Jump to content

ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ!


Recommended Posts

ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ!

பெண்-வைரல்

வ்வப்போது தன் உடையை சரிசெய்து உடலைக் காப்பாற்றியபடி இருப்பது, சுவாசம்போல பெண்களுக்கு. 'உடையைத் துளைக்கும் பார்வை பற்றி கவலை தேவையில்லை. அவள் அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லும், 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற  அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இப்போது வைரல்.

ஹோட்டலில் அமர்ந்திருக்கும் பெண், வெயிட்டர் வந்ததும் கீழிறங்கிய தன் டாப்ஸை மேலேற்றிவிடுகிறார். சாலையில் நடந்து செல்லும் பெண், ஒரு டாக்ஸி கடக்கும்போது ஹேண்ட்பேக்கை அணைத்தபடி தன்னை மறைத்துக்கொள்கிறார். காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த பெண், இரு கைகளையும் உயர்த்தி கேசத்தைக் கோதியவர், சட்டென சுதாரித்து கைகளை இறக்கிக்கொள்கிறார். லெகிங்ஸ் அணிந்த பெண், ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு படித்தபடி, மறு கையால் தன் ஸ்லிட் டாப்பின் ஓபனை மூடிக்கொள்கிறார். காரில் இருந்து மினி ஸ்கர்ட் அணிந்தபடி இறங்கும் பெண், அதை கீழே இழுத்துவிட்டபடி நடக்கிறார். வெளியில் தெரியும் தன் தோழியின் உள்ளாடையை சரிசெய்துவிடுகிறார் ஒரு பெண். உடற்பயிற்சி செய்ய உடல் வளைக்கும்போது ஒரு கையால் டாப்ஸை பிடித்துக்கொள்கிறார் ஒரு பெண். காலிங் பெல் அடித்ததும் கதவைத் திறக்கச் செல்லும் முன், துப்பட்டாவை எடுத்து அணிந்துகொள்கிறார் ஒரு பெண். அலுவல் மேசையில் இருக்கும் பெண், தன்னை நோக்கி ஓர் ஆண் வர, அவசரமாக தன் புடவையை சரிசெய்துகொள்கிறார். இந்தப் புள்ளியில் இருந்து, மீண்டும் இதே காட்சிகள் ஒளிபரப்பப்பட, அதே சூழ்நிலைகளை இப்போது அந்தப் பெண்கள், விலகிய ஆடை குறித்த பதற்றத்தைத் தூக்கியெறிந்து, தங்களின் உடலை நோக்கி வரும் ஆண்களின் பார்வைகளை, கூரான தங்களின் பார்வையால் அடக்குகிறார்கள்.  'அவள் அப்படியே இருக்கட்டும்' என்ற எழுத்துகள் தோன்ற, முடிகிறது வீடியோ.

2_18262.jpg

பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு, வசதிக்கு உடை அணியும் சூழல் வேண்டும். இந்த உலகில் நம் பாதுகாப்பு உணர்வை நிர்ணயிப்பது, நம் பாலினமாக இருக்கக் கூடாது. வீட்டில், அலுவலகத்தில், சாலைகளில் ஆண்களும், பெண்களும் பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் உடலைக் கடந்ததாக இருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையுடனும், பச்சாதாபத்துடனும் அணுகி ஒருவரின் விருப்பங்களை மற்றவர் ஈடேற்றிக்கொடுக்க வேண்டும். இவைதான் உலக வங்கியின் சமூக செயற்பாட்டு அமைப்பான 'WEvolve'ன் நோக்கங்கள்.  மரபுத் தடைகளை அகற்றி, ஆரோக்கியமான ஆண் - பெண் உறவுக்கான முயற்சிகளை படைப்பாக்கத் தளங்களில் எடுத்துவரும் இந்த அமைப்பு, 'எல்' உடன் இணைந்து வெளியிட்டிருக்கும் சமீபத்திய வீடியோதான் இது.

பெண்களை வெறிக்கும் ஆண்களின் கண்களை, அவள் பார்வையாலேயே எதிர்க்கச் சொல்லும் இந்த வீடியோ, பலரையும் அதில் வரும் பெண்களோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வைக்கிறது. என்றாலும், வீடியோவில் வரும் பெண்கள் அனைவரும் மேல்தட்டுப் பெண்களாகவும், பொதுபுத்தி கொண்டாடும் 'ஸ்லிம்' உடல் அமைப்புடன் இருப்பவர்களாகவும் இருப்பது உறுத்தல். அவர்களாவது தங்கள் உடைகளை சரிசெய்துகொள்ளும் அவகாசமோ, அதைத் தவிர்க்கும் உரிமை, தைரியமோ கிடைக்கப்பெறுகிறார்கள்.

