Jump to content

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!


Recommended Posts

நாற்பதாண்டு கால நட்புக்கு விதைபோட்ட ராஜகுமாரி திரைப்படம்... நுாற்றாண்டு நாயகர் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 27

எம்.ஜி.ஆர்

'ராஜகுமாரி' திரைப்படம் எம்.ஜி.ஆர் வாழ்வில் மட்டுமல்ல எம்.ஜி.ஆரின் எதிர்கால அரசியலில் அவரோடு பயணித்த பிரபலத்துக்கும் சினிமா வாயிலை திறந்துவிட்ட படம். படத்தின் இயக்குனராக ஏ.எஸ்.ஏ சாமிக்கு கதை - வசனத்தில் உதவியாக இருந்து அந்த படத்தின் பாட்டுப் புத்தகங்களில் 'உதவி ஆசிரியர்' என குறிப்பிடப்பட்ட அந்த 'பிரபலமும்' இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

திராவிடர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த தட்சணாமூர்த்தி என்ற அந்த இளைஞர் மிக இளம்வயதில் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அரசியல் ஆர்வத்தோடு எழுத்துப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1940 ம் ஆண்டு. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன்முதலாக 'பழனியப்பன்'  நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தின் அரங்கேற்றம் நடந்த அன்று பெரு மழையின் காரணமாக கூட்டம் வரவில்லை.

நாடகத்திற்காக 200 ருபாய் செலவிட்டிருந்த நிலையில் வசூலானது வெறும் 80 ரூபாய் மட்டுமே. மீதி 120 ரூபாய்க்காக நாடகம் நடந்த அன்றே கடன்காரர்கள் நாடக கொட்டகையை முற்றுகையிட்டு பிரச்னை கிளப்பினர். அன்று அந்த சிக்கலிலிருந்து அவரைக் காப்பாற்றியவர்கள் திராவிட நடிகர் கழகத்தினர். தங்கள் மன்றத்திற்காக 'பழனியப்பன்' நாடகத்தின் உரிமையை நுாறு ரூபாய் விலை கொடுத்து பெற்று 'சாந்தா' என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் நடத்த ஆரம்பித்தனர். இதனால் தொடர்ந்து தட்சணாமூர்த்திக்கு நாடகத்தின் மூலம் வருவாய் கிடைக்க ஆரம்பித்தது. இந்த நாடக வருவாய் அவருக்கு எழுத்துப்பணியின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடகங்களை எழுத தலைப்பட்டார். 'பழனியப்பன்' என்ற அந்த நாடகம் 'நச்சுக்கோப்பை' என்ற பெயரில் பல வருடங்கள் நடத்தப்பட்டது. நாடகத்தை வாங்கிக்கொண்ட திராவிட நடிகர் கழகம் அதில் எழுத்தாளர் தட்சணா மூர்த்தியும் நடிக்க வேண்டும் என வற்புத்தினர்.

எம்.ஜி.ஆர்

1942 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நடத்திவந்த 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற இவரது கட்டுரை வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா 'இளமைப்பலி' எழுதிய எழுத்தாளரை காண விரும்பி, அவரை அழைத்து வரச் செய்தார். நடு வகிடெடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு என தட்சணாமூர்த்தியை நேரில் கண்ட அண்ணா அவரை பாராட்டியதோடு எழுத்துப்பணியோடு படிப்பிலும் கவனம் செலுத்தச் சொன்னார்.

ஆனால் தட்சணாமூர்த்திக்கு எழுத்தின் மீதுதான் ஆர்வம். இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கிய தட்சணாமூர்த்தி 'முரசொலி' என்ற மாத இதழை துவக்கினார். அதில் 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கருத்துக்களுடன் கட்டுரைகள் எழுதினார்.

28.5.1944 திருவாரூரில் ‘பழனியப்பன்’ நாடகம் நடந்தபோது, திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார், முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு 'மிகச்சிறந்த பணி' என்று தட்சணாமூர்த்தியை தட்டிக்கொடுத்தார். பெரியாருடன் நட்பு ஏற்பட்டபின் தொடர்ந்து அவரது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசத் துவங்கினார் தட்சணாமூர்த்தி. 

இதனையடுத்து தட்சணாமூர்த்தியின் பகுத்தறிவுப்பற்று, எழுத்துத்திறமையைக் கண்டுகொண்ட பெரியார் ஈரோட்டிலிருந்து வெளியிட்டு வந்த தன் குடியரசு பத்திரிகையில் அவரை உதவி ஆசிரியராக பணிக்கு சேர்த்துக்கொண்டார். 

