Jump to content

யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்


Recommended Posts

யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்

jaffna-hospital.jpg

சுகாதார நிறுவனங்களில் பிளாஸ்ரிக்      மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தல்

எதிர்வரும் 16.01.2017 திங்கள் முதல் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ஸ்ரிக்   மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’  கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதிமேதகு சனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சமூகத்தில் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் பாவனை பொதுவான விடயமாக மாறியுள்ளதுடன், அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் போலவே மக்களின் சுகாதாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்  தாக்கம் செலுத்துகின்றது.

தரவுகளின் படி நாளொன்றிற்கு எமது நாட்டில் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’ கிட்டத்தட்ட  10 மில்லியன் பாவிக்கப்படுவதுடன், நாளாந்தம் பிளாஸ்ரிக்   மற்றும் பொலித்தீன் தொன் 400 – 500 கழிவுப் பொருளாக வெளியேற்றப்படுகின்றது.

குளோரினேட்டட் பிளாஸ்ரிக்   மற்றும் பொலித்தீன் எரியும் போது வெளியாகும் டயொக்சீன் வாயுவை சுவாசித்தல் மற்றும் சில பொலித்தீன் பைகளில்; உள்ள இரசாயனப் பொருள் உணவுகளில் கசிவடைவதால்; பல சுகாதார பிரச்சினைகள் ஏற்;படுகின்றன. அதாவது புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு, ஏற்படும். மேலும் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டு நோய்வாய்ப்பட நேரிடும்.

பொதுமக்களில் பலர் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் என்பவற்iறை வீடுகளில் எரிக்கின்றனர். இது தறவாகும். சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் என்பனவற்றினை திறந்த நிலையில் எரிப்பதையும் மற்றும் குறைந்த வெப்பநிலையில் எரிப்பதையும் தவிர்க்குமாறு கூறுகின்றது. குறைந்த வெப்பத்தில் பிளாஸ்ஸ்ரிக்   எரியும் போது புற்று நோயை ஏற்படுத்தும் டயொக்சீன் மற்றும் பியூரான் வாயு வெளியேற்றப்படுவதால் சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் எமது நிறுவனத்திலும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கு பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றப்படுகின்றது.

1.      நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வைத்தியசாலை வளாகத்தினுள் பொலித்தீன் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை (துணியால் செய்த) பாவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

2.      உணவு கொண்டு வருவதற்கு ‘லன்ச் சீட்’ இற்குப் பதிலாக சாப்பாட்டு பெட்டிகளை (துருப்பிடிக்காத உலோகஃ உணவுத் தர பிளாஸ்ரிக்) வாழை இலை, வாழைமடல் போன்ற இயற்கையான சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கையான பொருள்களைப்  பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

 

3.      பிளாஸ்ஸ்ரிக்  , தண்ணீர் போத்தல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதை முடியுமான வரை தவிர்க்கவும். வைத்தியசாலையினால் சுத்தமான வடிகட்டிய குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4.      போத்தலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், பிளாஸ்ஸ்ரிக் கோப்பைகள், குடிபானக்குழாய் போன்றவற்றின் பாவனையை முடியுமானவரை குறைத்து நீர் வடிகட்டிகள், மட்பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், செராமிக் கோப்பைகளை பாவிக்கவும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் பெப்ரவரி  1 ஆம் திகதி முதல்  முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் அடுத்தவாரம் முதல் பொதுமக்களது பொதிகள் யாவும் பரிசோதிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுவார்கள்.

பணிப்பாளர்

http://globaltamilnews.net/archives/13396

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.