Jump to content

ரங்கராட்டினம் - சிறுகதை


Recommended Posts

 

ரங்கராட்டினம் - சிறுகதை

நர்சிம், ஓவியங்கள்: செந்தில்

 

ந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக.

p64a.jpg

எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. அவனுடன் பயணித்தாலே எல்லாமும் கற்றுக்கொள்ளலாம் என்பதே, இந்த ஒரு மாதத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

``யோவ்... இதான்யா பேக்ட்ராப்பு. இது அங்க வரும்னு எவன்யா சொன்னான்?” - சொல்வது மட்டும் அல்லாமல் தானே அதை எடுத்து, ஒரு நொடியில் எங்கு வைக்கவேண்டுமோ அங்கே தள்ளிவைப்பது என்பதில் ஆரம்பித்து, எல்லோரையும் சிதறடித்து வேலை வாங்கிக்கொண்டிருந்தான் விக்டர். இறுதியாக இரண்டு உதவியாளர்களை நிற்கவைத்து அது `சரியான இடைவெளியில் இருக்கிறதா?’ என ஒளிப்பதிவாளரிடம் ஒப்புதல் வாங்கி, அங்கே நாயகனும் நாயகியும் நிற்கும் இடத்துக்கான மார்க்கிங் ஸ்டிக்கரை தரையில் ஒட்டியதும்தான், அவன் முகத்தில் நிம்மதி.

இயக்குநர் உள்ளே நுழைந்ததும், அவ்வளவு சத்தமும் ஒரு நொடி இரு மடங்காக அதிகரித்து, அடுத்த நொடி மயான நிசப்தத்துக்குச் சென்றது. இயக்குநர் இடுப்பில் கைவைத்து மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே, ஒருமுறை ஸ்பாட்டைப் பார்த்துவிட்டு விக்டரை நோக்கித் தலையாட்டினார்.

மாலை ஆறு மணிக்கு மேல் டபுள் கால்ஷீட் என்ற விநோத வழக்கத்தால், காசு இரட்டிப்பாகி விடக் கூடாது என, துரத்தித் துரத்தி அன்றைய நாளை முடித்து பேக்கப் சொல்வது வரை விக்டரிடம் பேசவே பயமாக இருந்தது. எல்லாம் முடித்து இயக்குநர் அவன் முதுகில் தட்டி வெல்டன் எனச் சொல்லிவிட்டு காரில் ஏறிப்போனதும், அவன் கண்கள் என்னைத் தேடின. இந்த ஒரு மாதமாக அவனை இறக்கிவிடும் பொறுப்பு என்னுடையது. குருகுலத்தின் நீர்த்துப்போன நீட்சிகள் இங்கு இன்னமும் விரவிக்கிடக்கின்றன என நினைத்துக்கொள்வேன்.

“காலையில எத்தனை மணிக்கு வரணும் விக்டர்?”

வழக்கம்போல் அவனுடைய தங்கும் இடத்தில் இறக்கிவிட்டுக் கேட்டதும், ``ஃப்ரீதானே? டெய்லி ஓடுறீங்களே. வாங்கஜி சிட்டிங்கைப் போடுவோம். இன்னிக்கு செமயா வந்துச்சுல்ல ஷாட்ஸ்.’’

உதவியாளனாகச் சேர்ந்தது குறித்த தன் பிரஸ்தாபங்களைக் கூறிக்கொண்டிருந்தான் விக்டர். அவனுக்கு எதிரில் சரிந்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

கையில் இருக்கும் குடுவையை ஆட்டிக்கொண்டே, பியூரெட்டில் இருந்து வழியும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலின் நிறம் மாறும் அந்தத் துள்ளிய புள்ளியைக் கணக்கிடுவதுபோல, சரக்கு உள்ளே போய்க்கொண்டே இருக்கும்போது சட்டென சிறு உமட்டலில் அன்றைய அளவு இது என, என் தொண்டை மறுக்கத் தொடங்கும் நொடிக்கு நான் அவ்வளவு மரியாதை கொடுப்பேன். அதனால்தான் எவ்வளவு குடித்தாலும் மரியாதையை இழக்காமல் சமூகத்தின் கலாசாரக் கண்களில் இருந்து தப்பிக்கிறேன். சில நேரங்களில் அந்த உமட்டல், பார்ட்டி ஆரம்பிக்கும்போதே வந்துவிடும். சில நாட்களில் எத்தனை என்றே தெரியாத அளவுக்கு காலி பாட்டில்கள் அரைவட்டம் அடித்துக்கொண்டிருக்கும் வரை வராது. சூழலையும் எதிரில் அமர்ந்திருப்பவர் பேசும் பொருளையும், குறிப்பாக அந்த நொடியின் மனநிலையையும் பொறுத்தே என் உமட்டலின் கால அளவு அமையும்.