கருணாநிதி1946 ஆம் ஆண்டின் மத்தியில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபடி நேரடியாக பெரியாரிடம் பயிற்சிபெற்றுவந்த தட்சணாமூர்த்திக்கு கட்சிப்பணி, எழுத்துப்பணி இவற்றோடு சினிமாத்துறை மீதும் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அந்நாளில். அண்ணா, பெரியார் இவர்களுடனான நட்பினால்  சினிமா சார்ந்த சிலரின் நட்பும் கிடைத்தது. அவர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஏ.எஸ்.ஏ சாமி. தட்சணாமூர்த்தியின் எழுத்தாற்றலை நன்கு அறிந்தவரான சாமிக்கு, 'ராஜகுமாரி' படத்தயாரிப்பின்போது தன்னுடன் பணியாற்ற ஒரு உதவியாளர் தேவைப்பட்டது. அவருக்கு சட்டென நினைவுக்கு வந்தவர் தட்சணாமூர்த்தி. இதையடுத்து ஈரோட்டிலிருந்த அவருக்கு உடனே புறப்பட்டு வரும்படி கடிதம்  எழுதினார் சாமி. சினிமா ஆசையில் இருந்த தட்சணாமூர்த்தி, கடித விபரத்தை தயங்கித் தயங்கி பெரியாரிடம் சொல்ல,  ஒரு இளைஞனின் சினிமா ஆசையை தகர்க்க விரும்பாமல் அவரை வழி அனுப்பிவைத்தார் அவர். பெட்டிப் படுக்கையுடன் கோவை வந்துசேர்ந்தார் தட்சணாமூர்த்தி. 

கோவையில் நிரந்தரமாக வந்து தங்கி ராஜகுமாரியின் இயக்குனர் ஏ.எஸ்.ஏ சாமிக்கு உதவியாக கதைவசனம் எழுத ஆரம்பித்த தட்சணாமூர்த்தி என்ற அந்த அரும்பு மீசை இளைஞர் வேறு யாருமல்ல; தமிழ்த்திரையுலகில் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதி வசன நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய, பிற்காலத்தில் அரசியல் உலகிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டிய கலைஞர் கருணாநிதி

புகழ்பெற்ற கதை வசனகர்த்தாவாக பின்னாளில் ஆனபோது கருணாநிதி தான் கதைவசனம் எழுதும் படங்களின் படப்பிடிப்புக்கு போய் அங்கு ஆலோசனைகள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அன்றைக்கு புதுமுகமாய் இருந்ததால் அந்த வழக்கத்தை கடைபிடிக்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருவரும் நேரடிப் பரிச்சயம் இக்காலத்தில் உருவாகவில்லை. அரிதான சந்தர்ப்பங்களில் ஒருவரைப்பற்றி ஒருவர் கேள்வியுற்றது மட்டுமே நடந்தது. ஆனால் படத்தின் வசனங்களில் ஈர்க்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதியின் எழுத்துத்திறமையை மற்றவர்களிடம் சொல்லிப் பாராட்டியதோடு அவர் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

'அரசியல் பங்காளி' கருணாநிதி மட்டுமல்ல, தன் வாழ்வில் பல முக்கிய திருப்பங்களுக்கு காரணமாகப்போகும் முக்கிய மனிதர்களை 1940 களின் பிற்பகுதியில்தான் எம்.ஜி.ஆர் சந்தித்தார். அவரது அரசியல் ஆசான் அண்ணாத்துரை, வாழ்க்கைத்துணைவி வி.என்.ஜானகி, திரையுலகப் போட்டியாளர் சிவாஜி கணேசன்... இப்படி தன் வாழ்வில் இடம்பெறப் போகும் மனிதர்களை சந்தித்தது இந்த காலகட்டத்தில்தான்.  

அடுத்தடுத்து இவர்களுடனான எம்.ஜி.ஆரின் சந்திப்புகளும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் வெகு சுவாரஸ்யமானவை...

http://www.vikatan.com/news/coverstory/85719-this-is-how-mgr-and-karunanidhi-became-best-friends-life-history-of-mgr-episode-27.html

Link to comment
Share on other sites

வள்ளலுக்கே உதவிய வள்ளல்! நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் - அத்தியாயம் - 28

எம் ஜி ஆர்

ராஜகுமாரி படம் வெளியான காலகட்டம் திரையுலக வரலாற்றில் முக்கியமான காலகட்டம். இச்சமயத்தில்தான் எம்.ஜி.ஆர் தன் திரையுலக, அரசியலில் முக்கியப் பங்கெடுத்துப் பலருக்கு அறிமுகமானார். அரசியல் பங்காளி கருணாநிதி மட்டுமல்ல, தன் வாழ்வில் பல முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமாகப்போகும் முக்கிய மனிதர்களை இந்தக் காலகட்டத்தில்தான் சந்தித்தார். அரசியல் ஆசான் அண்ணாதுரை, வாழ்க்கைத்துணைவி வி.என்.ஜானகி, திரையுலகப் போட்டியாளர் சிவாஜி கணேசன் இப்படிப் பலர்...

