Jump to content

புரிந்தது


Recommended Posts

புரிந்தது

 

 
roSi_uma_chandran_story

 

ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே!
அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அக்கறை காட்டி வந்தார்கள்.
ரோஸி வேலையை முடித்தாலும் சரி, முடிக்காவிட்டாலும் சரி, பள்ளிக்கூட நேரத்துக்குச் சரியாக பஸ்ஸைப் பிடிப்பதற்கு தயாராகி விட வேண்டும். சிறிது தாமதமானாலும் மேரி அம்மாள் குரல் கொடுப்பாள். ‘ரோஸி ஏன் மச மசன்னு நின்னுகிட்டிருக்கே? ஸ்கூலுக்கு நேரமாகல்லே! பஸ் போயிடுச்சுன்னா அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டா போய் நிப்பே உம்! கிளம்பு சீக்கிரம்!” - தன் கையாலேயே ரோஸிக்குத் தலை வாரி ரிப்பன் கட்டி அழகு பார்த்து அனுப்புவாள் மேரி அம்மாள்.
அனாதையாக வீட்டுக்கு வந்த பெண்ணுக்குத் தாயும் தகப்பனுமாக இருந்தவர்கள் மேரி அம்மாளும், காப்டன் டேனியலும், அவ்வளவெல்லாம் அன்பைப் பொழிந்தவர்களுக்கு துரோகம் செய்து விட்டுப் போக ரோஸிக்கு எப்படி மனம் துணிந்தது? அவள் அவ்வளவு கல் நெஞக்காரி என்று யார் தான் அவளைப் பற்றி நினைத்திருக்க முடியும்.?
மென்மையான மலர் போன்று இருந்தவள் ரோஸி, அவள் அதிர நடந்து யாரும் கண்டதில்லை. குரலை உயர்த்திப் பேசி யாரும் கேட்டதில்லை. அவளுடைய களங்கமற்ற குழந்தை முகத்தில் இனிய புன்னகை எப்போதும் தவழ்ந்து கொண்டிருக்கும். அமைதியாக, அடக்க ஒடுக்கமாக, ஒவ்வொன்றும் செய்து கொண்டிருப்பால். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி யார் தான் தப்பாக நினைக்க முடியும்?
ஜானகி தான் முதன் முதலில் தியாகுவுக்குக் கோடி காட்டினாள். ஏதோ உள்ளுணர்வு அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
“ நீங்க கவனிச்சீங்களா? ரோஸி எப்பவும் போல இல்லை. அவளோட பார்வை எப்படியெப்படியோ எங்கெங்கயோ போகுது.
தியாகுவும் கவனித்தான். காலையில் வீட்டு முன்புறத்தைக் கூட்டும் போதும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் போதும் ரோஸியின் விழிகள் எதிர் வீட்டுப் பக்கம் அலையத்தான் செய்தன. அந்த நேரத்துகுச் சரியாக எதிர் வீட்டுக் குமார் ஸ்கூட்டரைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வந்து விடுவான். ஆனால் அவன் நொடிக்கொரு தரம் ரோஸியைத் திரும்பிப் பார்ப்பது மட்டுமில்லை. அர்த்தம் நிறைந்த புன்னகை புரிவதும் சைகைகள் செய்வதுமாக ரோஸியுடன் ஏதேதோ சங்கேத உரையாடல் நடத்தினான். என்று தியாகுவுக்குத் தோன்றியது.

ரோஸி அப்போது பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டு வேலை உண்டு, படிப்பு உண்டு என்று இருந்த பெண்ணை குமார் வீணாக வம்புக்கு இழுத்து அவளது மனதைக் கலைத்துக் கொண்டிருந்ததை நினைத்து தியாகுவுக்கு கோபமே வந்தது.

குமார் படிப்பை மூட்டை கட்டி வைத்து எத்தனையோ ஆண்டுகளாகியிருந்தன. வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெற்றோர் அவனுக்கு அளவுக்கு மிஞ்சி செல்லமும் சலுகைகளும் கொடுத்து அவனைத் தறுதலையாக்கி வைத்திருந்தார்கள். வசதி படைத்தவர்கள். தங்கள் பிள்ளை படிக்க வேண்டும். உத்தியோகம் பார்க்க வேண்டும். என்று அவர்கள் கவலைப்படவில்லை. குமாரும் ஏதேதோ பட்டறைகளில் தொழில் கற்றுக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு ஸ்கூட்டரில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்படிப்பட்ட உதவாக்கரைப் பையன் விரித்த வலையில் ரோஸி விழுந்து விடக்கூடாதே என்று கவலைப்பட்டனர் ஜானகியும், தியாகுவும்.

ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த காப்டன் டேனியலும் அவர் மனைவி மேரியம்மாளும் பல வருஷங்களாக தியாகு தம்பதியருடன் மனம் விட்டுப் பழகிக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரர்கள். இரண்டு வீடுகளுக்கும் இடையே இருந்த முள் வேலியருகே நின்று கொண்டு மேரியம்மாள் ஜானகியுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள். வெகுளி. தன்னுடைய சுக துக்கங்கள் ஒன்று விடாமல் அவள் ஜானகியுடன் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

ஓய்வு நேரத்தை வீணாக்காமல் காப்டன் டேனியல் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி ஆபீஸராகப் பணியாற்றி வந்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். பிள்ளை தாமஸ் ஏர்ஃபோர்ஸில் ஆபீஸராகச் சேர்ந்து பம்பாயில் இருந்தான். பெண் ஜூலி ஒரு டாக்டருக்கு வாழ்க்கைப்பட்டு, கணவனுடன் ஸ்டேட்ஸில் இருந்தாள். தனித்துவிட்ட டேனியல் தம்பதிக்கு ரோஸி சொந்தப்பெண்ணுக்குச் சமமாக வீட்டில் இருந்தது மனநிறைவை அளித்தது.

ஆறு வருஷங்களுக்கு முன்பு தியாகுவும் ஜானகியும் அங்கே குடி வந்த சமயத்தில் ரோஸி பத்துப் பதினோரு வயதுச் சிறூமியாயிருந்தாள். ஃபிராக் மட்டும் அணிந்து குடுகுடுவென்று அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பாள். பள்ளிக்கூட நேரம் வந்ததும் வேறு நல்ல ஃபிராக் அணிந்து கொண்டு பரக்க பரக்க பஸ்ஸைப் பிடிக்க ஓடுவாள். அதே ரோஸி இந்த ஆறு வருஷத்தில் எப்படி மதமதவென்று வளர்ந்து விட்டாள்!

காப்டனின் வீட்டு வெளி வராந்தாவில் பழைய காலத்து மரக்கட்டில் ஒன்று மெத்தை தலையணை சகிதம் நிரந்தரமாகப் போடப்பட்டிருந்தது. பகல் நேரங்களில் மேரியம்மாள் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் அதில் வந்து தலையைச் சாய்த்துக் கொள்வாள். ஆனால் மாலை நேரத்தில் அதன் ஏகபோக உரிமை காப்டனுக்குத் தான். தமது வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து தேநீர் அருந்தியதும் காப்டன் இடுப்பில் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் அந்தக் கட்டிலே தஞ்சமென்று அதில் மல்லாந்து படுத்து விடுவார்.

ரோஸியின் மாலை நேரக் கடமை அப்போது துவங்கும். காப்டனுக்கு உடம்பு பிடித்து விடும் வேலை. அவருடைய பாரி சரீரத்துக்கு ரோஸியின் கைகளால் அமுக்கி விட்டால் எப்படிப் போதும்! அவரது உடம்பின் மீதே ஏறி நின்று கால்களால் மிதித்தால் தான் இதமாக இருக்கும் அவருக்கு. விட்டத்து வளையத்தில் கட்டப்பட்டு தொங்கிய ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு ரோஸி அவருடைய உடம்பின் மீது அங்குமிங்கும் நடந்து தேவைப்பட்ட இடங்களில் அழுத்தி மிதிக்கும் போது காப்டன் “அப்பா! அப்பப்பா!” என்று அவ்வப்போது கூறிக்கொண்டு அந்த இதத்தை ரசித்துக் கொண்டிருப்பார்.

ஒருநாள் மாலை  வழக்கப் போல் ரோஸி காப்டனுக்கு உடம்பு மிதித்துக் கொண்டிருந்த போது மேரியம்மாள் கூச்சலிட்டது தியாகுவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.

“ஏ ரோஸிப்பொண்ணே! உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? இன்னமும் பாதித் தொடை தெரியும்படியா ஃப்ராக்கைப் போட்டுக்கிட்டு உடம்பு மிதிக்கறயே! பாவாடை தாவணி எதுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்! எடுத்துக் கட்டிக்கிட்டு வந்து அப்புறம் மிதி. ஓடு!”

“ரோஸி போன வாரம் தான் பெரிய மனுஷி ஆனாளாம். மேரியம்மாள் எனக்குச் சொன்னாள்!” என்று தியாகுவின் காதில் கிசுகிசுத்தாள் ஜானகி.

