Jump to content

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம் – கிளைமோர் தாக்குதல் நடத்த இரண்டு முறை முயற்சி


Recommended Posts

sumanthiran

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு முன்னாள் போராளிகளை கைது செய்த கிளிநொச்சி காவல்துறையினரிடம் இதுதொடர்பாக, தி ஹிந்து, விசாரித்த போது, இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவே கையாள்வதாக தெரிவித்துள்ளனர். எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான- தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டவாளர் ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பங்கேற்கவிருந்த நிகழ்வு ஒன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட சுமமந்திரன்,  “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை ரத்து செய்யவில்லை.அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன.

பின்னரே, ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி ஒன்றுக்கு தயாராக இருந்தார்கள் என்று  நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டேன்.

புனர்வாழ்வு அளிக்கப்படட முன்னாள் போராளிகள் பலர் வாழ்வதற்காக போராடுகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம்.

அத்தகைய உதவிகள் கிட்டாத போது,  அரசியல் நோக்குடன் செயற்படுவோரினால் அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுமந்திரனை டிசெம்பர் 12 மற்றும் ஜனவரி 13ஆம் நாள்களில் தாளையடி- சோரன்பற்று வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி கொலை செய்ய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், எனினும் குறிப்பிட்ட நாள்களில் சுமந்திரன் அந்தப் பாதையால் பயணிக்காததால் அவர் தப்பியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/01/28/news/20991

Link to comment
Share on other sites

இச்செய்தியில்  அரச  புலநாய்வின் மீது பலத்த சந்தேகம் உள்ளது. குட்டையை குழப்புவதில் அரசு முன்னின்று செயற்படுகிறது. கைதுகளை மேற்கொள்ளவும் தங்கு தடையின்றி மக்களை சோதிக்கவும் இப்படியான புலுடாக்களை அரச படைகள் மேற்கொள்கின்றன. சுமந்திரனை கொல்ல யாருக்கு என்ன அவசரம் இப்போ? போராளிகள் மிகவும் கஸ்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ கிளைமோருடன் திரிகிறார்கள் என்பது நம்பும் படியாகவா உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை  இவ்வாறு இழிவு படுத்துவது தான் 

அதிகம் வலிக்கிறது

இவரெல்லாம் இலக்கா?

இவருக்கெல்லாம் கிளைமோரா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

sumanthiran

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு முன்னாள் போராளிகளை கைது செய்த கிளிநொச்சி காவல்துறையினரிடம் இதுதொடர்பாக, தி ஹிந்து, விசாரித்த போது, இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவே கையாள்வதாக தெரிவித்துள்ளனர். எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான- தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டவாளர் ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பங்கேற்கவிருந்த நிகழ்வு ஒன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட சுமமந்திரன்,  “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை ரத்து செய்யவில்லை.அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன.

பின்னரே, ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி ஒன்றுக்கு தயாராக இருந்தார்கள் என்று  நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டேன்.

புனர்வாழ்வு அளிக்கப்படட முன்னாள் போராளிகள் பலர் வாழ்வதற்காக போராடுகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம்.

அத்தகைய உதவிகள் கிட்டாத போது,  அரசியல் நோக்குடன் செயற்படுவோரினால் அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுமந்திரனை டிசெம்பர் 12 மற்றும் ஜனவரி 13ஆம் நாள்களில் தாளையடி- சோரன்பற்று வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி கொலை செய்ய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், எனினும் குறிப்பிட்ட நாள்களில் சுமந்திரன் அந்தப் பாதையால் பயணிக்காததால் அவர் தப்பியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/01/28/news/20991

இப்போதைய இலக்கு தமிழகம்தான் .............
இவர்கள் சுற்றி வருகிறார்கள்.

இதை புரியும் நிலையில் தமிழகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017 இன் மிகப்பெரிய நகைப்பு என்றால் இதுதான்!

சிங்களம் கொம்பு சீவுகிறது. தமிழனை வைத்துத் தமிழன் தலையறுக்க. தமிழினம் விழிப்போடிருத்தல் அவசியமானதும் அவசரமானதுமாகும்.

