Jump to content

மாகாளி


Recommended Posts

மாகாளி 

 
”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி.

ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார்.

பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும் அவங்களுக்கும் இடையில!....இருக்குன்னு முழுசா நம்புனீருன்னா, திரை விலகிடும்” என்றார். 

ஆட்டோ ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லையில் இருக்கும் காலனிப் பகுதி கண்ணிற்குத் தெரிந்தது. ராமசாமிக்கு பேயோட்டியுடன் ஊருக்குள் நுழைவது அவமானமாகவே இருந்தது. வம்பு நாத்திகம் பேசுவதில் வல்லவரான ராமசாமியே, தன் வீட்டிற்கு பேயோட்டியை அழைத்து வருகிறார் என்றால் ஊர்வாய் சும்மா இருக்குமா என்ன? ஆனாலும் மானத்தை பாசம் வென்றிருந்தது.

ஊருக்குள் நுழைந்த ஆட்டோவை டீக்கடை சீனி பார்த்தான். ஒரு கிண்டலான பார்வை போல் ராமசாமிக்குத் தெரிந்தது, பிரமையோ என்ற யோசனையை ஆட்டோ டிரைவரின் குரல் உடைத்தது.

“எப்படிப் போறது?”

“வடக்கே...கடைசில ஒரு கிணறு இருக்கும். அதுகிட்டே.”

வடக்கே திரும்பியதுமே ஒரு விக்கல் ஒலி கேட்கத்துவங்கியது. ஒலி என்று சொல்வதைவிட சத்தம் என்று சொல்லிவிடலாம். ‘ஏ...க்....ஏ....க்’ என ஒரு இழுவையான விக்கல் சத்தம், அந்த வடக்குத் தெருவையே நிறைத்திருந்தது. 

“என்ன இது?” என்று கேட்டார் பேயோட்டி.

“எம்பொண்ணு தான்”என்று சொல்லும்போதே குரல் கம்மியது ராமசாமிக்கு.

வீட்டை நெருங்க நெருங்க, விக்கல் ஒலியின் சத்தம் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்தது.

ஆட்டோ நின்றதும், பேயோட்டி தன் பையுடன் இறங்கினார். அதில் இருந்த சவுக்கைப் பார்த்ததும், ராமசாமி மனம் துணுக்குற்றது.

“அடிப்பீங்களா?” என்றார்.

“இல்லை”

பொய் சொல்கிறாரோ என்று யோசனை எழுந்தாலும், அதில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தார் ராமசாமி.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். தெருவை விட வீட்டின் உள்ளே அனலாக தகித்தது. கூடத்தின் நடுவே விக்கியபடியே கற்பகம் படுத்திருந்தாள்.

“பேசறதே இல்லையா?” என்று அமர்ந்தபடியே கேட்டார் பேயோட்டி.

“இல்லை..ஒரே விக்கல் தான்”

உடுக்கை, சவுக்கு, விபூதிப்பொட்டலம் என பூஜை சாமான்களை ஹாலில் பரப்பிய பேயோட்டி, தன் குலதெய்வத்தை வேண்டியபடியே பூஜையை ஆரம்பித்தார்.

”அப்பா அய்யனாரப்பா..உம்பிள்ளை ஒரு காரியத்தில் இறங்கறேன். இது நல்லபடியா முடியவும், இது என் குலத்தை பாதிக்காம இருக்கவும் அருள் செய்யப்பா” என்று சொல்லி உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்.

கற்பகத்தை கூர்மையாகப் பார்த்தபடியே உடுக்கையை வேகமாக அடித்தார். விக்கல் சத்தத்தை உடுக்கை ஒலி மிஞ்சியது. பக்கத்தில் அமர்ந்திருந்த ராமசாமிக்கு புல்லரித்தது. நரம்புகளின் வழியே ஊடுருவி, அடிமனது வரை உடுக்கை ஒலி பரவி, உலுப்புவது போல் இருந்தது. 

பேயோட்டி ஒரு வார்த்தைகூட பேசாமல், நிலைத்த பார்வையுடன் தொடர்ந்து உடுக்கை அடித்தபடியே இருந்தார். விக்கியபடியே கிடந்த கற்பகத்தின் உடல் முறுக்கேறியது.

