Jump to content

ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன்


Recommended Posts

ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன்

Serena williams

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் தனது மூத்த சகோதரி வீனஸை வீழ்த்தி செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம் செரினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்களில் அவர் வெல்லும் 23-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/sports/79030-serena-williams-wins-in-australian-open-final.art

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் செரீனா: ஸ்டெஃபி கிராப் சாதனை முறியடிப்பு

 

 
கோப்பையை வென்ற செரீனாவுடன் ரன்னர் பட்டம் வென்ற வீனஸ் (இடது). | கெட்டி இமேஜஸ்.
கோப்பையை வென்ற செரீனாவுடன் ரன்னர் பட்டம் வென்ற வீனஸ் (இடது). | கெட்டி இமேஜஸ்.
 
 

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்சை நேர் செட்களில் வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்.

இது செரீனாவின் 23-வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் பட்டமாகும், இதன் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வைத்திருந்த ஸ்டெபி கிராபின் 22 பட்டங்கள் சாதனையை முறியடித்தார் செரீனா வில்லியம்ஸ். மேலும் முதலிடத்தையும் பிடித்தார் செரீனா.

இன்று, சற்று முன் முடிந்த இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் சகோதரை வீனசை வீழ்த்தினார். ஆனால் இந்த ஸ்கோர் காட்டும் அளவுக்கு செரீனாவுக்கு சுலபமாக அமையவில்லை, வீனஸ் வில்லியம்ஸ் கடைசி வரை கடுமையாக போராடினார், தனது தவறுகளினாலேயே இழந்தார்.

முதல் செட் முதல் சர்வை வீனஸ் தொடங்க இரண்டு பேக்ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க செரீனா 30-0 என்று முன்னிலை பெற்று பிறகு ஒரு சக்தி வாய்ந்த பேக்ஹேண்ட் ஷாட் மூலம் வீனஸின் முதல் சர்வை பிரேக் செய்து செரீனா 1-0 என்று முன்னிலை பெற்றார்.

முதல் செட் 2-வது சர்வில் செரீனா, வீனஸின் உடலை நோக்கிய சர்வ்களை அடித்து 30-15 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு செரீனா தனது சர்வில் ஒரு டபுள் பால்ட் மற்றும் பேக் ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க வீனஸ் வில்லியம்ஸ் பிரேக் செய்தார், இதனையடுத்து ஆட்டம் பரபரப்பு தொடக்கம் கண்டு 1-1 என்று இருந்தது.

ஆனால் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ் சர்வை செரீனா அருமையாக ஆடி பிரேக் செய்தார், வீனஸின் சர்வ் கைகொடுக்காததால் செரீனா அவரது சர்வை எடுத்து அருமையான ரேலிகளை இருவரும் ஆடினர். கடைசியில் ஃபோர்ஹேண்ட் ஷாட் ஒன்று வலுவானதாக அமைய வீனஸ் மீண்டும் சர்வை இழந்தார். செரீனா 2-1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் செரீனா வில்லியம்ஸ் தனது சர்வில் மீண்டும் டபுள் பால்ட் செய்ய மீண்டும் வீனஸ் பிரேக் செய்து பதிலடி கொடுக்க செட் 2-2 என்று இருந்தது.

4 சர்வ்கேம்களும் பரஸ்பர சர்வ் முறியடிப்புகளில் சென்று கொண்டிருந்தது. அடுத்த சர்வ் கேமில் வீனஸ் 30-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு செரீனா ஒரு போர்ஹேண்ட் ஷாட், ஒரு பேக்ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க தன் சர்வை முதல் தடவையாக இந்த செட்டில் வென்றார் வீனஸ், இப்போது வீனஸ் சார்பாக ஆட்டம் 3-2 என்று இருந்தது.

