Jump to content

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்


Recommended Posts

வணக்கம்,

மிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி

உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தன்னெழுச்சிற்கு தலை வணங்குகிறேன்.. 5.gif

இவ்வொற்றுமை, அனைத்து தமிழ் மற்றும் தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிக கவனமாக விழித்திருந்து அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு, இனவழிப்பு செயல்களை இனம்கண்டு, தமிழ் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியன பாதுகாக்கபட வேண்டுமென விரும்புகிறேன்.

jallikkaddu.jpg

 யாழ் இணைய முகப்பில் தமிழக எழுச்சிற்கான தார்மீக ஆதரவிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம்,குஸ்தி எல்லாம் தமிழினக் கலாச்சாரக் கலைகள். அது அழிந்து போக விடக்கூடாது . ஆயிரமாயிரம் மேடைப் பேச்சுக்களாலும் விளம்பரங்களாலும் செய்ய முடியாததை  இவ் எழுச்சிப் போராட்டம் மிகச்சுலபமாக அடுத்த தலைமுறையிடம் கடத்தி விட்டிருக்கு. அதற்காக இந்த இளஞர்களின் போராட்டத்துக்கு தலை வணங்குகின்றேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் தலைமுறையின் இவ்வெழுச்சிக்கு தலை வணங்குகின்றேன்

இவ்வெழுச்சியை ஐல்லிக்கட்டு என்னும் தமிழர் பாரம்பரிய விளையாட்டின் ஒழிப்பு சார்ந்து மட்டும் பார்க்கவில்லை

 பலமுறை ஏமாற்றப்பட்ட தமிழினத்தின் குமுறலாகவும்

எல்லாவற்றின் மீட்சிக்குமான எழுச்சியாகவே பார்க்கின்றேன்

அதுவே உண்மையும்  கூட.

எழுச்சியில் பங்குபற்றியுள்ள இளைஞர்களின் பேட்டிகளில் 

அவர்கள் இதுவரை ஏமாற்றப்பட்டதும்

அவை எவை என்பதும் ஒவ்வொருமுறையும் உரக்க சொல்லப்பட்டு வருகிறது

அதில் ஈழத்தமிழரது இனப்:படுகொலையும் முக்கியமானது.


தமிழர்கள் ஒற்றுமைப்படாமல்
தமிழகம் தமிழரின் கையில் வராமல் ஈழத்தமிழருக்கு விடிவில்லை.
அதற்கான காலம் கனிந்து வருகிறது.
நன்றி மறப்பது நன்றன்று.
இதில் சீமானின் பங்கு மிக மிக அதிகம்.
நன்றி நாம் தமிழர் கட்சியினருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பண்பாட்டு நிகழ்வைத் தடை செய்ய இவர்கள் யார்? மாணவர்கள் தொடர்ந்து கடைசிவரை போராட்டத்தைத் தொடர்வார்களா? என்ற கேள்வி உண்டு என்றாலும் தாங்களாகவே ஒன்றிணைந்தமைக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்.

Link to comment
Share on other sites

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்.

இளைஞர்கள் தலைவர்களாகி தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உலகத்தில் உருவாக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது இந்த ஏறுதழுவல் போராட்ட நிகழ்வு.

Link to comment
Share on other sites

இதெல்லாம் சென்ரல் பிஜேபி உள்ளே வருவதுக்கு போடும் அட்சரம் கடந்தகாலம்களில் மாணவர் போராட்டம்களை எப்படி அடக்கினார்கள் ? இப்போது முடியவில்லை காரணம் போராட்டகாரார்மீது கைவைத்தால் பன்னீர்ம் இல்லை மோடி pjb யும் இல்லை இதைவிட இரும்புக்கரம் கொண்டு அடக்க அம்மாவும் இல்லை குள்ளநரி கர்ணாநிதி கடைசி தேர்தலில் வேண்டிக்கட்டின தாக்கத்தில் இருந்து மீளவில்லை அப்படி மீண்டாலும் யார் தலிவர் எனும் பிரச்சினை தமிழ்நாட்டு சதுரங்கம் இப்படி எப்படித்தான் ராஜாவை வெட்டினாலும் வெட்டுபவனுக்கு அதிக பாதிப்பு அதை யோசிக்காமல் கை வைக்க தில் வேணும் ஜல்லிகட்டு தடை அவர்கள் இதுக்காக மாத்திரம் போடுகிறார்கள் என்று நினைத்தால் அது படுமுட்டாள்த்தனம் லட்சம் விவசாய நிலம்களுக்குள்ளால் அத்துமீறி கெயின் குழாய் திட்டம் ,காவிரி நீர் உச்சநீதிமன்றம் டகால்டி விளையாட்டு விவசாயிகளின் தற்கொலைகள்,குப்பை அணுமின்நிலையம் கூடம்குளம்.தமிழ் மீனவர்கள் சாவுகள் இப்படி பலகாரனம்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மோடி சொல்கிறார் அப்படிஎன்றால் உச்ச நீதிமன்றமே நாட்டை நிர்வகிக்கட்டுமே இவர் எண்ணத்துக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏமாறுபவன் இருந்தால்,  ஏமாற்றிக்  கொண்டே..... இருப்பவனுக்கு  கொண்டாட்டம்." என்று சொல்வார்கள்.