என் அளவுக்கான குறிப்பு தொண்டையில் இருந்து வந்துவிட்டபடியால், விக்டருக்கு சங்கடமாக இருக்கக் கூடாது என கையில் சிறுஅளவில் மீதம் வைத்துக்கொண்டு, வெகுநேரமாகக் குடிப்பது போன்ற தோற்றத்தை  ஏற்படுத்திக்கொண்டே கேட்டுக்கொண்டி ருந்தேன்.

விக்டரின் கைகள் அனிச்சையாக அவன் கிளாஸ் தீரத் தீர நிரப்பிக்கொண்டிருக்க மெள்ள ஓர் ஏகாந்தத்துக்குள் புகுந்துகொண்டிருந்தான்.

``நீங்கலாம் ஈஸியா வந்துட்டீங்கஜி. ஸாரி... இப்பலாம் `ப்ரோ’னு சொல்லணும்ல? எங்க காலத்துல `ஜி’தான்.”

நான் சிரித்துக்கொண்டே, “நாங்களும் ஊர்ல `ஜி’னுதான் கூப்புட்டுக்குவோம் விக்டர்.

எனக்கு `ஜி’ ஓ.கே-தான்.”

“ம்ம்... இப்பலாம் எவனையும் எவனும் மதிக்கிறதே இல்லைஜி. நீங்களே பாருங்க அசால்ட்டா என்னைய `விக்டர்’னு நெத்தியில அடிச்சுக் கூப்புடுறீங்க. நாங்கலாம் ‘சார்’ன்ற வார்த்தையத் தவிர வேற வார்த்தையே தெரியாம இருந்தோம். அட யார் எல்லாம் சார் தெரியுமா? செக்யூரிட்டில ஆரம்பிச்சு, ஆபீஸ் பாய் வரைக்கும்.”

ஒரு சொடுக்கலுக்குப் பின்னர், தன் ஆட்காட்டி விரல் கொஞ்சம் நடுங்கும்படி பூமியை நோக்கி ஆட்டிக்கொண்டே சொன்னான்... “இங்கே மட்டும் தோத்தவனைவிட ஜெயிச்சவனோட வலியும் இழப்பும் அதிகம்ஜி.”

“இல்ல விக்டர்... ஒரே விஷயத்துல கவனத்தைக் குவிச்சுட்டோம்னா வெற்றி அவ்ளோ கஷ்டம் இல்ல” - சிகரெட் நெடியைத் தவிர்க்கும்படி கையை மூக்குக்கு முன்பு விசிறிக்கொண்டேன்.

“ஹும்ம்... இப்ப அதுக்கு அவசியமும் இல்லைனு ஆகிப்போச்சு. அதுவும் நல்லதுதான். கதை இருந்தா நெட்ல எழுதிடுறான். படமா எடுத்து யுடியூப் போட்டு, வந்து பாருங்கடானு வீட்டுக்குள்ளேயே இருக்கான். இவனுங்களும் பணத்தை எடுத்துக்கிட்டு அவனைப் போய் பார்த்து, வெத்தலைப்பாக்கு வெச்சுக் கூட்டிட்டு வந்துடுறாங்க. அப்ப அவன் இதை மயிரு மாதிரிதான மதிப்பான்.

உடனே அதை மறுத்தேன்.

“அப்படிலாம் இல்லைஜி. இது டெக்னாலஜிக்கான காலம். முன்னாடிலாம் யாராவது நம் மேல லைட் அடிச்சுக் காட்டணும். இப்ப நாமளே `என்னையைப் பார்த்துக்கோ’னு லைட் அடிச்சுக் காட்டிக்கலாம். தேவைப்படுற வங்க பார்த்துக்குறாங்க... அவ்ளோதான்.”

சட்டென அவன் மொத்தக் கோபமும் அடங்கி, என் கூற்றை ஆமோதிப்பதுபோல தலையை ஆட்டினான். எனக்குச் சப்பென்றாகிவிட்டது. ஆமோதிப்பதைப் போன்ற ஒரு வலிமையான எதிர்ப்பு எதுவுமே இல்லை எனத் தோன்றியது.
“ம்ம்... நானும் ரொம்பலாம் கஷ்டப்படலைஜி. சேர்ந்தா சார்கிட்டத்தான் சேரணும்னு முடிவுல வந்தேன். அப்பலாம் மொபைல் இல்லை. அதனால வீட்டு வாசல்ல நிற்கணும். அவர் கார் வெளியில வர்ற செகண்ட் பார்த்தார்னா வணக்கம் வைக்கணும்னுலாம் சொன்னாங்க.”