அடுத்த சர்வை செரீனா தொடங்கவும் வீனஸ் வில்லியம்ஸ் ஒரு அருமையான போர்ஹேண்ட் ஷாட்டை அடிக்க செரீனா 0-15 என்று பின் தங்கினார். மீண்டும் ஒரு தவறை செரீனா இழைத்தார், ஆனால் ஏஸ் சர்வ் அடித்து 30-30 என்று சமன் செய்தார் செரீனா. இந்த சர்வை செரீனா தக்க வைக்க 3-3 என்று முதல் செட் நெருக்கமாக சென்றது. இப்போதுதான் திருப்பு முனை ஏற்பட்டது, வீனஸ் வில்லியம்ஸ் தன் சர்வில் ஒரு ஏஸ் போட்டதோடு டபுள் பால்ட் செய்தார். பிறகு செரீனா வலையருகே வந்து ஒரு அருமையான வாலி செய்ய வீனஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை, மீண்டும் பிரேக் பாயிண்ட். இப்போது வீனஸ் ஷாட்டை திருப்பி அருமையாக பேக் ஹேண்ட் ஷாட்டை செரீனா அடிக்க பிரேக் செய்யப்பட்டது, ஆட்டம் செரீனா சார்பாக 4-3 என்று ஆனது.

அடுத்த சர்வில் செரீனா பின் தங்கிய நிலையிலிருந்து அருமையான ஆட்டத்தின் மூலம் 3 கேம்களை வென்று 5-3 என்று முன்னிலை வகித்தார். ஆனால் வீனஸ் தன் சர்வை படாதபாடு பட்டு வசப்படுத்த 5-4 என்று ஆட்டம் இன்னமும் செரீனா பக்கமே இருந்தது. செட்டைக் கைப்பற்றுவதற்கான சர்வை செரீனா வீச, ஒரு போர்ஹேண்ட் ஷாட், இரண்டு ஏஸ்கள் என்று முதல் செட்டை செரீனா 6-4 என்று கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் முதல் சர்வை வீனஸ் வீச போராடியே தனது சர்வை தக்கவைத்தார் அவர். ஆனால் 2-வது சர்வ் கேமில் செரீனா தனது சர்வ்களை கண்டுபிடித்துக் கொண்டு ஏஸ்களை அடித்து வென்றார். ஆட்டம் 1-1. மீண்டும் வீனஸ் சர்வ் செய்ய 3 பிரேக் பாயிண்ட்களை வீனஸ் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு வீனஸ் அருமையான ஃபோர்ஹேண்ட் ஷாட்டை ஆடி செட் 2-1 என்று ஆனது. அடுத்த செரீனா சர்வில் டபுள் பால்ட் செய்ய வீனஸுக்கு பிரேக் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வலையில் ஷாட்டை அடித்து கோட்டை விட்டார் வீனஸ். ஆட்டம் 2-2. அடுத்து தனது சர்வை வீனஸ் சவுகரியமாகவே வெல்ல ஆட்டம் 2-3 என்று இருந்தது

செரீனா தனது சர்வை வென்றார், ஆனால் அவர் நினைத்த அளவுக்கு அது சவுகரியமாக அமையவில்லை. வீனஸ் சில அலட்சியமான ஷாட்களை ஆடி பிரேக் வாய்ப்பை கோட்டை விட்டார். இதனால் ஆட்டம் 3-3 என்று சமனிலை எய்தியது. அடுத்ததாக வீனஸ் சர்வை செரீனா வென்று பிரேக் செய்தார். பிறகு தன் சர்வை செரீனா தக்கவைத்தார், இந்த சர்விலும் வீனஸ் ஷாட் சரியாக அமையவில்லை, நெட்டில் பட்டது. இதனையடுத்து 5-3 என்று செரீனா முன்னிலை பெற்றார். அதற்கு அடுத்த தனது சர்வை வீனஸ் வீசி அருமையாக போராடி 40-15 என்று முன்னிலை பெற்று தனது சர்வை தக்கவைத்தார்.

