Jump to content

டெஸ்ட் போட்டிகளுக்கு குட்பை சொல்கிறாரா அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்?


Recommended Posts

டெஸ்ட் போட்டிகளுக்கு குட்பை சொல்கிறாரா அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்?

அதிரடிக்கு இன்னொரு பெயர் டிவில்லியர்ஸ். இவருக்கு 31 பந்தில் சதமடிக்கவும் தெரியும், 200 பந்துகளைச் சந்தித்து 31 ரன் எடுக்கவும் தெரியும்.  தான் சார்ந்த அணிக்கு, ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து எவ்வளவு ரன்கள் தேவையோ அதற்கேற்ப கியரை மாற்றி பேட்டிங் செய்யும் வல்லமை இவருக்கு உண்டு. மூன்று ஃபார்மெட்டுகளிலும் மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ்.

தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி தோற்றதால் ஹாஷிம் ஆம்லா கேப்டன் பதவியில் இருந்து விலக, கடந்த ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார் டிவில்லியர்ஸ். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு வேறு எந்த டெஸ்ட் தொடரையும் காயம் காரணமாக டிவில்லியர்ஸால் விளையாட முடியவில்லை. இதையடுத்து டிவில்லியர்ஸின் நீண்ட கால நண்பரும், தென் ஆப்பிரிக்க அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஃபாப் டு பிளசிஸ் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 

டிவில்லியர்ஸ்

ஃபாப் டு பிளசிஸ் தலைமையில் நியூசிலாந்து தொடரை ஜெயித்தது தென் ஆப்பிரிக்கா. அதன் பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பேட்டிங் சூப்பர் ஸ்டார் டிவில்லியர்ஸ், பவுலிங் சூப்பர் ஸ்டார் ஸ்டெயின் ஆகிய இரண்டு பேரும் காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இல்லாமலேயே அருமையாக விளையாடி டெஸ்ட் தொடரை ஜெயித்தது  தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து டு பிளசிஸ் கேப்டன்சியின் மீது எல்லோரது பார்வையும் திரும்பியது. இந்நிலையில் டிவில்லியர்ஸ் தாமே மனமுவந்து  டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், டு  பிளசிஸ் தான் கேப்டன் பொறுப்புக்குச் சரியான நபர் என்றும் முன்மொழிந்தார்.  டிவில்லியர்ஸின் கோரிக்கையை ஏற்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஃபாப் டு பிளசிஸை  நிரந்தர  டெஸ்ட் கேப்டனாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது உள்ளூரில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்றிலுமே அபாரமாக ஆடி, ஜெயித்திருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. இதையடுத்து ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. 

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக அதிகம் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதால் சோர்வு ஏற்படுவதாகவும், இதனால் எதாவது ஒரு ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாமா எனவும் தனக்கு நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறார் டிவில்லியர்ஸ், இது எப்படியோ மீடியாவில் வெளியாக, ‘ஆம், ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால்  தற்போது ஓய்வு பெறவில்லை’ என மறுத்தார் டிவில்லியர்ஸ். இந்நிலையில் இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் டுபிளசிஸ் பேசுகையில், "ஒருதின  தொடரில்  டிவில்லியர்ஸ் தலைமையில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் எங்களுக்காக டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஒரு கேப்டனாக உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனை அணியில் வைத்திருக்க வேண்டும் என்பது எனது ஆசை" எனச் சொல்லியிருக்கிறார். 

தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்  ரசல் டொமிங்கோ பேசுகையில் " டிவில்லையர்ஸுடன் உட்கார்ந்து பேச வேண்டும், அவரது எண்ணம் என்ன.. அவரது எதிர்கால திட்டம் என்ன என்பன குறித்து விரிவாக பேச வேண்டும். ஓய்வு பெறுவதா, இல்லை தொடர்ந்து விளையாடுவதா  என்பதை டிவில்லியர்ஸ்  தான் முடிவெடுக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருக்கிறார். 

டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போதைக்கு தென் ஆப்பிரிக்க அணியை  சாம்பியன்ஸ் டிராஃபியில் வழிநடத்தவும், 2019 உலகக்கோப்பையில் வழிநடத்தி கோப்பையை ஜெயித்து தருவதும் டிவில்லியஸின் திட்டம்.  டிவில்லியர்ஸுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு பிறகு அவர் சொந்த ஊரைப் போல கருதுவது பெங்களூரைத் தான். மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவதன் மூலம் பணப்பயன்களும் ஏராளம் என்பதால் ஐ.பி.எல் போட்டிகளை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டிகளிலும் விளையாடுவதற்கு டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் ஆடினால், வருடத்தின் பாதி நாட்கள் தென் ஆப்பிரிக்க அணியுடன் நேரம் செலவிட முடியாது, இதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது. மேலும் தற்போது தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்குள் டிவில்லியர்ஸ் வந்தால், நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் டுமினி வழிவிட வேண்டியதிருக்கும் எனபதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்த விஷயங்கள் டிவில்லியர்ஸ் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன, அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம் என தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

http://www.vikatan.com/news/sports/77892-is-ab-devilliers-going-to-quit-test-cricket.art

Link to comment
Share on other sites

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை: டிவில்லியர்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகியிருப்பதாகவும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

 
 
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை: டிவில்லியர்ஸ்
 
ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்று சொல்லப்படும் ஏபி டிவில்லியர்ஸ் காயம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் டிவில்லியர்ஸ் விளையாடுகிறார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கு திரும்புவது பற்றி அவர் கூறுகையில், “டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போது திரும்புவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. என் மனதில் சில விஷயங்கள் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் உலகக்கோப்பையை நாங்கள் வெல்லவில்லை என்பதும் அதில் ஒன்று. எனவே 2019 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.

ஒவ்வொரு வடிவத்திலும் நான் சீரிய முறையில் ஆட முடியாது. அதனால்தான் நியூசிலாந்துக்கு எதிராக விலகினேன். ஒருநாள் போட்டிகளுக்கு அங்கு ஆடச் செல்வேன். ஆனால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை.

ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு 2019 உலகக்கோப்பைதான் முக்கியமாகத் தெரிகிறது. கோப்பையை வெல்வதை நாங்கள் உறுதி செய்யவேண்டும்” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/17201227/1062688/Not-retiring-from-Test-cricket-unavailable-for-New.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.