Jump to content

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்


Recommended Posts

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்

  • டிரம்ப்

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

 
படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார்.

தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்றார் டிரம்ப்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

http://www.bbc.com/tamil/global-38697539

Link to comment
Share on other sites

அதிபராக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தினர் வெள்ளை மாளிகை வருகை

 
 

டொனால்ட் டிர்ம்பும் அவருடைய மனைவியும் அதிபர் பாராக் ஒபாமா மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமாவோடு காலை உணவுக்காக வெள்ளை மாளிகையை வந்தடைந்துள்ளனர்.

Obamas and Trumps
 

பின்னர் அவர்கள், அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவியேற்று ஏற்புரையை வழங்க இருக்கின்ற கேபிட்டல் கட்டடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.

டிரம்பின் குடும்பத்தினர், இந்த பதவியேற்பு நாளை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற பாரம்பரிய செப வழிபாட்டோடு தொடங்கியுள்ளார்.

கேபிட்டல் கட்டடம் நோக்கிய பயணம் 

பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரப்பத காலநிலைக்கு தக்கவாறு ஆடை அணிந்தவராக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் வாஷிங்டன் நோக்கி பயணித்து வருகின்றனர்.

முன்னதாக, தன்னுடைய அலுவலகமான ஓவல் மாளிகையை விட்டு கடைசியாக வெளியேறுவதற்கு முன்னால், பராக் ஒபாமா வழக்கப்படி, தனக்கு பின் வரும் அதிபருக்கு தனிப்பட்ட குறிப்பை எழுதிவைத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-38694138

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டிரம்ப்...ஆட்டம் இனி ஆரம்பமாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாலு வருடம் தாக்குப்பிடிப்பாரா.அல்லது இன்ரெரு பொறிஸ் யஸ்ரினா காலம் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

ஒபாமா அறிமுகப்படுத்திய திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ட்ரம்ப்பின் முதல் கையெழுத்து

Published by Kumaran on 2017-01-21 09:17:31

 

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஒபாமாகெயார்’ மருத்துவத் திட்டத்தை மாற்றியமைக்கும் உத்தரவில் தனது முதல் கையெழுத்தை இட்டார். இதன்படி, ஒபாமாகெயார் திட்டத்தின் விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவுள்ளன.

2_Trump_Sign_Obamacare.jpg

ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில மணித்தியாலங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ‘ஓவல்’ அலுவலகத்துக்கு வருகை தந்த ட்ரம்ப், ஒபாமா கெயாரில் காணப்படும் சிக்கலான விதிமுறைகளை மாற்றியமைக்கவேண்டும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.

ஒபாமாகெயாரில் காணப்படும் விதிமுறைகளை இரத்துச் செய்யும் அதேவேளையில், அதற்கு மாற்றாக என்னென்ன விதிமுறைகளை அமல்படுத்தலாம் என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது.

மேலும், இந்த உத்தரவு குறித்த அறிவித்தல் ஒன்று ஒபாமாகெயாருடன் தொடர்புடைய முகவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ஒபாமாகெயாரின் விதிமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15632

Link to comment
Share on other sites

டொனால்டு ட்ரம்ப் உரை அமெரிக்கவாழ் இந்தியர்களை பாதிக்குமா..?

டொனால்டு டிரம்ப்
 

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் சிறுபொறியாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், சென்னை தொடங்கி இன்று மாநிலம் முழுவதும், 'தமிழன்டா' என்ற உணர்வுப்பூர்வமான அறவழிப்போராட்டமாக காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஏன் கோடிக்கணக்கான தமிழர்கள் என்று சொல்லலாம்...'ஜல்லிக்கட்டு' என்ற ஒற்றை வார்த்தையை தமிழகம் முழுவதும் எதிரொலித்தவண்ணம் உள்ளனர்.

இதுவரை எந்தவொரு அசம்பாவிதமோ, திருட்டு போன்ற சம்பவங்களோ இல்லாமல், 'அனைவருமே தலைவர்கள், இது நமது போராட்டம்' என்ற மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய அக்கறையுடன் சாரைசாரையாகக் குழுமி, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுஒருபுறமிருக்க, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்ற உடன் அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்பதை நேரடியாகக் குறிப்பிடும் வகையில் உறுதிபடப் பேசியுள்ளார், டிரம்ப்-ன் பேச்சை உற்றுநோக்கும்போது, இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக, மத்திய அரசையோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள மாநில அரசையோ நம்பாமல், அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டில் இந்தியர்களின் உரிமைக்காக போராட வேண்டிய அடுத்த தருணம் உருவாகலாம் என்று எண்ணம் எழுகிறது.

