Jump to content

யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை


Recommended Posts

யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை
 
 
யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை
யாழில் மாமரச் செய்கையை ஊக்குவிக்க மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளததாக. யாழ். மாவட்ட விவசா யத் திணைக்களத்தின் மேற்பார்வையாளர் இளங்கோபன் தெரிவித்தார். இது பற்றி அவர்மேலும் தெரிவிக்கையில்
 
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாமரச்செய்கையை இவ் வருடம் ஊக்குவிக்கும் முகமாக மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 440 மாமரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டுள்ளது.மாமரமானது 25க்கு 25 அடி என்ற இடைவெளியில் நடுகை செய்யப்பட்டு பெரும் விருட்சங்களாக வளர அனுமதிக்கப்படுகின்றது. இதனால் மாம ரத்தில் சகல கிளைகளுக்கும் போதிய அளவு சூரிய ஒளி கிடைக்காத காரணத்தினால் அவற்றின் ஒளித்தொகுப்பானது குறைவ டைந்து மாமரங்கள் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.
 
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான மரக்கிளைகளை கத்தரித்து முழுக்கிளைகள் மீதும் சூரிய ஒளியை பரவச் செய்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யப்பட்டது. தற்போது செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்கு செறிவான மாமரச் செய்கை எனும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த முறையில் மாமரங்களுக்கு இடையில் 10 க்கு 10 அடி என்னும் இடைவெளியில் நடுகை செய்யப்படும். அத்துடன் மரக்கன்றுகள் நடுகை செய்து அது வளர்ச்சியடைந்து ஏறத்தாழ இரண்டரை அடி உயரம் அடையும்போது உரிய பயிற்றுவித்தல் மேற்கொள்ளப்பட்டு மாமரத்தின் அதி உச்ச வளர்ச்சியாக 15 அடி உயரத்தில் வைத்து பராமரிக்கப்படும். இந்த முறையில் மாமரக்கன்றுகளுக்கு ஏற்படும் நோய், பூச்சி பீடைகளை இலகுவான முறையில் முகாமை த்துவம் செய்யமுடியும்.
 
இதனால் ஒரு மரத்திலிருந்து பெறப்படும் மாம்பழங்களின் உற்பத்தியும் அதி உயர்வாகக் காணப்படும். செறிவான மாமரச் செய்கை திட்டத்தின் கீழ் கைதடி, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய்,தெல்லிப்பழை புத்தூர் ,உரும்பிராய் போன்ற இடங்களில் 80 பயனா ளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் 110 தொம் ஈயேசி ஒட்டு மாங்கன்றுகள் படி  மொத்தமாக 8 ஆயிரத்து 800 கன்றுகள் 50வீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டன. 
 
நடுகை செய்யப்பட்ட மாமரக்கன்றுகளை உரிய முறையில் பயிற்றுவிப்பதற்கு கத்தரிக்கும் கருவிகள் 50 வீத மானிய அடிப்படை யில் தெரிவு செய்யப்பட்ட 24 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சொட்டு நீர்ப்பாசனத் தொகுதி 50 வீத மானிய அடி ப்படையில் 13 பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
 
இதன்முலம் இனிவரும் காலங்களில் மாமரசெய்கை யைஅதிகரிக்கமுடியும்.அதேவேளை சிறந்த தரமான மாம்பழங்களையும் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22527

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.