Link to comment
Share on other sites

சிங்களம் இந்த பொய் புனைவின் மூலம் ஒரு உண்மையை சொல்கிறது, தமிழருக்குத் துரோகமிழைத்து , சிங்களத்துக்கு துணை போவோரை புலிகள் தண்டிப்பார்கள், இந்த புனைவிற்கு நம்பகத் தண்மையை கூட்ட வேண்டுமெனில் , உண்மையிலேயே புலிகளால் தண்டிக்கப் படக்கூடிய ஒருவரைத் தான் முன்னிறுத்த வேண்டும் , அது தான் அவர்கள் சுமந்திரனை முன்னிறுத்தியுள்ளனர், தமிழனுக்கு சுமந்திரன் எவ்வளவு துரோகம் செய்கிறார் என தமிழரை விட சிஙகளத்துக்கு நன்றாகவே தெரியும்.
சுமந்திரனை ஒரு  மிருகத்திற்கு ஒப்பிட்டு திட்டினால் அந்த மிருகம் களங்கப் பட்டுவிடும் .... அந்த அளவிற்கு அழுக்கு நிறைநதவர்  இவர்..... தமிழரும், தமிழ்த் தாயகமும் சிதைக்கப் பட்டு சின்னாபின்னமாகி இருக்கையில் " போரை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினருக்கு நன்றி " என தெரிவித்து தனது பாரளுமன்ற உரையை தொடக்கியவர் தான் இந்த சுமந்திரன், சிங்கள இராணுவ விசுவாசத்தின் உச்ச கட்டமாக  இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரைத் தன் கோட்டில் அணிந்து பாரளுமன்றம் சென்ற ஒரு மிருகம் இவர்.......

தமிழ் நாட்டின் இளைஞ்சர் களின் எழுச்சியைக் கண்டு ஆடிப் போயிருக்கும் ஆரிய அதிகார மையம் , புலிகளை இலங்கையில் மீண்டும் உருவாக்கி , அவர்களை தமிழ் நாட்டுடன் கோர்த்துவிட்டு  தமிழக இளைஞ்சர்களையும் நசுக்க முனையும் ....... தமிழ் நாட்டினர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது....  இந்த பொய் செய்தியை முன்னிருத்தும்  தி ஹிந்து வின் நோக்கம் யாவரும் அறிந்ததே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கோ ஏதோ ஒரு விடயம் ஆகவேண்டும் போலிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுட்டு பழியை போட ஆள் தேடுறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டுட்டு பழியை போட ஆள் தேடுறாங்கள்.

நடந்தால் , சந்தோசம் 

Link to comment
Share on other sites

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய முயற்சி : பாதுகாப்பிற்கு பொலிஸாரே பொறுப்பு.!

Published by RasmilaD on 2017-01-29 09:47:55

 

(க.கமலநாதன்)

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்ற பின்னர் இன்றும் 4 ஆயிரம் புனர்வாழ்வளிக்கப்படாது விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர் என பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.

sumanthiran-575-01.jpg

ஆனால் இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்யும் முயற்சியில் முன்னால் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்வதற்கு முன்னாள் விடுதலை புலிகள் இயக்க நால்வர் திட்டமி்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் போதே  இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் புனவர்வாழ்வளிக்கப்பட்டு 4 விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வரே இவ்வாறு திட்டம் தீட்டியிருந்தாகவும் இம்மாதம் 13, 20 மற்றும் 24 ஆம் திகதிகளில் இவர்கள் கொலை செய்ய முற்பட்டு அது சாத்தியப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிப்பது எமது பொறுப்பல்ல அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது எனும் போது அது தொடர்பில் பொலிஸார் தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறிருக்கின்ற போது பாதுகாப்பு தலைமையக்கதின் தரவுகளின் பிரகாரம் யுத்தம் முடிவுற்று 6 வருடங்களுக்கு மேலாகியும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 4000 பேர் உள்ளனர் அவர்களால் தான் மேற்படி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களு்ககு எதிராக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

ஆனால் அது உண்மைக்கு புறம்பான விடயம் அவ்வாறு வெளியாகும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். அவர்கள் இவ்வாறன செயற்பாடுளில் ஈடுபட்டதாக பாதுகாப்பு மையத்திற்கும் தற்போது வரையில் தகவல்கள் கிடைக்கபெறவில்லை.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/15961

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Athavan CH said:

தமிழனுக்கு சுமந்திரன் எவ்வளவு துரோகம் செய்கிறார் என தமிழரை விட சிஙகளத்துக்கு நன்றாகவே தெரியும்.


