Jump to content

தினமும் ஷாம்பு போடவேண்டாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது.

* எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். பிரச்சினை எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடைந்து வரும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர் களும், முடியை சுருட்டிவிட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.

* ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்சரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.

* எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் இவர் களுக்கு சிறந்தது.

* வறண்ட ஆரோக்கியமான கூந்தலைகொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தல் மென்மையாகத் திகழ உதவும்.

* முடியை முதலில் தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும்.

* ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும்.

* தலையின் ஒரு பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிக மாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.

* பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும்.

* ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும்.

* ஷாம்பு போட்டு கூந்தலை கழுவி, தலையை துவட்டிய பின்பு கண்டிஷனர் பயன்படுத்தவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் மினு மினுப்பை கண்டிஷனர் தருகிறது.

* ஹேர் ஸ்பிரே மற்றும் ஜெல் பயன்படுத்துகிறவர்கள் எல்லா நாட்களும் ஷாம்பு பயன்படுத்தலாம்.

* சல்பேட் சேர்ந்த ஷாம்பு கூந்தலுக்கு அதிக வறட்சியை கொடுக்கும். அதனால் அதனை நேரடியாக பயன்படுத்தாமல் தண்ணீரில் கலந்து உபயோகியுங்கள்.

* பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.

* தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் கூந்தல் ஆரோக் கியமாகிவிடாது. முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளவேண்டும். 

 

 

நன்றி மாலை மலர் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா....
இந்தக் குளிருக்குள்ளை.. தினமும் குளித்தால்....  தடிமன், காய்ச்சல், இருமல்... வந்திடும். 
நாங்கள்... குளிக்கிறதே, கிழமைக்கு... மூன்று நாள் தான். (அதுகும் பொய்) tw_warning: :D:
அப்படி.. இருந்தும், "முடி" விழ ஆரம்பித்து  இருக்கு, :grin:
அதுக்கு... என்ன செய்யலாம். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.