Jump to content

மக்கள் ஏற்கும் பட்சத்தில் மாகாண சபைகளை பிராந்திய அரசாக மாற்றத் தயார்


Recommended Posts

மக்கள் ஏற்கும் பட்சத்தில் மாகாண சபைகளை பிராந்திய அரசாக மாற்றத் தயார்

 

லக் ஷ்மன் யாப்பா

க.கம­ல­நாதன்

பிராந்­திய அர­சு­க­ளாக மாகாண சபை ­களை மாற்­று­வது மற்றும் 13 க்கு அப் பால் சென்­று­ அ­தி­காரப் பகிர்வை மேற் ­கொள்­வது உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பாக உத்­தே­சிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அவற்றில் மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய திருத்­தங்கள் அனைத்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்­கப்­பட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் என நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார்.

மாகாண சபைகள் பிராந்­திய அர­சு­க­ ளாக மாற்­றப்­பட வேண்டும் என்ற தமிழ் அர­சியல் தரப்­பு­களின் நிலைப்­பாடு குறித்து வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
தற்­போ­துள்ள அர­சாங்கம் இரு கட்­சிகள் இணைந்து செயற்­படும் இணக்­கப்­பாட்டு அர­சாங்­க­மாக கரு­தப்­படும். எனவே இங்கு மக்கள் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்டு அர­சியல் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தான் சக­லரும் செயற்­ப­டு­கின்­றனர். 

அதற்­க­மைய சகல மக்­களின் உரி­மை­க­ளையும் மதித்து அவர்­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அதி­கார பகிர்வு உள்­ளிட்ட விட­யங்கள் தீர்க்­க­மாக ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. உத்­த­தேச மட்­டத்தில் உள்ள இந்த விட­யங்­களை நிறை­வேற்­று­திலும் சிக்கல் இல்லை. காரணம் இது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுள்ள அர­சாங்­க­மாகும்.

குறிப்­பாக 13 க்கு அப்­பா­லான அதி­காரப் பகிர்வு குறித்த விட­யங்­களை எமது நாட்டு மக்கள் ஆத­ரிக்கும் பட்­சத்தில் அதனை அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் பின்­நிற்­காது. மாறாக மக்கள் மறுக்கும் விட­யங்­களைக் கொண்­டு­வர முடி­யாது. அதனால் இன்று உத்­தசே மட்­டத்தில் உள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான சகல விட­யங்­களும் உள்­ளீர்க்­கப்­பட்ட ஒரு அர­சி­ய­ல­மைப்பின் இறுதி வடிவம் நாட்டு மக்­க­ளி­டத்தில் வாக்­கெ­டுப்­புக்­காக விடப்­படும். இறுதித் தீர்­மா­னங்­களை மக்கள் எடுப்பர் .

மேற்­படி அர­சி­ய­ல­மைப்பு மீள் திருத்த செயற்­பா­டு­களில் தற்­போ­துள்ள மாகாண சபை­களை வலுப்­ப­டுத்தி அவற்றை பிராந்­திய அர­சுகள் என்ற கட்­ட­மைப்­பிற்கு உள்­வாங்­கு­வ­தற்­கான உத்­தே­சிப்­புக்­களும் இடம்­பெற்­ற­வண்­ணமே உள்­ளன. மறு­பு­றத்தில் இன்று தமிழ் தரப்­புக்­களும் சுதந்­தி­ர­மாக தமது கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­ற­மை­யா­னது இன்று அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ள சுந்திரம் வலுவாக உள்ளமையினையே காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இவர்களது கருத்துக்களை மக்கள் ஏற்றுகொள்ளும் பட்சத்தில் அவற்றினை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-22#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இனத்தவரின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க  தவறும் ஜனநாயக ஆட்சிமுறையில் உள்ள பலவீனங்களை சரிசெய்வதற்காக ஒரு நாட்டின் ஆட்சி அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பெரும்பான்மை இனத்தவர் கட்டாயம் முட்டுக்கட்டை போடுவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே வாக்கெடுப்புகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் உள்ளடக்கப்படக்கூடாது. மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­ பலம் பெற்று ஆட்சியிலுள்ள அர­சாங்­க­ம் நாடாளுமன்றத்தில் வைத்தே உரிய வழிமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வை எட்டவேண்டும்.

இந்த இடத்தில்தான் தமிழ் தலைவர்களின் அரசியல் சாணக்கியம் வெளிப்படவேண்டும். மாற்று வழிமுறைகளை அரசுமட்டத்தில் பேசி தெளிவுபடுத்தவேண்டும். தங்கள் தங்கள் பாட்டுக்கு அறிக்கை விடுவதும் பிரேரணை நிறைவேற்றுவதும் வேலைக்கு ஆகாது. பேச்சுவார்த்தைகள் இடைவிடாது தொடர்ச்சியாக எதிர்பக்கத்து தலைவர்களுடன் நிகழ்த்தப்படவேண்டும். விடயத்தை எதிரணியின் கையில் ஒப்படைத்துவிட்டு முடிவுக்காக காத்துநிற்பதைவிடுத்து தமிழ்தலைவர்களும் ஈடுபாட்டுடனும் கரிசனையுடனும் செயற்பட்டு விரைவான தீர்வுக்கான வழிமுறைகளை ஆராயவேண்டும்.

மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­ பெற்ற அரசாங்கம்  ஆட்சியிலும் ஒரு தமிழ்கட்சி எதிரணியிலும் அமைவது ஆயிரங்காலத்துப் பயிர். முன்னர் இதுபோலவே ஆயுதப்போராட்டத்தையும் கோட்டைவிட்டவர்களும் நாங்கள்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.