Jump to content

காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார்


Recommended Posts

காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார்
 

(கம்­பளை நிருபர்)


21948DSC07511.jpg26 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் பெண் ஒருவர் காணா மல் போய் அவ­ருக்­காக உற­வி­னர்­களால் ஆத்ம சாந்தி கிரி­யை­களும் செய்து முடிக்­கப்­பட்­டி­ருந்தநிலையில் கடந்த புதன் கிழமை திடீ­ரென அவர் தனது வீட­டுக்கு வந்த சம்­பவம் தொடர்பில் நாம் கடந்த வெள்­ளிக்­ கி­ழமை செய்தி வெளி­யிட்­டி­ருந்தோம்.

 

இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலும் பல தக­வல்கள் தற்­போது கிடைத்­துள்ளன.

 

திரு­ம­ண­மாகி 3 மாதங்­களில் கணவன் சுட்டுக் கொலை!


நாட்டில் அசா­தா­ர­ண­ சூழல் நில­விய 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சி காலப் பகு­தியில் அப்­போது 17 வய­தாக இருந்த பத்மா குமாரி என்ற குறித்த பெண் திரு­ம­ண­மாகி மூன்றே மாதங்­க­ளா­ன நிலையில் கண­வ­ருடன்  கோஹோ­மட கிரா­மத்தில் வசித்து வந்தபோது ஒரு நாள் நள்­ளி­ரவில் முக­மூடி அணிந்த மூவர் வீட்­டுக்குள் புகுந்து  குறித்த பெண்ணின் கண­வரை வெளியில் இழுத்துச் சென்று தேயிலை தோட்டம் ஒன்றில் வைத்து  துப்­பாக்­கியால் சுட்டுக் கொன்றனர்.

 

21948DSC07510.jpg

 

கண­வனின் உற­வி­னர்­களால் கொழும்பு வீட்டில் ஒப்­ப­டைப்பு


அதன்பின்னர் பத்மா குமாரி நாவ­லப்­பிட்­டிய பிர­தே­சத்­தைச் ­சேர்ந்த கண­வரின் பெரி­யம்­மாவின் மகள் குடும்­பத்­தி­னரால் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு கொட்­டாவை பகு­தி­யைச்­சேர்ந்த குடும்பம் ஒன்­றிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

 

அதன்பின்னர் அக்­ கு­டும்­பத்­தினர் பத்மா குமா­ரியை வெளி­யு­லக தொடர்­பற்ற நிலையில் சம்­பளம் வழங்­காது வீட்­டுக்குள் சிறை வைத்தி­ருந்­த­னர். தொடர்ச்­சி­யாக வேலை வாங்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே சம்­பவ தினம் (18) வீட்டில் உள்­ள­வர்கள் அனை­வரும் நித்­தி­ரைக்குச் சென்­றதன் பின்னர் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி தப்­பித்து வந்­துள்ளார்.

 

ஆண்­களின் காற்­சட்­டைக்­குள்­ளி­ருந்த சில்­லறைக் காசுகள் சேமிப்பு

 

இவர் அந்த வீட்டில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் அங்­குள்ள ஆண்­களின் காற்சட்­டை­களை கழுவும் சம­யங்­களில் அதற்குள் தவறி விடப்­படும் சில்­லறைக் காசு­களை இர­க­சி­ய­மாக சேமித்து வைத்தே தப்பி வந்த சமயம் பயணச் செல­வுக்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.  

 

21948DSC07516.jpg

 

கிராம சேவ­கர் வீட்­டுக்கு வந்தால் மறைத்து வைத்­தனர்


குறித்த வீட்­டில் பத்மா குமாரி சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த காலப் ­ப­கு­தியில் அவ்­ வீட்­டுக்கு கிராம உத்­தி­யோ­கஸ்தர் வரும் சந்­தர்ப்­பங்­களில் அவரை வீட்டில் உள்­ள­வர்கள் மறைத்து வைத்­திருந்தனர்.  

 

ஆத்­ம­சாந்தி கிரி­யைகள்


தற்­போது 43 வயதை எட்­டி­யுள்ள பத்மா குமாரி காணாமல் போயி­ருந்த காலப்­ப­கு­தியில் இவரின் உற­வி­னர்­களால் இவ­ருக்கு ஆத்ம சாந்தி கிரி­ையகள் செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கங்­க­ஹி­யல கோரல பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக காணாமல் போனோ­ருக்­கான நிவா­ர­ணமும் பெறப்­பட்­டுள்­ள­தோடு நாவலப் பிட்டி பொலிஸ் நிலையத் திலும் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது

 

இந்தப் பெண் வீடு திரும்பியதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21948#sthash.LniB4GFk.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.