Jump to content

“அதிகம் படித்த பெண்பிள்ளைக்கு மாப்பிள்ளை தேடுவது கடினம்” – யாழ்பாணத்தின் திருமணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Suthaharan Perampalam

Contributor

கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது. “இந்தக்காலத்துல பெண் பிள்ளைகளை கனக்க படிப்பிச்சாலும் பிரச்சனை தான், மாப்பிள்ளை தேடுறது கஷ்டமா இருக்கு” என்று ஒருவர் கூறியதற்கு மற்றயவர் அதனை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டார்.

Untitled-design-12-e1484635634738.jpg ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது. (lh3.googleusercontent.com)

இந்த ஒரு வசனத்தில், திருமணம் சார்ந்து இப்போது நடந்துகொண்டு இருக்கும் மிகப் பெரிய ஒரு சமூக, பொருளாதார மாற்றம் பிரதிபலிப்பதாகவே தெரிந்தது. தமிழ் சமூகத்தில் பெண்களை திருமணம் செய்து வைப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரும் சமூக கடமை என எண்ணப்படுகிறது . அந்த கடமையில் இருந்து தவறுவதையோ, அந்த கடமையை செய்யும் உரிமை காதல் திருமணம் என்ற வகையில் காவு வாங்கப்படுவதையோ பெரும்பாலான பெற்றோர் இன்றைய காலத்திலும் கூட விரும்புவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது.

பெண் பிள்ளைகள் கொண்ட பெற்றோர்களின் வாழ்க்கை அவர்கள் பிறந்தது முதலே மாறிவிடுகிறது. அவர்களுக்காக தமது வாழ்வை சுருக்கி கொள்வதும், செலவுகளை குறைப்பதும், திருமணத்துக்காகவும், சீதனத்துக்காகவும் பணம் சேமிப்பதும் என்று அவர்களில் பொறுப்பு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த இருபது முப்பது வருடங்களில் வந்த தொழில்நுட்ப புரட்சி, தொழில் துறைகளில் பெண்களின் பங்களிப்பு, நுகர்வு கலாச்சாரம் என்று அத்தனையுமே மாறி விட்டிருக்க பெண்களின் திருமணம் சார்ந்திருக்கும் சமூக நிலைப்பாடுகள் மட்டும் நிலைத்திருப்பது ஆச்சரியமே.

தமது பெண் பிள்ளைகளை தகுந்த நேரத்தில் திருமணம் செய்து கொடுப்பது என்ற அவர்களின் பொறுப்பு தாமதமாகும் போது அவர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கும் கவலைக்கும் ஆளாகிறார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் கோவில் கோவில்களாக திரியும் பெற்றோர்களின் வலியும் வேதனையும் பல சமயங்களில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. நாம் சார்ந்த சமூகம் திருமணங்களையும், சடங்குகளையும் சாதி, அந்தஸ்து, கௌரவம் உள்ளடக்கிய சிக்கலான முறைமையாகவே காலம் காலமாக கையாண்டு வந்துள்ளமையும், போட்டித் தன்மை கூடிய சமூக அமைப்பும் அவர்களின் மன அழுத்தத்துக்கு காரணமாகின்றன.

தன்னுடைய மகளுக்கு திருமணம் நடைபெறாததற்கு, அதிகம் படிப்பித்ததே காரணம் என்று பிழையாக நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த அப்பாவி தாய்க்கு எம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கும் சமூக பொருளாதார காரணிகள்தான் அதற்கான மிகப்பெரிய காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். தவிரவும் திருமணம் கைகூடாததற்கான பழியை தம்மீது சுமத்தி, அவர்களை வருத்தி, கோவில் குளம் என்று பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் முன்னர் அதற்கான சமூக பொருளாதார காரணங்களை ஆராயலாம்.

திருமணம் சார்ந்த சமூக மாற்றங்கள் என்ன ?