ரோஸியின் மாலை நேரக் கடமை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது. காப்டனுக்கு அவள் உடம்பு மிதித்து விடும்போது சில சமயம் அவர் சிடுசிடுப்பார் - “ ஏ ரோஸி! இப்படி பெரளறாப்பல பாவடை கட்டிகிட்டா மூஞ்சியில கிச்சுகிச்சு மூட்டறாப்பல இருக்கு. தும்மல் கூட வந்திடுது!”

இந்தத் தொந்திரவைத் தவிர்ப்பதற்காக ரோஸி பாவாடை விளிம்பைத் தூக்கிச் செருகிக் கொண்டு காப்டனுக்கு உடம்பு மிதித்து விடுவாள். அவளுடைய பாதம் பட்டு உடம்பு வலி விட்டுப் போகும் இதத்தைக் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருப்பார் காப்டன்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகுதான் ரோஸியின் கண்கள் எங்கெங்கோ அலைபாய்வதை ஜானகி தியாகுவுக்குச் சுட்டிக் காட்டும் நிலை உருவாயிற்று. எதிர் வீட்டுக் குமாருடன் அவள் நடத்திய கண் ஜாடை உரையாடல்கள் ஒருபடி மேலே போய் ரகசியச் சந்திப்புக்கும் வழிவகுத்து விட்டன!

தியாகுவும் ஜானகியும் ஒருநாள் மாலையில் மார்கெட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு மரத்தடியின் இருண்ட பகுதியில் இரண்டு உருவங்கள் நின்று ரகசியமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தனர். ரோஸியும், குமாரும் தான்!

இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப்பட்டாள் ஜானகி. மேரியம்மாளிடம் சொன்னால் அந்த அனாதைப் பெண்ணை அடித்து துரத்தி விடப் போகிறாளோ என்ற பயம் அவளுக்கு. அப்படி ஒரு பாவத்தைக் கட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை. அதே சமயம் அந்த தறுதலைக் குமார் அந்த அறியாப் பெண்ணை மோசம் செய்து விடக் கூடாதே என்றும் அவள் கவலைப்பாட்டாள். தியாகுவிடம் அவள் தன் கவலையைத் தெரிவித்த போது. தியாகு, “ இந்த ஊர்க்கவலையெல்லாம் உனக்கெதுக்கு? நம்ம பாடு தலைக்கு மேல கிடக்கு!” என்று அலட்சியமாகக் கூறி விட்டான்.

இதற்கு ஒருமாதத்துக்குள் அது நடந்து விட்டது. பெற்ற தாய் தந்தையர்களுக்கும் மேலாக இருந்தவர்களைத் தூக்கியெறிந்து விட்டு உதவாக்கரை குமாருடன் எங்கோ மறைந்து விட்டாள் ரோஸி.

“நன்றி கெட்ட, கழுதை! கெட்டழிஞ்சிட்டு மறுபடியும் இவங்க கிட்டத்தான் வந்து நிக்கப் போகுது” எப்று குமுறினாள் ஜானகி.
ஆனால் மேரியம்மாளோ, காப்டன் டேனியலோ அவளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த நன்றி மறந்த செயலுக்கு விளக்கம் தேவை இல்லையென்று இருந்து விட்டார்களோ?

இது நடந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜானகியும், தியாகுவும் தீவுத் திடலில் நடந்த சுற்றுலா கண்காட்சிக்குப் போயிருந்த போது தற்செயலாக ரோஸியைச் சந்தித்தனர். நிறைமாத கர்ப்பிணியாயிருந்த அவளுடன் குமாரும் வந்திருந்தான். இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு கூட்டத்துள் மறைந்து விட முயற்சி செய்யவில்லை. தாங்களாகவே அவர்களருகில் வந்து வணக்கம் தெரிவித்தனர்.
“நல்லா இருக்கியா ரோஸி?”
“ ரொம்ப நல்லா இருக்கேம்மா” என்று கூறிய ரோஸி சற்றுத் தயங்கிய பிறகு கூறினாள்- “எங்க வீட்டுக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரணும். புதுப்பேட்டை நடுத்தெரு, ஆறாம் நம்பர்ல இருக்கோம்.”

ஆவல் உந்தித் தள்ள மறுநாளே தியாகுவை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் ஜானகி. வீட்டை அவர்கள் வைத்துக் கொண்டிருந்த விதமும், அவர்களை உபசரித்த விதமும் இருவரையும் பிரமிக்க வைத்தன.

