Jump to content

சொத்துக் குவிப்பு வழக்கு! - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்?


Recommended Posts

சொத்துக் குவிப்பு வழக்கு! - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்?

 

ஜெயலலிதாவின் 20 ஆண்டு காலத் துயரம், சொத்துக் குவிப்பு வழக்கு. 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவைத் துரத்தத் தொடங்கிய இந்த வழக்கு, அவர் மரணமடையும் இறுதி நொடி வரை கொடுங்கனவாக அவரை இறுகப் பற்றியிருந்தது. 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணம் மட்டுமே, அந்தக் கொடுங்கனவில் இருந்து அவரை விடுதலை செய்தது. அதையடுத்து, தற்போது ஜெயலலிதாவின் இடத்துக்கு வந்துள்ள, சசிகலாவுக்கு அந்த வழக்கு பெருந்துயரமாக மாறி நிற்கிறது. ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லாத நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு உருவாக்கப்போகும் விளைவுகள் வீரியமானவை. உச்சநீதி மன்றம் அந்த வழக்கில் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்துத்தான், நேரடி அரசியலில் முதல் அடி எடுத்துவைத்துள்ள ‘சசிகலாவின் பயணம் வெற்றிகரமாக இருக்குமா... அல்லது வீழ்ச்சியை நோக்கிச் செல்லுமா?’ என்பதைத் தீர்மானிக்க முடியும்.

p38.jpg

தண்டனையும்... விடுதலையும்...

தி.மு.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அந்த வழக்கின் விபரீதம் ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது. அதனால்தான், அவர் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயன்று 18 ஆண்டுகளாக அந்த வழக்கை இழுத்தடித்தார். ஒருவழியாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கினார். ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடன் வேதா இல்லத்தில் ஒன்றாக வசித்த சசிகலா, இளவரசி, ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள்’ என்று அறிவித்தார். அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும், 22 நாட்கள் ஜாமீன் கிடைக்காமல் சிறைக்குள் இருந்தனர். ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. பிறகு, ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா, தன்னைத்தானே வீட்டுச் சிறையில் மூன்று மாதங்கள் அடைத்துக்கொண்டார். இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நீதித்துறை வரலாற்றில் நிரந்தர கேலியாக மாறும் அளவுக்கு ஒரு தீர்ப்பை வழங்கினார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து அவர் வழங்கிய அந்தத் தீர்ப்பில், நீதிபதி குமாரசாமி அடுக்கிய காரணங்களைக்கூட ஏற்றுக்கொள்வதற்கு வழி இருக்கிறது. ஆனால், அதையொட்டி, அவர் போட்டுக் காண்பித்தக் கணக்கை ஏற்பதற்குத்தான் எப்படிக் கூட்டிப் பார்த்தாலும் வழி இல்லாமல் போனது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் இருந்த கணிதப்பிழையைப் பிரதானக் காரணமாக்கி, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2015 ஜூன் 23-ம் தேதி, மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் (பி.சி.கோஷ்), அமிதவ் ராய் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூன் 7-ம் தேதி இறுதி விசாரணை முடிந்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இதற்கிடையில், 2016 செப்டம்பர் இறுதி வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என செய்திகள் பரவின.  அதையடுத்து வந்த சில தினங்களில், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார் (செப்டம்பர் 22-ம் தேதி). அதன்பிறகு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் தேதியை அறிவிக்கவே இல்லை. ஆனால், சமீபமாக உச்ச நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து வெளிவரும் தகவல்கள், ஜனவரி மாதத்திலேயே தீர்ப்பு வெளியாகிவிடும் என்று சொல்கின்றன. தீர்ப்பு எப்படி வெளியாகும் என்பதை யூகத்தின் மூலம் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது.

p38a.jpg

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமா?

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக் கறிஞர் ஆச்சார்யா வாதாடினார். அவருடைய வாதத்தைக் கேட்ட நீதிபதிகளில் ஒருவரான பி.சி.கோஷ், “வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமா? ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அந்த நபர் அவருடைய உறவினரிடம் இருந்து கொஞ்சம் கடன் வாங்கி, வேறு தொழிலில் அதை முதலீடு செய்து, அதன் மூலம் சொத்துக்கள் வாங்கினால், அது குற்றமா? அதைக் குற்றமாகக் கருத முடியாது. கடனாக வாங்கிய பணத்தை, முதலீடு செய்யும் தொழிலும், அதன்மூலம் அவர்கள் ஈட்டும் வருமானமும் தவறான வழியில் இருந்தால் மட்டுமே அதைக் குற்றமாகக் கருத முடியும்” என்றார். அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆச்சார்யா அப்போதே தக்க விளக்கமும் அளித்தார்.

பணம் வந்த வழியே தெரியவில்லை

நீதிபதி பி.சி.கோஷ் சொன்ன உதாரணத்தை ஏற்றுக்கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்துள்ளனர். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு, வருமானவரியை மட்டும் செலுத்திவிட்டால், அந்த வருமானம் நல்ல வருமானம் என்றாகாது. வருமானவரித் துறை, நீங்கள் செலுத்தும் வரியை வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால், ‘அது எந்த வழியில் வந்தது? வந்த வழி முறையானதா, முறையற்றதா?’ என்பது பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாது. அந்தக் கேள்விகளை அரசுத்தரப்புதான் எழுப்பும். அதற்கான பதிலை நீதிமன்றங்கள் முடிவு செய்யும். அந்த வகையில் விசாரணை நீதிமன்றம், அது தவறான வழியில் வந்த பணம் என்று தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப் பட்டவர்களால், அது சரியான வழியில்தான் வந்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை” என்றார்.

p38b.jpg

மூன்று வழிகளில் தீர்ப்பு!

தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே சுட்டிக்காட்டி உள்ளார். ‘‘இந்த வழக்கில் மூன்று வழிகளில் தீர்ப்புச் சொல்ல லாம். அவை, 1. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்யலாம். 2. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து, விசாரணை நீதிமன்றத்தின் (குன்ஹா வழங்கிய தீர்ப்பை) தீர்ப்பை உறுதி செய்யலாம் 3. மீண்டும் இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, விசாரணை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளை மறுவிசாரணைக்கு உட் படுத்தலாம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

4-வது வழி இருக்கிறதா?

இதைக்கேட்ட நீதிபதிகள், ‘‘நான்காவது வழி ஏதாவது இருக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘‘இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு அல்ல. மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு. அதை மட்டும் கருத்தில்கொண்டால் இந்த மூன்று வழிகள்தான் உள்ளன’’ என்று பதிலளித்தார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், உங்களின் எதிர்பார்ப்பு என்ன? என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்துக்கு நேர் எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து, விசாரணை நீதிமன்றத்தின் (குன்ஹா வழங்கிய) தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்’’ என்றார்.

மூன்றில் எது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
 

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.