விக்டர் அப்படி நிற்பதை யோசித்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. அவ்வளவு ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் இருப்பவன் விக்டர்.

“நம்மளால அதெல்லாம் முடியாதுனு சொல்லிட்டு ரெண்டே நாள்ல திரும்பவும் ஊருக்கேபோய்ட்டேன் ஜி” - கிளாஸ் தீர்ந்திருக்க இந்த முறை சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு புகைவழியே பேசத் தொடங்கினான்.

``ஆனா, அட்ரெஸ் வாங்கிட்டுப் போயிருந்தேன். சும்மா நச்சுன்னு ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு சீன் எழுதி அனுப்பினேன். ஒரே வாரத்துல பதில் வந்தது... `வந்து பாருங்க’னு”

அதன்பிறகு அவன் வந்ததும், அவனுக்குக் கிடைத்த மரியாதையைக் குறித்தும், இயக்குநர் எங்கு சென்றாலும் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டுபோனது குறித்தும், தன் திறமையைக் கண்டு வியந்த மற்ற உதவியாளர்கள் குறித்தும், அவர்களின் வயிற்றெரிச்சல் குறித்தும் சொல்லி முடிக்கும்போது துப்புரவாக ஃபுல் பாட்டிலும் காலியாகியிருந்தது. அதன் கடைசிச் சொட்டை ஆவென வாய் பிளந்து நாவில் ஏந்தியவன், சட்டெனச் சுதாரித்து கழிவறைக்கு ஓடினான்.

அதன் பிறகான ஐந்து நிமிடங்கள் அவன் வாந்தி எடுக்கும் சத்தங்கள்தான் விதம்விதமாகக் கேட்டன.

முகம் கழுவித் துடைத்துக் கொண்டே வந்தான்.

“ஒருமாதிரி இருந்தா டக்குனு விரலைவிட்டு எடுத்துடணும்ஜி. அதான் ட்ரிக்கே” - சொல்லிக் கொண்டே எங்கு இருந்தோ இன்னொரு பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்தான். எனக்கு லேசாக எரிச்சலும் மாட்டிக்கொண்டோமே என்ற சுயகழிவிரக்கமும் ஏற்படத் தொடங்கியது.

நான் எப்படி இதற்குள் வந்தேன், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எல்லாம் யோசிக்கக்கூட அவகாசம் இல்லாமல், இவர்களோடு என்னையும் இணையச் செய்துவிட்டது காலம். யதேச்சையாகப் பேசிக்கொண்டிருக்கும்போது நான் சொன்ன சில வார்த்தைகள், எனக்குள் ஏதோ இருப்பதாக இவர்களுக்குப் புரியவைத்ததன் விளைவு, நானும் இவர்களில் ஒருவன்... கடந்த ஒரு மாதமாக. சுலபமாக நுழைந்துவிட்டாலும் ஏதோ ஒரு மாயை இங்கு எந்நேரமும் சதா சுழன்றுகொண்டே இருக்கிறது. இதோ இந்த இரவில் விக்டர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும்.

புத்தம்புதிதாக அந்த நாளைத் தொடக்கு பவன்போல மாற்றுடை அணிந்து மீண்டும் அமர்ந்துகொண்டான். சென்ற முறை அவனைச் சுற்றிலும் செர்ரி, ஆப்பிள் வகைகள் இருந்தன. இந்த முறை ஊறுகாய் மட்டும் வைத்துக் கொண்டான். அவனுடைய அறையில் சகல வசதிகளும் இருந்தன. நான் அவன் அறையைப் பார்ப்பது குறித்துப் புரிந்துகொண்டவனாக,

“ஜி... இங்க கஷ்டப்படுறாங்க. சோத்துக்கே வழி இல்லைனு ஒரு பக்கம் சொல்லிட்டே இருப்பாங்க. இன்னொரு பக்கம் காசு கொட்டும். அதான் சினிமா. ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கங்க, தன்னை முழுசா நம்புனவனை சினிமா எப்பவும் கைவிட்டதே இல்லை. ஏதாச்சும் பண்ணிப் பிழைச்சுக்கனு வாய்ப்பு கொடுத்துட்டே இருக்கும், அட புரொடக்‌ஷனுக்குச் சமைச்சுப் போட்டாவது சம்பாதிக்க விட்டுடும்ஜி.”

இந்த முறை சற்றுக் குறைவாகவே ஊற்றிக்கொண்டான். என் பக்கம் பார்க்க, நான் பெருமூச்சு விட்டதும், “விடுங்கஜி...” எனத் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டே தொடர்ந்தான்.

“சார் சொல்லிட்டே இருப்பாரு... `என்னையைத் தாண்டிப் போய்டுவ விக்டர்... திறமைக்காரன்டா நீ’னு. இன்னிக்குக்கூட செட்டுல சொன்னார் கவனிச்சீங்களாஜி?”

