Jump to content

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3


Recommended Posts

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3

 

நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர்கள் தமிம் இக்பால், மொமினுல் சிறப்பாக விளையாடியபோதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போனது.

 
 
தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3
 
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்ய, வங்காளதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் இம்ருல் கயஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.

தமிம் இக்பால் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொகமதுல்லா 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இன்றைய போட்டியின்போது விட்டுவிட்டு மழை பெய்ததால் பல ஓவர்கள் பாதிக்கப்பட்டன. இறுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் 40.2 ஓவர்களில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 64 ரன்னுடனும், சாகிப்-அல்-அசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/12133709/1061734/Rain-spoils-Mominul-and-Tamims-efforts.vpf

Link to comment
Share on other sites

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ‌ஷகிப்-அல்-ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரகிமின் அபார ஆட்டத்தால் வங்காள தேசம் அணி ரன்கள் குவித்தது.

 
 
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு
 
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

வங்காளதேசம் 3 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. மொமினுல் ஹகி 64 ரன்னிலும், ‌ஷகிப்-அல்-ஹசன் 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. மொமினுல் ஹசி 64 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ‌ஷகிப் அல்-ஹசன்- முஷ்பிகுர் ரகிம் ஜோடி சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து பந்து வீச்சை நொறுக்கி ரன் குவித்தது. ஷகில்-அல்-ஹசன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு முதல் இரட்டை சதமாகும்.

முஷ்பிகுர் ரகிம் 159 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 359 ரன் சேர்த்தனர். வங்காளதேசம் 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 521 ரன் குவித்து இருந்தது.

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை ‌ஷகிப்-அல்-ஹசன் படைத்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13111145/1061927/Bangladesh-521-runs-against-NZ-first-test.vpf

Link to comment
Share on other sites

ஷாகிப் 217, முஷ்பிகுர் 159; சாதனை கூட்டணி: நியூஸி. பவுலிங்கைப் புரட்டிய வங்கதேசம் 542/7

 

ஷாகிப் இரட்டைச் சதம், முஷ்பிகுர் ரஹிமுடன் 359 ரன்கள் கூட்டணி. | படம். கெட்டி இமேஜஸ்.
ஷாகிப் இரட்டைச் சதம், முஷ்பிகுர் ரஹிமுடன் 359 ரன்கள் கூட்டணி. | படம். கெட்டி இமேஜஸ்.
 
 

வெலிங்டனில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 542 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வருகிறது.

இடது கை ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 276 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 217 ரன்கள் எடுக்க, முஷ்பிகுர் ரஹிம் 260 பந்துகளில் 23 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 159 ரன்கள் எடுக்க, இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 359 ரன்களைச் சேர்த்து சாதனை புரிந்துள்ளனர், வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச கூட்டணி ரன்கள். 542 ரன்கள் என்பது வங்கதேசத்துக்கு வெளியே இரண்டாவது பெரிய ஸ்கோராகும்.

ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச தனிப்பட்ட ரன்களாகும். பிட்ச் பேட்ஸ்மென்களின் சொர்க்கமான நிலையில் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து கிட்டத்தட்ட 83 ஓவர்களை விளையாடி 359 ரன்களைச் சேர்த்தனர். ஷாகிப் அல் ஹசன் ஸ்ட்ரைக் ரேட் 78 ரன்கள் என்பதும் இரட்டைச் சதம் எனும்போது மிகப்பெரிய சாதனையே.

டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர், கொலின் டி கிராண்ட்ஹோம் இருந்தும் ஷாகிப், முஷ்பிகுர் இணையை உடைக்க முடியவில்லை.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வங்கதேசம் தமிம் இக்பாலின் 50 பந்து 56 ரன்களுடன் 154/3 என்று இருந்தது, மொமினுல் ஹக் 64 ரன்களுடனும் ஷாகிப் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று காலை சவுதி பந்தை மொமினுல் எட்ஜ் செய்து 64 ரன்களில் வெளியேறினார். 160/4.

அதன் பிறகு நியூஸிலாந்து பந்து வீச்சு பிசுபிசுத்துப் போக 61 ஓவர்களில் 273 ரன்களை விட்டுக் கொடுத்தது. முஷ்பிகுர் தொடக்கத்தில் ஏகப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்டு அடிகள் வாங்கினார், விரல்களை பந்து ‘பச்’ என்று அடித்தது. ஆனால் அவர் தைரியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கிடையே புல் லெந்த் பந்துகளை அவர் பவுண்டரிகளாக மாற்றினார். ஆஃப் திசையில் கவர், மிட் ஆஃப், பாயிண்ட், லெக் திசையில் ஆன் டிரைவ், பிளிக், என்று அவர் கடைசியில் பாயிண்டில் அடித்த ஷாட் மூலம் தனது 4-வது சதத்தை எடுத்தார்.

