Jump to content

காயமே இது பொய்யடா!


Recommended Posts

காயமே இது பொய்யடா!

வாஸந்தி

 

 
sasico_3115810f.jpg
 
 
 

நமது முன்னோர்கள் - சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப் புத்தாண்டு தினத்தன்றும் எனக்கு ஏற்பட்டிராத நிராசையும் கூச்சமும் அச்சமும் இந்த 2017- ம் விடியலில் எனக்கு ஏற்பட்டதற்கு எனது பேதமையே காரணம்.

'உலகமே ஒரு நாடக மேடை; எல்லோரும் நடிகர்கள்' என்றார் ஷேக்ஸ்பியர் நானூறு ஆண்டுகளுக்கு முன் - எல்லாமே மாயை என்று நமது சித்தர்கள் சொன்னதுபோல. எனக்குத் தத்துவம் தேவையில்லை. நான் நிகழ்காலத்தில் வாழ்பவள். என்னைச் சுற்றியிருக்கும் விஷயங்கள், மனிதர்கள், அரசியல் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவள். யதார்த்தம் என்பது எனக்கு நிதர்சனமான உண்மை. இன்று என்னுள் பீதி நிறைந்திருக்கிறது. என்னைச் சுற்றி நடப்பவை ஒரு சர்ரியலிச மௌனப் படம்போல இருக்கிறது. நிர்வாணமாக வலம் வந்த அரசனை திகைப்புடன் பார்த்து மௌனமாக நின்ற கூட்டம், நாடு முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டதாகத் திகில் ஏற்படுகிறது. என்ன நடந்தாலும் எல்லோரும் மௌனமாக நிற்கிறார்கள். தன்மானம் உள்ளவன் தமிழன் என்று யார் சொன்னது?ஆட்சிக்கு வந்தவர்களின் முதுகெலும்பு காணாமல் போய்விட்டது. இல்லை, அவர்களாகவே சந்தோஷமாகக் கழற்றி வைத்துவிட்டார்கள். நேற்று வரை வாய் பேசாமல், ஒரு சக்திவாய்ந்த நபருக்கு உதவியாளராக மட்டுமே இருந்ததாகச் சொல்லப்பட்டவர் காலில், ஒரு மாநில முதல்வர் விழுகிறார். முன்னதாக எல்லா அமைச்சர்களும் விழுந்தார்கள். நீங்களே எங்கள் தலைவி என்றார்கள். கட்சிக்காரர்கள் புதிய தலைவியின் போஸ்டருக்குப் பால் அபிஷேகம் செய்ததை நான் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்துபோனேன். கதைக்குள் கதை இருப்பதுபோல் அல்லவா இருக்கிறது?

புதிய பிம்பம்

அம்மா இல்லாவிட்டால் என்ன? அவர்களால் புதிதாக சின்னம்மாவை உருவாக்க முடியும். (சற்றுக் கவனியுங்கள் - அம்மா மாதிரியே அவர் நிதானமாக நடப்பதை; கழுத்து மூடிய ரவிக்கை அணிவதை; முடியை வலைக்குள் கட்டுவதை) இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டுமே சாமி! இதுவரை ஒரு வார்த்தை பேசாதிருந்த சசிகலா, கட்சிப் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றவுடனேயே மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட சொற்பொழிவைச் செம்மையாக ஆற்றி, அவரை நம்பி வந்த அமைச்சர்களின் நெஞ்சைக் குளிரவைக்கிறார். அவருக்கு எதையும் சொல்லித்தரத் தேவையில்லை, இனி. அதிகாரிகள் அதிகார மையத்தின் பக்கம் சாய்ந்து பழக்கப்பட்டுப்போனவர்கள். அது செய்வதெல்லாம் சரி என்று சொல்லத் தெரிந்துகொண்டவர்கள். அதுவே புத்திசாலித்தனம்.

