Jump to content

மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..!


Recommended Posts

மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..!

 

 

நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. GSP_-to-SL.jpg

இதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்க வேண்டுமாயின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், ஐரோப்பிய நாடாளுமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை நடைமுறைப்படுத்த சுமார் நான்கு மாத காலம் எடுக்கும் என என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தைத்த ஆடைகள் மற்றும் மீன் உற்பத்திகள் உட்பட இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூலம் ஐரோப்பிய நாடுகள் 66 வீத வரியை அறவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்த பின்னர், இவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதுடன் இந்த பொருட்கள் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15358

Link to comment
Share on other sites

அர்ப்பணிப்புக்களின் பிரதிபலன்; பிரதமர் - வெளிவிவகாரக் கொள்கையின் வெற்றி; ஜனாதிபதி

அர்ப்பணிப்புக்களின் பிரதிபலன்; பிரதமர் - வெளிவிவகாரக் கொள்கையின் வெற்றி; ஜனாதிபதி


 
 
மக்களின் உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மேற்கொண்டு அர்ப்பணிப்புக்களின் பிரதிபலனாக ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியல்ல என்றும் முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஆடைத்தொழில்துறை உள்ளிட்ட தேசிய தயாரிப்புகக்களை முழு அளவில் ஐரோப்பிய வர்த்தக சந்தையில் மீண்டும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் நாட்டில் ஏற்படும். நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஜி.எஸ்.பி.வரிச்சலுகை வழி வகை செய்யும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வரிச்சலுகை வலுவான சக்தியாக அமையும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
Link to comment
Share on other sites

மீண்டும் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ்

Sp10-19adecb15f94aaac496995975d23a0fb1022b061.jpg

 

(பா.ருத்­ர­குமார்)
ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை

ஐரோப்­பிய ஒன்­றி­யம் இலங்­கைக்­கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீள வழங்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை முன்­வைத்துள்­ளது. இலங்­கையில் யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களை வர­வேற்­றுள்­ள­தோடு மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்பில் நல்­ல­ாட்சி அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற செயற்­பா­டு­க­ளுக்கும் தனது ஆத­ரவை வழங்­கு­வ­தாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மனி­த­ உ­ரி­மைகள், சிறுவர் உரி­மைகள், தொழில் சூழல் உட்­பட 27 சர்­வ­தே­ச ­பி­ர­க­டனங்­களில் கைச்­சாத்­திட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தென இலங்கை வழங்­கி­யுள்ள உறு­தி­மொ­ழியைத் தொடர்ந்தே  ஐரோப்­பிய ஒன்­றியம் இந்த பரிந்­து­ரையை விடுத்­துள்­ளது. 

இது தொடர்பில் ஐரோப்­பிய ஒன்றியம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் பொரு­ளா­தார  அபி­வி­ருத்­தியில் ஜீ.எஸ்.பி. பிளஸ்  வரிச்­ச­லுகை முக்­கி­ய­மான பங்கு வகிக்­கின்­றது. ஆனாலும் இலங்­கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்­ச­லு­கையை வழங்­கு­வது தொடர்பில் தமது ஆட்­சே­ப­னை­களை ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றமும்,பேர­வையும் அடுத்த நான்கு மாதத்­திற்குள் வெளியி­டலாம். அதன் பின்­னரே இந்த பரிந்­துரை நடை­மு­றைக்கு வரும்­இந்த பரிந்­து­ரை­கா­ர­ண­மாக ஆடைகள் மீன்­பி­டிப்­பொ­ருட்கள் உட்­பட பல்­வேறு பொருட்கள் மீதான 66 வீத வரி நீக்­கப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.  

இதே­வேளை இது குறித்து கருத்து தெரி­வித்­துள்ள ஐரோப்­பிய ஓன்­றிய வர்த்­தக ஆணை­யாளர் சிசி­லியா மாம்ஸ்ட்ரோம்,

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்­ச­லுகை ஐரோப்­பா­விற்­கான ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­பதன் மூலம் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்தும். மேலும் இது நாங்கள் இலங்கை மனித உரி­மைகள், சட்­டத்தின் ஆட்சி, நல்­லாட்சி, சீர்­தி­ருத்­தங்கள் போன்­ற­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எந்த வகையில் உதவ விரும்­பு­கின்றோம் என்­ப­தையும் வௌிப்­ப­டுத்­து­கின்­றது. இலங்­கையின் புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் சர்­வ­தேச தரா­த­ரத்தில் அமை­வதை உறு­தி­செய்­வதும் அவ­சி­ய­மாகும்

ஜிஎஸ் பி வரிச்­ச­லு­கையை வழங்­கு­வதன் மூலம் இலங்­கையில் குறிப்­பிட்ட 27 பிர­க­ட­னங்­களும் சிறப்­பாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என நாம் கரு­து­கின்றோம் என அர்த்­தப்­ப­டுத்த முடியாது.