இனி என் ஆமோதிப்போ பதிலோ தேவை இல்லை என்பதை உணர்ந்ததால் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“அடுத்து தனியா படம்தான்ஜி” - வெகுநேரம் கையைச் சொடுக்கிக்கொண்டே இருந்தான். “சும்மா இண்டஸ்ட்ரியே அலறும்” - ஒரே மடக்கில் தீர்த்துவிட்டுக் கீழே வைத்தான்.

என்னையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தவனின் குரல், இப்போது சற்றே பிசிறுதட்டி கம்மிப்போய் இருந்தது. 

“இது அவ்ளோ ஈஸியான இடம் எல்லாம் கிடையாதுஜி. ஏதோ நாம டக்குனு வந்துட்டோம். அதுலேயும் நான் கொஞ்சம் அதிகப்படியான திறமையோடு இருந்ததால நேரா சிவப்புக் கம்பளத்துல நடந்து வந்துட்டேன். ஆனா, நான் வந்தப்ப என்கூட ஒருத்தன் வந்தான்ஜி. `கோவிந்தன்’னு ஏதோ பேர். சும்மா கத்தி மாதிரி இருப்பான்... பாவம்.

சாரைப் பார்க்க காலையில நாலு மணிக்கு எல்லாம் வீட்டு முன்னால வந்து நிற்பான். விடிய விடிய அங்கேயே நிற்பான். கையில ஆல்பம் வெச்சுருப்பான். தன் நடிப்பால இந்த நாட்டையே உலுக்கிறணும்னு சொல்வான்.

இங்க டைரக்டர் புரொடியூஸர் எல்லாம் சாமி மாதிரி. அவங்க ரெடியாத்தான் இருக்காங்க திறமையானவங்களுக்குத் தரிசனம் தர்றதுக்கும் கூடச் சேர்த்துக்கிறதுக்கும். ஆனா நடுவுல ஒரு பூசாரியா... ரெண்டு பூசாரியா? இந்தப் பிம்ப உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது இந்தப் பூசாரிங்கதான்.

அதுவரை ஒரு வெளிநாட்டுக் காரன்போல் குடித்துக்கொண்டிருந்த விக்டர், சட்டென ஒரே கல்ப்பில் அந்த ரவுண்டை முடித்து வாயைத் துடைத்து, உக்கிரமாகப் பேசினான்.

இந்த மரத்தைத் தள்ளி நின்னு பார்த்தா, உச்சியும் அதுல இருக்கிற பறவைகளும்தான் பிரதானமாத் தெரியும்ஜி. ஆனா வேர், கிளைனு தாண்டிப்போறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடும். ஒவ்வொரு இடத்துக்கும் ஒருத்தன். லொட்டு லொசுக்குனு கிளைக் கிளையா பிரிஞ்சு, ஒருத்தனுக்கு மேல ஒருத்தன்னு இங்க நிறையப் பேர் நடுவுல இருக்காங்க. அவங்களுக்கு கலை, தாகம் அதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். சினிமான்னா காசு, கட்டிங். அப்புறம்...’’ என தன் நடுவிரலை காற்றுக்குள் இருமுறை செலுத்தி, ``இதுதான்” என்றான்

ஊறுகாயை அவன் ருசித்தது எனக்கும் உமிழ்நீரைச் சுரக்க, கொஞ்சமாக நக்கிக்கொண்டே அவனைப் பார்த்தேன்.

“இது தெரியாம கோவிந்தன் அலைஞ்ச அலைச்சல் இருக்கே... கடைசியில தட்டுக் கழுவுறது, ஆர்ட் டைரக்டருக்குக் கீழே உட்கார்ந்து கட்டையில ஆணி அடிக்கிறதுனு... பாவம் தெரியாத தொழில். கையில கால்ல எல்லாம் ஆணி கிழிச்சுப்பான். பச்... கொண்டுவந்த காசு தீர்ந்து பிச்சை எடுக்காத குறை. ஒருநாள் யார் கண்ணுலையும் படாம ஊருக்குப் போய்ட்டான்.”

மதுவை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, கால்களைப் பரப்பி ஒருவிதமான செளகர்யத்தில் படுத்துக்கொண்டு தொடர்ந்தான். அவன் சொல்லச் சொல்லக் காட்சிகள் விரிந்துகொண்டே போயின.

 ``ஏன்டா கோயிந்தா... செவசெவனு தக்காளியாட்டம் இருப்ப. இப்படிக் கருத்துப்போயி வந்து நிற்கிறியே தங்கம். அய்யோ என்னடா இது கையில காயம். என்னது ஆணி இறங்குச்சா. போதும் சாமி... அந்த நாசமாப்போன சினிமா நடிப்பு.”

