Jump to content

ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப்


Recommended Posts

ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப்

 

 
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்
 
 

ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற அச்சம் நிலவி வந்தது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒருமுறை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் உடனான 25 நிமிட தொலைப்பேசி உரையாடலில் இதை அவர் உறுதிப்படுத்தியதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் அமெரிக்க தரப்பிலிருந்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக எந்த தகவலும் வெளிவரமால் இருந்தது.

இந்த நிலையில் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியே பிரதமர் மால்கம் டர்ன்புல்லுகும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியே பிரதமர் மால்கம் டர்ன்புல்லுக்கு இடையே நடந்த உரையாடல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ஒபாமா ஆட்சி காலத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அமெரிக்க ஒப்பந்தம் மோசமான ஒப்பந்தம் என்றும், ட்ரம்ப் கோபமாக கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஆஸ்திரேலியாவிடமிருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஆயிரக்கணக்கானவர்களை ஏற்றுக் கொள்ள ஒபாமா நிர்வாகம் ஒப்புக் கொண்டது ஏன்? நான் இந்த வாய்பேசா ஒப்பந்தத்தை படித்து ஆராயவிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடல் வழியே ஆஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/ஆஸி-அமெரிக்க-அகதிகள்-ஒப்பந்தத்தை-கடுமையாக-விமர்சிக்கும்-ட்ரம்ப்/article9516854.ece?homepage=true

Link to comment
Share on other sites

இது வரை நடத்திய தொலைபேசி உரையாடல்களிலேயே இதுதான் மோசமானது : டிரம்ப்

 
 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆகிய இருவருக்குமிடையே நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடல் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தம் ஒன்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 

உலகத் தலைவர்களுடன் டிரம்ப் இது வரை நடத்திய தொலை பேசி உரையாடல்களிலேயே இது தான் மோசமான உரையாடல் என டிரம்ப் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் இருந்து 1200 பேருக்கும் மேலானோரை அமெரிக்காவுக்கு அனுப்ப முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துடன் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் மரியாதை தர வேண்டுமென உத்தரவாதம் அளிக்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் இரான், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள சர்ச்சைக்குரிய முறையில் மறுத்து விட்ட ஆஸ்திரேலியா, அவர்களை அதற்கு பதிலாக பசிபிக் நாடுகளான நாரூ, பப்புவா நியூ கினியா தடுப்புக் காவல் மையங்களில் வைத்திருக்கிறது.

http://www.bbc.com/tamil/global-38839228

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய பிரதமரிடம் போனில் டிரம்ப் ஆவேசம்; பாதியில் துண்டித்ததால் அதிர்ச்சி

 

வாஷிங்டன்: ஆஸ்திரேலிய பிரதமர், டர்ன்புல்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், காரசாரமாக பேசி, இணைப்பை பாதியிலேயே, துண்டித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

உரையாடல்:


அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற, டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஆஸ்திரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம், சமீபத்தில், டிரம்ப், தொலைபேசியில் பேசினார். அப்போது, பசிபிக் கடல் பயணத்தில் சிக்கி, ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் புகுந்த, சிரியா உட்பட, மேற்காசிய நாட்டு அகதிகளில், 1,250 பேரை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஒப்பந்தம் பற்றி, டர்ன்புல் நினைவூட்டினார்.
 

 

ஆவேசம்:


இதனால் ஆவேசமடைந்த டிரம்ப், 'எந்த அகதிகளையும் ஏற்க முடியாது; அமெரிக்கா, அகதிகளின் சரணாலயம் அல்ல' என, ஆவேசமாக, சில நிமிடங்கள் பேசி, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்; ஆஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அதுமட்டுமின்றி, இதுபற்றி, சமூகவலை தளமான டுவிட்டரிலும், டிரம்ப் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 'ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் செய்தது மோசடி நடவடிக்கை; இதுபற்றி, நான், ஆய்வு செய்வேன்' என கூறியுள்ளார்.
 

 

கண்டனம்:


ஆஸ்திரேலிய பிரதமருடன் பேசியபோது, தொலைபேசி இணைப்பை துண்டித்ததுடன், பேச்சு விபரங்களை பகிரங்கமாக வெளியிட்ட டிரம்ப்பின் செயலுக்கு, அமெரிக்க பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அவதானங்களின் படி டொனால்ட் ட்ரம்ப் ஒரு கரட்டி ஓணான் மாதிரி!

அவர் கூறுவது போல அவுஸ்திரேலியா அகதிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவது...ஒரு மடத்தனமான செயலே!

அவுஸ்திரேலிய கண்டம் அகலப் பரந்து கிடக்கின்றது! ஆனால் இங்குள்ள அரசியல் வாதிகளின் மனமோ மிகவும் குறுகிப்போய் கிடக்கின்றது!

ஆனால் அகதிகளைப் பயங்கரவாதிகள் என்றும் ..பொஸ்டன் பம்பர்ஸ் என வர்ணிக்கும்.... ட்ரம்பின் மனமோ அவுஸ்திரேலியர்களை விடவும் குறுகியது!

