Jump to content

தண்ணீரும் விவசாயின் கண்ணீரும்


Recommended Posts

எதனால இது எதனால 

தப்பு தப்பா தோணுது மனசுக்குள்ள 
அதுவும் மத்தியா அரசலா 
என்ன என்னமோ ஆகுது 
தல , கால் புரியாமல் ஆடுது 
ஒரு அரசு 

தமிழனா ஒதுக்க பார்க்குது 
முதல காவேரி தண்ணீரும் குடுக்க மறுக்குது 

விவசாயத்தை விவசாயிடம் இருந்து பிரிக்குது 
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குது 
பொங்கல் விடுமுறையும் பறிக்குது 

தமிழ் நாட்டுக்கு முற்று புள்ளிவைக்க துடிக்குது ..... 

தமிழர் பண்பாட்டையும் மாட்டையும் அளிக்க நினைக்குது 
இப்போ ஜல்லிக்கட்டுக்கு ஆதரிப்போம் 
என நாடகம் நடத்துகிறது 

புது புது திட்டமா திட்டுகிறது 
தமிழ் நாட்டை சுற்றி வளைக்குது 

எதனால இது எதனால 
திசை திருப்பா பார்க்குது எதனால 
விவசாயின் உயிரை குடிக்கிறது 
இன்னும் ஏதற்கு துடிக்கிறது 

எதனால இது எதனால 

மு.க.ஷாபி அக்தர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஐம்பது வருடமாக.... தமிழகத்தை ஆண்ட , தீர்க்க தரிசனமற்ற... திராவிட கட்சிகள்,
தமது குடும்ப  நலனுக்காகவும்,   சொத்து சம்பாதிக்கவும், 
மத்திய அரசிடம், குனிந்து போனதால்..... 
இன்று தமிழகத்தில், எதனையும் செய்யலாம்... என்ற துணிவு   மத்திய அரசுக்கு வருவதில் வியப்பில்லை.

இந்த வாரம் முழுக்க, தமிழகத்தில்  நடந்து வரும், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்...
இனி... அரசியல்வாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை, என்ற  முடிவுக்கு மக்கள் வந்திருப்பது...
பாராட்டுதலுக்கும், மகிழ்ச்சிக்கும்... உரிய விடயம்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே ஊழல்.

மிஞ்சி எதுவுமே செய்ய முடியாத கையறு நிலை. 

அம்மா, சின்னம்மா, பன்னீர் ஒரு பக்கம் எனில் மறுபக்கம் ஐயா, ஐயா மகள், ராசா, இன்னுமொருபுறம் அன்புமணி....

ஐயா செய்து சேர்த்து வைத்த படியால் ஸ்டாலின் பயமில்லாமல் திரிந்தாலும் உள்ளே நெருடல்.

எல்லாமே ஊழல்..

இதனிடையே ஜெயில் போனால் என்று, இப்பவே, துண்டை போடும் கணவர் நடராஜர், கூடவே அண்ணன் தினகரன் பிரச்சனை என்றவுடன் தம்பி திவாகரன்.

தமிழகம் விழிப்பது எப்போ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.