தெளிவாக வெளிப்படுத்தியும் விட்டான். மிச்சம் மீதி இருக்கும் இளைஞர்களுக்கு ஆபத்து .

இது ஒன்றே போதும் அப்புக்காத்துக்கு,  முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பும் வேலைக்கு சிங்களவனுக்கு  ஓடியோடி உழைக்க 

Link to comment
Share on other sites

சுமந்திரன் படுகொலை சதித்திட்டத்தின் பகீர் பின்னணி..! கொலை சதிக்கான காரணம் இதுவா..?

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தேசிய பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்ற அச்சத்தில் சில அடிப்படை வாத சக்திகளே தன்னைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய திட்டம்தீட்டப்பட்டிருந்த சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டதாக தெரிவித்து இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸார் குறிப்பிட்ட விடயங்களே தனக்குத் தெரியும்.

கடந்த 23ஆம் திகதி பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் தனக்கு அச்சுறுத்தல் காணப்படுவதை உறுதிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தகவல் வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும். தன்னை எதற்காக கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தெரிவித்து இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/special/01/133631?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு..... பச்சை  பனை மட்டையாலை, நாலு  சாத்து சாத்திறதை விட்டுட்டு.....  
கிளை மோர்  தாக்குதல் என்று,  பெரிய லெவலில் கொண்டு போகக்  கூடாது.
கிளை மோருக்குகே.... அவமானம்.:grin:

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகள் சுமந்திரனை படுகொலை செய்ய முயன்றாத பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை ; சி.வி.விக்னேஸ்வரன்

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முயன்றாத பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

vikkines-2-600x382.jpg

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை  படுகொலை செய்ய, முன்னாள் போராளிகள் சிலர் சதி திட்டம் தீட்டியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்வதற்கு முயன்றதாக அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதைப்பொருட்களை வைத்திருந்தார்கள், வேறு ஏதோ வைத்திருந்தார்கள் என்றே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த விடயத்தில்  எந்தளவு உண்மையுள்ளது என எண்ணத்தோன்றுகின்றது . இதற்கு முன்பும் விபூசிகாவின் தாயாரை கைது செய்யும்போதும் கூறினர் ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லையே எனவே  வடமாகாணத்தில் படையினரை தொடர்ந்தும் நிலை கொள்ள செய்வதற்கான முயற்சியா எனவும் எமக்கு சந்தேகம் உள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/16258

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரைக்கு.. வருமானம் குறைஞ்சிட்டுப் போல. உள்ள தூக்கி ஒரு 100 பேரைப் போட்டால் தானே... வெளில எடுத்துவிடுற பிழைப்பும் ஓடும் தூக்குச்சட்டி அரசியலும் வலுக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

On ‎28‎.‎01‎.‎2017 at 11:08 PM, Athavan CH said:

சுமந்திரனை ஒரு  மிருகத்திற்கு ஒப்பிட்டு திட்டினால் அந்த மிருகம் களங்கப் பட்டுவிடும் .... அந்த அளவிற்கு அழுக்கு நிறைநதவர்  இவர்..... தமிழரும், தமிழ்த் தாயகமும் சிதைக்கப் பட்டு சின்னாபின்னமாகி இருக்கையில் " போரை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினருக்கு நன்றி " என தெரிவித்து தனது பாரளுமன்ற உரையை தொடக்கியவர் தான் இந்த சுமந்திரன், சிங்கள இராணுவ விசுவாசத்தின் உச்ச கட்டமாக  இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரைத் தன் கோட்டில் அணிந்து பாரளுமன்றம் சென்ற ஒரு மிருகம் இவர்.......

 

இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களில்  தமிழர்களைக் கொன்றுகுவித்து அவர்கள் வாழ்விடங்களையும், வியாபார நிலையங்களையும் கொள்ளையிட்ட சம்பவங்களில் முசுலீம்களுக்குப் பாரிய பங்குண்டு. அந்தச் சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு... யாழ்ப்பாணத்திலிருந்து முசுலீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மட்டும் எவரும் மறந்துவிடாமல் நினைவில் வைத்திருக்குமாறு செய்யும் கைங்கரியத்தையும் மிக நன்றாகவே செய்து வருபவரும் இவர்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இலையான் அடிக்க இரும்பெதற்கு????

நல்லவர்களை தரக்குறைவாக பேசாதீர்கள்..tw_tounge_xd:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.