“ட்டேய்ய்ய்ய்ய்” என்று ஒரு அலறல் அவளிடமிருந்து எழுந்தது.

பேயோட்டி விடாமல் உடுக்கையை அடித்தபடியே இருந்தார். 

விக்கல் நின்றது. ஆனால் கொடூரமான குரலில் விட்டத்தைப் பார்த்தபடியே புரியாத மொழியில் கற்பகம் கத்த ஆரம்பித்தாள்.

“ய்யேஊஷ்கப்பத்தட்டாஆ...ஏய்”

உடுக்கை ஒலி தொடர்ந்தது.

“டேய்....நிறுத்துடா”என்றபடியே எழுந்து அமர்ந்தாள் கற்பகம். 

வயது வந்த பெண். மெல்லிய உடல். ஆனால் தலைவிரிகோலமாக, விறைத்தபடி அமர்ந்திருந்தாள். அவள் கண்ணில் இருந்த உக்கிரத்தை ராமசாமியால் தாங்கமுடியவில்லை. கண்ணீர்விட்டபடியே, மகளைப் பார்த்தாள்.

பேயோட்டி உடுக்கையை கீழே வைத்துவிட்டு, சவுக்கை கையில் எடுத்தார்.

”வெளியே போடா..உன் குடும்பத்தையே நாசமாக்கிடுவேன். போயிடு” என்று கத்தினாள் கற்பகம்.

சவுக்கைப் பார்த்த ராமசாமி, பேயோட்டியை கையெடுத்துக் கும்பிட்டார். சவுக்கை கீழே வைத்த பேயோட்டி, மீண்டும் உடுக்கையை எடுத்தார்.

“வேண்டாம்” என்று அலறினாள் கற்பகம்.

உடுக்கையில் இரண்டுமுறை ஒலி எழுப்பிய பேயோட்டி “அப்போ உன் பூர்வீகத்தைச் சொல்லு” என்றார்.

கற்பகம் முடிக்குள் முகத்தைப் புதைத்தவளாக, மவுனமாக அமர்ந்திருந்தாள்.

விபூதியை அள்ளி அவள் மேல் வீசினார் பேயோட்டி. தொடர்ந்து உடுக்கை ஒலிக்கத் துவங்கியது. 

“சொல்றேன்..சொல்றேன்” என்று கதறினாள் கற்பகம்.

உடுக்கையை நிறுத்திய பேயோட்டி “சொல்லு” என்றார்.

“நான்....மாகாளி”

அதைக் கேட்ட ராமசாமி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார். வீட்டின் வெளியே கூடிருந்த கூட்டத்திலும் சலசலப்பு எழுந்தது.

பேயோட்டி அவளைப் பார்த்து “மாகாளியா? யார் நீ?” என்றார்.

ஒரு பெரும்சிரிப்பு அவளிடம் இருந்து வெளிப்பட்டது.

“என் ஊருக்கே வந்து, என்னையே யாருன்னு கேட்கிறியா? அவனைக் கேளு. சொல்வான்” என்று ராமசாமியைக் கைகாட்டினாள் கற்பகம்.
 
“மாகாளி..எங்க ஊர் பெரிய வீட்டுப் பொண்ணு” என்றபடியே ராமசாமி மாகாளியின் கதையை பேயோட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார்.

’நல்ல உயரம். உழைத்துத் திரண்ட ஓங்குதாங்கான உடம்பு. மாநிறம். அழகி. ஆனாலும் ஆளுமையான தோற்றம். களத்தில் கிடக்கும் நெல்மூட்டையை ஒற்றை ஆளாக தூக்கி, டிராக்டரில் போடும் வலிமை ‘ என மாகாளியைப் பார்த்து ஊர்வியக்க காரணங்கள் பல உண்டு. காளியம்மாள் தான் அவள் பெயர். பள்ளியில் படிக்கும்போது இனிஷியலுடன் மா.காளியம்மாள் என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே மாகாளியாக ஆகிப்போனது. 