ஆனால், தலைச்சுமையாக இருக்கும் சிமென்ட் சட்டியில் இருந்து உயர்த்திய கைகளை எடுக்க முடியாத பெண்கள். பேருந்துக் கூட்ட நெரிசலில் விலகிய புடவை, துப்பட்டாவில் விழுந்து மொய்க்கும் கண்களில் இருந்து விடுதலை பெற முடியாமல் நெளியும் பெண்கள். வியர்வை நனைத்த ஆடை போர்த்திய உடலின் மேல் அதிகாரமாகப் பாயும் பார்வைகளால் தவிக்கும் பூ, பழம், மீன் விற்கும் பெண்கள். குழந்தைக்குப் பசியாற்றப் பாலூட்டும்போதுகூட பாலியல் பண்டமாகவே பார்க்கப்படும் பெண்கள். இப்படி எப்போதும், எங்கேயும் 'இழுத்துப் போர்த்திக்கொள்ளும்' போராட்டத்தைச் சந்தித்தபடியே இருக்கும் இந்தப் பெண்களையும் காட்சிகளாகப் பதிவு செய்திருக்கலாம். வீடியோவுக்கான கமென்ட் பாக்ஸில், 'உங்களை யார் ஸ்லீவ்லெஸ், மினி ஸ்கர்ட்னு டிரெஸ் பண்ணச் சொன்னா?' என்று எப்போதுபோல பெண்களைக் கேள்வி கேட்டிருக்கும் ஆண்களின் கீபேட் கொந்தளிப்புகளையும், அது அடக்கும் விதமாக அமைந்திருக்கும். 'ஸ்லீவ்லெஸ் பெண்களை மட்டுமல்ல, சரசு அக்காவின் தையல் நைந்த ஜாக்கெட்டும் தப்புவதில்லை உங்கள் கண்களுக்கு' என்று அவர்களுக்கு அறைந்து பதில் சொல்லியிருக்கலாம்.

அடுத்ததாக, வீடியோவில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய, குட்டிக்காட்டப் பட வேண்டிய ஒரு விஷயம்... இதில் வரும் பெண்கள் மீது பாயும் பார்வைகள் அனைத்தும், கடைநிலை வேலை செய்யும் ஆண்களின் பார்வைகளாகக் காட்டப்பட்டிருப்பது. டிரைவர், வெயிட்டர், ப்யூன், கொரியர் பையன் என பதிவுபெற்றிருப்பது வருத்தம். குனிந்து காய் பொறுக்கும்போதும் முகம் பார்த்து விலை சொல்லும்  காய்கறிக்காரர்களும் இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களின் நேர்காணல்களில் கேள்விகளுக்கு இடையில் முகம் தாண்டிப் பார்க்கும் பிக் பாஸ்களும் இருக்கிறார்கள்.

என்றாலும், உடையை கவசமாக்கிக் கொள்ளச்சொல்லி பெண்களிடம் திணிக்கப்படும் அழுத்தத்தின் மீது உளியாக இறங்கியிருக்கும் இந்த வீடியோவுக்கு வெல்கம். வீட்டில், வெளியில், அலுவலகத்தில், வங்கியில், மருத்துவமனையில்  என அது எந்த இடமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் பெண்களை வெறிக்க இருந்துகொண்டேதான் இருக்கிறார். அப்படி யாரும் இல்லை என்றாலும் கூட, யாருமற்ற தனிமையிலும்கூட, கலைந்த தன் ஆடைகளை அவசரமாக சரிசெய்தபடி, எப்போதும் தன் உடல் ஒரு ஜோடிக் கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே இருப்பது போன்ற பிரச்னையை பெண் அனிச்சையாக சுமந்துகொண்டே இருப்பது துயரம்.

இந்தத் துயரத்தில் இருந்து அவளுக்கு விடுதலையை ஆண்கள் எப்போதும் கொடுக்கப்போவதே இல்லை. ஆம்... அதை அவளாகத்தான் நிறுவிக்கொள்ள வேண்டும். அந்த தீர்வைத்தான் 'ஆடை கிடக்கட்டும்... அவள் அப்படியே இருக்கட்டும்' என்கிறது இந்த வீடியோ!

ஆம்... Let her be!

http://www.vikatan.com/news/womens/79672-let-her-be---says-elles-video.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.