Jump to content

சந்தியா -


Recommended Posts

சந்தியா - சிறுகதை

அவள் அறிமுக எழுத்தாளர் - புவனா ஸ்ரீதர்

 

விமானம் ஒரு மணி நேரம் தாமதம். அதுவரை மொபைல்தான் துணை. ஃபேஸ்புக்கில் சந்தியா புகைப்படத்துக்கு லைக் போட்ட படி, ‘எப்படி இருக்க வேண்டியவ... அடையாளம் தெரியாத அளவு மாறிட்டா...’ என நினைத்துக் கொண்டேன்..

p74a.jpg

சந்தியாவைப் பார்க்கத்தான் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நானும் என் எட்டு வயது மகளும் பயணப்படுகிறோம். அப்படியே சந்தியாவின் நினைவில் மூழ்கினேன்...

இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு. சந்தியாவுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்ட் கிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனிக்குத் தேர்வானோம்.

சந்தியா, வசதியான குடும்பத்தில் ஒரே பெண். என் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். பயிற்சி முடித்து, பெங்களூரில் வேலை கிடைத்தது. வழக்கம்போல இங்கேயும் சந்தியா சாதித்துக்காட்டினாள். அவள் உருவாக்கிய `மொபைல் ஆப்’ சர்வதேச அளவில் கம்பெனிக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது. பதவி உயர்வும், லட்சங்களில் சம்பளமும் கிடைத்தன. அந்த நேரத்தில்தான் எங்கள் டீமில் புதிதாக வந்துசேர்ந்தார்கள் எழில், நிதின். இருவரும் திறமைசாலிகள். மெள்ள மெள்ள எங்களோடு நண்பர்கள் ஆனார்கள்.

``ஏங்க, இனிமே நாமெல்லாம் சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாமா?’’ - எழில் கேட்டான்.

``அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” - சந்தியா சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

“ப்ளீஸ்ங்க, உங்க ஃப்ரெண்டுகிட்ட சொல்லுங்க...” - நிதினும் எழிலும் என்னுடன் வந்தார்கள்.

“சரி, கேட்டுப் பார்க்கறேன்...”

“சந்தியா... இன்னிக்கு மட்டும் நம்மோட சாப்பிடட்டுமே...” என்றேன்.

“என்னமோ பண்ணு...” - சொல்லிவிட்டு நடந்தாள் சந்தியா.

“எழில் 70-80களில் வந்த இளையராஜா பாடல்களை அருமையா பாடுவான், கேட்டுப் பாருங்க” என்றான் நிதின். p74c1.jpg

“ராஜராஜசோழன் நான்... எனை ஆளும் காதல் தேசம் நீதான்...”

- அவ்வளவு துல்லியமாக, அழகாகப் பாடினான்.

தினமும் எங்களுடனே சாப்பிட வந்தார்கள். ஒருநாள் நிதின் என்னிடம் தன் காதலைச் சொன்னான். என் குடும்பச்சூழலுக்கு நிதின் மாதிரி நல்ல பையன் கிடைக்க மாட்டான் என்று எண்ணியே சம்மதம் சொன்னேன்.

ஒருநாள், “சந்தியா... நாம் மேரேஜ் பண்ணிக்கலாமா?” - கேட்டேவிட்டான் எழில்.
“என் பெற்றோர் பார்க்கும் வரன்தான் என் கணவன். வேறு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை” - சொல்லிவிட்டு சந்தியா வெளியேறினாள்.

ஒரே வாரத்தில் சென்னைக்கு மாற்றல் வாங்கினாள். பாவம்... எழில்தான் சோகமே உருவாக இருந்தான். ஆறு மாதத்துக்குப் பிறகு ஒருநாள், சந்தியா ஆபீஸ் வந்தாள்.

“எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமத்தில் அரசு ஆசிரியர். என் வேலையை விட்டுட்டேன்” என்றாள். எல்லாரும் அமைதியானோம்.

“சந்தியா... கடைசியா ஒரு பாட்டு பாடிக்கிறேனே” என்றான் எழில்.

“வேண்டாம்... நான் கிளம்பறேன்” என்று சந்தியா புறப்பட்டாள்.

“என்ன அழுத்தம் பாரு... ஒரு ஆணின் வலிகளை இவள் புரிந்துகொள்ளவே இல்லை...” - நிதின், சந்தியாவைத் திட்டினான்.

என்னையும், நிதினையும் கனடா ஆபீஸுக்கு அனுப்பினார்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்துகொண்டு கனடா சென்றோம். பங்களா, ஆளுக்கு ஒரு கார் என வாங்கினோம். எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம். என் குழந்தை பிறக்கும்வேளையில் என் அம்மாவையும் நிதின் அம்மாவையும் கெஞ்சி வரவழைத்தோம். பணம் சம்பாதிப்பது, ஜாலியாக பார்ட்டிக்கு போவது என எட்டு வருடங்கள் ஓடின. இதோ, இந்தியா வருகிறோம்...

விமான நிலையத்துக்கு சந்தியா கார் அனுப்பி இருந்தாள். தஞ்சை நெருங்க நெருங்க சாலையின் இருபுறமும் வயல்வெளிகள். டிரைவர் கேட்டார்... “என்னம்மா எங்க ஊரு எப்படி இருக்கு?”