“இப்போத்தான் என் பேர் முழுமை அடைஞ்சா மாதிரி இருக்கு” என்று சொல்லிச் சிரிப்பாள் மாகாளி.

ஏகப்பட்ட சொத்துக்களுடன், ஒரே ஒரு தம்பியுடன் வளர்ந்த அவளை மணப்பதற்கு சுற்று வட்டாரத்தில் போட்டி பலமாக இருந்தது. அப்படி வந்த ஒரு மாப்பிள்ளைக்கு, கோலகலமாக வாக்கப்பட்டுப் போனவள், ஆறே மாதத்தில் புருசனை முழுங்கியவளாக திரும்பி வந்தாள். குடிகாரன், ஹார்ட் அட்டாக் என்று என்னென்னவோ காரணங்கள் பேசப்பட்டாலும், உண்மையை மாகாளி மட்டுமே அறிவாள்.


அடுத்த ஒரே மாதத்தில் பழைய கம்பீரத்துடன் அவள் அன்றாட வேலைகளில் மூழ்கினாள். அப்போது தான் அவள் தம்பி பாண்டிக்கு ஒரு விஷயம் உறுத்தியது. அது, முனுசாமி எனும் முனியன்.

முனியன் அந்த ஊர் சலவைத் தொழிலாளி. மாகாளியுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவன். ஆனாலும் ‘தாயீ’ எனும் சொல்லுக்கு மறுசொல் பேசாதவன். 

அந்த முனியனை அக்கா தனிமையில் சந்திப்பதை விரைவிலேயே பாண்டி கண்டுகொண்டான். இது கல்யாணத்திற்கு முன்பிருந்தே நடப்பதா அல்லது தற்போது ஆரம்பித்த விஷயமா என்று அவனுக்குத் தெரியவில்லை. அக்காவிடம் கேட்கும் தைரியமும் அவனுக்கு இல்லை. அவனுக்கு மட்டுமல்ல, ஊரில் இருக்கும் யாருக்குமே இதுபற்றி அவளிடம் பேசும் தைரியம் கிடையாது. ஆனாலும் அரசல் புரசலாக பேச்சு ஊருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது’ என்றும் ‘இருக்குமோ’ என்றும் ஊர் குழம்பித் தவித்தது.

முனியன் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்ததும் புரளிக்கு வலு சேர்த்தது. ஆனால் அவனுடன் மாகாளி ஓடிவிடுவாள் எனும் எண்ணம் ஒருதுளிகூட, பாண்டிக்கோ ஊருக்கோ இல்லை. ஊருக்கு நடுவே வீற்றிருக்கும் அம்மன் சிலை போல, மாகாளி அந்த ஊரில் வலுவாக வேரூன்றி இருப்பதை எல்லோராலும் உணர முடிந்தது. முனியனும் அவன் அம்மாவும் வழக்கம்போல் ஊருக்குள் துணியெடுப்பது, துவைப்பது, இழவு வீடுகளில் ஈமச்சடங்குகள் செய்வது என எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மாகாளியின் அந்தரங்கத்தை ஊரே மதித்து ஒதுங்கி நடந்தது ஆச்சரியம் தான். எல்லாமே சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், ஒரு சின்ன தெருச்சண்டையுடன் அந்த கொடூரநாள் விடிந்தது. 

இரண்டு பெண்களுக்கு இடையே ஆரம்பித்த சண்டை, இரு குடும்பங்களுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்தது. கெட்ட நேரம், பாண்டியை அங்கே கூட்டிச்சென்றது. பெரிய வீட்டுப் பிள்ளை எனும் தோரணையுடன் பாண்டி சமாதானம் செய்ய இறங்கினான். ஆனாலும் அந்த இரு குடும்பத்து ஆண்களும் பெண்களும் கோபம் குறையாமல் கத்திக்கொண்டிருந்தார்கள். 

