Jump to content

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது


Recommended Posts

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

 

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது
 
வாஷிங்டன்:

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்தன. பதற்றத்தில் ஆழ்த்தின. இந்த தாக்குதல்களின்போது மூளையாக இருந்து செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடன் என அமெரிக்கா கண்டறிந்தது.

சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந் தேதி பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க ராணுவத்தின் ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தி பின்லேடனை கொன்றனர்.

அப்போது பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை அங்கிருந்து ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ. என்று அழைக்கப்படுகிற மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்து அவ்வப்போது சி.ஐ.ஏ. வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் நேற்று முன்தினமும் பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.ஐ.ஏ. வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆவணங்களில் அவர் ஐ.எஸ். இயக்கத்தின் பொறுமை இழப்பு, வன்முறை தந்திர உத்திகள், அல்கொய்தா இயக்கம் மறைந்து வரும் நிலை ஆகியவை பற்றி, பின்லேடன் கவலைப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதில் ஒரு ஆவணம், பின்லேடன் தனது மகன்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது. அதில் அவர், தன் மகன்களின் உடலில் எலெக்டிரானிக் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.

அரேபிய தீபகற்ப பகுதியை சேர்ந்த அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனர் நாசர் அல் உஹாய்ஷிக்கு பின்லேடன் எழுதிய கடிதமும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பின்லேடன், மத அடிப்படையிலான ஒரு ராஜ்யத்தை அமைப்பதற்கான சூழல்கள் சரிவர அமையவில்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக மிக வேகமாக செயல்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு ராஜ்யத்தை அமைப்பதில் வெற்றி கிடைக்கும் என்பது ஆதாரபூர்வமாக காட்டப்படுகிற வரையில், ஒன்றுக்கும் பலனற்ற விதத்தில் ரத்தம் சிந்தக் கூடாது எனவும் பின்லேடன் எச்சரித்துள்ளார்.

2010-ம் ஆண்டுக்கு முன் பின்லேடன் பல தரப்பினருக்கும் எழுதிய கடிதங்களில், தனது குழுவினர் அமெரிக்காவை தொடர்ந்து எதிரியாக கருதி வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/21004213/1063311/releases-last-batch-of-bin-Laden-documents.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.