அம்மாவும் அப்பாவும் அவன் இருபுறமும் நின்றதே அவனுக்குள் அழுகையை வெடிக்கச்செய்தது. போனது எல்லாம் போகட்டும் எனத் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்கச் சொன்னாள். ``சாப்பிட கறிசோறு வேணுமா?’’ என அப்பா கேட்டதும், உடனே மறுத்துவிட்டு அம்மாவிடம் ஆசையாக, ``கல்லுசோறும்மா’’ என்றான் குளியறையில் இருந்தே.

கல்சோறு என்பது அவன் அம்மா பிரத்யேகமாகச் செய்துதருவது. அவள் அதைச் செய்வதை வேடிக்கை பார்ப்பதே பாதி வயிறு நிறைந்ததுபோல் இருக்கும்.

மிஞ்சிய பழைய சோற்றை எடுத்து, இறுக்கமாகப் பிழிவாள். ஒரு பொட்டுத் தண்ணீர்கூட சோற்றுப்பருக்கையில் இருக்காது. எல்லா சோற்றையும் பிழிந்து தனியாகப் பிரித்து எடுத்த பின்னர், அதில் உப்பைப் போட்டுப் பிசைவாள். கல் உப்பு மட்டுமே போட வேண்டும் அதுதான் ருசி. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணையைச் சேர்த்துக்கொண்டே பிசைவாள். பிசைவது எனில், விரல் இடுக்குகளில் இருந்து `பிஸ்க்... பிஸ்க்...’ எனச் சத்தம் வரும். அப்படி வெகு இறுக்கமான பிசைவு. எண்ணெயும் உப்பும் கலந்து பிடித்துப் பிடித்து உருண்டைகளாக எடுத்துவைப்பாள். அந்த உருண்டையை எவர் மீதேனும் எறிந்தால் அவ்வளவு வலிக்கும். அப்படி ஒரு திடத்தன்மையில் இருக்கும். எண்ணெய் வாசமும் உப்பின் நெருடலும், தொட்டுக்கொள்ள வெங்காயம், பச்சை மிளகாய்க் கலவையும் என உமிழ் நீர் சுரக்கச் சுரக்கச் சாப்பிட்டு முடித்து, நீச்சத் தண்ணீரைக் கொஞ்சமாக குடித்தால், இரண்டு நாட்களுக்குப் பசியே எட்டிப்பார்க்காது.

சாப்பிட்டு முடித்து, தெருவில் இறங்கி நடக்கக் கூச்சமாக இருந்தது கோவிந்தனுக்கு. இன்னும் யாருக்கும் அவன் தோல்வி அறிவிக்கப்படவில்லை. என்றாலும், `என்ன திடீர்னு வந்துருக்க?’ என்ற கேள்வியை எதிர்கொள்வது என்பது, வேலையை விட்டு வந்தவனைப் பொறுத்தவரை அடர்அமிலம்; பொசுக்கிவிடும்.

எல்லா கெட்டவையும் ஒரே நேரத்தில் நடந்தால்தானே, இயற்கை எனும் ஒன்றை நோக்கி மனிதன் அச்சமுறுவான். அப்படித்தான் ஆனது. பக்கத்து ஊரில் நிகழவிருந்த கல்யாணத்துக்கு டிராக்டரில் கூட்டமாகப் போனது, இவனது சொந்தபந்தம். கோவிந்தனும் அவன் அப்பாவும் மட்டும் வீட்டில் இருக்க, சேதி வந்து சேர்ந்தது. டிராக்டர் கவிழ்ந்து ஓரிருவரைத் தவிர எல்லோரும் பலி.

தார் ரோடு எல்லாம் ரத்தம் தோய்ந்து, கை கால் எனப் பிய்ந்து கிடந்தது அந்த இடத்தில். கரப்பான்பூச்சியைப்போல் கவிழ்ந்து கிடந்தது டிராக்டர். பிழைத்த ஓரிருவரில் இவன் அம்மாவும் ஒருவர் என்ற எண்ணத்தின்மீது அவளின் உடலே விழுந்தது. அவள் கல்சோறு பிசைந்து கொடுத்த விரல்கள் எல்லாம் உதிர்ந்துகிடந்தன. கோவிந்தனின் அழுகை எல்லாம் வற்றிப்போன பொழுதில் யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோதுதான், தென்றல் அவன் கண்ணில் பட்டாள். அதற்கு மேல் அழ முடியாது என்பது போன்ற ஒரு நிலையில், அவள் முகம் அவ்வளவு தெளிந்திருந்தது.