பாண்டி யாரையும் சுடுசொல் பேசாத சாந்தசொரூபி. இந்த மாதிரி தெருச்சண்டைகளுக்குப் பழக்கமில்லாதவன். வெறுத்துப்போனவனாக ”ஏன்யா..ஒரே ஜாதிக்குள்ளயே இப்படி அடிச்சுக்கிட்டா எப்படிய்யா? அடுத்த ஜாதிக்காரன் பார்த்தால் என்ன நினைப்பான்? நம்மளை மதிப்பானா?” என்றான்.

சண்டையின் உக்கிரத்தில் இருந்த பெண்ணொருத்தி ”உன் அக்காவைப் பார்த்தால் மட்டும் நம்மளை மதிப்பானுகளா? அக்காவை வண்ணாக்குடியில மேய விட்டுட்டு, வந்துட்டாரு இங்க பஞ்சாயத்துக்கு” என்று பாண்டியைப் பார்த்து கத்தினாள்.

பாண்டிக்கு கோபம் தலைக்கேறியது. கோபம் தாங்காமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. வேகமாக வீடு நோக்கி நடந்தான். வம்ச, வம்சமாக இந்த ஊர் தன் குடும்பத்தைப் பார்த்து ஒரு சொல் பேசியதில்லை. இன்று ஊருக்கு மத்தியில் வைத்து செருப்பால் அடித்தது போல் ஒரு கேள்வி. மிகுந்த கோபத்துடன் வீட்டை நெருங்கினான்.

திண்ணையில் அமர்ந்திருந்த மாகாளி, அரிசி புடைத்துக்கொண்டிருந்தாள். வேகமாக வரும் தம்பியை அவள் பார்த்தாள். அவள் எதிரே வந்து நின்றவன், நடுங்கும் கைகளால் நிலைக்கட்டையைப் பிடித்தபடி மூச்சுவாங்க நின்றான். அவன் கையில் நிலையில் சொருகி வைத்திருந்த அரிவாள் தென்பட்டது. உட்கார்ந்திருந்த மாகாளி அவனை நிமிர்ந்து பார்த்து ”என்னடா?”என்றாள். அவள் கழுத்து தெரிந்தது.

அரிவாளை உருவியவன், அவள் கழுத்தில் இறக்கினான். 

ஒரு நொடி தான். அவள் திண்ணையில் இருந்து உருண்டு கீழே விழுந்தாள். அரிவாள் அவன் கையில் ரத்தக்கறையுடன் இருந்தது. அவன் திரும்பி, அரிவாளுடன் படியில் உட்கார்ந்துகொண்டான். அவன் காலடியில் மாகாளி கிடந்தாள். ரத்தம் பீறிட்டு அடிக்க, விக்கல் சத்தம் அவளிடமிருந்து வெளிப்பட்டது. கொஞ்ச நேரம் விக்கியபடியே உடல் துடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விக்கலும் துடிப்பும் அடங்கியது.

வி..க்...வி...க்.

கற்பகம் மீண்டும் விக்கல் எடுக்க ஆரம்பித்தாள்.

“அவளுக்கு தண்ணி கொடும்” என்றார் பேயோட்டி. ஒரு சொம்பு நீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

“இப்போ இவ தம்பி எங்கே?” என்றார் பேயோட்டி.

“அவனும் அன்னைக்கே தூக்குல தொங்கிட்டான்” என்றார் ராமசாமி.

பேயோட்டி கற்பகம் பக்கம் திரும்பினார். “அம்மா, இது ஊர்க்குத்தமா, உன் தம்பி குத்தமா இல்லே சாமிக்குத்தமான்னு தெரியலை. ஆனா இந்த சின்னப்பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு? இதை ஏன் படுத்தறே? உன்னை சாந்தப்படுத்த, நாங்க என்ன செய்யணும்னு சொல்லு. செய்யறோம்” என்றார்.

“எனக்கு முனியனைப் பார்க்கணும்” என்றாள் அவள்.
 
தெருவில் கூடியிருந்த ஊர் விலகி வழிவிட, காலனியில் இருந்த முனியனை அழைத்துக்கொண்டு வந்தார் ராமசாமி. கண்ணில் நீர் வழிய, கையெடுத்துக் கும்பிட்டபடியே முனியன் நடந்துவந்தான். வீட்டின் உள்ளே நுழைந்த முனியனை கற்பகம் பார்த்தாள். சட்டென்று விழிவிரித்து “முன்னு” என்றாள்.