மாற்றுக்கருத்தும் தேசத்துரோகமும்

டெல்லியில் நடக்கும் நாடகங்கள் சென்னையைக் காட்டிலும் மகா சாமர்த்தியத்துடன் நடப்பவை. 'உண்மைக்குப் பிறகு'என்கிற சொற்றொடர் இப்போது டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபதி ஆன பிறகு, அமெரிக்காவில் வலம் வருகிறது. அதாவது, வெற்றிகரமான அரசியல் வாதங்கள் உண்மையின் அடிப்படையில் வர வேண்டியதில்லை. சமூக வலைதளங்கள், சுட்டுரைகள் ஆகியவற்றில் அபிமானிகள் உண்மை சொல்ல வேண்டிய கட்டுப்பாடில்லாமல் அரசியல் யுத்தம் நடத்துகிறார்கள். நமது மோடி சர்க்காருக்கும் அது பொருந்தும். ஒரே வீச்சில் 86% கரன்ஸியைச் செல்லாததாக்கிய செயலுக்கு ஒரு தேசியப் போர்வையைப் போர்த்திவிட்டார்கள். அதை ஏற்காதவர்கள் எல்லாம் தேச விரோதிகள், எதிரி பாகிஸ்தானியர்களைப் போன்றவர்கள் என்றார்கள். உங்களது சிரமங்கள் தற்காலிகமானவை என்று காதில் பூச்சுற்றினார்கள். நாடாளுமன்றத்தில் விவாதத்துக்குப் பதில் சொல்லத் தயங்கிய பிரதமர், பொது மேடையில், காசு கிடைக்காமல் ஏடிஎம் வாசலில் தவம்கிடக்கும் பாமரனைக் கண்டு தான் பெருமிதம் கொள்வதாகச் சிலாகித்தார். என்னே உங்கள் தேச பக்தி என்றார் கண்ணில் நீர் மல்க. வரிசையில் நின்று 80 பேர் செத்துப்போனார்களா.. என்னே அவர்களது தியாகம்?!

எது நல்ல காலம்?

இந்த மாபெரும் வேள்வியில் இத்தகைய சோகங்கள் நடப்பது இயல்பு என்றார் கட்சிப் பிரமுகர் ஒருவர், தொலைக்காட்சி விவாதத்தில். சரியான செயல்திட்டம் வகுக்காததால் சிறு தொழில் நசித்துப்போகும், கையில் வாங்கும் காசை நம்பி இருக்கும் தினக்கூலிக்காரர்கள் - அமைப்பு சாரா துறையில் வேலையில் இருக்கும் 93% மாளாத அவதிக்குள்ளாவது அநியாயம் என்ற எதிர்கட்சிகளின் வாதங்கள் அவர்கள் செவிகளில் விழவில்லை. “ஆனாலும், ஒரு எதிர்ப்புக் குரல் வந்ததா, கறுப்புப் பணத்துக்கு எதிரான எங்கள் செயலைக் கேள்விகேட்க யார் துணிவார்கள்?” என்று ஆட்சியில் இருப்பவர்கள் கெக்கலிக்கிறார்கள்.

ஹார்வர்டு பொருளாதார நிபுணர்கள் அவர்களின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தால் அவர்களுக்குக் கவலையில்லை. விஷயம் அறிந்தவர்கள் எச்சரிப்பது தேசத் துரோகம் என்றானது. பிரதமர் ஒரு புனிதர் என்கிற பிம்பம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஒத்து ஊத ஒரு கூட்டம் எப்போதும் இருக்கிறது. பிரதமரின் மகத்தான சாதனை இது! பொதுமேடையில் மோடி கைகளை அகட்டி விரித்து நின்று பேச ஆரம்பித்தால், கூட்டம் மயங்குகிறது. நாவன்மை சக்தி வாய்ந்தது. அதுவே வெற்றிக்குத் தேவை!

நல்ல காலம் பிறந்துவிட்டது என்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டில் அமைச்சர்கள் நிம்மதியாக மூச்சுவிடுகிறார்கள். அவர்கள் விழுவதற்குப் பிரச்சினை இல்லாமல் புதிய கால்கள் கிடைத்துவிட்டன. நல்ல காலம் பிறந்துவிட்டது. அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/காயமே-இது-பொய்யடா/article9469895.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.