Jump to content

இனவாதத்தை தூண்டாமலிருப்பது கடினமாயின் கடலில் குதியுங்கள்


Recommended Posts

இன­வா­தத்தை தூண்­டா­ம­லி­ருப்­பது கடி­ன­மாயின் கடலில் குதி­யுங்கள்

mano2-deb8dc752211f9c8ea4e4677da4a9b9d22dd0cea.jpg

 

இன­வா­தி­களை வலுப்­ப­டுத்­திய காலம் மறைந்­து­விட்­டது என்­கிறார் மனோ
(க.கம­ல­நாதன்)

தமிழ், சிங்­கள, முஸ்லிம் என இன­வா­திகள் எவ ராக இருப்­பினும் அவர்­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாது, அவர்­களை வலுப்­ப­டுத்­திய காலம் மறைந்து போய்­விட்­டது. எனவே, இன­வா­திகள் நாட்டை சீர­ழிக்க இட­ம­ளிக்கக் கூடாது.

அவ்­வாறு இன­வாதம் பேசி நாட்டை சீர­ழிக்­காமல் இருப்­பது தமக்கு கடினம் என்று நினைப்­ப­வர்கள் கடலில் சென்று குதி­யுங்கள் என தேசிய சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். 

ஹெக்டர் கொப்­பே­க­டுவ கம­நல ஆராச்சி மத்­திய நிலை­யத்தின் கேட்போர் கூடத்தில் அர­ச­கரும் மொழிகள் அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற 50 கொழும்பு மாவட்ட பாட­சா­லை­களின் நூல­கங்­க­ளுக்கு புத்­த­கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்று ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணாக அர­சாங்­கத்­தினை மாற்­றி­ய­மைக்கும் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனால் நாம் தொடர்ந்தும் அர­சி­யலில் நீடிக்கும் நோக்கில் மக்கள் இருக்­கு­மாறு கூறி­னாலும் உரிய தரு­ணத்தில் அர­சியல் வாழ்க்­கைக்கு விடை கொடுப்பேன்.

காரணம் புதி­ய­வர்­களை அர­சியல் களத்தில் உள்­நு­ழைக்கும் போது மாத்­திரம் தான் புதிய விட­யங்கள் உரு­வாகும். அதனால் தான் இந்த நாட்­டினை பிளவு படா­தா­கவும் ஒற்­றுமை மிக்­க­தா­கவும் மாற்ற முடியும்.

வர­லாற்றில் இந்த விட­யத்தில் தான் நாம் தவ­றி­ழைத்தோம். எனவே அந்த விட­யங்­களை மீள் திருத்­தி­ய­மைக்க முயற்­சிக்­கின்ற நாம் மீண்டும் அந்த தவ­று­களை செய்ய எவ­ருக்கும் இட­ம­ளிக்க கூடாது. எனவே இனம், மதம் உள்­ளிட்ட விட­யங்­களை கடந்து இலங்­கையர் என்ற கூறையின் கீழி­ருந்து நாம் செயற்­பட வேண்டும்.

கடந்த காலங்­களில் இலங்­கையர் என்­ப­தி­லி­ருந்து விலகி தமது தனிப்­பட்ட இன அடை­யா­ளங்­களை முன்­னிலை படுத்திச் செயற்­பட முனைந்­த­மை­யி­னா­லேயே பல நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன.தற்­போது இலங்­கையில் 19 மொழி­களை பேசு­கின்ற மக்கள் வாழ்­கின்­றனர் பிர­தான மொழிகள் நான்கு உள்­ளன. இவர்­களின் தனித்­து­வங்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு இலங்­கையர் என்று வாழ­வேண்டும்.

எவ்­வா­றா­யினும் தற்­போ­துள்ள பெரி­ய­வர்­களை திருத்­து­வதும் அவர்­க­ளது எண்­ணப்­பா­டு­களில் மாற்றம் செய்­வதும் கடி­ன­மாகும் அதனால் அவர்­களை விடுத்து எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சிறந்த பாடங்­களை கற்­பித்து அவர்­களை வலுப்­ப­டுத்த வேண்­டி­யதே மிக அவ­சி­ய­மா­ன­தாகும்.

இல்­லா­விடின் நாடு துண்­டாகி போகும் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இடம்­பெ­றாது.

அதனால் தற்­போது எமது நாட்டில் உள்ள தமிழ,முஸ்லீம்,சிங்­கள இன­வா­தி­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­வ­தில்லை தமிழ் அவ­ரு­களை வலுப்­ப­டுத்தி காலம் மறைந்­து­விட்­டது. எனவே தொடர்ந்தும் நாட்டை சீர­ழிக்கும் நோக்கில் இன­வாதம் பேசு­ப­வர்கள் அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து விடு­பட வேண்டும். அவ்­வாறு முடி­யா­தாயின் இன­வாத்­தினை பரப்­பாமல் இருக்க முடி­யா­தாயின் கடலில் குதி­யுங்கள்.

இவர்கள் அம்­பாந்­தோட்டை விவ­கா­ரத்­தை­னயும் பெரி­து­ப­டுத்தி உரு­வாக்­கப்­ட­வுள்ள புதிய தொழில் வாய்ப்­புக்­களை தடுக்கும் முயற்­சியில் இவர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். அம்­பாந்­தோட்டை மக்­க­ளுக்கு அந்த அபி­வி­ருத்தி அவ­சியம் இல்லை எனின் அதனை கொழும்பில் வாழும் மக்­க­ளுக்கு செய்­துக்­கொ­டுக்க வேண்டும்.

அதனால் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு செய்­யப்­படும் சேவை­க­ளு்­ககு முட்­டுக்­கட்­டை­யாக எவரும் செயற்­ப­டக்­கூ­டாது. அதேபோல் கடந்த காலங்­களில் வடக்கில் உள்ள தமி­ழர்­களும் கிழக்கில் உள்ள சிங்­க­ள­வர்­களும் தமது பிர­தி­நி­தி­க­ளாக செய்த அர­சி­யல்­வா­திகள் தமிழ் சிங்­கள விவ­கா­ரங்­களை பெரி­து­ப­டுத்தி தமிழர் தமிழ் மாத்திரம் தான் கற்க வேண்டும் சிங்களவர் சிங்களம் மாத்திரம் தான் கற்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

அவர்களின் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆங்கிலம் கற்பித்தனர். அதனால் அவர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட மக்கள்தான் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். அதனால் எதிர்காலத்திலும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.