“அருமையா, அமைதியா இருக்கு” என்றேன்.

“மழை இல்ல... காவேரில தண்ணி இல்ல...

ஊரே காஞ்சு போச்சு. மூணு விவசாயிங்க மன சொடிஞ்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. சந்தியா அம்மாதான் ஊர் மக்களைக் கூட்டி ஏரி, குளம், ஆத்துப் பகுதியைத் தூர் வாரினாங்க. கைத்தொழில் கத்துத்தந்தாங்க. பொண்டுக எல்லாம் மெழுகுவத்தி, ஊதுவத்தி, பேப்பர் கப் செஞ்சுச் சம்பாரிக்க வழிசெஞ்சாங்க. சந்தியா அம்மாதான் எங்க எல்லாருக்கும் குலசாமி!”

டிரைவர் சொல்லி முடிக்கவும் வீடு வந்தது. சந்தியா, அவள் கணவன், மாமனார், மகன் என எல்லோரும் அன்போடு உபசரித்தார்கள்.

“நீ அசதியா இருப்பே... இந்த வேப்பமர நிழலில் படுத்துப்பாரு, அருமையா தூக்கம் வரும்...”

சந்தியா சொன்னதுபோலவே படுத்தவுடன் தூங்கினேன். சட்டென என் மகள் நினைவு வர, கண் விழித்தேன்.

“என்னம்மா நல்லா தூங்குனீங்களா... வயல்ல வேல செய்யறேன் தாயி. எங்க முதலாளி யம்மாதான் என் புள்ளய பத்தாப்புல இருந்து படிக்க வெச்சாங்க. இப்ப எம்புள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரில கடைசி வருஷம் படிக்குது தாயி” என்றாள்.

“என்னது, உன் பையன் டாக்டரா!” என்றேன் ஆச்சர்யமாக.

“எம் புள்ள மட்டும் இல்ல... எங்க ஊர்ல உள்ள அம்புட்டு பயலுங்களும் டாக்டரு, இன்ஜினீரு, வக்கீலுனு படிக்குதுங்க தாயி...”

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்தியா வந்தாள்.

“எப்படி... ஊர்மக்கள் எல்லாம் உன்னை இப்படி புகழ்றாங்க...” என்றேன் சந்தியாவிடம்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடி. கல்யாணம் முடிச்சு இங்கே வந்ததும் விவசாயிங்க  நிலைமை மோசமா இருந்தது. இதுக்கு என்ன தீர்வுனு யோசிச்சேன். அவங்களுக்கு உதவற மாதிரி ஒரு `மொபைல் ஆப்’ உருவாக்கினேன். அதன்மூலமா விளைபொருட்களை நேரடியா விற்பனை செய்தோம். அடுத்ததா என் கணவர், பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்குப் படிப்போட அவசியத்தைப் புரியவெச்சார். இப்ப எங்க ஊர்ப்பசங்க டாப் காலேஜ் எல்லாத்துலயும் படிக்கறாங்க. ஊர்ப்பசங்க, அவங்க நண்பர்கள் எல்லாம் சனி, ஞாயிறு விடுமுறையில இங்கே வந்து உதவி செய்றாங்க. ஒவ்வொரு மாணவனும் இங்கே ஒரு விவசாயிதான். பெண்கள் சிறுதொழில் செய்து சம்பாரிக்க வழி பண்ணினோம்...” - சந்தியா நிதானமாகச் சொல்லி முடித்தாள்.

p74b1.jpg

“கார், பங்களா, அந்நியதேச வாழ்க்கைதான் சொர்க்கம்னு சுயநலமா, குருட்டுத்தனமா வாழ்ந்துட்டு இருக்கற நான் எங்கே? உன் சொந்த மண், மக்களைக் காப்பாத்தவும், வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்குக் கல்வியையும், விவசாயத்தையும் கத்துத் தர்ற நீ எங்கே? உன்னைப் பார்த்தா பெருமையாவும், பொறாமையாவும் இருக்கு!”

சந்தியாவை அணைத்துக்கொண்டேன்.

சட்டென மகள் நினைவு வர, “என் மகள் எங்கே? அவளுக்குத் தமிழ்கூட தெரியாதே”

- நான் பரபரக்க, “பயப்படாதே... உன்னைவிட இந்த ஊர் மக்கள் உன் குழந்தையை நல்லாவே பார்த்துப்பாங்க” என்றாள் சந்தியா.

ஒரு வீட்டின் திண்ணையில் ஏழெட்டுக் குழந்தைகளோடு சந்தியாவின் மகனுடன், என் மகளும் இருந்தாள். சந்தியாவின் மகன், என் மகளிடம், `திஸ் இஸ் ஃபஸ்ட் லெட்டர் இன் தமிழ்... அ... அம்மா டெல்...' என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

என் மகள் முதன்முறையாக,  “அம்மா” என்றாள். கண்ணில் நீர் வழிய, குழந்தைகளை அணைத்துக்கொண்டேன்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமான சிக்கல் இல்லாத சிறுகதை ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒரு கதையாக மட்டும் வாசிதுவிட்டு.செல்ல முடிய.இதில நாங்கள் யோசிப்பதற்க்கு நிறய இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.