Jump to content

#ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா!


Recommended Posts

#ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா!

Obama

அமெரிக்க அதிபர் ஒபாமா சிக்காகோவில் ’Farewell’ உரையாற்றி வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது. அதிபராக ஒபாமா பேசும் கடைசி உரை என்பதால் ஒபாமாவுக்கு பிரியாவிடையளிக்க  ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். ஒபாமா பேசத் தொடங்கியதும், திரண்டிருந்த மக்கள் ’மேலும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருங்கள் ஒபாமா’, என்று கோஷமிட்டனர். அதற்கு சிரித்து கொண்டே மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஒபாமா பேசுகையில்,’ கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை. முன்பை விட அமெரிக்கா வலிமை அடைந்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்’, என்றார்.

தனது மனைவியை பற்றி பேசிய ஒபாமா,’ மிச்செல் .. கடந்த 25 ஆண்டுகளாக நீ என் பிள்ளைகளுக்கு தாயாகவும், எனக்கு மனைவியாகவும் மட்டுமல்ல..என் சிறந்த தோழியாக இருந்தாய். நீ என்னையும் நம் நாட்டையும் பெருமைப்பட செய்திருக்கிறாய். இனி வரும் தலைமுறையினருக்கு நீ சிறந்த முன்மாதிரியாக இருப்பாய்.!’, என்று நெகிழ்ந்தார் இந்த அமெரிக்காவின் நம்பிக்கை நாயகன்.

Obama

http://www.vikatan.com/news/world/77528-obamafarewell-obama-delivering-farewell-speech-praised-michelle.art

Link to comment
Share on other sites

இஸ்லாமியரிடம் பாகுபாடு வேண்டாம் - பிரியாவிடை உரையில் ஒபாமா

 
 

கடந்த 20008-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில், சிகாகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் .அமெரிக்க அதிபராக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

சிகாகோவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய ஒபாமா
 சிகாகோவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய ஒபாமா

தனக்கும், தனது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமாவுக்கும் ''எல்லாம் எங்கு தொடங்கியதோ'' , அந்த இடத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று தான் விரும்பியதாக தனது உரையில் ஒபாமா தெரிவித்தார்.

தனது பிரியாவிடை உரையை அமெரிக்க அதிபர் மாளிகைக்கு பதிலாக சிகாகோவில் நிகழ்த்தினார்.

நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற முற்போக்கான செய்தியை முன்வைத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு வயது 55.

அண்மைய அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை, டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு , சிகாகோவில் தனது பிரியாவிடை உரையை ஒபாமா நிகழ்த்தினார் .

''நமது நாட்டை அச்சறுத்தி வந்த தீவிரவாத சக்திகள் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளன'' என்று ஒபாமா அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அமெரிக்கா ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்கா முன்னேறியுள்ளதாகவும், தற்போது அமெரிக்கா ஒரு வலுவான நாடாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

''இந்த எட்டு ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவை தாக்கவில்லை'' என்று தனது உரையில் குறிப்பிட்ட ஒபாமா, அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து நாட்டின் ராணுவம் மக்களை காப்பாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ''ஆனால், அமெரிக்கர்களான நாம், நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் ஒரு பாலுறவுக்காரர்களை பாகுபடுத்தி பார்க்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-38579666

Link to comment
Share on other sites

இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

 

 

இன்னும் சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவிருக்கும் பராக் ஒபாமா, மக்கள் மத்தியிலான தனது கடைசி உரையை நேற்றிரவு ஆற்றினார். புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப்பின் பெயரைக் கூட உச்சரிக்காத ஒபாமா, ட்ரம்ப்புக்கான எச்சரிக்கைகளை தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டார்.

 

 

அவரது சொந்த ஊரான சிக்காகோவில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஒபாமா மேடையேறியபோது, “மேலும் நான்கு வருடங்கள்” என்று மக்கள் கூட்டம் ஒரு மந்திரம் போலத் தொடர்ந்து உச்சரித்தது. எவ்வளவு முயன்றும் அதை ஒபாமாவால் நிறுத்த முடியவில்லை.