45-வது அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்-ன் உரை விவரம்: 

"அமெரிக்க மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன். அமெரிக்காவின் நலனே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன். அமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம்.

வாஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். அமெரிக்க மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது, அதனை மீட்டு செயல்படுத்துவேன்- இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும். வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும். உங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஒருபோதும் அமெரிக்க மக்களை கைவிட மாட்டேன்" என்று உணர்வுப்பூர்வமான உரையை நிகழ்த்தியுள்ளார். மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளைப் பற்றி ஒருபோதும் நாம் பேசுவதில்லை என்றும், அதிபர் தேர்தலில் வெற்றுப் பேச்சு முடிவுக்கு வந்துள்ளது என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே, ஹெச்1- பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு அயல்பணி வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது, அமெரிக்காவின் 45-வது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அவரது பேச்சில், அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

டிரம்ப் பதவியேற்றதும் ஆற்றிய உரையை, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவில் இருந்து, அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வரும் இந்தியர்கள் கவனத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். தங்களின் எதிர்காலத்திற்கு ஏதாவது பங்கம் விளைவிக்கும் வகையில், டிரம்ப் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம், அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது.

எது எப்படியானாலும், ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கி இரவு பகலாக போராடும் தமிழக இளைஞர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முன்வர மாட்டார்களா? ஒரு மாநிலப் பிரச்னைக்கே, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள், இந்தியா என்று வந்து விட்டால், தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, இந்தியர்களுக்காக, இந்தியர்கள் என்ற உணர்வுடன் போராடவும் தயங்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

http://www.vikatan.com/news/world/78312-us-based-indians-shock-over-the-address-of-trump.art

Link to comment
Share on other sites

அதிபராக ட்ரம்ப்பின் முதல் ட்விட் என்ன? #POTUS

ஒபாமா

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமாக POTUS உருவாக்கப்பட்டது. ஒபாமா தான் POTUS கணக்கை பயன்படுத்திய முதல் அதிபர். ஒபாமா தனது சந்திப்புகள், கொள்கைகள் தொடர்பான விஷயங்கள், திட்டங்கள் குறித்த பதிவுகளை 2015ம் ஆண்டில் கணக்கு துவங்கப்பட்டதில் இருந்து பதிவு செய்து வந்தார். தற்போது ட்ரம்ப் அதிபராகி உள்ள நிலையில் POTUS ட்விட்டர் பக்கத்தை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார். இதற்கு பதிலாக @POTUS44 என்ற பக்கத்தை இதுவரை அவர் செய்த 352 ட்விட்களோட சேர்த்து வழங்கியுள்ளது.

ஒபாமா vs ட்ரம்ப்:

அரசியல், நிர்வாகம், பேச்சு என அனைத்து துறைகளிலும் ஒபாமாவோடு ட்ரம்ப்பை ஒப்பிட்டு ட்ரம்ப்பை விமர்சிப்பது அனைவரும் அறிந்ததே.  அதிபராக ஒபாமா பதவியேற்று ஆறு ஆண்டுகளுக்கு அவருக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கே இல்லை. 2015ம் ஆண்டு தான் POTUS கணக்கு வழங்கப்பட்டது. இதைத்தான் ஒபாமா முதல் ட்விட்டாக பதிவு செய்திருந்தார்.

ஒபாமா vs ட்ரம்ப்

 

அதிபராக ஒபாமாவின் முதல் ட்விட்:

Hello, Twitter! It's Barack. Really! Six years in, they're finally giving me my own account.

— President Obama (@POTUS44) May 18, 2015

 

அதிபராக ட்ரம்ப்பின் முதல் ட்விட்:

#InaugurationDay href="https://t.co/2h8yWMYQz9">https://t.co/2h8yWMYQz9 pic.twitter.com/Q9u8n9vez2

— President Trump (@POTUS) January 20, 2017

ஒபாமாவுக்கு ஆறு ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட ட்விட்டர் கணக்கு, அதிபராக பதவியேற்ற அடுத்த நொடியே ட்ரம்புக்கு வழங்கப்பட்டு விட்டது. அதிபராக பதவியேற்ற சிறுது நேரத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி இருந்த தனது நீளமான அதிபர் உரையை முதல் ட்விட்டாக பதிவு செய்திருந்தார். பின்னர் தனது குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்த ட்ரம்ப். ஒபாமா கேர் மீதான ஆணையில் கையெழுத்திடவும் செய்தார். பின்னர் தனது பர்சனல் பக்கத்தில் இருந்த ஒரு ட்விட்டை ரீட்விட் செய்துள்ளார் ட்ரம்ப்.

