Jump to content

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2017


Recommended Posts

  • சென்றலைட்ஸ் அசத்தலாட்டம்!
சென்றலைட்ஸ்  அசத்தலாட்டம்!
 
 

சென்றலைட்ஸ் அசத்தலாட்டம்!

 

இலங்கை கிரிக்­கட் சபை­யின் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­ மொன்­றில் யாழ்ப்­பா­ணம் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து தாழ்­வு­பாடு சென்.அன்­ர­னிஸ் விளை ­யாட்­டுக்­க­ழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 48.4 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 226 ஓட்­டங் களைப் பெற்­றது. அலன்­ராஜ் 64 ஓட்­டங்­க­ளை­யும், டார்­வின் 48 ஓட்­டங்­க­ளை­யும், பிரி­ய­லக்­சன் 25 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் எட்­வேட்­சூ­ருஸ், சுயன், ஜெறோன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.
227 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத் தா­டிய தாழ்­வு­பாடு சென். அன்­ர­னிஸ் அணி 30.3 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 152 ஓட்­டங்­களை மட்­டும் பெற்று 75 ஓட்டங்களால் தோல்­வி­ய­டைந்­தது.

பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணம் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி­யின் சார்­பாக அலன்­ராஜ். 4 இலக்­கு­க­ளை­யும், டார்­வின் 3 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

http://newuthayan.com/story/56446.html

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
 
பளு­தூக்­கும் ஆசிகா – வடக்­கின் நட்­சத்­தி­ரம்!!
 
 

பளு­தூக்­கும் ஆசிகா – வடக்­கின் நட்­சத்­தி­ரம்!!

 

வடக்கு மாகா­ணத்­தில் சிறந்த விளை­யாட்டு வீரர், வீராங்­க­னை­க­ளைத் தெரிந்­தெ­டுத்து மதிப்­பு­றுத்­தும் வர்ண இரவு விருது வழங்­கும் விழா, சாவ­கச்­சேரி பொன்­விழாமண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது.

பளு­தூக்­க­லில் சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்தி தேசி­யத்­தில் தங்­கப்­ப­தக்­கம் வென்ற வீராங்­க­னை­யான வி.ஆசிகா வடக்­கின் நட்­சத்­தி­ர­மா­கத் தெரி­வா­னார். ஆசிகா உள்­ளுர் தவிர வெளி­நா­டு­க­ளுக்­கும் சென்று பதக்­கங்­களை அள்ளி வந்து யாழ். மாவட்­டத்­திற்­குப் பெருமை சேர்த்­த­வர்.

ஆசி­கா­வைத் தவிர, ரி.தனு­யன், இ.டைனி­யஸ், ஜெ.துசி­யந்­தினி, ஜெ.அனித்தா, சி.ஹெரினா, எஸ்.சங்­கவி, வி.துசாங்­கன், எஸ்.கார்­தி­கன், இ.சானு­சன், என்.திவ்­வி­ய­நாந், எஸ்.தரன் ஆகி­யோ­ரும் வர்ண விருது வழங்கி மதிப்­பு­றுத்­தப்­பட்­ட­னர்

http://newuthayan.com/story/57217.html

Link to comment
Share on other sites

  • பளுதூக்கலில் ஆசிகா தேசியத்தில் சாதனை
பளுதூக்கலில் ஆசிகா தேசியத்தில் சாதனை
 
 

பளுதூக்கலில் ஆசிகா தேசியத்தில் சாதனை

 
 

இலங்கை பளுதூக்கும் சம்மேளனம் நடத்திய பளுதூக்கல் தொடரில் பெண்கள் பிரிவில் வி.ஆசிகா புதிய சாதனையைப் பதிவு செய்து சிறந்த பளுதூக்கல் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பு டொறின்ரன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் யாழ் பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா 63 கிலோ எடைப் பிரிவில் ‘கிளிஜன்க்’ முறையில் 96 கிலோ பளுவை தூக்கி தேசியச் சாதனை யைப் பதிவுசெய்து தங்கப்பதக்கம் வென்றார்.

http://newuthayan.com/story/58234.html

  • சென்றலைட்ஸ் சம்பியனானது
சென்றலைட்ஸ் சம்பியனானது
 
 

சென்றலைட்ஸ் சம்பியனானது

 
 

கே.சி.சி.சி. விளை­யாட்­டுக் கழ­கம் அம­ரர் மயூ­ர­தன் ஞாப­கார்த்­த­மாக நடத்­திய கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் சென்­ற­லைட்ஸ் அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்தது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந் தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. சென்­ற­லைட்ஸ் அணியை எதிர்த்து ஜொலிஸ்­ரார் அணி மோதி­யது. இந்த ஆட்­டத்தில் சென்­ற­லைட்ஸ் அணி 67:43 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி ­பெற்று சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

http://newuthayan.com/story/58224.html

Link to comment
Share on other sites

  • யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இரு தங்கங்கள்
FB_IMG_1514615708524_resized-405x400.jpg

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இரு தங்கங்கள்

 

இலங்கை பளு­தூக்­கும் சங்­கத்­தி­னால் தேசி­ய­ ரீ­தி­யில் நடத்­தப்­பட்ட தொட­ரில் யாழ்ப்­பா­ ணம் மத்­திய கல்­லூ­ரிக்கு இரண்டு தங்கப் பதக்­கங்­கள் கிடைத்­தன.

கொழும்பு டொறின்­ரன் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் இடம்­பெற்­றன. இள­நி­லைப் பிரி­வி­ன­ருக்­கான பளு­தூக்­க­லில் 18 வயது ஆண்­கள் பிரி­வில் ச.சிவப்­பி­ரி­யன் 69 கிலோ எடைப் பிரி­வில் 200 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும், 20 வய­துப் பிரி­வில் எஸ்.விஸ்­ணு­காந் 77 கிலோ எடைப் பிரி­வில் 240 கிலோ பளுவைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

blank.png

https://newuthayan.com/story/59333.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.