கடந்த மூன்று வருடமாக... ஜல்லிக் கட்டுக்கு விதித்த தடையை நீக்க ஏதாவது  செய்வார்கள்  என்று, தமிழக மக்கள்.... மாநில அரசையும்,  மத்திய அரசையும், நீதி மன்றத்தையும் எதிர் பார்த்தார்கள். :unsure:

ஒவ்வொரு தைப்பொங்கலுக்கு மட்டுமே.... இதனை விவாதப் பொருளாக்கி.... கடைசியில், கைவிரித்துக் கொண்டு இருந்ததை, அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த தமிழக மக்கள், இனி.... இவங்களை நம்பி பிரயோசனம்  இல்லை என்ற முடிவுக்கு.... வந்து,  அந்தப் போராட்டத்தை  எந்த அரசியல் கட்சிகளும் உள் நுழைந்து, குழப்பியடிக்காமல் இருக்க, ஆரம்பத்திலேயே... அவர்களை அதில் தலையிட வேண்டாம் என்று சொல்லி, தொடங்கிய போராட்டம், நல்ல ஆரம்பம்.:)

நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று,  நம்பிய நீதிமன்றமே...   
"உனக்கு  காளையை... அடக்க விருப்பம் என்றால், முதலில்.... சிங்கத்தை அடக்கு"
என்ற.... கேனைத்தனமான  கேள்வி, அனைத்து.... தமிழக மக்களையும், உசுப்பி விட்டது. :shocked:

குறிப்பிபிட்ட  சில மாவட்டங்களில்... மட்டுமே நடந்து கொண்டு இருந்த,  ஏறு தழுவுதல் விளையாட்டை.... இனி.....தமிழகம் முழுவதும்  விளையாட வைக்க, அத்திவாரம் போட்ட....  பீட்டா அமைப்பிற்கும்,  அரசியல் வாதிகளுக்கும், நீதிமன்றத்துக்கும் நன்றி. :grin:

இனி... எந்த விடயத்திலும் தமிழனை, எவராலும்.... ஏமாற்ற முடியாது. என்பதனை.... இந்த, ஜல்லிக்கட்டு  போராட்டம், கட்டியம் கூறி நிற்கும் என்பது... நிதர்சனமான உண்மை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்குப்பதிவு திரும்ப திரும்ப வாக்களிக்கும் வண்ணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது..

தயவுசெய்து திருத்தியமைக்கவும்!

Link to comment
Share on other sites

எனது பார்வை, வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் நான் கூறக்கூடியது. உணர்ச்சிபூர்வமான காரியங்களை விட அறிவுபூர்வமான காரியங்களே பயன்மிக்கவை.

நாங்களும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கனடா டொரோன்டோ மாநகரில் அமைதியான முறையில் மனிதச்சங்கிலி செய்தோம். எமக்கு இவை எல்லாம் புதினமான விடயங்கள் இல்லை. மாணவர் சக்தி மாபெரும் சக்தி... இந்த வாசகங்கள் இதனையும்விட உணர்ச்சிகரமான வாசகங்களை எல்லாம் கடந்து வந்தது எங்கள் பாதை.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் சந்தில் சிந்து பாடுபவர்கள்... போராட்டங்கள் மூலம் தமது சுயலாபங்களை சம்பாதிப்பவர்கள், அப்பாவி மக்களின் உணர்வுகளை ஏணியாக பயன்படுத்தி தாம் வானத்தின் உச்சியை தொட்டுவிடப்பார்ப்பவர்கள் வாழும் உலகம் இது.