(lh3.googleusercontent.com) வசதி வாய்ப்புக்களை கொண்டுவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற காலம் மலை ஏறி, அவர்களின் கல்வி, பழக்க வழக்கம் பற்றி தேடி பார்க்கும் காலம் வந்துள்ளதால் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இலங்கைக்கு அந்நியப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். (lh3.googleusercontent.com)
  1. ஆணாதிக்க யாழ் சமூகத்தில், கடந்த இருபது வருடத்தில் வந்த மாற்றம் மிக முக்கியமானது. பெண்கள் படித்துவிட்டார்கள், இல்லை இல்லை – ஆண்களுக்கு சமனாகவோ, அதிகமாகவோ படித்து விட்டார்கள். இடப்பெயர்வுகள், கொழும்பு வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என்பன இதனை சாத்தியமாக்கிவிட்டிருக்கிறது. வெளிநாட்டு பட்ட படிப்புக்கள், சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழில்சார் கற்கை நெறிகள் என்று தகுதிகளை வளர்த்ததுக்கொண்ட பெண்களுக்கு, தங்கள் முன்னே விரிந்து கிடக்கும் வாய்ப்புக்கள், மற்றுமொருவரில் தங்கி இருக்கும் எண்ண ஓட்டங்களை மாற்றிவிட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறையவே மாறியிருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கள் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. எனவே அந்த எதிர்பார்ப்புக்களுக்கு பொருத்தமானவரை தேடுவதில் தாமதம் ஏற்படுகின்றது.
  2. படித்த பெண்களுக்கு முன்பு இருந்ததைப்போல் வெளிநாட்டு வாழ்க்கை என்பது வியந்து பார்க்கும் (aspirational) விடயமாக இல்லை. தொழிநுட்ப வளர்ச்சியுடன் இணைந்த இணைய வசதி, அதனோடு இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் போன்றவை வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய புரிதலை அவர்களுள் ஏற்படுத்தி இருக்கின்றன. வசதி வாய்ப்புக்களை கொண்டுவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற காலம் மலை ஏறி, அவர்களின் கல்வி, பழக்க வழக்கம் பற்றி தேடி பார்க்கும் காலம் வந்துள்ளதால் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இலங்கைக்கு அந்நியப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். கொழும்பில் நடந்த வெளிநாட்டு மாப்பிளைகளுடனான கல்யாணங்கள் குறைந்து போய் இப்போது யாழ்ப்பாணத்திலேயே அவை அதிகம் நடைபெறுகின்றன. தவிரவும் மேற்கத்தேய நாடுகளில் இருக்கும் இலங்கை ஆண்களுக்கு அங்கேயே பெண் துணையை தேடக்கூடியதான சமூக கட்டமைப்பு உருவாக்கி விடப்பட்டாயிற்று. அதனால் இலங்கையில் வந்து திருமணம் செய்ய வேண்டிய தேவையும் அவர்களுக்கு குறைந்திருக்கிறது.
  3. யுத்தம், அசாதாரண சூழ்நிலைகள் மாறி, இங்கிருக்கிற ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க, வெளிநாட்டு வாழ்க்கைதான் தீர்வு எதிர நிலை மாறி, உள்நாட்டிலும் வாழலாம் என்ற நிலை வந்திருக்கிறது. ஆனால் உள்நாட்டில் இருக்கும் ஆண்கள் தொகை வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் குறைவு. எனவே உள்நாட்டில் இருக்கின்ற பெண்கள் தொகைக்கு ஏற்ற கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய ஆண்கள் உள்நாட்டில் இல்லாமையினால் திருமணங்கள் கடினமான காரியமாக மாறியிருக்கிறது.
  4. தவிரவும், புவியியல் வரையறை, இன, மத, சமூக கட்டமைப்புக்களுக்கு அப்பால் சென்று திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் அப்படியான திருமணங்கள் அதிகம் நடைபெறும் போது மேற்சொன்ன கட்டமைப்புக்குள் இருக்கும் பெண்களின் விகிதாசாரம் அதிகரிப்பதும் பெண்களின் திருமணங்கள் தாமதமாக ஒரு காரணம்.
  5. யாழ் சமூகத்தில் இருக்கும் சீதன முறைமை காரணமாக படித்த மாப்பிளைகளுக்கான கேள்வி சகல மட்டங்களிலும் உள்ளது. அந்தக்கேள்வி பணபலம் கொண்டவர்களால் பூர்த்தி செய்யப்பட, அதிகரித்த படித்த பெண்களின் விகிதாசாரத்தில் நடுத்தர மற்றும் வசதி குறைந்த படித்த பெண்களின் திருமணங்கள் தாதமாகின்றன.