ஈரானிடம்...இன்று காலை முறையாக மூக்குடைக்கப் பட்டு நிற்கின்றது...இந்தக் கரட்டி ஓணான்!

ஆர்னோல்ட் ஸ்வாஸ்னிக்கரிடமும் வாங்கி கட்டியுள்ளது!

 

ட்ரம்ப் கூறுவது படி பார்த்தாலும்....ட்ரம்ப் ஜெர்மனிக்குத் திரும்பப் போக வேண்டிய ஆள்!

யாருடைய நிலத்துக்கு...யாரோ விலை பேசுகின்றார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புங்கையூரன் said:

எனது அவதானங்களின் படி டொனால்ட் ட்ரம்ப் ஒரு கரட்டி ஓணான் மாதிரி!

அவர் கூறுவது போல அவுஸ்திரேலியா அகதிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவது...ஒரு மடத்தனமான செயலே!

அவுஸ்திரேலிய கண்டம் அகலப் பரந்து கிடக்கின்றது! ஆனால் இங்குள்ள அரசியல் வாதிகளின் மனமோ மிகவும் குறுகிப்போய் கிடக்கின்றது!

ஆனால் அகதிகளைப் பயங்கரவாதிகள் என்றும் ..பொஸ்டன் பம்பர்ஸ் என வர்ணிக்கும்.... ட்ரம்பின் மனமோ அவுஸ்திரேலியர்களை விடவும் குறுகியது!

ஈரானிடம்...இன்று காலை முறையாக மூக்குடைக்கப் பட்டு நிற்கின்றது...இந்தக் கரட்டி ஓணான்!

ஆர்னோல்ட் ஸ்வாஸ்னிக்கரிடமும் வாங்கி கட்டியுள்ளது!

 

ட்ரம்ப் கூறுவது படி பார்த்தாலும்....ட்ரம்ப் ஜெர்மனிக்குத் திரும்பப் போக வேண்டிய ஆள்!

யாருடைய நிலத்துக்கு...யாரோ விலை பேசுகின்றார்கள்! 

என்னது ஜெர்மனிக்கா..... நங்கள் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது புங்கையருக்கும் பிடிக்கவில்லையோ:100_pray:  
இவர் எங்கையாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட வேண்டியவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

உரையாடல்:

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற, டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஆஸ்திரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம், சமீபத்தில், டிரம்ப், தொலைபேசியில் பேசினார். அப்போது, பசிபிக் கடல் பயணத்தில் சிக்கி, ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் புகுந்த, சிரியா உட்பட, மேற்காசிய நாட்டு அகதிகளில், 1,250 பேரை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஒப்பந்தம் பற்றி, டர்ன்புல் நினைவூட்டினார்.
 

இவருக்கு முன்னாலை "ஒபாமா"  எண்ட பெயரை ஆரும் உச்சரித்தாலே நடுமுடி சிலிர்த்துக்கொண்டு நிக்குமாம் tw_blush:

Link to comment
Share on other sites

உண்மைதான் புங்கை அண்ணா, ஆனால் இவர்களை வைத்துக்கொண்டு செய்வது? அவுசினுள்ளே விட்டால் இந்தோனேசியாவில் இருந்து மீண்டும் வள்ளங்கள் வெளிக்கிடும். இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளின் பின்னரும் வள்ளம் ஏறுபவர்கள், அவுஸ் உள்ளே விடும் எனது தெரிந்தால் மிச்சயமாக வருவார்கள். அத்துடன் இந்த ஈரானிய ஈராக்கிய இரண்டாம் தலை முறை அவுசுக்கு பெரும் தலையிடியாக மாறும்.

Lindt café தீவிரவாதி மொனிஸ் ஓர் ஈரானிய அகதி. இதைவிட CTU வின் கையில் அம்பிடும் பலர் இந்த நாடுகளில் இருந்து வருபவர்களே. மெல்பேர்ன் சம்பவம் கேள்விப்பட்டிருப்பீர்கள், வெளிக்கு வராத பல செய்திகளும் உண்டு . 12,000 சிரியர்களை உள்ளே விடும் போது கூட கிறிஸ்தவர்களைத்தானே அதிகம் உள்ளே விடுகிறார்கள்.

அந்தவகையில் இவர்களை கம்போடியாவின் தலையிலே கட்டப் பார்த்தார்கள் முடியவில்லை, மலேசியா, அதுவும் முடியவில்லை, இப்ப அமெரிக்கா. அதுவும் முடியாட்டில் வேற ஏதாவது ஒரு நாடு அம்பிடும் வரைக்கும் இந்த வெள்ளை யானையைக் கட்டிவச்சு தீனி போட வேண்டியது தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Thumpalayan said:

உண்மைதான் புங்கை அண்ணா, ஆனால் இவர்களை வைத்துக்கொண்டு செய்வது? அவுசினுள்ளே விட்டால் இந்தோனேசியாவில் இருந்து மீண்டும் வள்ளங்கள் வெளிக்கிடும். இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளின் பின்னரும் வள்ளம் ஏறுபவர்கள், அவுஸ் உள்ளே விடும் எனது தெரிந்தால் மிச்சயமாக வருவார்கள். அத்துடன் இந்த ஈரானிய ஈராக்கிய இரண்டாம் தலை முறை அவுசுக்கு பெரும் தலையிடியாக மாறும்.