ஒபாமா POTUS ட்விட்டர் கணக்கை 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதுவரை தனது சொந்த கணக்கான பராக் ஒபாமா பக்கத்திலிருந்து ஒரு ட்விட்டை கூட ரீவிட் செய்ததில்லை. ஆனால் ட்ரம்ப்பின் முதல் 5 ட்விட்களில் 3 தனது சொந்த பக்கத்தை டேக் செய்தே இருக்கிறது. அதிலும் ஒன்று டரம்ப்பின் பர்சனல் பக்கத்தில் உள்ள ட்விட்டின் ரீ ட்விட். விளம்பர பிரியர் என விமர்சிக்கப்படும் ட்ரம்ப் தன்னை மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.

அதேபோல இணைய ட்ரெண்டிங்கிலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற ட்ரம்பின் பதவியேற்பை ஃபேஸ்புக் லைவ் செய்ததில் ஆங்க்ரி இமோஜிக்கள் பறந்தன. அதுமட்டுமின்றி ட்ரம்ப்பின் பதவியேற்பின் போது வெள்ளை மாளிகை முன்பு கூடிய கூட்டத்தையும், ஒபாமா பதவியேற்பின் போது கூடியிருந்த கூட்டத்தையும் இணைத்து வெளியான வீடியோ தான் அன்றைய ஆன்லைன் வைரல். இதிலும் ஹிட் அடித்தது ஒபாமா தான். 

 

ஆன்லைனில் இருக்கும் நெட்டிசன்களை பொறுத்தமட்டில் ட்ரம்ப் மீம் மெட்டிரியலாகவே திகழ்கிறார். அதற்கேற்ப அவரும் நடந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் நீங்கள் அமெரிக்க அதிபர், கொஞ்சம் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்ற ட்விட் ட்ரம்ப் கண்ணுக்கு தெரிந்தால் நல்லது.

http://www.vikatan.com/news/world/78324-trumps-first-tweet-as-a-president-of-united-states-of-america.art

Link to comment
Share on other sites

 ட்ரம்பின் பாதுகாப்பு வலைப்பின்னலை பார்த்து மக்கள் பெருமூச்சு விட்டதை பார்த்தேன்.

Link to comment
Share on other sites

'ஒபாமா கேர்' மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வர டிரம்ப் முதல் கையெழுத்து

 
 

முந்தைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா கொண்டு வந்த சுகாதார பராமரிப்பு சீர்திருத்தங்களில் மாற்றம் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, அமெரிக்க அதிபாக தனது முதல் நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் துவக்கியுள்ளார்.

டிரம்ப் முதல் கையெழுத்து
 

`ஒபாமா கேர்' என அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சட்டங்களின் மூலம் ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்குமாறு முகமைகளுக்கு டிரம்ப் கையழுத்திட்ட பிரகடனம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க அதிபராக ஆற்றிய தனது தொடக்க உரையில், அமெரிக்காவின் நலனை முதன்மைபடுத்தப் போவதாகவும், கைவிடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பரவலாக குற்றங்கள் நடப்பது ஆகிய அமெரிக்க முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்தை குலைக்கும் படுகொலைகளை நிறுத்தப் போவதாகவும் டொனால்ட் டிரம்ப் உறுதி எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, இன்று (சனிக்கிழமை) மாலையில் வாஷிங்டனில் நடக்கவுள்ள பெண்கள் பேரணியில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன மற்றும் பாலின ரீதியான சமத்துவங்களுக்கு புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்பின் நிர்வாகத்தில் அச்சுறுத்தல் இருக்கும் என்று உணர்வதை சுட்டிக்காட்ட தாங்கள் விரும்புவதாக இப்பேரணியில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-38703666

Link to comment
Share on other sites

வெள்ளை மாளிகை இணையதளத்தில் எல்.ஜி.பி.டி பக்கங்கள் நீக்கம்!

எல்ஜிபிடி

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வெள்ளைமாளிகை இணையதளத்தில் இருந்து, எல்ஜிபிடி அதாவது ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் தொடர்பான பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அந்த இணையதளத்தின் தொழிலாளர் துறைக்கான பக்கத்தில் எல்ஜிபிடி தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த பக்கங்கள் நீக்கப்பட்டிருப்பது, அதில் தொடர்புடையவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதிபராக இருந்த பராக் ஒபாமா, எல்ஜிபிடி தொழிலாளர்களின் உரிமைகளில் செய்த முன்னேற்றங்கள் தொடர்பாக புதிய அதிபர் டிரம்ப் என்ன முடிவு செய்யப்போகிறார் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதே டிரம்ப், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/world/78309-lgbt-pages-removed-from-white-house-website.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

eight_col_trumpo2.jpg?1434479773

எனக்கு இந்த போட்டோவை பாக்கப் பாக்க மன்னார்க்குடி கூட்டத்தின்ரை நினைப்புத்தான் வருகுது....:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.