பல்வேறு விடயங்களில் உலகில் தமிழ்நாடு மிகவும் சக்தி பொருந்திய பகுதி. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. அதேசமயம், யதார்த்தம் புரியவேண்டும், தமது எல்லைகள் எவை என்பது தெரியவேண்டும். ஆழமறியாமல் காலை விடக்கூடாது. நாங்கள் பட்ட அல்லல்களை தமிழ்நாட்டு மக்களும் அடையக்கூடாது. இந்தவகையில் நிதானம் அவசியம். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கபடாதவண்ணம் கவனம் செலுத்தவேண்டும்.

வெளிமாநிலத்தவர், மத்திய அரசை குறைபிடிக்கமுன்னர் தமிழ்நாட்டிலேயே உள்ள திருட்டுக்கும்பல்களை இனம்கண்டு புறக்கணிக்கும் பக்குவம் மக்களிற்கு ஏற்படவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முறையான தலமையை தெரிவுசெய்து, முறையான அரசை உருவாக்கி இருந்தால் இப்படியான பிரச்சனைகள் எல்லாம் ஏற்பட்டு இருக்காது. வந்தவன், வருபவன் எல்லாம் தானும் தன் கட்சியும் ஆட்சிக்கு வந்து, அதிகாரத்தை பிடித்து என்னத்தை புடுங்கிக்கொண்டு போகலாம் எனும் திருட்டு மனநிலையில் இருக்கும்போது மக்களின் நலன்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு எங்கே அக்கறை வரப்போகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு அழிக்க்கிறேன்...இவ்வளவு காலம் தாழ்த்தியாவது நாங்கள் தமிழர்கள் அடக்கு முறைக்கு எதிராக போராட வேண்டும் என்ட உணர்வு இவர்களுக்கு வந்ததே வரவேற்க தக்கதொரு மாற்றம்

Link to comment
Share on other sites

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

போல், அண்ணே...... இது, நடக்கிற காரியமா?
"பொல்லை குடுத்து,  அடி  வாங்கிக் குடுக்குற..."  பெரிய,   
"மாஸ்ரர் பிளான்"  உங்களிடம் உள்ளது  போலுள்ளது.  
அதை... இப்ப.... கசிய, வைத்து விடாதீங்க.
பாவம்.... சம்பந்தன். :grin: :D: :119_busts_in_silhouette: tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல குமுறல்களுக்கு ஒரு இடைவெளி கிடைத்துள்ளது. அதை கெட்டியாக பிடித்துள்ளார்கள் போலிருக்கின்றது. 
பலதை அல்லது சிலதை விவாதித்து போட்டுடைக்காமல் மாணவர்கள் வழியையே பின்பற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08-1452255575-murattu-kaalai----600.jpg

 

ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதலை தடை செய்யும்போது செய்யாத போராட்டத்தை இப்போது செய்வது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுபோலத்தான் இருக்கின்றது. ஆனால் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து ஏறு தழுவுதலை அனுமதிக்கவேண்டும்.

நல்ல கொம்பு சீவின முரட்டுக்காளையை அடக்க இதே மாதிரி இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்கு வருவார்களா??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நான் ஆதரவு அளிக்கின்றேன்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது:


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே,
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
 

 

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். லட்சம் லட்சமாக நாங்கள் வீதியில் இறங்கி போராடின போது எங்களுக்கு நீதி வழங்க ஒருவரும் முன் வரவில்லை,  பதிலாக சில சுயநலவாதிகள் அதை தங்கள் லாபதிக்காக இதனை பயன்படுத்திக் கொண்டார்கள். வாக்குறுதிகளை நம்பாதீர்கள். தீர்வை கையில் எடுத்துக் கொண்டு போராட்ட களத்தை விட்டு விடை பெறுங்கள். அனுபவம் கற்றுத்  தந்த பாடங்கள் பல.

Image result for விருமாண்டி images

Link to comment
Share on other sites

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

நீங்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் உலகம்முழுவதிலும் இதை விட படு மோசமாக நடக்கும் விலங்கு வதைகளை தடை செய்யாமல் இதைத் தடை செய்ய கங்கணம் கட்டி நிற்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமானது. 

Link to comment
Share on other sites

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதே கேள்வியை உங்களால் ஸ்பானிஸ் மாடு பிடி வீரர்களிடம் கேட்க்க முடியுமா ?