ஆனால் மறுமுனையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் எழும்பவில்லை இதனால் அவர் புல், கட் ஷாட்கள் என்று அசத்தினார். 150 பந்துகளில் 100 ரன்களை ஷாகிப் எடுத்தார். வங்கதேச கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் ரன்கள் பட்டியலில் ஷாகிப் தற்போது 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

191 பந்துகளில் 150 ரன்களை 22 பவுண்டரிகளுடன் எட்டிய ஷாகிப் அல் ஹசன் 253 பந்துகளில் 30 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்தார். கடைசியில் 217 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னரிடம் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் முன்னதாக வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து போல்ட்டிடம் வீழ்ந்தார். ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் வாக்னர் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் சபீர் ரஹ்மான் 10 ரன்களில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டாஸ்வென்று வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்ததற்கு வில்லியம்சன் வருந்தியிருப்பார் என்பதோடு முஷ்பிகுர் ரஹிம் 28 ரன்களில் இருந்த போது 2-வது ஸ்லிப்பில் ஜீத் ராவல் விட்ட கேட்ச் மற்றும் ஷாகிப் அல் ஹசன் நேற்று 4 ரன்களில் இருந்த போது மிட்செல் சாண்ட்னர் எளிதான வாய்ப்பையும் கோட்டை விட்டதை நினைத்து நிச்சயம் கோபமடைந்திருப்பார்.

வங்கதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நாளாக இது அமைந்துள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சொர்க்கமானாலும் வங்கதேச ஸ்பின்னர்கள் நியூஸிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மெஹதி ஹசன் மிராஸ் உள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஷாகிப்-217-முஷ்பிகுர்-159-சாதனை-கூட்டணி-நியூஸி-பவுலிங்கைப்-புரட்டிய-வங்கதேசம்-5427/article9478550.ece

Link to comment
Share on other sites

வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர்: நியூசிலாந்து பதிலடி

 

வெலிங்கடனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

 
 
 
வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர்: நியூசிலாந்து பதிலடி
 
வங்காள தேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேச அணி சாஹிப் அல் ஹசன் (217) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் (159) ஆகியோரின் அபார ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 542 ரன்கள் குவித்திருந்தது, சபிர் ரஹ்மான் 10 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சபிர் ரஹ்மான் அவுட்டாகாமல் 54 ரன்கள் எடுக்க வங்காள தேசம் அணி 152 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 595 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியின் வாக்னர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

BBD291E3-81F0-41D4-B91D-D8439797212C_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கம்ருல் இஸ்லாம் ரபி

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் லாவல் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லாதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவருக்கு துணையாக கேப்டன் வில்லியம்சன் 53 ரன்னும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் சேர்த்தனர்.

334AFEFB-FAF1-4BE7-B5AF-DF1A54B4F988_L_s
விக்கெட் வீழ்த்திய தஸ்கினை பாராட்டும் சக வீரர்கள்

நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 77 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்துள்ளது, லாதம் 119 ரன்களுடனும், நிக்கோல்ஸ் 35 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளதால் வங்காள தேச அணியின் ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14143759/1062134/wellington-test-bangladesh-595-8-newzealand-292-for.vpf

Link to comment
Share on other sites

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு

 

வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது

 
 
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு
 
நியூசிலாந்து - வங்காள சேதம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷகிப்-அல்-ஹாசன் இரட்டை சதமும் (217 ரன்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ரன்) அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சதம் அடித்தனர். அவர் 119 ரன்னும், நிக்கோலஸ் 35 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது. டாம் லாதம் 177 ரன்கள் குவித்தார். 56 ரன்கள் முன்னிலையில் வங்காளசேதம் 2-வது இன்னிங்சை ஆடியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15135938/1062195/NZ-539-score-against-bangladesh-1st-test-match.vpf

Link to comment
Share on other sites

முதல் இன்னிங்ஸில் 595 ரன் குவித்தும் தோல்வியில் சாதனை படைத்த வங்கதேசம்! #NZvsBAN

உள்ளூரில் மட்டுமே புலிகள் என அறியப்பட்டு வந்த வங்கதேசப் புலிகள் அயல் மண்ணிலும் பட்டையைக்  கிளப்பத் தொடங்கியிருக்கின்றனர். வங்கதேசம்  நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில்  தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சன் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

வங்கதேசம் நியூசிலாந்து அணி இடையேயான டெஸ்ட் போட்டி

வேகப்பந்துக்கும், பேட்டிங் செய்வதற்கும் சொர்க்கபுரியாக  திகழக்கூடியவை நியூசிலாந்து மைதானங்கள். நியூஸி மண்ணில் அந்த  அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது லேசுப்பட்ட காரியம் கிடையாது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தீ,  நீல் வாக்னர், மிச்சேல் சான்டனர், காலின் டி கிராண்ட்ஹாம் என பிரதான பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றனர். மெஹந்தி ஹாசன், டஸ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ரபி, சுபாசிஸ் ராய் ஆகிய பந்துவீச்சாளர்கள் வங்கதேசம் பக்கம் இருந்தனர். இதில் டஸ்கின் அகமதுவைத் தவிர வேறு யாருக்கும் ஒரளவு கூட சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கிடையாது. இதனால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்திவிடமுடியும் என நம்பிக்கையோடு களமிறங்கியது நியூசிலாந்து.