     

    (mg.thebridalbox.com) இருபது – இருபத்து இரண்டு வயதுகளில் திருமணம் செய்த காலம் போய், இருபத்தி ஏழு – இருபத்து எட்டு வயதுகளிலேயே பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் நிலை வந்திருக்கிறது. (mg.thebridalbox.com)
  6. நாம் சார்ந்த சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது, பொருளாதார நிலைமைகள் மாறி இருக்கின்றன, இளம் சந்ததியினரிடையே திருமணம் தொடர்பான எண்ணப்பாடுகள் மாறியிருக்கின்றன, பெண்களை திருமணம் செய்து கொள்ளும் சராசரியான திருமண வயது தொடர்ச்சியாக பின்தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது, பெண்களுக்கான சராசரி கருவள வீதம் (fertility Rate) அன்றைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக குறைவடைந்து 2012 ஆம் ஆண்டு நடந்த தொகைமதிப்புக்கு அமைவாக தமிழ் பெண்களிடம் சராசரியாக 2.3 ஆக உள்ளது. இருபது – இருபத்து இரண்டு வயதுகளில் திருமணம் செய்த காலம் போய், இருபத்தி ஏழு – இருபத்து எட்டு வயதுகளிலேயே பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் நிலை வந்திருக்கிறது.

மேற்கூறிய மாற்றங்கள் தொடர்பான தகவல்களில் உள்ள குறைபாடுகள் (information gap), பெண் பிள்ளையை அதிகம் கற்பித்ததே, திருமண தடைக்கான பிரதான காரணம் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கு காரணமாக அமைகிறது. சமூகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பான சரியான புரிதல் பெற்றோர்களிடம் இருத்தல் மிக அவசியம். பெண் பிள்ளைகளை அதிகம் படிக்கவைத்ததே அவர்களது திருமணம் பிந்திப் பின்செல்வதற்கான காரணம் என நினைத்து வீண் மன உளைச்சலுக்கு உள்ளாவதும், படித்த பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை தேடுவது கடினம் என்ற தப்பபிப்பிராயத்தை வளர்ப்பதும் தவறு என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

http://roartamil.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்புளை கனக்கப்படிச்சால்.......வாற மாப்பிளை பொம்புளையை விட கனக்கப்படிச்சவராய் இருக்கோணும் எண்டொரு விதியும் உலகத்திலை இருக்கு கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2017 at 6:03 PM, குமாரசாமி said:

பொம்புளை கனக்கப்படிச்சால்.......வாற மாப்பிளை பொம்புளையை விட கனக்கப்படிச்சவராய் இருக்கோணும் எண்டொரு விதியும் உலகத்திலை இருக்கு கண்டியளோ :cool:

இதுக்குத்தான் நான் கல்யாணம் கட்டுறல்லை என்ற முடிவு எடுத்து இருக்கிறன் 

அதிகம் படிச்சாலே பிரச்சினைதான் போல்  தங்களை விடவும் அதிகம் படித்தவனை தேடி  அலைந்து அவனுக்கு கோடிக்கண்க்கில் காசையும் கொடுத்து பிறகு பிடிக்க வில்லை என்று கோட்டிலும் கேஸிலும் அலையுறாங்க பெண்கள்   
அதையே தொழில் அற்ற வனைகட்டினால் சமுதாயம் மதிக்காதாம் என்று நல்ல ஆண்களை விட்டு விட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள்  தொழில் இல்லாதவனை தொழிலதிபராகவே ஆக்கலாம் 

சாட்சி சூரிய வம்சம்  படத்தை சொல்லுவம் 

என்னதான் சொன்னாலும்  எங்கட ஊர்ல இது  கொஞ்சம் இருக்கு

FB_IMG_1471018220135.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/01/2017 at 0:33 PM, குமாரசாமி said:

பொம்புளை கனக்கப்படிச்சால்.......வாற மாப்பிளை பொம்புளையை விட கனக்கப்படிச்சவராய் இருக்கோணும் எண்டொரு விதியும் உலகத்திலை இருக்கு கண்டியளோ :cool:

உண்மை குசா.