ராஜகுமாரி படத்தின் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் அடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக 'பைத்தியக்காரன்' படத்தில் நடிக்கும் சூழல் உருவானது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் வழக்கில் கைதாகி, தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் தியாகராஜபாகவதர் இருவரும் 'லண்டன் பிரிவியு கவுன்சிலி'ல் மேற்முறையீடு செய்திருந்தனர். தன் வாழ்நாளில் தனக்கென எந்தச் சொத்தும் சேர்க்காது தான தர்மங்களில் செலவிட்டதால் எதிர்பாராத இந்தச் சம்பவத்துக்குப்பின் கலைவாணர் குடும்பம் சிறிது பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகியிருந்தது. வழக்குச் செலவுகளுக்குக்கூடப் பெரும் சிரமத்தைச் சந்தித்தார் கலைவாணரின் துணைவியார் டி.ஏ.மதுரம்.

கலைவாணரின் துயரை உணர்ந்து பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. மேலும் கலைவாணரின் நாடகக் குழுவில் இருந்தவர்கள் வாய்ப்பு இன்றி முடங்கிக்கிடந்ததும் கலைவாணருக்குக் கவலையைத்தந்ததால் அவருடைய ஆலோசனையின்பேரில், எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக  ஒரு திரைப்படம் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தது கலைவாணரின் குடும்பம். 

என்.எஸ்.கிருஷ்ணன்அப்படி எடுக்கப்பட்ட படம்தான் 'பைத்தியக்காரன்'. படத்தில் பலரும் ஊதியம் இன்றி கலைவாணரின் குடும்பத்துக்குச் செய்யும் கைமாறாக எண்ணிப் பணியாற்றினர். 

தனது வாழ்வில் தான்  பெரிதும் மதித்துவணங்குபவர்களில் ஒருவரான கலைவாணருக்கு ஏற்பட்ட இன்னலால் பெரும் கவலைகொண்டார் எம்.ஜி.ஆர்.  படத்தில் ஒரு வேடத்தினை ஏற்று நடிக்க முனவந்தார். எம்.ஜி.ஆர் தன் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களாகக் கருதி வணங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் என்.எஸ்.கிருஷ்ணன்; மற்ற இருவர் அறிஞர் அண்ணா மற்றும் உடன்பிறந்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி. 

“என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே, எம்.ஜி.ஆரின் வாழ்வில் இடம்பெற்றது எப்படி....

எம்.ஜி.ஆரின் முதற்படமான சதிலீலாவதி திரைப்படமே கலைவாணருக்கும் முதற்படம். சினிமாவில் அறிமுகமானபோதே நாடகத்துறையிலும் பிரபலமாக விளங்கியவர். 

திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்த கலைவாணர், நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்தவர். வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர். இயல்பாக நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத்துவங்கினார். தந்தை சுடலைமுத்துப்பிள்ளை, தாயார் இசக்கிஅம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. ஆனால் சதிலீலாவதிக்கு முன்னதாக அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றியால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவை ரசிக்கப்பட்டது.

தமிழ்சினிமாவில் அதுவரை நகைச்சுவைக் காட்சி என்பது முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பது என்பதாக வரையறை செய்யப்பட்டிருந்தது.! என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழியில் சிரிக்கவைப்பது மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். 40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கே. 

எம்.ஜி.ஆர்

நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது  அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர். நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு.  தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

தோல்வியடையும் எனக் கருதப்பட்ட திரைப்படங்களைக்கூடத் தன் நகைச்சுவைக்காட்சிகளால் வெற்றி பெற வைத்தவர். அந்நாளில் பிரபல நிறுவனங்களின் படங்களில் அவரது குழுவினரின் தனிக்கதைகள் இடம்பெறும். தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது எனச் சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் கலைவாணர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவையும் இதற்குச் சான்று. 

பழம்பெருமை பேசி தமிழர்கள் வீணாகிவிடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.  

