Jump to content

ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்!


Recommended Posts

ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்!

 

 
 
child_3126410f.jpg
 
 
 

வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது.

தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் காலத்தில் ஜப்பானியப் போர் வீரர்களுக்காகப் பாலியல் அடிமைகளாகக் கட்டாயப்படுத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்ட தென் கொரிய இளம் பெண்களின் நினைவாக வைக்கப்பட்ட சிலை அது என்பதுதான் பூசலுக்கான காரணம்.

கொரியாவிலிருந்து மட்டுமல்லாமல், சீனத்திலிருந்தும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும்கூட இளம் மகளிர் இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டு அக்காலத்தில் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். ஜப்பான் தன்னுடைய போர்க்கால அக்கிரமங்களுக்கு உரிய வகையில் மன்னிப்பு கோரவில்லை, ஏற்படுத்திய சேதங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்பது சிலை வைத்தவர்களின் முக்கியக் குற்றச்சாட்டு.

பூசன் நகரில் இச்சிலை திறக்கப்படுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன் - 2015 டிசம்பரில்தான் ஜப்பானும் தென் கொரியாவும் ‘இறுதியானதும் - இனி திருத்தப்பட முடியாததுமான’ ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. ஜப்பான் மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன், இன்னமும் உயிர் வாழும் அத்தகைய பெண்களின் நலவாழ்வு நிதிக்கு 80 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தர முன்வந்தது. இதை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உடன்படிக்கை என்று வரவேற்றவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது என்று அப்போது பாராட்டினார்கள்.

இந்நிலையில், பூசன் நகரில் பதின்ம வயதுப் பாலியல் தொழிலாளியின் சிலையை - அதுவும் ஜப்பானியத் தூதரகத்தின் எதிரிலேயே - திறந்திருப்பதை ஒப்பந்தத்தை மீறிய செயலாக ஜப்பான் கருதுகிறது. “சிலை திறக்கப்பட்ட இடம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், சிலையை வைத்தது தென் கொரிய மக்கள் அமைப்பு. அதன் மீது அரசுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது” என்று ஜப்பானுக்குப் பதில் அளித்தது தென் கொரியா.

தென் கொரியா சொல்வதில் பாதிதான் உண்மை. சிலை வைப்பதாக இருந்தால் அரசின் அனுமதி இல்லாமல் வைக்க முடியாது. ஆனால், மக்களுடைய விடாப்பிடியான வற்புறுத்தலுக்குப் பிறகே, வேறு வழியின்றி அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

டோக்கியோவில் உள்ள போர் தேவதையின் கோயிலுக்கு (யசுகுனி ஆலயம்) பாதுகாப்பு அமைச்சர் தோமோமி இனாடா சென்றதால், இந்தச் சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தென் கொரியாவில் வலுப்பெற்றது. போரிடச் செல்லும் முன் ஜப்பானியர்கள் இந்தக் கோயி லுக்குச் சென்று ஆசி பெறுவார்கள். அப்படித் தான் இரண்டாவது உலகப் போருக்கு முன்ன தாகவும் நடந்தது. இப்படிச் செல்வதை சீனமும் கொரியாவும் சகஜமாக எடுத்துக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “போரில் ஈடுபட்ட அத்தனை ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளையும் கதாநாயகர்களாகக் கருதி, அஞ்சலி செலுத்தப்படும் இடம் அது” என்பது சீனர்கள் - கொரியர்களின் குற்றச்சாட்டு.

2015-ல் தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், இரு நாடுகளுமே தங்களுடைய வரலாற்றுப் பகைமையைப் புதைத்துவிடவில்லை. தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு விரைவில் புதிய தேர்தல் நடைபெறவிருக்கிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜப்பானுடனான ஒப்பந்தத்தைத் தூக்கி எறிவோம்” என்று அறிவித்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி. 1992-ல் ஜப்பானியப் பிரதமராக இருந்த கிச்சி மியாசாவா, ‘உள்ளத்தின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்’என்று கொரியர்களிடம் கோரியிருந்தார். பின்னாளில், மற்றொரு பிரதமரான மொரிஹிரோ ஹோசகாவாவும், ‘ஜப்பானிய காலனி ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துயரங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்’என்று மன்னிப்பு கோரினார்.

ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக இந்த விவகாரத்தில் ஏதாவது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருப்பதால், ஜப்பானுக்கும் அதனால் முன்னர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படாமலேயே தள்ளிப்போகிறது.

2015 ஒப்பந்தத்தைப் பேசி முடித்த தென் கொரிய அதிபர் பாக் குன் ஹி, ஊழல் குற்றச்சாட்டுக்காக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மான நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கிறார். விரைவில் தென் கொரிய நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜப்பானுடனான ஒப்பந்தத்தைத் தூக்கி எறிவோம்” என்று தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி அறிவித்திருக்கிறது. “இந்த விவகாரத்தில் ஜப்பான் நேர்மையாக மன்னிப்பு கேட்பதில்லை” என்று தென் கொரியாவிலும் சீனத்திலும் அடிக்கடி அரசியல் உள்நோக்கத்துடன்தான் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்பதே உண்மை. தங்கள் நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்கும்போது, நாட்டுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப இப்படி ஜப்பான் மீது குற்றஞ்சாட்டி திசை திருப்புவதே இவற்றின் வாடிக்கையாக இருக்கிறது.

ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் புவி அரசியல்ரீதியாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கவனிக்கும்போது இப்படி சில்லறைத்தனமாக சண்டையிட்டுக் கொள்ளாமல், தங்களுக்குள் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் இரண்டும் அக்கறை செலுத்துவதுதான் நன்மை பயப்பதாக இருக்கும் என்று வலியுறுத்தத் தோன்றுகிறது. ஆனால், உணர்ச்சிபூர்வமான அரசியலும், தேசிய உணர்வுகள் அவமதிக்கப்படும்போது ஏற்படும் கோபமும்தான் அரசியலில் எடுபடுகிறது. இதனால்தான் தொடர்ந்து பழைய புண்கள் கிளறப்பட்டு, ஆறாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது!

- பல்லவி ஐயர், உலகப் பொருளாதார அரங்கைச் சேர்ந்தவர்; சீனா, ஐரோப்பா, இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளிலிருந்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்

சுருக்கமாகத் தமிழில்: சாரி,
© ‘தி இந்து’ ஆங்கிலம்

http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-சிறுமி-சிலையும்-ஜப்பான்-கொரியா-இரு-நாடு-பூசலும்/article9513978.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.