எனது உறவினர் ஒருவரின் மகளுக்கு திருமணம் பேசி எல்லாம் கூடி வந்த போது அப் பெண் " நான் masters செய்திருக்கிறேன் அவர் degree மட்டுமே " என்று குளப்பினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க இப்ப எல்லாம்.. பெண்கள் ஆண்கள் சரிநிகரா போக்கிட்டு இருக்கினம்.  பெண்கள் நல்லாவே எதிர்காலம் பற்றிய தெளிவு திட்டமிடலுடன் இருக்கிறார்கள். ஆண்களோடு பழகிப் பெறுவதை பெற்றுக் கொண்டு எல்லைகள் மீறிப் போகாமல்.. தம்மை கட்டுக்குள் வைச்சுக் கொள்ளவும் தற்போதைய யாழ்ப்பாணத் தலைமுறைக் கற்றுக் கொண்டிருக்குது.

நல்ல மாற்றங்கள் இன்றைய தலைமுறையினரிடம் வளர்வது மகிழ்ச்சி. 

இந்தக் கட்டுரையாளர் தான் பழசுக்கும் புதிசுக்கும் இடையில் சிக்கி தவிக்கிறார் போலக் கிடக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

உண்மை குசா.

எனது உறவினர் ஒருவரின் மகளுக்கு திருமணம் பேசி எல்லாம் கூடி வந்த போது அப் பெண் " நான் masters செய்திருக்கிறேன் அவர் degree மட்டுமே " என்று குளப்பினார். 

உண்மைதான் என் குடும்ப உறவிலும் ஒரு பெண் ஸ்கொட்லாண்ட் வரைக்கும் படிப்பு படிப்பு என்று அலைந்து உள்ள பட்டங்களும் எடுத்து 52வயதில் பெரிய  விரிவுரையாளராகிய பின்....இவரது தரத்திற்க்கேற்றவாறு மாப்பிளை தேடிய போது இரண்டாம்தார குடிகார மாப்பிளையே கிடைத்தது....வாழ்க்கை சரிவரவில்லை. 
இன்று மனநிம்மதி எனும் பெயரில் மனமும் மாறி மதமும் மாறிவிட்டார்.
பேரும் புகழும் பட்டமும் பணமும் இருந்து வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் என்ன பலன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உண்மை தான்  பணம் படிப்பு அழகு எல்லாம் இருந்தும்  38  36  வயதில் இருக்கிறார்கள் ..வாறவருக்கு     சமைச்சு போடவேண்டுமா என்ற திமிரில் . காத்திருந்து காத்திருந்நது  காலங்கள் போனது  தான் மிச்சம். கேடடால் தாங்கள் பிரீ யாக இருக்கினமாம் . பணம் இருக்கு வேலை இருக்கு கார் இருக்கு வீடு இருக்கு . வேறு என்ன வேணுமாம்.   விட்டுக் கொடுத்து வாழும் மனம் வரும் வரை தம் இவர்களைபோன்றவர் திருந்த மாடடார்கள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கூடுதலாக படிப்பவர்கள் தங்கள் திருமண காலத்திலும் படிப்புடன் ஒன்று சேர்ந்து போவதால் அவர்களுக்கான ஆண் பெண்ணை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

இதற்குள்ளால் தப்புவோர் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலும் கூட எம்மவரிடையே அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது மிகக் கடினமாகவே இருக்கு. என் வீட்டிலும் லண்டனில் பிறந்த, கறுப்பாகக் களையாக நல்ல பல்கலைக்கழகங்களில் படித்த நல்ல வேலை செய்யும் மாப்பிளையே வேண்டும் என்கிறார்கள். எங்கு போவது?பல பெண்கள் முப்பது வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்தக் கட்டுரையாளர் தான் பழசுக்கும் புதிசுக்கும் இடையில் சிக்கி தவிக்கிறார் போலக் கிடக்கு. tw_blush:

உங்க கருத்தையும் பார்க்கும் போது இரண்டுக்கும் நடுவில் நிற்கிறியளே    என்னவோ செட்டானால் செவிடாவ்து வழமைதானே நாம நம்ம வேலையை பார்ப்போம் :rolleyes:tw_blush:

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளிநாட்டிலும் கூட எம்மவரிடையே அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது மிகக் கடினமாகவே இருக்கு. என் வீட்டிலும் லண்டனில் பிறந்த, கறுப்பாகக் களையாக நல்ல பல்கலைக்கழகங்களில் படித்த நல்ல வேலை செய்யும் மாப்பிளையே வேண்டும் என்கிறார்கள். எங்கு போவது?பல பெண்கள் முப்பது வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.

