Jump to content

சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை


Recommended Posts

சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை
 
 
சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை
சட்டவிரோதமாக தமிழர்கள் 500 பேரை கனடாவுக்கு அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்ற மற்றவர்கள் என உச்ச நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.
 
குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
 
2010ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள் Sun Sea கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், குறித்த நால்வருக்கும் எதிராக B.C. உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
ஒரு ஆண்டுக்குள் இரண்டு முறை அந்த பகுதிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலாக Sun Sea கப்பல் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என ஜுரி, நீதவானுக்கு அறிவித்துள்ள நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.
 
எப்படியிருப்பினும் குனாரொபின்சன் கிறிஸ்துராஜா தொடர்பில் தகவல் அறியமுடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கிறிஸ்துராஜா என்பவர் குறித்த கப்பலுக்கு சொந்தக்காரராக செயற்பட்டுள்ளதுடன், இம்மானுவேல் குறித்த கப்பலின் தலைவராக செயற்பட்டுள்ளார்.
 
தனது தரப்பினரான கிறிஸ்துராஜா குறித்த பயணிகளிடம் இருந்து பணம் பறித்துக் கொண்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை, உள்நாட்டு யுத்தத்தின் போது அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தப்பிப்பதற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி யுள்ளார் என கிறிஸ்துராஜாவின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அவர் நிரபராதி என நீதி மன்றம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/23185

Link to comment
Share on other sites

ஈழத் தமிழரை கனடாவிற்குள் கொண்டுவந்த சன் சீ கப்பல் விசாரணையில் அதிரடி தீர்ப்பு!

 

Image

எம். வீ. சன் சீ கப்பலில் 2010ஆண்டு 380 ஆண்களையும், 63 பெண்களையும், 49 குழந்தைகளையும் கனடாவிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக

எம். வீ. சன் சீ கப்பலில் 2010ஆண்டு 380 ஆண்களையும், 63 பெண்களையும், 49 குழந்தைகளையும் கனடாவிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றம் இமானுவேல், மகேந்திரன், ராஜரட்ணம்  ஆகிய மூவரையும் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை கப்பல் உரிமையாளர், கப்பல் மாலுமி ஆகியோரது விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை.

இதேவேளை இக் கப்பலில் வந்த சுமார் 200 பேருக்கு மேல் விசாரணையின் பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

san1%282%29.jpg

san2%282%29.jpg

san3%281%29.jpg

san4%281%29.jpg

san5%281%29.jpg

http://tamilsguide.com/blog/canada-news/5350

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.