“என்னை ஒரு நொண்டி வாத்து என்று நீங்கள் குறிப்பிடலாம். ஏனென்றால் நான் சொன்னதன் படி யாரும் நடந்துகொள்ளவில்லை. நொண்டி வாத்துக்கு அவ்வளவுதான் மரியாதை” என, நகைச்சுவையாக தனது பேச்சை ஆரம்பித்த ஒபாமா, கண்ணீருடன் தனது பேச்சை நிறைவுசெய்தார்.

“எனது ஆட்சிக்காலத்தில் எனக்குத் தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறேன் என்பதை உங்கள் மூலமாக அறிய முடிகிறது. எனினும், சில ஏமாற்றங்களும் இருப்பதை நான் அறிவேன். கடந்த எட்டு ஆண்டுகளில், உங்களுக்குத் தரப்பட்ட பல உறுதிமொழிகள் அவ்வண்ணமே நிறைவேற்றப்பட்டபோதிலும், சில உறுதிமொழிகளைக் காப்பாற்ற முடியாமல் போனதையும் நான் அறிவேன். 

“இந்நாட்டின் தலைமை இன்னும் சில நாட்களில் மாறப்போகிறது. ஜனநாயக முறையில் அதனை செயற்பட அனுமதித்தால் மட்டுமே அதன் பலம் மக்களாகிய உங்களுக்குப் புரியும். உங்களது அரசியல் நாகரீகமே நம் நாட்டு அரசியலில் பிரதிபலிக்கும். கட்சி, இன வேறுபாடுகள் இன்றி செயற்பட்டால் மட்டுமே மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முடியும்.

“இன்னும் பத்து நாட்களில் எமது ஜனநாயகத்தின் மாண்பை சர்வதேசமுமே பார்க்கப்போகிறது. இனம், சமயம், மொழி, பால் வேறுபாடுகள் இவை எவையும் அமெரிக்காவின் எந்தவொரு குடிமகனையும் பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளைத் தடுத்துவிடக் கூடாது. கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குற்றத் தடுப்புச் சட்டங்கள் என்பனவும் எல்லோருக்கும் சமமானதாகவே இருக்கவேண்டும்.

“நாம் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. அந்த இடத்தை அடைவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின்போது யாரையும் பாரபட்சமாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தப்பட்டால் குறித்த இடத்தை நம்மால் அடைய முடியாது போய்விடும். இதனால்தான் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் குறித்த பாகுபாடுகளை நான் வெறுக்கிறேன்.

“ஐஎஸ் பயங்கரவாதம் எமது மக்களைக் கொல்ல முயற்சிக்கும். ஆனால் அமெரிக்காவை அதனால் வெல்ல முடியாது. ரஷ்யா, சீனா போன்ற போட்டி நாடுகளால் உலக அரங்கில் எம்மைப்போல் செல்வாக்குச் செலுத்த முடியாது. ஆனால், நாம் நம் நாட்டு மக்களையே சிறுபான்மை என்று கூறிக்கொண்டு அவர்களை நசுக்கும் முயற்சியிலேயே ஈடுபடத் தொடங்கினால் இந்த நிலை மாறலாம்.

“எனது ஆட்சிக்காலத்தில் நீங்கள் தந்த ஆதரவாலும், ஒத்துழைப்பாலுமே என்னால் இவ்வளவு தூரம் இந்த நாட்டை நிர்வகிக்க முடிந்தது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது பணியின் தன்மையைப் புரிந்து என்னுடன் ஒத்துழைத்த எனது மனைவி மிஷேல், பிள்ளைகள் மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடேன் ஆகியோருக்கும் நன்றி” என்று கூறிய ஒபாமா தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே மேடையை விட்டு இறங்கினார்.

தனது பேச்சில், புதிய அரசு என்ற வார்த்தையை ஒபாமா குறிப்பிட்டபோதெல்லாம், கூடியிருந்த மக்கள் கூட்டம் “இன்னும் நான்கு ஆண்டுகள்” என்று கோஷமிட்டன. என்றாலும், “உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாது. ஒரு ஜனாதிபதியிடமிருந்து மற்றொரு ஜனாதிபதிக்கு அதிகாரம் கைமாறும்போது அதை அமைதியாக வரவேற்பதே நமது நாட்டின் பலம்” என்று குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/15329

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.