அதுவும் அங்கு கடைசியாக மாடு கொல்லப்படும் அதுதான் தங்கள் பாரம்பரியம் என்று திமிராகவே சொல்வார்கள் மாட்டுக்கு முதல் குதிரை போட்டிகள் அதில் காயமடையும் குதிரைகள் ஆண்டொன்றுக்கு அறுபது வீதம் மாட்டுக்கு முதல் குதிரை ரேஸ் அதை தடைபன்னிட்டு மாட்டுக்கு வாங்கோ முடியாது பீட்டாவின் கண்ணுக்குள் தமிழ்நாட்டின் முன்றாரை லட்சம் கோடி புழங்கும் பால் விற்பனை இந்த வருமானத்துக்கு அவர்கள் இடும் மூலதனம் வெறும் பத்து ஆயிரம்  கோடி மிகுதி லாபம் அவர்களின் கண்ணுக்குள் குத்துவது அதனாலேயே இந்த ஆட்டம் இன்னும் விளக்கம் ஆக என்றால் ஊரில் நாய் வளர்ப்புக்கும் இங்கு நாய் வளர்ப்புக்கும் உள்ள சிலவு அதாவது இங்கு நாய் வளர்க்க ஆசைபட்டால் இங்கு நாய் உணவு உற்பத்தி பண்ணும் முதலாளியுடன் நீங்கள் இணைந்து போகணும் இல்லை மிஞ்சிய சோத்தை போட்டு ஊர் போல் வளர்க்க வெளிகிட்டால் நாய்க்கு சுகமில்லாமல் வந்துவிடும் நாய் வளர்க்கும் காலம் மட்டும் நாய் உணவு முதலாளிக்கு நீங்கள் அடிமை அது போல் ஊர் மாட்டு இனத்தை அழிப்பதுக்கு ஜல்லிகட்டு தடை போட்டால் வெளிநாட்டு மாடு இலகுவாக பரவி விடும் பின்பு அதற்க்கு தேவையான உணவு உற்பத்தி செய்பவர்களிடம் மறைமுகமாக அடிமைபடவேண்டி வரும் அத்துடன் அந்த jc மாடுகள் பராமரிப்பு செலவு கூட.

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல

இந்த கருத்து சிரிக்க வைக்குது இப்படியெல்லாம் ஜோக் அடிக்க எப்படி உங்களால் சுய சிந்தனை உள்ளவர்கள் இப்படி அடிக்க மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

5 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

மாட்டுக்கும் மனிதர்போன்ற உணர்ச்சிகள்தான் உண்டு என்பது போன்ற புரிதலில் வெளிப்படுவதுதான் இத்தகைய கருத்துகள். அந்த மாடுகள் ஒரு நாள் இப்படி ஓடுகின்றன. மிகுதி 364 நாட்களும் இது போன்ற எதுவும் நடப்பதில்லை.

அப்படிப் பார்த்தால் மேலை நாடுகளில்கூட காவல்துறையினர் குதிரைகள் மீது ஏறி பயணிக்கிறார்கள் தினந்தோறும். அது சகிக்கமுடியாத வன்கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்த்தால் பல  உயிரினங்கள் மனித விளையாட்டுகளில்  துன்புறுத்தப் படுகிறது. மனிதனை மனிதன் அடிப்பது- குத்துச் சண்டை, உடனும் இல்லாவிட்டாலும், இதன் விளைவுகள் பாரதூரமானவை. ஏன் தடை செய்ய வில்லை என கேள்வி கேட்க முடியுமா? பல பண முதலாளிகளின் மனிதக் கட்டு. 

தமிழர்கள் (இந்துக்கள்) மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. பசு தெய்வத்திற்கு ஈடானது. பண்டைய  நாகரிக வளர்ச்சியில் பசுவின் பங்கு அளப்பரியது. அதன் இனப் பெருக்கம் காளை மாடு இல்லாமல் நடக்காது. காளை உழவுக்கு, ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல இனப் பெருக்கத்துக்கும் முக்கியமானது. ஜல்லிக் கடடை நிறுத்தி விட்டால், காளைகளை வளர்ப்பது குறைந்து விடும். இதன் மூலம் உள்ளூர் பசுக்களின் உற்பத்தியும் குறைய வாய்ப்பு உள்ளது. ஊசி மூலம் உற்பத்தி  செய்யலாம், இது உழவர்களின் கையில் இல்லை. பசு இனப்பெருக்கம் பெரிய கொம்பனிகளின் கைகளில் போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில சொல்லறதுக்கு என்ன இருக்குது.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றான் தீர்மானிக்க முடியாது.எனது முழுமையான ஆதரவு எப்பவும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவும் இல்லை.. மணியும் இல்லை ..

