Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:-

February 5, 2017

1 Min Read

questian.jpg

‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

வடமாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குத் தேவையான சான்றுகளை திரட்டும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது என்று என்னுடைய முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது விக்னேஸ்வரன் வடமாகாண சபையே போர்க் குற்ற விசாரணைகள் நடாத்தினால் என்ன? என்று கேட்கிறார். வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு வருடம் தான் இருக்கும் ஒரு பின்னணியில் இது ஒர் அரசியல் சாகசக் கூற்றா?அல்லது நடைமுறைச் சாத்தியமான ஒரு யோசனையா?

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறையைச் சேர்ந்த புலமைச் செயற்பாட்டாளரும், சிவில் சமூகச்செயற்பாட்டாளருமாகிய குமாரவடிவேல் குருபரனுடன் கதைத்த பொழுது அவர் பின்வருமாறு கூறினார். ‘மாகாண சபையின் அதிகார வரம்புக்குள் அவ்வாறு செய்வதில் சட்டத் தடைகள் ஏற்படலாம். ஆனால் மக்கள் ஆணையைப் பெற்ற முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையிலும் விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு வெளியே ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம். கிட்டத்தட்ட மக்கள் தீர்ப்பாயத்தைப் போல. அதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிபுணத்துவ உதவிகளையும் பெறலாம் என்று|| அதாவது ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு மாகாண சபைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் பேரவைக்கு அவர் தலைமை தாங்குவது போல என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதை இன்னும் சுட்டிப்பான வார்த்தைகளில் சொன்னால் சட்ட ரீதியாக அதைச் செய்ய முடியாது. சட்ட மறுப்பாகவே அவர் அதைச் செய்ய வேண்டி இருக்கும். அல்லது குருபரன் கூறுவது போல அவர் ‘சட்டத்தைக் கட்டுடைக்க’ வேண்டி இருக்கும். ஆனால் கடந்த ஏழாண்டுகளாக தமிழ் மிதவாதிகளில் எவருமே அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் சட்ட மறுப்பு போராட்டம் எதையும் நடத்தியிருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் அவ்வாறான ஒரு போராட்டத்ததை நடத்தியதற்காக எந்த ஒரு தமிழ் மிதவாதியும் கடந்த ஏழாண்டுகளில் கைது செய்யப்படவில்லை. அல்லது கைது செய்யப்படும் அளவுக்கு யாருமே றிஸ்க் எடுக்கவில்லை என்றும் சொல்லலாம்.

விக்னேஸ்வரன் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடுவார்கள். அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாரா? அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் தாயகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் சட்டத்துறை வல்லுநர்கள் பலரும் அவரைப் பின்பற்றி றிஸ்க் எடுப்பார்கள்.  தமிழ் சட்டவாளர்களும் சட்ட வல்லுநர்களும் முன்னெப்பொழுதையும் விட அதிக றிஸ்க் எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒரு இனப்படுகொலையை நிரூப்பதற்குத் தேவையான அறிவு பூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளைத் திரட்டி அவற்றை சட்ட பூர்வமாக தொகுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது.

 கடந்த ஆண்டு முழுவதிலும் நிகழ்ந்த நிலைமாறு கால நீதி தொடர்பான பொதுமக்களின் சந்திப்புக்களின் பொழுது ஒரு விடயம் அவதானிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் பொரும்பாலானவற்றுக்குச் சட்ட ஆலோசகர் எவரும் இருக்கவில்லை. அந்த அமைப்புக்கள் பொரும்பாலும் பாதிப்புற்ற மக்களின் அமைப்புக்களாகவே காணப்பட்டன (people oriented). இது தொடர்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு முகநூலில் ஒரு நண்பர் அருமையான கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது மேற்படி அமைப்புக்கள் ‘கருத்து மைய செயற்பாட்டாளர்களை”மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களாக இருக்க வேண்டும் என்று. (concept oriented).

