Jump to content

யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு


Recommended Posts

யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு
 
 
யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள்  மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம்  நல்லூர் அரசடி வீதியில்  உள்ள கடையொன்றினுள் இன்று   இரவு 7.15 மணியளவில் நுழைந்த   இனந்தெரி யாத  பத்துப்பேர் அடங்கிய கும்பல்  கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும்  தீயிட்டு கொழுத்தி உள்ளனர்.
 
இச் சம்பவத்தில் 24  வயதுடைய கஜலக்சன் மற்றும் 20  வயதுடைய அஜித் என்பவர்களே வாள்   வெட்டுக்கு இலக்காகி யாழ்.  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவ  இடத்திற்கு  மாநகர தீயணைப்பு படை  விரைந்து வந்து தீயை அணைத்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
கடையினுள் உள்ள சீ.சி.ரி கமெராவில்  அனைத்தும் பதிவாகியுள்ள போதும்  மர்ம நபர்கள் முகத்தினை மறைத்த நிலை யில் வந்துள்ளனர். எனினும்  அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்கள் சீ.சி.ரி கமெராவில் பதிவாகியுள்ளது.
16359296_845019588970458_137732367_n.jpg16443687_845016998970717_824681812_n.jpg16359250_845016915637392_1803525195_n.jpg
16395500_845019185637165_2137124117_n.jpg
16402022_845019268970490_967709546_n.jpg

http://www.onlineuthayan.com/news/23311

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மாதிரி மாறிக்கொண்டிருக்கிறது ஈழமும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தியா மாதிரி மாறிக்கொண்டிருக்கிறது ஈழமும்

இலங்கையிலை முந்தி ஏதோ வாள்வெட்டும் கத்திக்குத்தும் கட்டுத்துவக்காலை சுட்டதும் நடக்காத மாதிரியெல்லோ கதைவருது......சனம் ஏதோ புலிகள் காலத்திலை கட்டுப்பாடாய்.... உந்த கோதாரியளாலை அவதிப்படாமல் இருந்தது உண்மைதான்......அதுக்காக பாலும் தேனும் ஓடின மண் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முந்தியும் இருந்தது தான் ஆனால் கால ஓட்டத்தில் இப்ப கொஞ்சம் ஓவரா நடக்குது. போர் முடிவுக்கு வந்தபின் கோஸ்டி மோதலில் பயன்படுத்தும் ஆயுத தளபாடத்தை சுடுகுழலில் இருந்து  வீச்சுவாள் ஆக down grade செய்யப்பட்டுள்ளதை கருத்தில் எடுக்கும்போது இது ஒன்றும் மோசமில்லை என்றுதான் சொல்லத் தோன்றும். எனினும்  நாங்கள் தமிழ் சமுதாயத்தின் இளைய தலைமுறையின் முன்னேற்றத்தைப்பற்றி கரிசனை கொள்பவராயிருந்தால் ஆயுதக்கலாச்சாரம் களையப்படவேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Link to comment
Share on other sites


ஏன் யாழில் உள்ள சிலபேரோட, இங்கு எழுதுவதை, பக்கத்தில் நின்று சொன்னால் உதுதான் நடக்கும். FOR VARIOUS REASONS, தாங்கள் சொல்வதை எதிர்த்தால், தங்கள் வட்டத்துக்குள் நாங்கள் போனால் (வட்டத்துக்குள் நிப்பவர்கள் ஒருவரும் வெளியில் வரமுடியாது வந்தால் அவர் செத்தார்), எங்களால் பயன் அவர்களுக்கு இல்லாது போனால், ETC.
 

Link to comment
Share on other sites

யாழில் வாள்வெட்டு ; வெளியாகியது காணொளி

யாழ் அரசடி பகுதியில் உள்ள கடை  ஒன்றிற்குள் நேற்று  இரவு  நுளைந்த இனந் தெரியாத கும்பல் ஒன்று வாள்களால் இருவரை வெட்டியுள்ளதுடன் கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

unnamed__3_.jpg

குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும் கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும்   படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

unnamed__2_.jpg

இந்த தாக்குதல்  சம்பவத்திற்கு காரணமாக எந்தவித முற்பகைகளும் தமக்கு இல்லை என்றும் எதற்கு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

unnamed__1_.jpg

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

unnamed.jpg

http://www.virakesari.lk/article/16025

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.