இந்த பிரகடனங்களில் மேலும் முன்னேற்றத்தை காண்பதற்கான சலுகையாகவே இது அமைகின்றது. அதேவேளை இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டாலும் இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Link to comment
Share on other sites

திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் : மனோ கணேசன்  

 

 

 

ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என எதிர்வரும் திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.Mano.jpg

 

 

 

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகங்கள் இன்று வினவிய போது அமைச்சர்கூறியதாவது,

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடை நிறுத்தப்பட்டு இருந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்கின்றது, கிடைத்து விட்டது என்ற கோஷங்கள் இலங்கை அரசியல் பரப்பில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுவான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (சிசிபிஆர்) என்ற விதிகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை கடைபிடிக்காமை தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கடந்த ஆட்சியில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இடை நிறுத்தப்பட்டது. இந்த நல்லாட்சியில் அது மீண்டும் வழங்கப்படும் என்ற கருத்து இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இலங்கையின் ஏற்றுமதி பெறுமதியில் அரைவாசியை அடையக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி மீண்டும் கிடைக்குமானால், இலங்கையின் ஆடை ஏற்றுமதி துறையில் மீள் எழுச்சியும், பெருந்தொகை வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்குமானால், அது இன்றைய இலங்கை பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

 

 

“உண்மையில் எனக்கு தெரிய ஐரோப்பிய ஆணைக்குழு, இலங்கைக்கு மீண்டும் சலுகைகள் வழங்க சிபாரிசு மட்டுமே செய்துள்ளது. இது இனி ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்ற தடைகளை கடக்க வேண்டும். ஆணைக்குழு என்பது, ஒன்றியத்தின் நிர்வாக குழு ஆகும். வரி சலுகைகள் வழங்க இன்னமும் முன்னோக்கி நகர வேண்டும். இந்நிலையில், இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, திங்கட்கிழமை எனது அமைச்சில் என்னை சந்தித்து பேச்சுகள் நடத்த உள்ளது. அதன்பின்னர் இதுபற்றி தெளிவான உண்மை நிலை பற்றி அறிந்துக்கொள்ள முடியும். அதுபற்றி அதன்பிறகு அறியத்தருகிறேன்”  

http://www.virakesari.lk/article/15423

Link to comment
Share on other sites

'

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீளவும் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக ஆபத்தான 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிபந்தனைகளுக்கு இணங்கி இது பற்றிய முன்னேற்றத்தை ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • பயங்கரவாதத்தடைச் சட்டத்தை ரத்து செய்து சர்வேதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக புதிய சட்டமொன்றை உருவாக்கி சர்வதேச சமூகத்திடம் அது குறித்து தெளிவுபடுத்தல்
  • கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விசாரணைகளை துரித கதியில் விசாரணைக்கு உட்படுத்தல்
  • அனைத்து முன்னாள் புலி உறுப்பினர்களது புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தல்
  • தடுப்புக் காவலில் வைக்கப்படுவோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கையின் குற்றவியல் சட்டத்தை திருத்தி அமைத்தல்
  • பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தல்
  • காணாமல் போனவர்கள் தொடர்பில் தனியான காரியாலயம் அமைத்தல்
  • மனித உரிமை செயற்பாட்டு பொறிமுறைமை ஒன்றை அறிமுகம் செய்தல்
  • பயங்கரவாத அமைப்புக்கள் நபர்கள் தொடர்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் மீளாய்வு செய்தல்
  • நிதி மோசடி விசாரணைப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியனவற்றினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை துரித கதியில் பூர்த்தி செய்தல்
  • ஊழல் மோசடிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஊடாக புதிய செயற்திட்டமொன்றை அறிமுகம் செய்தல்
  • புதிய அரசியல் அமைப்பின் ஊடாக மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்
  • புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருதல்
  • காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்தல்
  • தமிழ்மொழி பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 25 வீதமாக உயர்த்துதல்
  • முஸ்லிம் சட்டத்தின் ஊடாக் விவவாகம் செய்யக்கூடிய குறைந்தபட்ச வயது எல்லையை நிர்ணயம் செய்தல்

உள்ளிட்ட 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் இந்த நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்டு அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிக்கை வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை நிபந்தனைகள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவதாகவும் இந்த அரசாங்கத்தின் மீதான சர்வதேச நன்மதிப்பினை இது பறைசாற்றுவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/131782?ref=morenews

 
Link to comment
Share on other sites

10 minutes ago, போல் said:

58 நிபந்தனைகள்

கூட்டுதொகை 13வருது புத்தனை தினமும் கொல்பவர்களுக்கு இனி பிரச்சினைதான் இனி இலங்கையில் இருந்து வரும் மீன் டின் ,பிஸ்கெட்கள் லெமன் பப் என்பவற்றில் அவதனாமாக இருக்கணும் எல்லாம் மறு திகதி போட்டு ஐரோப்பிய சந்தைக்கு வரும் வேகமாக இதுகளை சாப்பிட்டு கான்சர் போன்ற நோய்களில் மாட்டுப்படவேண்டும்

இது பொய் என்று பின்னால் சில வன்னைகள் வந்து ஆடும் ஒரு கேள்வி ஒரு லெமன் பொப் இலங்கையில் 210ரூபா எப்படி இங்கு ஒரு பவுனுக்கு மூன்று தமிழ் கடைகளில் விற்கிறார்கள்?

அதே போல் சைனாவில் இருந்து வரும் கண்ட மாமிச வகைகளில் இருந்து சிலோன்மீ ன் டின் என்று உடுப்பு போட்டு  இங்கு வரும் வேண்டி சாப்பிடுபவனுக்கு மீன் போல் இருந்தால் சரிதானே 

Link to comment
Share on other sites

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படவில்லை-ஐரோப்பிய ஒன்றியம்
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படவில்லை-ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கைக்கு இன்னமும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் வழங்குவதற்கு ஐரோ ப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
 
எனினும், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்து விட்டதாக, அமைச்சர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
இதுகுறித்து, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியக அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில், “இது ஒரு பரிந்துரை தான். ஐரோப்பிய நாடாளுமன்றமும், பேரவையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டும்.
 
வரும் மார்ச் 12ஆம் நாளுக்கும், மே 12ஆம் நாளுக்கும் இடையில் தான் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்

http://onlineuthayan.com/news/22691

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.