அவ்வாறு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அமைப்புக்களில் பெரும்பாலானவை ஒரு சட்ட உதவியாளரையேனும் கொண்டிருக்கவில்லை. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பில் நிகழ்ந்த ஓர் அமர்வின் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோர்களுக்கான அமைப்பின் பிரதிநிதிகளை ஒரு சட்டவாளர் சந்தித்தார். இச் சந்திப்புக்கு அடுத்த நாள் அம்பாறையில் நடந்த மற்றொரு சந்திப்பின் போது மேற்படி பாதிப்புற்ற அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது. ‘உங்களுடைய பல்லாண்டு கால அலைந்த சீவியத்தில் காணாமல் போனவர்களின் ஆவணங்களையும் காவிக் கொண்டு இது வரையிலும் எத்தனை பேரைச் சந்தித்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘எங்களுக்கு கணக்குத் தெரியாது. நிறையப் பேரைச் சந்தித்திருக்கிறோம்’ என்று. ‘இவ்வாறான சந்திப்புக்களில் உங்களுக்கு பிரயோசனமாக இருந்த சந்திப்புக்களைப் பற்றிச் சொல்லுங்கள் ‘; என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘நேற்று மட்டக்களப்பில் அந்த பெண் சட்டவாளருடனான சந்திப்புத்தான் இருவரையிலும் நாங்கள் மேற்கொண்ட சந்திப்புக்களிலேயே நம்பிக்கையூட்டும் ஒன்றாக அமைந்திருந்தது’ என்று. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் சட்ட ரீதியாக எவ்வாறு நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பில் சட்ட விழிப்பூட்டிய ஓர் அமர்வையே தங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஓரு சந்திப்பு என்று அந்தப் பெண்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இவ்வாறு ஒரு சட்டவாளரின் உதவி தேவை என்பதனை தமிழ் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் உணரத் தொடங்கி விட்டன. காணாமல் போனவர்களுக்கான சில அமைப்புக்கள் அண்மை மாதங்களில் இவ்வாறு சட்டவாளர்களை நாடி வரத் தொடங்கி விட்டன. வடமாகாண சபை இது விடயத்தில் அந்த அமைப்புக்களுக்கு ஏதும் உதவிகளைச் செய்யலாம்;.தமிழ் மக்கள் பேரவையும் செய்யலாம். தமிழ் சட்டவாளர்கள் சங்கம் அதைச் செய்யலாம்.குறிப்பாக அதிகளவு சட்டவாளர்களை தன்னுள் கொண்டிருக்கும் கூட்டமைப்பு அதைச் செய்யலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதைச் செய்யலாம்.

குமரபுரம் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடக்கத்தில் திருகோணமலையிலேயே இடம்பெற்றன. பின்னர் அவை அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டன. விராரணைகளை மறுபடியும் திருமலைக்கு மாற்றுவதற்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டவாளரை இரு தடவைகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர் உதவ முன்வரவில்லை என்று கூறுகிறார்கள்.

அது மட்டுமல்ல போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக புள்ளி விவரங்களையும் ஆவணங்களையும் திரட்டும் நோக்கத்தோடு கூட்டமைப்பானது சில ஆண்டுகளுக்கு முன் பம்பலப்பிட்டியில் ஓர் அலுவலகத்தைத் திறந்திருக்கிறது. லண்டனில் இருந்து கிடைத்த நிதி உதவியுடன் அந்த அலுவலகம் இயங்கியிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் நடக்கவில்லை. வட கிழக்கில் இருந்து கொழும்புக்குச் செல்பவர்கள் தங்கிச் செல்லும் ஒரு லொட்ச் ஆகத் தான் அந்த அலுவலகம் இயங்கியது என்று ஒரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இத்தகையதோர் பின்னணியில் கடந்த ஏழாண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்குகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்கள் ஈழத்தமிழர் மத்தியில் மிகச் சிலவே உண்டு. மனித உரிமைகளுக்கான இல்லம் (HHR) மற்றும், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான மையம் (CHRD) போன்ற சில அமைப்புக்களே ஈழத்தமிழர் மத்தியில் செயற்பட்டு வருகின்றன.

மனித உரிமைகள் இல்லம் 1977 இல் தொடங்கப்பட்டது.இலங்கைத்தீவின் மூத்த மனித உரிமைகள் அமைப்புக்களில் அதுவும் ஒன்று. அதன் ஸ்தாபகரான சேவியர் கடந்த ஆண்டு கனடாவில் உயிர் நீத்தார். ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய ஒரு முன்னோடி மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய சேவியரின் மறைவானது அதற்குரிய முக்கியத்துவத்தோடு நினைவு கூரப்படவில்லை. சிலஊடகங்களில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு செய்தியாக அது பிரசுரமாகியது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் பொங்குதமிழ்இணையத்தளத்தில் ஓர் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது.

இனப்பிரச்சினை தொடர்பில் ஏறக்குறைய நான்கு தசாப்த கால தொகுக்கப்பட்ட ஆவணங்கள் எச்.எச்.ஆரிடம் உண்டு. இனப்படுகொலை எனப்படுவது நாலாம்  கட்ட ஈழப்போரின் முடிவில்தான் இடம்பெற்ற ஒன்று அல்ல. அதற்கு முன்னைய கட்டஈழப்போர்களின் போதும் அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட பல படுகொலைச் சம்பவங்கள் உண்டு.அது மிக நீண்ட ஒரு கொடுமையான பட்டியல். இவ்வாறு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கணிசமான ஆவணங்கள் மனித உரிமைகள் இல்லத்திடம் உண்டு என்று நம்பப்படுகின்றது.