Lindt café தீவிரவாதி மொனிஸ் ஓர் ஈரானிய அகதி. இதைவிட CTU வின் கையில் அம்பிடும் பலர் இந்த நாடுகளில் இருந்து வருபவர்களே. மெல்பேர்ன் சம்பவம் கேள்விப்பட்டிருப்பீர்கள், வெளிக்கு வராத பல செய்திகளும் உண்டு . 12,000 சிரியர்களை உள்ளே விடும் போது கூட கிறிஸ்தவர்களைத்தானே அதிகம் உள்ளே விடுகிறார்கள்.

அந்தவகையில் இவர்களை கம்போடியாவின் தலையிலே கட்டப் பார்த்தார்கள் முடியவில்லை, மலேசியா, அதுவும் முடியவில்லை, இப்ப அமெரிக்கா. அதுவும் முடியாட்டில் வேற ஏதாவது ஒரு நாடு அம்பிடும் வரைக்கும் இந்த வெள்ளை யானையைக் கட்டிவச்சு தீனி போட வேண்டியது தான்..

தும்பளையான்....உங்கள் கருத்துடன் உடன் படும் அதே வேளையில்....இந்தப் பிரச்சனைகளையும், அகதிகளையும் உருவாக்குபவர்கள்.அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும்!

சும்மா இருந்த சதாமுக்கும், கடாபிக்கும்...பின் லாடனுக்கும் 'தடி' எடுத்துக்கொடுத்ததும் இவர்கள் தானே! ஆவர்த்தன அட்டவணையே அறியாதவர்களை...அணுக்குண்டு தயாரிப்பு வரை கொண்டு வந்து விட்டதும் இவர்கள் தானே! அதற்கான பின் விளைவுகளை..இலகுவாகப் புறந்தள்ளி விடுவதும் நல்லதல்லவே! ஐம்பதினாயிரம்...ஈராக்கிய துருப்புக்களை.. பாலைவனத்துப் புதை குழிகளுக்குள்...மூன்று இரவுகளாக பி-57  விமானங்கள் மூலம் கொன்று குவித்து விட்டால் மட்டும் அது வெற்றியல்லவே! அந்த ஐம்பதினாயிரம் துருப்புக்களுக்கும்..மனைவியரும்...குழந்தைகளும் இருந்திருக்குமல்லவா? அவர்கள்...ஒரே இரவில் அபலைகளாக்கப் பட்டதற்கு...யார் பொறுப்பேற்கப் போகின்றார்கள்? 

அவர்கள் அகதிகளாக வராதவாறு..இவர்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டாமா? அவ்வாறு செய்திருந்தால்....ஐஸிஸ் போன்ற அமைப்புக்கள் உருவாகியிருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருந்திருக்கும் அல்லவா?

உங்கள் கருத்தை மறுதலிக்கும் வகையில் இதை நான் எழுதவில்லை!

ஒரு தார்மீகக் கண்ணோட்டத்தில் மட்டுமே எழுதினேன்!

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது உண்மை. போர்ப் பொருளாதாரம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் தானே. ஒருத்தனுக்கு missile ஐயும் இன்னொருத்தனுக்கு missile defence system ஐயும் வித்துக் காசு பார்ப்பது தானே உலகம். ஒரு drone ஐ அவுசுக்கு வித்தால், maintenance, support, upgrades எண்டு வாழ்நாள் பூரா காசு பார்க்கலாம். அந்த drone அகதி வள்ளத்தைப் படமெடுக்குதோ, சைனீசிண்ட கொக்கெய்ன் கப்பலை கண்காணிக்குதோ, இல்லாட்டில் great barrier reef இனுள்ளே மீன்பிடிக்க வரும் வியட்நாமிஸ் வள்ளத்தை வீடியோ எடுக்குதோ இல்லாட்டிக்கு  ஆப்கானிஸ்தானில் அப்பாவிகளுக்கு hell fire அடிக்குதோ  யாருக்கு தேவை என்ற ரீதியில் தானே உலகம் ஓடிக்கொண்டிருக்குது. அவுஸ் Defence பட்ஜெட்டை நாங்கள் பகிடியாக கூறுவது blank cheque எண்டு. தேவையான தொகையை போட்டு, மாத்த வேண்டியது தான்! இதுவரைக்கும் உலகம் சண்டைகளிலும் பாதுகாப்பிலும் செலவழிச்ச காசை கணக்குப் பார்த்தால் இதுவரைக்கும் உலகத்திலே பசியே இருக்காது.

அடிலெய்டில் கார் கட்டி முடிச்ச காலம் போய் இப்ப சப்மரைன் கட்டி விக்கப் போகினமாம், வாசிச்சிருப்பியள் எண்டு நினைக்கிறன். அதன் பின்னணி கூட இப்பிடியானது தான்

ஐ.நா, பாதுகாப்புச் சபை எல்லாம் வெறும் கண்துடைப்பு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.