அவளைப் பார்த்ததும் கோவிந்தனுக்கு ஒரு நொடி, சூழல் எல்லாம் மறந்து, அங்கு ஏதோ சினிமா ஷூட்டிங் நடப்பது போலவும், கதாநாயகி தன் அடுத்த டேக்குக்குக் காத்திருப்பது போலவும் தோன்றியது. அந்த ஊருக்கும் சூழலுக்கும் பொருந்தாத அப்படி ஓர் அழகி தென்றல். இவனுக்குத் தூரத்துச் சொந்தம். நெருங்கினான். “என்னைய மட்டும் விட்டுட்டு எல்லாரும் போய்ட்டாங்க” - அவன் அருகில் வந்ததும் வெடித்து அழுதாள்.

“இவங்க அப்பனும் நானும் ஒரு காலத்துல சேர்ந்தே சுத்துவோம்டா கோயிந்து. புள்ளக்குட்டினு ஆனதும் அப்படியே பழக்கம் விட்டுப்போச்சு. கோயில் சிலை மாதிரி ஒரு பெண்ணை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டாங்க”
- சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் போனார் கோவிந்தன் அப்பா.

தூணில் சாய்ந்து நின்றிருந்த தென்றலை தலைமுதல் பாதம் வரை பார்த்தான் கோவிந்தன். இடுப்பில் இருந்து அவன் கண்கள் இறங்கி வர வெகுநேரமானது. மிக மெல்லிய மடிப்பு கொடுத்த கோடு அந்திநேர அடிவானத் தீற்றல்போல் மிளிறியது.
 “தென்றல்.”

p64b.jpg

“ம்...”

   “நடிக்கிற ஆசை இருக்கா?”

      “அட நீ வேற.”

        “சொல்ல்ல்லு.”

``ஆமாண்ணே, ஊர்ல பெரிய ஆக்ஸிடன்ட்டு. அதான் பேப்பர்ல வந்துச்சே. நம்மூருதான். இன்னிக்குக் காலையிலதான் சென்னைக்கு வந்தேன்.”

இரவு எல்லாம் பஸ்ஸில் வரும்போது, எப்படிப் பேச வேண்டும் என மனதுக்குள் ஒத்திகை பார்த்திருந்தான். அதன்படி பேசிக்கொண்டிருந்தான்.

“சரி... வர்றதுதான் வர்றோம்... சொந்தக்காரப் பொண்ணு, ஹீரோயின் சான்ஸ் தேடிக்கிட்டு இருக்கேன்னு கூட்டியாந்தேன். சரிண்ணே... பக்கா, பக்காவா வந்துருவேன். அவளையும்தான். வந்துர்றோம்.”

மொபைலையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவளை நோக்கித் திரும்பி,

“ `வந்துருவேன்’னு சொன்னதும் பதறிட்டான். எங்கே நான் மட்டும் வந்துருவேனோனு” - சொல்லிவிட்டுச் சிரித்தான். அவளுக்குப் புரியவில்லை; ஆனாலும் புன்முறுவல்.

அவனை அவமானப்படுத்திய, விரட்டிய கதவுகள் இப்போது திறந்தே கிடந்தன.

“என்ன கோயிந்தா கண்டுக்கவே மாட்டேங்கிற?” என வலிய வழிந்தார்கள் மேனேஜர்கள். எல்லா படங்களிலும், ஏதேனும் ஒரு மூலையில், தென்றல் பாஸிங்கில் நடந்தோ, கடைசி வரிசையில் ஆடிக்கொண்டோ இருந்தாள்.
கோவிந்தன் சளைக்காமல் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான். கேட்பவர்கள், “அதெல்லாம் தெரியுமே கோயிந்தா. ஆனா நம்ம படத்துல உனக்கு ஏத்த ரோல் இல்லையே. தென்றலுக்குத் தைச்ச மாதிரி ஹீரோயின் ஃப்ரெண்டு கேரக்டர் இருக்கு. அதுக்குப் பேசவந்தா, இந்த ராத்திரி நேரத்துல இப்படிப் போட்டு அறுக்குறியே. அப்புறம் நான் என்னத்த, யார்கிட்ட ரெக்கமென்ட் பண்றதாம்” - சொல்லிக்கொண்டே சிரித்த அந்தப் பூசாரியின் பல்லைத் தாண்டிய ஈறுகளும், உடலைத் தாண்டிய வயிறும் துருத்திக்கொண்டு நின்றன. அவன் பேசியதைக் கேட்டு, மெள்ள விலகி, அவள் அறைக்குள் செல்ல வழிவிட்டு, அவன் முதுகை வெறித்தான் கோவிந்தன்.

