Jump to content

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழர் நலன்சார்ந்து அரசியல்திட்டங்களை முன்னெடுக்கிறோம் என புலுடா விடும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் நான் கூறவரும் விடையத்தை காதில் போட்டுவிடுங்கோ

மாகாணசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இவைகளின் பிரசாரக்கூட்டங்களின்போது நாம்தான் தமிழர்களது அபிலாசைகளை எவ்விதமேனும் நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய தகுதியுள்ள அரசியல் சக்தி, எம்மை உங்கள் பிரச்சனைபற்றிப் பேசுவதற்கு, போராடுவதற்கு நாடாளுமன்றம் அனுப்புங்கோ எங்களது பிரச்சனைகளை உங்களுடன் வாழும் எம்மால்தான் புரிந்துகொள்ளமுடியும் ஆகையால் மாகாணசபையினது அதிகாரங்களை நாம் பெற்றுக்கொள்ளும்வகையில் எம்மைத் தெரிவுசெய்யுங்கள் எனக்கூறி ஓட்டுக்களைப்பெற்று அதிகாரத்துக்கும் பதவிக்கும் வந்தவர்கள் நீங்கள்,

அதாவது உங்கள் பிரச்சனைகளை நாம் பார்த்துக்கொள்கிறோம் எத்தகைய விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம்தராது நாங்கள் உங்கள் உரிமைகளை இழந்தவைகளைப் பெற்றுத்தருவோம் என கூறியே எங்கள் பிரச்சனைக்கான பிரதிநிதிகளாக எம்மால் உங்களை தெரிவுசெய்யப்பட்டவர்களாக ஆக்கியுள்ளோம்.

ஒரு அரசியல் தலைமை அதனூடான எங்களது விடையங்களை கவனிப்பதற்கான கடப்பாடு மற்றும் அறம் சார்ந்த உணர்வு இருப்பவர்களாக நீங்கள் எங்களது தெரிவுக்குப்பின்பு இருந்திடல் வேண்டும் அதாவது எமது உரிமை கலாச்சாரம் நிலம் கல்வி பொருளாதாரம் சம்பந்தமான தமிழர்க்குப்பொதுவான பிரச்சனைகள் வரும்போது, தமிழ் மக்களது பிரதிநிதிகள் எனப்படும் நீங்கள்தான் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம் போராட்டம் ஊர்வலம் மாநாடு என முன்னின்று செய்திடல்வேண்டும் தவிர நீங்கள்தான் இப்படியான போராட்டங்களின் மக்கள் ஈடுபடமுன்பே ஈடுபடல்வேண்டும் அதற்கான தார்மீகத் தகுதிகளும் மக்கள் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூடிய அனைத்துத் தரப்பு அங்கீகாரத்தையும் நீங்களேகொண்டுள்ளீர்கள், அதற்கான சட்ட உரிமைகளும் சட்டப்பாதுகாப்பும் அடிப்படை உரிமையும் உங்களுக்கே உள்ளது.

அதைவிடுத்து தமிழர்கள் தங்கள் பிரச்சனைகள், மற்றும் தேவைகளுக்கான தீர்வுக்காக அவர்களே தெருவில் இறங்கிப்போராடவேண்டும் நாம் எமக்கு நேரமிருந்தால் வெயிலோ மழையோ அவ்வேளையில் உங்களது கைகளால் உங்களுக்காகவே பிடிக்கவேண்டிய குடையை உங்களால் உள்வாங்கப்பட்ட ஒரு ஆதரவாளர் கையில் கொடுத்து ஒரு தமிழ் அடிமை எனக்குக் குடைபிடிக்கின்றது நான் அவனது எஜமானர் எனும் மிதப்பில் வெள்ளை வேட்டியை காலநிலைக்கேற்ப உயர்த்தியோ பதிச்சோ கட்டிக்கொண்டு ஒருசில நிமிடங்கள் குறை கேட்பது எனும்கோதாவில் புகைப்படம் எடுத்து அதை ஆவணப்படுத்தி அதையே ஊடகங்களில் வெளியிட்டு அன்று மாலையே கொழும்பு நோக்கிப் பயணமாகி..........

கோப்பாப்பிலவுக்கும் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கும் வெயிலிலும் மளையிலும் தெருப்புழுதியிலும் மளைவெள்ளத்திலும் மரணத்துடன் விளையாடும் உண்ணாவிரதமிருக்கும் தமிழன் நிலை எண்ணிப்பாராது......

நாடாளுமன்ற உணவகத்தில் மானியவிலையில் கிடைக்கும் கட்டு சம்பல், குழைக்கறி, காரல் கருவாட்டுப்பொரியல், மைசூர் பருப்புக்கறி இதனுடன் சூரமாலுக் குழம்பை அள்ளி வாய்க்குள் அதக்கும்போது........

உங்களுக்கு நரகலைத் தின்பதுபோல் இருப்பதில்லையா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.