என்.எஸ்.கிருஷ்ணன்

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய கலைவாணர், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் சிறுசிறு தவறுகளைத் திருத்தியவர் என்.எஸ்.கே. ஒரு மூத்த சகோதரர் போல் தன்மீது அன்பு காட்டியதையும், எப்போதும் மனிதாபிமானியாக வாழும் கலைவாணர் மீது எம்.ஜி.ஆருக்கு இனம்புரியாத ஒரு பாசம் ஏற்பட்டது. தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் கலைவாணரிடமே ஆலோசனை கேட்டுச் செயல்பட்டார் எம்.ஜி.ஆர். அதுமுதல் கலைவாணர் மீது பெரும் அன்புடன் பழகிவந்தார் எம்.ஜி.ஆர்.

தனது மேதமையால் கட்சி மாச்சர்யமின்றி அனைவராலும் போற்றப்பட்ட கலைவாணர் வாழ்வில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பேரிடியைப்போல் குறுக்கிட்டது. வழக்குச் செலவைச் சமாளிக்க ஒரு திரைப்படம் எடுக்கலாமே என்று என்.எஸ்.கே வின் நண்பர்கள் டி.ஏ.மதுரத்திடம் யோசனை சொன்னார்கள்.அதன்படி படத்தயாரிப்புப் பணி துவங்கியது.  

எம்.ஜி.ஆர்

கலைவாணர் குடும்பத்துக்கு ஏற்பட்ட இக்கஷ்டத்தைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அவர் மீதான மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இதைக் கருதி, படத்தில் ஒரு வேடம் ஏற்க, தானே சென்று வாய்ப்பு கேட்டார். மூர்த்தி என்ற கதாநாயகன் பாத்திரம் அவருக்குத் தரப்பட்டது. ஆரம்ப காலம் தொட்டு கணவர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் மட்டுமே ஜோடியாக நடித்துவந்த டி.ஏ.மதுரம், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இந்த வருத்தத்துடனேயே நடித்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. படத்தின் பெரும்பாதி முடிந்தநிலையில் திரையுலகம் மட்டுமன்றி மொத்தத் தமிழினமும் இந்த இருபெரும் கலைஞர்களின் எதிர்காலத்தை எண்ணி, கவலையுடன் தீர்ப்பை எதிர்நோக்கியிருந்த நிலையில், லண்டன் பிரிவியு கவுன்சிலில் செய்யப்பட்ட மேற்முறையீட்டின் மீதான தீர்ப்பு வெளியானது. அன்றைய பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் (எத்திராஜ் மகளிர் கல்லூரியை நிறுவியவர்) நடத்திய வழக்கில் கலைவாணர், தியாகராஜ பாகவதர் இருவரும் குற்றவாளிகள் அல்ல எனத் தீர்ப்பு வந்தது. தமிழகமே கொண்டாடியது அந்தத் தீர்ப்பை. 

என்.எஸ்.கிருஷ்ணன்

“கணவருடன் நடிக்கமுடியவில்லையே” என்ற மதுரத்தின் கவலை காணாமல்போனது. உடனடியாகப் படத்தில் கலைவாணருக்கென ஒரு வேடம் புகுத்தப்பட்டு, மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் கலைவாணரை நடிக்கவைத்தனர். படம் வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத்துவங்கினார் கலைவாணர். சிறைமீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் கலைவாணரின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது. 

தங்கத்தட்டில் உண்டு, பட்டுடை உடுத்தி, பன்னீரில் குளித்து வாழ்ந்த எம்.கே. தியாகராஜபாகவதர் சிறை மீண்ட பின் என்ன ஆனார்...

http://www.vikatan.com/news/coverstory/85992-mgr-helps-kalaivanar-life-history-of-mgr-episode-28.html

Link to comment
Share on other sites

“எம்.ஜி.ஆருடன் பேசத் தயங்கிய சிவாஜி!” - நூற்றாண்டு நாயகன் எம்ஜி..ஆர் - 29

 
 

எம்.ஜி.ஆர்

சிறையிலிருந்து விடுதலை ஆகிவந்த கலைவாணர் பைத்தியக்காரன் படத்தில் தானும் ஒரு வேடத்தில் நடித்தார்.  தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' என பாட்டாகப் பாடிய அப்படம் வெற்றிபெற்றது.  மீண்டும் திரைப்படத்துறையில் பரபரப்பானார் கலைவாணர். ஆனால்  சிறை செல்லும் பெரும் புகழுடன் விளங்கிய தியாகராஜ பாகவதரின் வாழ்வு அதற்கு நேர்மாறாகிப்போனது. 

மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்துவங்கிய பாகவதருக்கு முந்தைய ராசி கைகொடுக்கவில்லை. பாடல்களையும் பழமையான நடிப்பையும் மக்கள் மறக்கத்துவங்கிய காலம் அவரது அடுத்தடுத்த சினிமா முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பொருளாதார சிக்கலைத் தவிர்க்கவும் தான் இழந்த பெருமையை தக்கவைக்கவும் தன் இறுதிக்காலத்தில் சில படங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரது காலம் முடிந்துபோயிருந்ததை அவர் உணரவில்லை. திரையுலகில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் சிவாஜி என புதிய தலைமுறை கலைஞர்கள் தலையெடுத்து தங்களுக்கென ரசிகர் வட்டத்தை பெருக்கிவைத்திருந்ததால்  தியாகராஜ பாகவதரின் படங்கள் எடுபடவில்லை. சிறைபோய்வந்தபின் 1948 ல் வெளியான 'ராஜமுக்தி' தவிர அமர கவி, சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. கெயிட்டி தியேட்டரில் 3 தீபாவளிகளை கடந்து ஓடிய அவரது ஹரிதாஸ் படத்தின் வெற்றியில் நுாறில் ஒரு மடங்கு கூட அவரது இந்தப் படங்களுக்கு  கிடைக்கவில்லை.

தன்னைப் போற்றிப் பாராட்டிய சினிமா உலகம் இப்போது தன்னை புறக்கணிப்பதை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தான் சிறையிலிருந்தபோது திரையுலகினர் சிலர் நடந்துகொண்ட முறை அவருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனிமையை நாடி மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழத் தலைப்பட்டார். அதனால் பிரபலங்களை தவிர்த்து ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தத்துவங்கினார்.  தங்கத்தட்டில் உண்டு, பட்டுத்துணி படுக்கையில் உறங்கி தமிழகமே கொண்டாடிய தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் யதார்த்தத்தை உணர்ந்து திருச்சிக்கே ரயில் ஏறினார். தன் இறுதிக்காலத்தில் சர்க்கரை நோயினால் கண்பார்வை இழந்து மன அழுத்தத்தால் உடல்நலமும் குன்றி தான் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திருச்சி மாரியம்மன் கோவிலில் வாழ்ந்து தன் வாழ்வை முடித்துக்கொண்டார். 

தியாகராஜ பாகவதர்

வாழ்வின் யதார்த்தத்தை செவிட்டில் அறைந்து சொன்ன தியாகராஜபாகவதரின் வாழ்க்கையை எம்.ஜி.ஆர் தன் மனதில் பதியவைத்துக்கொண்டார். தன் வாழ்வின் வெற்றிகரமான சந்தர்ப்பங்களில் எல்லாம் எம்.ஜி.ஆருக்கு நினைவில் வருவது இரண்டு நபர்கள். ஒன்று கே.பி.கேசவன் மற்றொருவர் தியாகராஜபாகவதர். வாழ்வின் நிலையாமையை தங்கள் வாழ்க்கையின் மூலமே எடுத்துச்சொன்ன சக கலைஞர்களான இந்த இருவர்தான் எம்.ஜி.ஆரை எந்த காலத்திலும் புகழ்போதையில் மிதந்து விடாதபடி தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தவர்கள். 

மீண்டும் பின்னோக்கிப் பயணிப்போம்...

1940 -களின் மத்தியில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜி.ஆரின் குடும்பம் வசித்துவந்தது. சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்து புகழ்பெறத்துவங்கிய எம்.ஜி.ஆர் அச்சமயத்தில் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நாடகங்களுக்கு தவறாமல் செல்வது வழக்கம். நாடகங்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றிருந்த காலம் என்பதால் சென்னையின் பிரபல நாடகக் கொட்டகையான ஒற்றைவாடைத்தியேட்டரில் அப்போதெல்லாம் தொடர்ந்து நாடகங்கள் நடக்கும். பல பெரிய நாடகக்குழுக்கள் பல மாதங்கள் ஒப்பந்தம் போட்டு அங்கு நாடகம் நடத்துவார்கள். 