கோவிந்தன், எந்த இயக்குநரின் பார்வையில் விழ வேண்டும் என ஊரில் இருந்து வந்த புதிதில், இரவு பகலாக அவர் வீட்டு முன்பு தவம்கிடந்தானோ, அந்த இயக்குநரின் அலுவலகத்தில் இருந்த பூசாரிகள், இப்போது தென்றலின் புகழில் மையம்கொண்டு, அவனைப் புகைப்படத்தோடு வரச் சொல்லியிருந்தார்கள்.

அவனுடைய கனவுகள் எல்லாம் நிறைவேறிவிட்ட திருப்தி அவனுக்கு அந்த அழைப்பிலேயே கிடைத்துவிட்டது. தென்றலின் வருகையால் கிடைத்த பணத்தில் நேர்த்தியான உடைகள் எடுத்து அணிந்துகொண்டு அவருடைய அலுவலகத்தில் நின்றான்.

அவரைப் பார்ப்பது அவ்வளவு எளிது இல்லை. கால்குலேட்டரும் கையுமாக அமர்ந்திருப்பவரும் சத்தமாகப் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்து, இயக்குநர் இல்லை என்றதும் மேலும் சத்தமாகச் சிரித்துப்பேசும் பூப்போட்ட சட்டைக்காரர்களும், இவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களில் ஒருவன், ``சார்கிட்ட சொல்லியாச்சு. ஆனா இப்போதைக்கு இந்த ஷெட்யூல்ல ஒரு நல்லப்பொண்ணு தேவைப்படுது” - சொடக்குப் போட்டுக்கொண்டே, “தீபச்சுடர் மாதிரி இருக்கணும். நாலு நாள் ஷூட்னா உனக்கே தெரியும். ஸ்கிரீன்ல எவ்ளோ லென்த்தா வரும்னு. பசங்க சொன்னாங்க... என்ன பேர்?” எனப் பின்னால் திரும்பிக்கேட்க, கோவிந்தனே சொன்னான், “தென்றல் சார்.”

“ஆங்... நான் சார்கிட்ட சொல்றேன். உங்க போட்டோவையும் அவர்கிட்ட குடுத்துவைக்கிறேன்.”

விக்டர் சொன்ன நிகழ்வுகள் நெஞ்சை அரிக்கத் தொடங்கின. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை உலுக்கினேன். `ழ’கரம் சிறப்புப் பெறத் தொடங்கியிருந்தது அவனிடம்.
 
“ஜிழி... விழுங்க ஜிழி...”

அப்படியே வாந்தி எடுத்தான். எனக்கு உமட்டிக்கொண்டு வந்தது. கழிவறைக்கு ஓடி, வாளி நீரை எடுத்துக்கொண்டு வந்து, சுத்தம்செய்து விக்டரைக் கிட்டத்தட்ட குளிப்பாட்டிவிட்டேன். என்மீது வாந்தியின் நாற்றம் மிதந்தது.
தடுமாறி ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். அதிகாலை மூன்று மணி.

“அப்புறம் என்னாச்சுஜி?”

“எ...து...ஜிழி?”

“தென்றல்... கோவிந்தன்..?”

``ஓ... அதுவா. சொன்னேன்னா அப்படியே ஆடிப்போயிருவீங்கஜி.”

சிகரெட்டின் சாம்பலைத் தட்டிக்கொண்டே சொன்னான். நெருப்பு, பஞ்சை நெருங்கிக்கொண்டிருந்தது.

“அஞ்சாறு வருஷத்துக்கு முன்னால, சும்மா புயல்மாதிரி ஒரு ஹூரோயின் நாட்டையே கலக்குச்சே அதான்” எனச் சொல்லி பெயர் சொன்னதும், ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன். இன்றும் மிகப் பிரபலமாக எல்லாப் படங்களிலும் ஏதேனும் ஒரு ரோலில் வருபவள்.

``ஓ... சூப்பர்ஜி. அப்ப கோவிந்தன்?”

“செத்துட்டான்... செத்தேபோய்ட்டான்ஜி” - சிகரெட்டை ஆழ்ந்து இழுத்த பிறகு, ஆஷ்ட்ரேயில் நசுக்கிக்கொண்டே, ப்ச்... நடிக்கிறதுக்கு எவ்வளவு கனவோடு வந்தான் தெரியுமா? அநியாயமா தற்கொலை பண்ணிக்கிட்டான்.”

மெள்ளத் திரும்பி, சூழலைக் கலகலப்பாக்கும் விதமாக, “ராஜபோதைஜி... இந்தச் சரக்கு” - எதிர்பாராதவிதமாக மீண்டும் ஒரு பெக் ஊற்றிக்கொண்டுவிட்டு, காலையில பேசுவோம்ஜி” என சோபாவுக்குள் பொதிந்துகொண்டான் விக்டர்.