அவளின் குரலும் ‘ன்’னில் இருந்த அழுத்தமும் வந்திருப்பது யார் என்று முனியனுக்கு விளங்க வைத்தது. பதின்ம வயதுப்பெண்ணின் உடம்பில் இருந்து வரும் மாகாளியின் குரலைக்கேட்டு திகைத்து நின்றான்.

மீண்டும் அவள் “முன்னு..நான் தான் முன்னு” என்றாள். குரல் இளகியிருந்தது.

பேயோட்டி முனியனிடம் ‘பேசு’ என்று சைகை காட்டினார்.

“தாயீ” என்றான் முனியன்.

அவள் முகம் மலர்ந்தது. உடனே முகம் சுருங்கி “நான் வந்தேன் முன்னு. உன்கிட்டே வந்தேன் முன்னு” என்றாள்.

“தெரியும் தாயீ”

“நீ என்னை பார்க்கலை”

“இல்லை தாயீ..எனக்குத் தெரியும். நீங்க போகட்டும்னு தான் இருந்தேன்.”

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த அவள் “உன்னை விட்டுப் போவனா?” என்று சொல்லிவிட்டு, அவன் கைகளைப் பிடித்து முத்தமிட்டாள்.

முனியன் பதறி விலகினான்.

“தாயீ..இது தப்பு தாயி..இப்போ சின்னப்பொண்ணு உடம்புல வந்திருக்கீக..இதெல்லாம் அந்த பொண்ணு வாழ்க்கையை பாதிக்கும். வேண்டாம் தாயி. போயிருங்க” என்று கையெடுத்து கும்பிட்டான் முனியன்.

அவள் கண்கலங்கி “உன்கூட இருக்கணும்” என்றாள்.

“எனக்கு மட்டும் உங்க நினைப்பு இல்லையா தாயி? என்னைப் பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தணுமேன்னு பொறுத்துக்கிடக்கேன். இல்லேன்னா, நானும் அறுத்திட்டு செத்திருக்க மாட்டேனா? கொஞ்சநாள் பொறுங்க தாயி. வந்திடுவேன்” என்றபடியே அழுதான் முனியன்.

அவளும் அவனை ஏக்கமாகப் பார்த்தபடியே அழுதாள்.

“இங்க இருக்காதீங்க தாயி..போயிடுங்க. நான் இனிமே யார் கூப்பிட்டாலும் இங்க வரமாட்டேன். இங்க இருக்காதீங்க, போயிடுங்க” என்று சொல்லிவிட்டு, திரும்பிப்பாராமல் முனியன் வெளியேறினான்.

“முன்னு...முன்னு” என்று கத்திய கற்பகம் மயங்கிச் சரிந்தாள்.

மறுநாள் விடிகாலையில் யாரோ எழுப்பியது போல் திடுக்கிட்டு விழித்தார் ராமசாமி. யாரும் இல்லை. அவருக்கு முனியனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ‘எவ்வளவு பெரிய மனுஷத்தன்மையுடன் நடந்துக்கிட்டான்’ என்று வியந்தார். அவனைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் போல் தோன்ற, காலனி நோக்கிப் புறப்பட்டார். 

அவன் வீட்டின் வெளியே நின்று ‘முனியா’ என்று கூப்பிட்டார். பதில் ஏதும் வரவில்லை. கதவில் கை வைத்தார். திறந்துகொண்டது. உள்ளே முனியனும் அவன் அம்மாவும் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் ‘முனியா’ என்றார். பதில் இல்லை.

உள்ளே போய் அவனை உலுப்பினார். உடம்பில் உயிர் இல்லை. அவன் அம்மாவையும் அவனையும் மாறி, மாறிப் பார்த்தார். இருவர் உடலிலும் சிறு கீறல்கூட இல்லாமல் உயிர் பிரிந்திருந்தது. அவர் அமைதியாக, அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

http://sengovi.blogspot.ca/2016/09/blog-post_30.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.