அப்போது மங்கள கான சபை என்ற நாடகக்குழு அங்கு நாடகம் நடத்திக்கொண்டிருந்தது. அந்நாளில் மீண்ட சொர்க்கம், கள்வர் தலைவன், பம்பாய் மெயில், லட்சுமிகாந்தன்  போன்ற அவர்களின் நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்று வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்னவென்றால் லட்சுமிகாந்தன் நாடகம் எங்கு நடந்தாலும் தவறாமல் ஒருவர் முன்வரிசையில் அமர்ந்து பார்த்து ரசிப்பார். அவர் வேறு யாருமல்ல; தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைசெல்லக் காரணமான பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன்!... சென்னையில் மங்கல கான சபை நாடகக்குழு முகாமிட்டிருந்தபோது கொட்டகைக்கு அருகிலேயே ஒரு வீட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதே தெருவில்தான் எம்.ஜி.ஆரின் வீடு இருந்தது. ஒருமுறை மங்கல கான சபையினரின் நாடகத்திற்கு சென்ற எம்.ஜி.ஆருக்கு நாடகம் பிடித்துப்போனது. திறமைசாலிகளை கண்டால் உடனே பாராட்டும் குணம் கொண்ட எம்.ஜி.ஆர், நடிகர்களின் வீட்டிற்கு சென்று நாடகத்தில் தன்னை கவர்ந்த ஒவ்வொரு காட்சியையும் பட்டியலிட்டு அந்த வேடங்களில் நடித்தவர்களை பாராட்டித்தள்ளினார். அப்படி பாராட்டப்பட்ட நடிகர்களில் கணேசன் என்ற இளம் நடிகரும் ஒருவர். 

என்.எஸ்.கிருஷ்ணன்இயல்பாக பொன்னிறம் கொண்டவரான எம்.ஜி.ஆர், சினிமாவில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து உடலை உறுதியாக்கி வைத்திருந்ததால் அந்த முதல் சந்திப்பிலேயே ஒரு ராஜகுமாரனைப்போல் கணேசனுக்கு தோன்றியது எம்.ஜி.ஆரின் தோற்றம். பிரமித்தார் கணேசன். இதனால் அவருடன் பேசத்தயங்கினார். ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளிலும் கணேசனின் நடிப்பை எம்.ஜி.ஆர், “ கணேசு, இன்று உன் நடிப்பு அருமை” என சிலாகிக்க, மெல்ல மெல்லத் தயக்கம் விலகி எம்.ஜி.ஆருடன் சகஜமானார் கணேசன். 'வஞ்சகமில்லாமல் இன்னொரு நடிகரைப் புகழ்ந்து தள்ளும் இந்த மனிதர் வித்தியாசமானவர்தான். இந்த நல்ல மனிதர் நிச்சயம் ஒருநாள் பெரிய நடிகராக வருவார்' என தன் மனதில் கணித்துக்கொண்டார் கணேசன். நட்பு இறுகி கணேசனை தம்பி என வாஞ்சையுடன் அழைத்தார் எம்.ஜி.ஆர். அதே வாஞ்சையுடன் அண்ணா என்றழைத்தார் கணேசன். 

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நெருக்கம் அவரது வீட்டாரிடமும் தொடர்ந்தது. நாடகம் நடக்காத நாளில் எம்.ஜி.ஆர் வீட்டில்தான் இருப்பார் கணேசன். கணேசனின் சுபாவம் பிடித்துப்போய் சொந்த மகனைப்போல் அன்பு செலுத்தினார் சத்தியபாமா. தினமும் மதிய சாப்பாடு ஒருநாள் மதியம், எம்.ஜி.ஆர் வீட்டில் ஓய்வாக இருந்தார். சாப்பாட்டு வேளை வந்ததும் 'அம்மா சாப்பாடு போடும்மா ' என சத்யபாமா முன் போய் நின்றார். “ பொறுடா...இன்னும் உன் தம்பி கணேசு வரலை...அவனும் பசியோட வருவான்...செத்த பொறுத்துக்கோ ஒண்ணா சாப்பிடலாம்” என்றபோது எம்.ஜி.ஆர் தன் தாயைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை உயர்வான அம்மாவை தான் பெற்றிருக்கிறோம். பெறாத பிள்ளைக்காக  பெற்றவனை காத்திருக்கச்சொல்லும் பண்பு இந்த உலகில் யாருக்கு வரும்...கணேசன் வந்தபின்னரே சாப்பாடு பரிமாறினார் சத்தியபாமா. 

அந்த நாட்களில் அண்ணனும் தம்பியும் இரண்டறக் கலந்தனர் என்றால் அது மிகையில்லை. இருவருக்கும் வேலையில்லாத நாட்களில் கணேசனின் நண்பரான இன்னொரு நடிகர் ராதாகிருஷ்ணனுடன் ( பிற்காலத்தில் காகா ராதாகிருஷ்ணன் என சினிமாவில் பிரபலமானவர்) நடந்தே சென்னை தெருக்களைச் சுற்றிவருவார்கள். அந்நாட்களில் ஓரளவு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்ததால் மக்களின் அன்புத்தொல்லையிலிருந்து தப்பிக்க எம்.ஜி.ஆர் ஒரு துண்டை தலையில் முண்டாசு போலக் கட்டிக்கொள்வார். வழியில் நாடகத்தின் எதிர்காலம், தங்களது லட்சியம் ஆசை இவைகளை பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். அப்படி சென்னையில் பல நாடகங்களுக்கு கணேசனுடன் எம்.ஜி.ஆர் சென்றிருக்கிறார். 

