Jump to content

பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்


Recommended Posts

பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்

 

பீஹாரில், முழுமையான மது விலக்கை வலியுறுத்தி சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் முழுமையடையும் பட்சத்தில், இதுவே உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

9_Bihar_Human_Chain.jpg

பீஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடிப் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி என்ற சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படும் இந்தப் போராட்டம், பீஹாரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதில் அந்த மாநிலத்து மக்களின் ஆதரவைப் பிரதிபலிக்கிறது எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15648

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.