5-4 என்ற முன்னிலையில் சாம்பியன்ஷிப்புக்கான சர்வை செரீனா வீச முதல் சர்வையே வீனஸ் அருமையான பேக் ஹேண்ட் ஷாட் ஆடி 15-0 என்று முன்னிலை பெற்றார். ஆனால் செரீனா விடுவாரா? அவரும் ஒரு பேக்ஹேண்ட் ஷாட்டில் 15-15 என்று சமன் செய்தார். அடுத்ததாக செரீனா சர்வை எடுத்த வீனஸ், செரீனாவை தனது அபாரமான ஷாட்கள் மூலம் கோர்ட்டில் வலது மூலைக்கும் இடது மூலைக்கும் அலைக்கழித்தார். இது செரீனாவின் போர்ஹேண்ட் ஷாட் தவறில் முடிய 30-15 என்று வீனஸ் தனது விடாப்பிடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்நிலையில் வீனஸ் இரண்டு தவறுகளை இழைத்தார். இதனையடுத்து செரீனா இரண்டாவது செட்டையும் 6-4 என்று கைப்பற்றி 23-வது சாம்பியன் பட்டம் வென்றார்.

செரீனா வில்லியம்சின் 7-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டமாகும் இது.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலிய-ஓபன்-மகளிர்-ஒற்றையர்-சாம்பியன்-செரீனா-ஸ்டெபி-கிராப்-சாதனை-முறியடிப்பு/article9507550.ece

Link to comment
Share on other sites

செரினா… டென்னிஸ் உலகை ஆளப் பிறந்தவள்!

செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸை ஜெயித்து விட்டார்; அவர் அக்காவை ஜெயித்து விட்டார்; ஆஸ்திரேலிய ஓபனை ஜெயித்து விட்டார்; அதுவும் ஏழாவது முறையாக ஜெயித்து விட்டார்; மீண்டும் நம்பர்-1 வீராங்கனையாகி விட்டார்; 23வது கிராண்ட் ஸ்லாம் ஜெயித்து விட்டார்; ஸ்டெஃபி கிராபை மிஞ்சி விட்டார்; ஓபன் எராவில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என சாதனை படைத்து விட்டார். இனி ஒரு கிராண்ட் ஸ்லாம் வென்று மார்க்ரெட் கோர்ட் சாதனையையும் சமன் செய்வார். செய்து விடுவாரா? நிச்சயமாக. ஏனெனில், செரினா… டென்னிஸ் சரித்திரத்தை மாற்றி எழுதியவர். டென்னிஸ் உலகை ஆளப் பிறந்தவள்!

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர் – ஸ்டான் வாவ்ரிங்கா மோதல், ஃபெடரர் – ரஃபேல் நடால் ஃபைனலில் பலப்பரிட்சை, செரினா – வீனஸ் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டு என இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ரசிகர்களுக்கு நல்விருந்து. அதன் ஒருபகுதிதான் மெல்போர்ன் ராட் லேவர் அரினாவில் இன்று நாம் கண்டது. மிச்சம் நாளை.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அக்கா – தங்கை இருவரும் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில் மோதினர். செரினா – வீனஸ் மோதும் இந்த போட்டியின் முடிவு, ஆரம்பத்திலேயே எல்லோருக்கும் தெரிந்ததே. எஸ்… 6-4, 6-4 என நேர் செட்களில் செரினா வெற்றி. கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு ஏற்ற தரத்தில் இந்த போட்டி இல்லை. ஆனால்…

செரினா வில்லியம்ஸ்

பொதுவாக கிராண்ட் ஸ்லாம் ஃபைனல் முடிந்த அடுத்த கணம், உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். வெற்றி பெற்றவர் அப்படியே மைதானத்தில் படுத்து உருகிக் கொண்டிருக்க, தோற்றவர் உடைமைகளை பேக் அப் செய்து கொண்டு டிரஸ்ஸிங் ரூம் நோக்கி வேகவேகமாக நடந்து கொண்டிருப்பார். ராட் லேவர் அரினாவில் இன்று அப்படி இருக்கவில்லை. சாம்பியன்ஷிப் பாயின்ட்டை எடுத்ததும் செரினா, 23வது கிராண்ட் ஸ்லாம் வென்ற பூரிப்பில் தரையில் உட்கார்ந்து, அந்த தருணத்தை உள்வாங்கிக் கொண்டிருக்க, நெட்டுக்கு அந்தப்பக்கம் தங்கையின் வருகைக்காகக் காத்திருந்தார் வீனஸ். அதுதெரிந்து அக்காவிடம் ஓடோடி வந்தார் செரினா. இருவரும் கட்டியணைத்து நெகிழ்ந்தனர். அது ஜிஃப் ஃபைலாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