ஒப்பந்தக் காலம் முடிந்து மங்கல கான சபா ஊரைவிட்டுப் புறப்பட்டபோது கணேசனைப் பிரியமுடியாமல் எம்.ஜி.ஆர் குடும்பம் வேதனைப்பட்டது. தம்பியை பிரிய முடியாமல் அண்ணனும் அண்ணனின் அன்பில் நெகிழ்ந்து தம்பியும் கண்ணீர் விட்டபடியே நின்றனர் ரயில்நிலையத்தில். 

சிவாஜி

ஒரே தட்டில் உண்டு ஒருவர் தாயை மற்றவர் தாயாக மதித்துப் போற்றி வாழ்ந்த அந்த 2 சகோதரர்கள் பின்னாளில் திரையுலகில் இரு துருவங்களாக பிரிந்துநிற்பார்கள் என்பதை யார்தான் அப்போது நினைத்திருப்பார்கள்...

ஆம் ஒற்றைவாடைத் தியேட்டரில் நடிக்க வந்ததன்மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி எம்.ஜி.ஆரால் தம்பி என பாசமாக அழைக்கப்பட்ட அந்த கணேசன் யாருமல்ல; பின்னாளில் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு சமமான போட்டியாளராக திகழ்ந்து தம் நடிப்பினால் தமிழ்த்திரையுலகுக்குப் புழ்சேர்த்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் அவர்! 

http://www.vikatan.com/news/coverstory/86135-mgr-lauds-sivajis-performance-life-history-of-mgr-episode-29.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிவாஜி வேடத்தில் நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்!- நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்! (தொடர் நிறைவுப் பகுதி)

 
 

எம் ஜி ஆர்

சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகத்தில் நடிக்க வந்ததன்மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி பின்னாளில் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இணையாக புகழ்பெற்ற கணேசன், சிவாஜி கணேசன் எனப் புகழ்பெற்றதில் எம்.ஜி.ஆருக்கும் சிறு பங்கு உண்டு.  தனது 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் சிவாஜியாக நடிக்க ஒரு திறமையான நடிகரை அண்ணா தேடிக்கொண்டிருந்த சமயம் அது. திராவிட இயக்க நடிகர்களில் ஒருவரான “நடிகமணி“ என அழைக்கப்பட்ட நடிகர் டி.வி. நாராயணயசாமி (நடிகர் எஸ் எஸ்.ராஜேந்திரனின் தங்கையின் கணவர்), எம்.ஜி.ஆரை அந்தக் கதாபாத்திரத்திற்காக பரிந்துரைத்தார். அதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் வீட்டுக்கு ஒருநாள் பிற்பகலில் எம்.ஜி.ஆரை அழைத்துவந்தார் நாராயணசாமி. அதுதான் தன் அரசியல் ஆசான் அண்ணாவுடன் எம்.ஜி.ஆரின் முதல்சந்திப்பு. அந்த முதல் சந்திப்பிலேயே அண்ணாவின் திறமையான பேச்சாலும் பண்பான நடத்தையாலும் கவரப்பட்டார் எம்.ஜி.ஆர். 

அண்ணாவின் பேச்சுக்களையும் எழுத்துக்களும் அவருக்கு அறிமுகமாகின. அண்ணாவின் அறிவுத்திறமை எம்.ஜி.ஆருக்கு பிரமிப்பை தந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியத்தின் பாடங்களை படிக்க ஆரம்பித்து ஒத்திகைக்காக தயாராகியிருந்த நேரம், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்திற்கு அப்போது தனது இல்லத்தில் தங்கியிருந்த கணேசனை நடிக்க வைக்க முடிவுசெய்தார் அண்ணா. நாடகம் பெருவெற்றிபெற்றது. நாடகத்திற்கு ஒருநாள் வந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த மேடையில்தான் கணேசன், 'சிவாஜி' கணேசன் ஆனார். 

எம் ஜி ஆர்

இதே காலகட்டத்தில் ராஜமுக்தி என்ற படத்தில் தியாகராஜபாகவதருடன் ஜோடியாக நடித்த ஜானகியுடன் துணைநடிகராக அறிமுகமானார் எம்.ஜி.ஆர். சில வருடங்களிலேயே 'மோகினி' என்ற படத்தில் அவருடன் கதாநாயகனாக நடித்தார். பின்னாளில் கணவன் மனைவியானார்கள் இருவரும்.