முதல் முறையாக பயம் கவ்வத் தொடங்கியது எனக்கு. ஏதோ ஒரு மாய உலகில் மிகப்பெரிய அரக்கனின் கோரப்பற்களுக்கு இடையே இருக்கும் ஓட்டைகளுக்குள் புகுந்து ஓடுவதுபோல தோன்றியது.

முகம் தெரியாத கோவிந்தனும் கல்சோறும் எண்ணெய் வாசமும் அதைப் பிசைந்து கொடுத்த அவன் அம்மாவின் சிதறிய விரல்களும் என்மீது படர்ந்திருக்கும் வாந்தியின் துர்நாற்றமும்... கலவையாக என்னைச் சுழலடித்தது. பார்வை விக்டரின் மேல் விழுந்தது.

தூக்கத்திலும் ஒருமுறை கையைச் சொடுக்கிய விக்டர் புரண்டு படுத்தான். எப்படியும் இந்த வருடம் இயக்குநர் ஆகிவிடுவான். அப்படி ஆகிவிட்டால் வெற்றி உறுதி. இந்த ஒரு மாதத்தில் ஸ்பாட்டில் இயக்குநரைவிட விக்டர்தான் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான். அவனைத் தவிர பழைய ஆட்கள் யாரும் இப்போது அங்கு இல்லை என்பதால், அவன் சொல்லுக்குக் கட்டுப்படாத ஆட்களே யூனிட்டில் இல்லை. சீன் பிரிப்பது, ஆங்கிள் என சகலத்தையும் கை சொடுக்கலில் முடித்துவிடுகிறான்.

அவனிடம் இருந்து வந்த வாந்தி வாடையையும் மீறித் தூக்கம் அசத்த, அப்படியே சாயத் தொடங்கினேன்.

என் தலைமாட்டில் கிர்ர்ர்ர் என அதிர தூக்கிவாரிப்போட்டது. எழுந்து பார்த்தால் விக்டரின் மொபைல், வைப்ரேட் ஆனது. மணி காலை ஆறு. விக்டர் குடித்த குடிக்கு இன்று முழுவதும் எழ மாட்டான். அவனிடம் இருந்து துர்நாற்றம் காற்றில் சுழன்றுகொண்டிருந்தது. சற்று வெறுப்பு மேலிட போனைக் கட் செய்தேன். உடனே மீண்டும் கதறியது. கண்களை நெகிழ்த்தி போனைப் பார்த்தேன்.

` APPA Calling’ என குளத்தில் எறிந்த வட்டக்கல் சுழன்றது.

எடுத்தேன்.

“கோவிந்தன் இருக்காரா?”

 “ இல்லைங்க... ராங் நம்பர்’’ - துண்டித்தேன்.

ஒரு நொடிதான். சட்டெனச்  சுதாரித்து, அந்த எண்ணை அழைத்தேன்.

`Dialing APPA’ எனச் சுழன்ற நொடியில் எடுத்தார்.

 “அவரு தூங்குறாருங்க.”

“..........”

“இல்ல இல்ல... கரெக்ட் நம்பர்தான். அவர் எந்திருச்சதும் அப்பா கூப்புட்டீங்கனு சொல்லிடுறேன்.”

“.......”

டயல்டு மற்றும் ரிஸீவ்டு கால் லிஸ்ட்டில் இருந்த `APPA’-வை அழித்துவிட்டு, திரும்பி மென்மையாகச் சிரித்தவாறு தூங்கிக்கொண்டி ருக்கும் விக்டர் சாரைப் பார்த்தேன். இப்போது அவரிடம் இருந்து பழவாசனை மிதந்துவந்து கொண்டிருந்தது!

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவின் வெளிச்சமற்ற பக்கத்தை துல்லியமாக படம் பிடித்துள்ளது இந்தக் கதை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
    • புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
    • பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,EUROPOL படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர் ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன. "அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார். "அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார். டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார். 24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. "அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார். தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.   பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI படக்குறிப்பு,டினா பரிக்கா `வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன. திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது. இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார். "மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன. மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது. பட மூலாதாரம்,SKY NEWS படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill) கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை. ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார். கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர். இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார்.   படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம் கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை. ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார். (ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை ) "அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார். கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார். பட மூலாதாரம்,POLICE OF FINLAND படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர் சிவப்பு அறிக்கை வெளியீடு கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது. சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" “கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர். நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார். விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார். "இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார். பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர்.   பட மூலாதாரம்,JOE TIDY படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம். டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை. "இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர். உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார். ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo
    • இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ?  😏 எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?  😏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.