 

gingee_fort_16_08_14_127.jpg

எங்கட வீட்டில் 50 மாடுகள் இருந்தன  போக 20 எருமை மாடுகள் .. எப்படி அழிந்தது எல்லாம் ..? வனத்துறை பாதுகாப்பு சட்டம் .. விளையாட்டில் வெற்றி பெற்ற மாடுகளின் கழுத்தில் ஒரு மணியை கட்டி போடுவம் ... அவனுக்கு ராஜா என்று பெயர் வைத்து அழைப்போம் .. கும்பலாக காட்டிற்குள் விடியற்காலையில் அனுப்பிவிட்டால் அந்தி சாயும் நேரம் அந்த மணியின் ஒசை கேட்டு திரும்ப அழைத்து வருவம் ..அந்த முழு நாளுக்கும் மற்ற மாடுகளின் பாதுகாப்பிற்கு ராஜாதான் கேரண்டி .. இடையில் சிலது நரி அடித்தது . குள்ள நரி அடித்தது என்று விட்டு போட்டாலும் கூட .. இயற்கை சுழற்சி என்று விடுவம்.. ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தது .. இன்று என்ன நிலைமை ?

டிஸ்கி :

அட முட்டாள் பய மக்களா ! நீங்கதான் வனவிலங்கு பட்டியிலில் சேர்த்து போட்டீர்கள்  அல்லவா ..?அப்போ ஒரு வன விலங்கு தன்னுடய வனபகுதியில் மேய்ச்சலுக்கு செல்வதில் என்ன குறை கண்டு கொண்டீர்கள் ..? ஒரு மாட்டிற்கு வனபகுதியில் மேய்வதற்கு ஏன் தினம் ரூபாய் 50 லஞ்சம் கேட்கிறீர்கள் .. ? !@#$%^&*()

 

Link to comment
Share on other sites

16 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் யதார்த்தம் வேறானது.

வலிமை பெற உருவான பயிற்சிகள் அனைத்தும் சில கடின செயற்பாடுகளைக் கொண்டவையே! அவற்றை கொடுமைப்படுத்தல் என்று சொல்லிவிட முடியாது.

மிருக கொடுமைகள் பற்றி விவாதிப்பவர்கள் சகல மாமிச உணவுகளையும், பால் முட்டை முதலான உணவுப் பொருட்களையும்  தவிர்த்துவிட்டு விவாதிக்க வேண்டும். தயாரா?

இந்த பீட்டா அமைப்பினர் KFC முன்னாலோ, இறைச்சிக்கடைகள் முன்னாலோ, மீன் சந்தைகளின் முன்னாலோ ஆர்ப்பாட்டம் செய்வதில்லை!

Link to comment
Share on other sites

ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்தாது.

இங்கு இரண்டு விடயங்கள்

ஒன்று இந்து 'மதம்' பிடித்தவர்கள் தமது ஆதிக்கத்தை தமிழகம் மீது காலம் காலமாக திணிக்க முயல்வது தொடர்ச்சியான அத்தகைய திணிப்பின் எதிர்விளைவாக மெரீனா எழுச்சியைக் கருதலாம். 

இரண்டாவது களியாட்ட நிகழ்விற்காக இயற்கையின் இன்னொரு படைப்யை துன்புறுத்துவது. அதனை நியாயப்படுத்த பல்வேறு காரண காரியங்களை அடுக்கிக் கொண்டு செல்வது. 


ஆடு மாடுகளை உலக்கையால் அடித்து இறைச்சிக்காக கொல்வது விலங்கு உயிருடன் இருக்கும்போது அதன் கழுத்தில் துளைபோட்டு இரத்தம் எடுத்து இரத்தவறை செய்து சுவைப்பது உயிருடன் வைத்து பறவைகளின் செட்டைகளை உரித்து அவற்றை துடிக்க துடிக்க கொலைசெய்து அவற்றை உண்பது என்பவற்றுடன் ஒப்பிடும் போது ஏறுதழுவும் போது காளை மாடு படும் துன்பம் அற்பமானதே. அதனால் தான் என்னவோ நமக்கு அதன் துன்பம் தெரிவதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.