தம்பிர தலையை காட்டுங்கோவன் ஒருக்காtw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளிநாட்டிலும் கூட எம்மவரிடையே அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது மிகக் கடினமாகவே இருக்கு. என் வீட்டிலும் லண்டனில் பிறந்த, கறுப்பாகக் களையாக நல்ல பல்கலைக்கழகங்களில் படித்த நல்ல வேலை செய்யும் மாப்பிளையே வேண்டும் என்கிறார்கள். எங்கு போவது?பல பெண்கள் முப்பது வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.

இதை வாசிக்கேல்லையோtw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ கூடுதலாக படிப்பவர்கள் தங்கள் திருமண காலத்திலும் படிப்புடன் ஒன்று சேர்ந்து போவதால் அவர்களுக்கான ஆண் பெண்ணை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

இதற்குள்ளால் தப்புவோர் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.

படிக்கும் போதே சொந்த இனத்திற்குள் தேடிப்பிடித்து வாழ்க்கையை தொடர்பவர்கள் பெரும்பாலும் வெற்றியையே தழுவிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் வேற்று இனத்தவரை காதலித்து ஆடம்பரமாக ஊரையே கூட்டி திருமணங்களையும் நடத்திவிட்டு இன்று தலையில் கைவைத்துக்கொண்டு திரிபவர்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஈராக்,லெபனான்,துருக்கி,துனேசியா,கானா போன்ற நாட்டவர்களை மணம் முடித்த எம் இளம் சமுதாயத்தினரை இங்கே காண்கின்றேன்.

உணவு விடயத்திலேயே இன்று ஒற்றுமைப்பட்டாலும் வயது போகப்போக வேறுபாடுகள் நிச்சயம் வந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

இதை வாசிக்கேல்லையோtw_blush:tw_blush:

நன்றி ஆஷ்ரமம் ஒன்று அங்கு திறக்கலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி ஆஷ்ரமம் ஒன்று அங்கு திறக்கலாமா??

ஒராளோடை மட்டும் ஆச்சிரமம் திறக்கலாம்...:cool:

C1RTrfjUUAAMNmY_zpssmjtr5b1.jpg

 

ஆனால் ஒரே நேரத்திலை கன தோசை சுடேலாது.:grin:

 

_zpsauyziwrj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஒராளோடை மட்டும் ஆச்சிரமம் திறக்கலாம்...:cool:

C1RTrfjUUAAMNmY_zpssmjtr5b1.jpg

 

ஆனால் ஒரே நேரத்திலை கன தோசை சுடேலாது.:grin:

 

_zpsauyziwrj.jpg

கல்லு பெரிசெண்டு சொன்னால் கன தோசைகள் என்ன ஒனியன் ( வெங்காய ) ஊத்தப்பமே போடுவமாக்கும்  தோசெல்லாம் ஜிஜிப்பி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.1.2017 at 5:44 PM, குமாரசாமி said:

படிக்கும் போதே சொந்த இனத்திற்குள் தேடிப்பிடித்து வாழ்க்கையை தொடர்பவர்கள் பெரும்பாலும் வெற்றியையே தழுவிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் வேற்று இனத்தவரை காதலித்து ஆடம்பரமாக ஊரையே கூட்டி திருமணங்களையும் நடத்திவிட்டு இன்று தலையில் கைவைத்துக்கொண்டு திரிபவர்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஈராக்,லெபனான்,துருக்கி,துனேசியா,கானா போன்ற நாட்டவர்களை மணம் முடித்த எம் இளம் சமுதாயத்தினரை இங்கே காண்கின்றேன்.

உணவு விடயத்திலேயே இன்று ஒற்றுமைப்பட்டாலும் வயது போகப்போக வேறுபாடுகள் நிச்சயம் வந்தே தீரும்.

நீங்கள் சொல்வது  உண்மை, என்றாலும்  குமாரசாமி அண்ணா...
படிக்கும் காலத்தில்....  கலியாண எண்ணம், காதல், கத்தரிக்காய் வந்தால்... படிப்பு பாழாகி விடுமே... 
படிப்பதில்  ஆர்வம் உள்ள பிள்ளையை,  குழப்புவதை..  எந்தப்  பெற்றோரும், விரும்ப மாட்டார்கள் தானே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.1.2017 at 5:52 PM, முனிவர் ஜீ said:

நன்றி ஆஷ்ரமம் ஒன்று அங்கு திறக்கலாமா??

