Jump to content

சசிகலா திறக்கும் முதல் சிலை இது! அ.தி.மு.க.வினரை திருப்திப்படுத்த புது திட்டம் #VikatanExclusivePicture


Recommended Posts

சசிகலா திறக்கும் முதல் சிலை இது! அ.தி.மு.க.வினரை திருப்திப்படுத்த புது திட்டம் #VikatanExclusivePicture

MGR_Statue_12059.jpgஜெயலலிதா திறப்பதாக இருந்த எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை திறப்பால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மற்றும் அதிருப்தி அ.தி.மு.க.வினரின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள். 

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகி விட்டார் சசிகலா. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகை நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறந்து வைத்தார். அடுத்து, எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். 

இதுகுறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், விழா ஏற்பாட்டாளர் நடிகர் ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக் ஆகியோர் கூறுகையில், "எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சிலையை அம்மா (ஜெயலலிதா) திறக்க அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை. இதனால் எம்.ஜி.ஆரின் சிலையை சின்னம்மா திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் ராமாவரம் எம்.ஜி.ஆரின் இல்லத்துக்கு வருகிறார். அந்த வளாகத்தில் அமைந்துள்ள சிலையை திறந்து வைத்தப்பிறகு, எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். இதுதொடர்பாக சின்னம்மாவை சந்தித்து பேசி உள்ளோம். இந்த விழாவில் தமிழக அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதையடுத்து அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பிறகு மாலையில் இன்னிசை, கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பிரபல மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம்" என்றனர். 

இதுகுறித்து கார்டன் வட்டாரங்கள் கூறுகையில், "எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சசிகலாவே அந்த சிலையை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும், சசிகலா, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பிறகு அனைவருடனும் புகைப்படமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/77638-sasikala-to-inaugurate-mgrs-statue.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.