். மேலும் இவர்கள் 3 பேரும், முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்கதேச அணிக்கு எதிராக 9-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் அபிநவ் முகுந்துக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைப்பது அரிதுதான். தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோரில் ஒருவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அபிநவ் முகுந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையே உள்ளது.

ஆனால் ஆல்ரவுண்டர்கள் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும். இதனால் இவர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும்.

அபிநவ் முகுந்த் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடரில் 3-வது தொடக்க வீரராககூட இடம் பெற வாய்ப்புள்ளது.

இவர்களை தவிர ரஞ்சி கோப்பை யில் அதிக ரன்கள் குவித்த பிரியங்க் பன்சால், இளம் வீரர்களான இஷான் கிஷன், ரிஷப் பன்ட் ஆகியோருக்கு இந்த ஆட்டத்தின் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

தஸ்கின் அகமது, ஷாகில் அல்-ஹசன் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பந்து வீச்சை எதிர்த்து விளையாடுவதற்கு பன்சால் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும்.

இதபோல் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சபாஷ் நதீமுக்கு, வங்கதேச அணியின் முன்னணி வீரர்களான முஸ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால், மோமினுல் ஹக் உள்ளிட்டோருக்கு எதிராக பந்து வீசும் அனுபவம் கிடைக்கும்.

மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக அனிகெத் சவுத்ரி, ஷமா மிலிந்த் ஆகிய இரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் விளையாட உள்ளனர். ஜாகீர்கானின் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு இதுவரை சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அமையவில்லை.

37 வயதான ஆசிஷ் நெஹ்ரா டி20 ஆட்டங்களில் மட்டுமே விளை யாடி வருகிறார். இதனால் பயிற்சி ஆட்டத்தில் அனிகெத் சவுத்ரி, ஷமா மிலிந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக்குழுவினர் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/ஹைதராபாத்தில்-இன்று-வங்கதேசம்-இந்தியா-ஏ-பயிற்சி-ஆட்டத்தில்-மோதல்/article9522554.ece?homepage=true

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 224 ரன்கள் எடுத்து டிக்ளேர்- இந்திய ஏ அணி பதிலடி

இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா ஏ பதிலடி கொடுத்துள்ளது.

 
பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 224 ரன்கள் எடுத்து டிக்ளேர்- இந்திய ஏ அணி பதிலடி
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக வங்காள தேசம் - இந்திய ஏ அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இக்பால் 13 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சவுமியா சர்க்கார் 52 ரன்களும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 58 ரன்கள் சேர்க்கவும், வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய ஏ அணி பேட்டிங்கை தொடங்கியது, தொடக்க வீரர்களாக பன்சால், அபிநவ் முகுந்த் ஆகியோ் களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு பன்சால் உடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. பன்சால் 40 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். நாளை 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/05175018/1066439/warm-up-match-bangladesh-declare-224-india-a-83-for.vpf

Link to comment
Share on other sites

இந்திய ‘ஏ’ அணியின் பன்சால், ஷ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர் சதம் அடித்து அசத்தல்

வங்காள தேசம் ‘ஏ’ அணிக்கெதிராக இந்திய ‘ஏ’ அணியின் பன்சால், ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர் சதம் அடித்து அசத்தினார்கள்.

 
இந்திய ‘ஏ’ அணியின் பன்சால், ஷ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர் சதம் அடித்து அசத்தல்
 
இந்தியா ‘ஏ’ - வங்காள தேசம் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணி முதலில் களம் இறங்கி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சவுமியா சர்கார், மிஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. பன்சால் 40 ரன்னுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பன்சால், அய்யர் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பன்சால் 103 ரன்களும், அய்யர் 100 ரன்களும் சேர்த்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த ரிஷப் பந்த் 19 ரன்னிலும், இஷான் கிஷான் 11 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 8-வது வீரராக களம் இறங்கிய விஜய் சங்கர் அவுட்டாகாமல் 103 ரன்கள் சேர்க்க இந்தியா ஏ அணி 90 ஓவரில் 461 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

237 ரன்களுடன் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/06161519/1066654/India-A-panchal-shreyas-iyer-vijay-shankar-century.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.