இப்படி, நாற்பதுகளின் பிற்பகுதியில் தன்னுடைய சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என எதிர்காலத்தில் தன்னுடன் பயணிக்கப்போகிறவர்களுடன் அறிமுகமானார் எம்.ஜி.ஆர். அண்ணாவின் அறிவாற்றலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவரது படைப்புகளைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். பணத்தோட்டம் நாவலை படித்தபோது அவரது தீவிர ரசிகனானார். 'அபிமன்யு' படத்தின் படப்பிடிப்பிற்காக கோவையில் தங்கியிருந்த கருணாநிதியுடனான நட்பும் திராவிடக்கொள்கையின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டு  கருணாநிதியுடன் அவர் புரிந்து வாதங்கள் எடுபடவில்லை.

சுயமரியாதைக் கொள்கைகளை, திராவிட கலாசாரத்தைப்பற்றி மணிக்கணக்கில் கருணாநிதி பேசுவார். இதன் விளைவாக கதர்ச்சட்டையை கழற்றிவிட்டு கருப்புச் சட்டை மேல் காதல் கொள்ள ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். பெரியாருடன் முரண்பட்டு அண்ணா, திமுகவைத்துவங்கிய பின்னர் தொடர்ந்து அண்ணாவின் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். 

எம்

1952 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் டி.வி. நாராயணசாமி, 'எம்.ஜி.ஆர் எத்தனை நாட்களுக்கு இப்படி கட்சிக்கூட்டங்களுக்கு வந்துபோய்க்கொண்டிருப்பார். அவரை கட்சியில் உறுப்பினராகச் சொல்லி அண்ணா கேட்டால் அவர் பேச்சை தட்டுவாரா என்ன?' என  நகைச்சுவையாக மேடையிலேயே சொல்ல, எம்.ஜி.ஆரைப் பார்த்து அண்ணா புன்முறுவல் செய்தார். எம்.ஜி.ஆர் தன் புன்னகையால் அதை ஆமோதித்தார். அண்ணாவிடமிருந்து உறுப்பினர் அட்டை எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் திமுக உறுப்பினரானார் எம்.ஜி.ஆர். தான் இறக்கும்போது தன் மீது திமுக கொடிதான் போர்த்தப்படவேண்டும் என வெறிகொண்டு பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் அண்ணாவையும் திமுகவையும் அளவுகடந்துநேசித்தார்.

எம் ஜி ஆர்

திமுக என்ற இயக்கத்தை மக்களிடையே கொண்டுசெல்ல தன் திரைப்படங்களையும் தனிப்பட்ட தன் புகழையும் எந்த பிரதிபலனுமின்றி பயன்படுத்தினார் அவர். ஆனால் தான் உயிராக நேசித்த கட்சியிலிருந்து ஒருநாள் இரக்கமின்றி துாக்கியெறியப்பட்டபோது அதே கட்சியை எதிர்த்து புதிய கட்சியை துவக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அவர். பின்னாளில் அந்தக் கட்சியை எதிர்ப்பதும், அதை தடுப்பதும்தான் அவரது எஞ்சிய காலமாக கழிந்தது.

எம் ஜி ஆர்

தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சிகளாலும் வெற்றிகரமான மனிதராக உயர்ந்து அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாதவராக விளங்கிய எம்.ஜி.ஆரது வாழ்வின் முதற்பகுதி இத்துடன் நிறைவுபெறுகிறது. அவரது சினிமா வெற்றிகள், அரசியல் வாழ்க்கை இவைகளை அடுத்த ஓர் சந்தர்ப்பத்தில் காண்போம். நன்றி!

முற்றும்

http://www.vikatan.com/news/coverstory/87507-this-is-why-mgr-refused-to-act-in-the-role-of-sivaji-life-history-of-mgr.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேசிக்கும் எம். ஜி. ஆரின் வரலாற்றின் சில பல சம்பவங்களை கோவையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நவீனன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

15 minutes ago, suvy said:

நான் நேசிக்கும் எம். ஜி. ஆரின் வரலாற்றின் சில பல சம்பவங்களை கோவையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நவீனன்....!  tw_blush:

புலவரே அவையடக்கமும் நாவடக்கமும் தேவை இங்கு

நான் என்பது தவறு + தப்பு

நாம் என்பதே சரி.

சரி சரி இந்தமுறை  மன்னித்துவிட்டேன்  // தப்பி பிழையுங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாம்" அதுகூட எம்.ஜி. ஆரின் படம்தான்....! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.