முதல் நாள் கடுமையான புயல் வீசியதால், கிரிக்கெட் ஆட்டம் அடிக்கடி தடைபட்டது. அன்றைய தினம் வெறும் 40 ஓவர்கள் விளையாட முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 154/3 என்ற நிலையில் இருந்தது வங்கதேசம். மறுநாள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இணைந்து ஒரு அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவரையும் பிரிப்பதற்குள் மண்டை காய்ந்தது நியூசிலாந்து. இருவரும் சீராக பவுண்டரி விளாசிக்கொண்டே இருந்தனர். ஐந்து  ரன்னுடன் அன்றைய தினம் ஆட்டத்தை தொடங்கிய ஷகிப்  அல் ஹசன் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்தார். முஷ்பிகுர் ரஹீமும், ஷகிப்பும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். முஷ்பிகுர் ரஹீம் 260 பந்துகளைச் சந்தித்து, 23 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 159 ரன்களைக்  குவித்த நிலையில்  அவுட் ஆனார். அதற்கடுத்த சில ஓவர்களிலேயே ஷகிப்பும் நடையை கட்டினார். 276 பந்துகளில் 31 பவுண்டரிகள் உதவியுடன் 217 ரன்களை எடுத்து அவுட் ஆனார்  ஷகிப். டாப் ரேட்டிங் அணியுடனான டெஸ்ட் போட்டியில், அதுவும் அந்த அணியின் சொந்த மண்ணில் வங்கதேச வீரர் ஒருவர் இரட்டைச் சதம் எடுப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

வங்கதேசம் அணியைச் சேந்த ஷகிப் அல் ஹசன் இரட்டைச் சதம் விளாசினார்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 543/7 என இருந்தது வங்கதேசம். இரண்டாவது நாள் மட்டும் 389 ரன்களை அதிரடியாகச் சேர்ந்திருந்தது வங்கதேசம். மூன்றாவது நாள் வங்கதேச வீரர் சபீர்  ரஹ்மான் அரை சதம் எடுத்த பிறகு 595/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது வங்கதேசம்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, மெதுவாக இன்னிங்ஸை ஆரம்பித்து. தொடக்க வீரர் டாம் லாதம் நங்கூரமிட்டு ஒரு பக்கம் ரன்களை குவித்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிக்கோலஸ், வில்லியம்சன், சான்ட்னர் ஆகியோர்  தங்கள் சார்பாக அரைசதம் விளாசினார். லாதம் 177 ரன்கள் எடுக்க, நியூசி 539 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை ஆரம்பித்தது வங்கதேசம். இன்னும் இருநூறு ரன்களை சேர்த்திருந்தால் நியூசிலாந்துக்கு எளிதாக நெருக்கடியை தந்திருக்க முடியும் என்ற நிலையில் வங்கதேசம் சொதப்ப ஆரம்பித்தது. நீல் வாக்னர், சான்ட்னர்  சுழற்பந்து வீச்சில் வங்கதேசம் சுருண்டது. முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்த ஷகிப், இந்த இன்னிங்சில் டக் அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹீம் காயமடைந்து ரிட்டையர்டு ஆனார். சபீர் ரஹ்மான் மட்டுமே அரைசதம் கடந்தார். இதையடுத்து 160 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது வங்கதேசம். 

Tom latham smashes century against bangladesh

217  ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் பிடித்த நியூசிலாந்து, டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல  ஆடியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தார்கள். குறிப்பாக கேன் வில்லியம்சன் 90 பந்துகளில் 15 பவுண்டரியோடு 104 எடுத்து நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு வித்திட்டார். 

வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விடுவது வங்கதேசத்துக்கு வாடிக்கையாக இருக்கிறது. வெற்றி மிதப்பில் தான் இந்த போட்டியையும் இழந்திருக்கிறது  வங்கதேசம்.

கடைசி நாளில் மேஜிக் வெற்றி  பெற்ற நியூசிலாந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே சமயம் முதல் இன்னிங்சில் 595  ரன் குவித்த பிறகு ஒரு அணி தோல்வி அடைவது வரலாற்றில் இது தான் முதல் முறை.  122 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் எடுத்தும், இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவிடம் இருந்த அந்த மோசமான சாதனையை 122 ஆண்டுகளுக்கு பிறகு தனது  வசமாக்கியிருக்கிறது வங்கதேசம்.

http://www.vikatan.com/news/sports/77901-bangladesh-lost-the-match-after-scored-595-runs-in-the-first-innings.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.