குமாரா இப்படி மாறி விட்டான்? ரோஸி போட்ட சொக்குப் பொடியின் மகிமையா?

“சொந்தப் பட்டறை ஆரம்பிச்சிருக்காரம்மா. நல்ல வருமானம்!” என்றாள் ரோஸி.
“கலியாணம் எப்போ ஆச்சு!”

“அப்பவே பதிவுத் திருமணம் செய்துகிட்டோம். யாரு என்ன பேசறாங்கன்னு நாங்க கவலைப்படலே. செழிப்பா சந்தோசமா இருக்கோம்” என்று கூறிய குமார். தியாகுவும், ஜானகியும் எவ்வளவு தடுத்தும் கேளாமல் அவர்களுக்கு சிற்றுண்டி வாங்கி வர ஸ்கூட்டரில் விரைந்து சென்றான்.

“இவரோட அப்பா அம்மா இவரோட முகத்திலே முழிக்கிறதில்லேன்னு வைராக்கியமா இருக்காங்க, எத்தனை நாளைக்கு அப்படி இருக்கப் போறாங்களோ தெரியலே!” என்றாள் ரோஸி.

ஜானகி பிடித்துக் கொண்டாள். “வைராக்கியமா இருக்கறவங்க அவங்க மட்டும் இல்லையே! பெத்த மகளுக்குச் சமமா உன்னை வளர்த்தவங்க! என்ன இருந்தாலும்...”

“நீங்க என்ன சொல்ல நினக்கறீங்கன்னு எனக்குப் புரியுதம்மா. நான் நன்றி கெட்டவ- உப்புக்குத் துரோகம் செய்தவ- இப்படித் தான் எல்லோரும் என்னைப்பற்றி பேசறாங்க. ஆனா வயசுப் பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்க யாருக்கும் தோணலையே? நான் அனாதை தான். அவங்களை நம்பித்தான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். பெத்த தாய் தகப்பனாருக்குச் சமமா தான் அவங்களை மதிச்சிருந்தேன். அவங்க காலால இட்ட வேலையை தலையால செய்யக் கடமைப்பட்டவ தான் நான். ஆனால் அப்பாவுக்கு தினமும் உடம்பு மிதிக்கிற வேலை... நான் சின்னப் பெண்ணா இருந்த வரைக்கும் சரி. எனக்கு வயசு வந்தப்புறமும்...”

“ரோஸி!”

“யாரையும் நான் தப்பாச் சொல்லலீங்க. ஆனா நான் மரக்கட்டை இல்லையே! வயசுப் பொண்ணோட மனசும், உணர்ச்சிகளும் எனக்கும் உண்டு இல்லையா? அம்மாகிட்டே ஜாடையா சொல்லியும் பார்த்தேன். அந்த உடம்பு மிதிக்கிற வேலை மட்டும் எனக்கு கொடுக்க வேண்டாம்னு. ஆனா அம்மா என்னோட தவிப்பைப் புரிஞ்சுகிட்டாதானே!”

“தவிப்பா! நீ என்ன சொல்லறே ரோஸி!”

“பெத்த தகப்பானாருக்கும் மேலே உன்கிட்டே பாசம் காட்டறாரே. அவருக்காக நீ இது கூடச் செய்யக் கூடாதா?’ அப்படின்னு அம்மா என் வாய் மேல போட்டுட்டாங்க. என் மனசு பட்ட பாட்டை அவங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்? அப்பா என்ன தான் வயசில் பெரியவரானாலும் அவரோட உடம்பு ஆம்பிள்ளை உடம்பு தானே! நெருப்பு மேலே நடக்கற மாதிரி தான் நான் அந்த உடம்பை மிதிக்கிற வேலையைச் செய்துகிட்டிருந்தேன். அந்த அரைமணி நேரமும் என்னோட உடம்பில் ஒவ்வொரு அணுவும் அனல் பறக்கறாப்பல நான் தவிச்ச தவிப்பு...! அதை நான் யார் கிட்ட சொல்ல முடியும்? என்னோட தவிப்புக்கு வடிகாலா குமார் எனக்கு வாய்ச்சாரோ நான் பிழைச்சேனோ!” விம்மலினிடையே கூறிய ரோஸியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள் ஜானகி.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் ரோஸி ஈஸியாய் தப்பிவிட்டாள் .....! சமூகத்தில் நூத்துக்கு தொன்னுத்தி எட்டு கிழவங்களை நம்பக்கூடாது.....!  tw_anguished:  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.