துரதிஸ்ட வசமாக கடந்த செப்ரம்பர் மாதத்தில் இருந்து இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு வித தேக்கத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிறுவனமும் செயற்படாத ஒரு பின்னணியில் வழக்கறிஞர் ரட்ணவேலின் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான அமைப்பு (CHRD) ஒன்று தான் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை முன்னெடுத்து வருகிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அதன் பணிகளைப் பரவலாக்க முடியாதிருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எச்.ஆர்.டி. பெருமளவிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தோடு தொடர்புடைய வழக்குகளையும் சில காணி சம்பந்தமான வழக்குகளையும் கையாண்டு வருவதாகவும் ஏனைய வழக்குகளைக் கையாள்வதற்கு உரிய நிறுவனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சி.எச்.ஆர்.டி மட்டும் கையாள முடியாத அளவுக்கு எங்களிடம் வழக்குகள் உண்டு என்று குமரபுரம் படுகொலை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து செயற்படும்ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

எச்.எச்.ஆரும் சி.எச்.ஆர்.டியும் தமது வழக்குகளுக்காக சட்டவாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன. எனினும் வருமானத்தை எதிர்பாராது அதை ஒரு தொண்டாக முன்னெடுக்கும் சட்டவாளர்களும் உண்டு.எச்.எச்.ஆருடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டுக்குக் குறையாத சட்ட செயற்பாட்டாளர்களில் சிலர் இப்பொழுது சில வேறு நிறுவனங்களோடு சேர்ந்து செயற்படுகிறார்கள். இவர்களைப் போன்ற அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சட்டச் செயற்பாட்டு அமைப்பாக இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் முன்வர வேண்டும். முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் இது தொடர்பில் கவனம் செலுத்துவாரா?

எச்.எச்.ஆர்.பெருமளவுக்குச் செயற்படாத ஒரு பின்னணியில் அது கிராமங்கள் தோறும் பின்னி வைத்திருந்த ஒரு வலைப்பின்னல் அறுபடக் கூடிய ஓர் ஆபத்து உண்டு. அந்த அமைப்பில் செயற்பட்ட சிலர் இப்பொழுது வேறு அரச சார்பற்ற நிறுவனங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள். அதோடு சுமார் 40 ஆண்டு காலமாக தொகுக்கப்பட்ட சான்றாதாரங்களை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த ஆவணங்கள் இன்றியமையாதவை.

தமிழ் மிதவாத அரசியலைக் குறித்து எழுதும் பொழுது அதை அப்புக்காத்து அரசியல் என்றும் கறுப்புக் கோட்டு அரசியல் என்றும் எள்ளலாக எழுதுவது உண்டு. ஆனால் அதிகம் விமர்சிக்கப்படும் இந்த அப்புக்காத்துப் பாரம்பரியத்துக்குள் ஒரு புனிதமான மெல்லிய இழையாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியைக் காண முடியும். தொடர்ச்சி அறாத ஒரு மெல்லிழையாகக் காணப்படும் இச்செயற்பாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பணத்துக்கோ பிரபல்யத்துகோ ஆசைப்பட்டது இல்லை. இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்கள் வெகுசனப்பரப்பில் அதிகம் பிரசித்தமாகவும் இல்லை. ஆனால் சட்டத்துறைக்கூடாக தாம் பெற்ற பணத்தையும் புகழையும் அரசியலில் முதலீடு செய்யும் சட்டவாளர்களின் பெயர்களே தமிழ் மக்கள் மத்தியில் பிரசித்தமாகி உள்ளன.

அதிகம் பிரசித்தம் அடையாத சட்டச் செயற்பாட்டாளர்களே தமிழ் மக்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தரவல்ல ஆவணங்களைத் தொகுப்பதற்கு அதிக பங்களிப்பை வழங்கி யிருக்கிறார்கள. இவ்வாறான சட்ட செயற்பாட்டளர்களை ஒன்று திரட்டும் வேலையை விக்னேஸ்வரன் செய்வாரா? பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளை திரட்டும் வேலையை அவர் நிறுவனமயப்படுத்துவாரா? இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்த மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பு (HRDAG) போன்ற அமைப்புக்களின் உதவிகளை அவர் பெறுவாரா? அரசியல் கைதிகள், தடுப்பிலிருப்பவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வல்ல அமைப்புக்களை அவர் உருவாக்குவாரா? குறைந்த பட்சம் உடனடிக்கு தமிழ் மக்கள் பேரவையை இது தொடர்பில் நெறிப்படுத்துவாரா?

முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு,வட்டுவாகல் பாலத்தைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு தீர்மானங்களும் துணிச்சசலான உரைகளும் மட்டும் தீர்வாக அமையாது.

ஒரு நீதியரசராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அவர்.தமிழ் மக்களுக்குச் சட்டச்செயற்பாட்டாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் தனக்குள்ள மூப்பு, தகமை, அங்கீகாரம், மக்கள் ஆணை என்பவற்றின் அடிப்படையில் சட்டச்செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து நிறுவனமயப்படுத்தும் றிஸ்க்கை அவர் ஏற்பாரா? ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் அவருக்கே உரிய ஒரு செயற்பாட்டுப் பரப்பு அது.பெரும்பாலும் அது ஒரு சட்ட மறுப்பாகவே அமைய முடியும். அது விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை நிறுவுவதற்கான ஒரு சோதனையாகவும் அமையும்.அதே சமயம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமாறு கால நீதியின் பிரயோக விரிவைச் சோதிக்கும் ஒரு பரிசோதனையாகவும் அமையும்.

 

http://globaltamilnews.net/archives/16374

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.