இஞ்சை ஜேர்மனியிலை ஒரு பிள்ளையார் கோவிலுக்கு ஐயர் இல்லாமல் ஓடித்திரியினமாம். சிலோன் ஐயரையும் கலைச்சுப்போட்டினமாம்....ஒரு இந்தியன் ஐயரும் சோலி சுரட்டு இல்லாமல் பூசையாக்கிக்கொண்டிருந்தவராம். அவர் சம்பளம் கொஞ்சம் கூட்டிக்கேட்க அடியாக்குறையாய் அடிச்சு கலைச்சுப்போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினமாம்.

அதாகப்பட்டது பூணூலை மட்டும் மாட்டிக்கொண்டு வாரும்...மிச்ச அலுவலை நான் பார்க்கிறன்......
ஆச்சிரமம் மட்டுமில்லை.....சொந்த வீடே வாங்கலாம்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை ஒரு பிள்ளையார் கோவிலுக்கு ஐயர் இல்லாமல் ஓடித்திரியினமாம். சிலோன் ஐயரையும் கலைச்சுப்போட்டினமாம்....ஒரு இந்தியன் ஐயரும் சோலி சுரட்டு இல்லாமல் பூசையாக்கிக்கொண்டிருந்தவராம். அவர் சம்பளம் கொஞ்சம் கூட்டிக்கேட்க அடியாக்குறையாய் அடிச்சு கலைச்சுப்போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினமாம்.

அதாகப்பட்டது பூணூலை மட்டும் மாட்டிக்கொண்டு வாரும்...மிச்ச அலுவலை நான் பார்க்கிறன்......
ஆச்சிரமம் மட்டுமில்லை.....சொந்த வீடே வாங்கலாம்..:grin:

கடுமையான குளிர் உள்ள...  வின்ரர்  காலங்களில், 
ஐயர்....  தட்டுப் பாடு வருவது,   நோர்மல் தானே... 
எந்த... ஐயராவது,  வெறும் மேலுடன்... ஒரு வருடம், தாக்குப் பிடிப்பது கஸ்ரம்.
பல்லைக்  கடிச்சுக்  கொண்டிருந்த, அய்யர்  வெகு சிலரே....
அவர்களும், பாவம் தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/28/2017 at 3:03 AM, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை ஒரு பிள்ளையார் கோவிலுக்கு ஐயர் இல்லாமல் ஓடித்திரியினமாம். சிலோன் ஐயரையும் கலைச்சுப்போட்டினமாம்....ஒரு இந்தியன் ஐயரும் சோலி சுரட்டு இல்லாமல் பூசையாக்கிக்கொண்டிருந்தவராம். அவர் சம்பளம் கொஞ்சம் கூட்டிக்கேட்க அடியாக்குறையாய் அடிச்சு கலைச்சுப்போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினமாம்.

அதாகப்பட்டது பூணூலை மட்டும் மாட்டிக்கொண்டு வாரும்...மிச்ச அலுவலை நான் பார்க்கிறன்......
ஆச்சிரமம் மட்டுமில்லை.....சொந்த வீடே வாங்கலாம்..:grin:

நீங்க என்ன தான் சொன்னாலும் ஐயர் மாரின்ட தொழில்  இருக்கே  கல்லா கட்டுற தொழில்தான்  

மந்திரத்த  சொல்ல சொன்னா மந்தி மாதிரியெல்லா முழிக்க  வேண்டி வரும் :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.1.2017 at 11:45 PM, தமிழ் சிறி said:

கடுமையான குளிர் உள்ள...  வின்ரர்  காலங்களில், 
ஐயர்....  தட்டுப் பாடு வருவது,   நோர்மல் தானே... 
எந்த... ஐயராவது,  வெறும் மேலுடன்... ஒரு வருடம், தாக்குப் பிடிப்பது கஸ்ரம்.
பல்லைக்  கடிச்சுக்  கொண்டிருந்த, அய்யர்  வெகு சிலரே....
அவர்களும், பாவம் தானே....

சம்பளமாவது கொஞ்சம் கூட்டிக்குடுக்கலாமெல்லே... கோவிலும் வேணும் புண்ணியத்திலை பூசையாக்க ஐயரும் வேணுமெண்டால்.....இதென்ன இதுtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.