ரன்னர் அப் கோப்பையை வாங்கிய வீனஸ், செரினாவை ஏகத்துக்கும் புகழ்ந்தார். வெற்றிக்கோப்பையை உயர்த்திப் பிடித்த செரினா, மூத்தவள் வீனஸை உச்சிமுகர்ந்து பாராட்டினர். ‛‛வீனஸ் இல்லையெனில், இந்த 23 கிராண்ட் ஸ்லாம் இல்லை. நான் நம்பர் -1 இல்லை. வில்லியம்ஸ் சகோதரிகள் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் வீனஸ்…’’ செரினா சொன்னபோது வீனஸ் உதட்டில் புன்னகை. கண்ணோரம் நீர்த்துளி. மேட்ச்சை விட இந்த ஸ்பீச் செம என, மெல்போர்ன் பார்க்கில் இருந்து ட்வீட் செய்கிறார் ஒரு நிருபர்.

கிராண்ட் ஸ்லாம் சாம்பியனுக்கு கிடைக்கும் பணத்தைப் பார்த்து மெய் சிலிர்த்த வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தை வில்லியம்ஸ், ‛என் பிள்ளைகளும் ஒருநாள் இந்த கிராண்ட் ஸ்லாம் வெல்வர்’ என சபதம் ஏற்றார். வில்லியம்ஸ் நினைத்ததை விட இன்று ஏராளமான கிராண்ட் ஸ்லாம்கள் அவர் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கின்றன. அஃப்கோர்ஸ்… பணமும். டென்னிஸ் விளையாடியதன் மூலம் செரினா சம்பாதித்தது $83,194,779 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.567 கோடி.

ஆரம்பத்தில் வீனஸ்தான் கிராண்ட் ஸ்லாம் தொடரில் கலக்கினார். அக்கா – தங்கை மோதிய போட்டிகளில் வீனஸ்தான் வின்னர். தங்கை கலங்கக் கூடாது என வின்னர் பட்டத்தை செரினாவிடம் கொடுத்து ரன்னர் பட்டத்தை வாங்கிக் கொண்டார் வீனஸ். நாளாக நாளாக செரினா அதை சொந்தமாக வாங்க கற்றுக் கொண்டார். இன்று அவரிடம் 23 கிராண்ட் ஸ்லாம்கள். இன்னுமும் அந்தப் பட்டியல் நீளும்.

2015ல் அமெரிக்க ஓபனில் சொதப்பி, காலண்டர் கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற சாதனையைத் தவற விட்டார் செரினா. கடந்த ஆண்டு ஏகத்துக்கும் சறுக்கல். விம்பிள்டன் தவிர்த்து வேறு கிராண்ட் ஸ்லாம் வாங்கவில்லை. அடிக்கடி இஞ்சுரி பிரச்னை வேறு. வயதும் 35. இனி செரினாவால் முன்பு போல கிராண்ட் ஸ்லாம் வெல்ல முடியுமா, ஓபன் எராவில் ஸ்டெஃபி கிராப் செய்த சாதனையை முறியடிக்க முடியுமா என வரிசைகட்டி நின்ற கேள்விகளுக்கு இதோ பதிலளித்து விட்டார்.

ஆஸ்திரேலிய ஓபன், ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் முதல் கிராண்ட் ஸ்லாம். இதில் பட்டம் வென்றால் அந்த ஆண்டு முழுக்கவே வெற்றிகள் வந்து குவியும் என்பது டென்னிஸ் வீரர்கள் எதிர்பார்ப்பு. செரினா இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாமை வென்று விட்டார். இந்த ஆண்டில் இன்னும் இரண்டு கிராண்ட் ஸ்லாம் வெல்லும் பட்சத்தில், மார்க்ரெட் கோர்ட்டையும் முந்தி, டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக செரினா வலம் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளிவட்டம் பிரகாசமாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/sports/79036-serena-was-born-to-rule-tennis-world.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.