Jump to content

“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன்


Recommended Posts

“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன்

தமிழ் இலக்கிய உலகில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் ஜெயமோகனும். ஒருமுறை ‘உயிர்மை’ புத்தக வெளியீட்டுவிழாவில் ‘ஜெயமோகனின் புத்தகம் கவிஞர் மனுஷ்யபுத்திரனை இழிவுபடுத்துகிறது’ என்று அந்தப் புத்தகத்தை மேடையிலேயே கிழித்தெறிந்தார் சாருநிவேதிதா. ஆனால், திடீரென்று தமிழ் சினிமாவில் வரும் திடுக்கிடும் திருப்பத்தைப் போல, ‘தம்பி ஜெயமோகன் ’ என்று உறவு பாராட்ட ஆரம்பித்தார் சாருநிவேதிதா. இருவருக்கும் இடையில் இணக்கம் நிலவும் சூழலிலும் இருவரும் ஒரே மேடையில் பேசியதில்லை. 

அந்த அதிசயமும் நிகழ்ந்தது சமீபத்தில்.  அராத்து எழுதிய ஆறு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஜனவரி 7-ம் தேதி  நடைபெற்றது. இதில்தான் ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் கலந்துகொண்டனர். இரு துருவங்களாக விளங்கும் இருவரும் கலந்து கொண்ட விழா என்பதால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. 

இந்த விழாவில் ஜெயமோகன் தனது சின்ன பேச்சில் கூட இலக்கியம், அறம், அரசியல், தமிழக மக்கள் அனைத்தையும் ஒரு வெளு வெளுத்துவிட்டுப்போனார். அதில் தன்னை விழாவுக்கு அழைத்த அராத்தையும் விடவில்லை. 

ஜெயமோகன்

அவர் பேசும் போது "இந்த விழாவில் கலந்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தி வெளியான போது சாருநிவேதிதாவுடன் ஒரே மேடையில் பேசக்கூடாது என்று மின்னஞ்சல்கள் நிறைய வந்தன, அதுவே என்னை இங்கு வரத்தூண்டியது. தமிழ்நாட்டில் ஒரு கெட்டபழக்கம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நூலைப் படிக்காமலே அது குறித்த கருத்து தெரிவிப்பது. அது மிகவும் ஆபத்தானது. மனிதகுல வரலாற்றிலேயே அதிகம் படிப்பது இப்போதுதான். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிநேரம் முகநூலில் படிக்கிறார்கள். நான் ஒரு வங்கியில் வரிசையில் நிற்கும் போது கவனித்தேன். அங்கு வேலை பார்க்கும் பெண் ஒரு மணி நேரம் முகநூலில் படித்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு படிக்கும்போது ஒரு நாவலை பற்றியோ சிறுகதையைப் பற்றியோ கருத்து தெரிவிக்கும் போது படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் என்னை ஏதோ தருமபுரம் ஆதினம் போல கருதுகிறார்கள். அறத்தைப் பற்றித்தான் எழுதவேண்டும் என்று அவசியமில்லை. இடுப்புக்கு மேலே வராமல்கூட எழுதுங்கள். எதுவாக இருந்தாலும் அதில் இலக்கியம் இருக்கவேண்டும். 

தமிழ்நாட்டில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் மக்களே மோசடி செய்கிறார்கள். குளத்துக்கரையில் ஒரு மணி நேரம் அமர்ந்துவிட்டு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். ஒரு அம்மாவை மகன் காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு செல்கிறார். சில மணி நேரம் கழித்து வந்து கூட்டி செல்கிறார். இப்படி மக்களை திருட அனுமதிப்பதால் தலைவர்களை 'அம்மா' என்கின்றனர். கிராமங்களில் உள்ள ஏழை எளியவர்கள் எல்லாம் நல்லவர்கள் நாம்தான் கெட்டவர்கள் என்கிற எண்ணம் நகரத்தில் உள்ளது. உண்மையில் அங்கிருந்துதான் நாணயமற்ற தன்மை உற்பத்தியாகிறது. இன்று 'சின்னம்மா"வின் முன் கைகட்டி நிற்பவர்களை அப்பாவிகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் ஏழைகளோ அப்பாவிகளோ அல்ல. அவர்களுக்கு தெளிவாக தொழில் தெரியும். மைக்கை அவர்கள் முன் நீட்டியவுடன் ' எங்களை வாழ வைத்த அம்மா.."என்கிறார்கள். அதன் அர்த்தம் 'பொதுச்சொத்தை திருடுவதற்கு அம்மா எங்களுக்கு அனுமதியளித்தார்' என்பதுதான் பொருள்” என்றார் காட்டமாக.

இந்த விழாவில் 'ஹாட் சீட்' எனப்படுகிற சரம் சரமான கேள்விகள் கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் எழுத்தாளர் சாருவை தொகுப்பாளர் கண்மணியும், ஜெயமோகனை சாரு நிவேதிதாவும் கேள்விகள் கேட்டனர். அதில் சில சுவையான கேள்வி-பதில்களின் தொகுப்பு..

கேள்வி : உங்களை நாயகனாக போட்டு ஒரு படம் எடுக்கிறார்கள். அதில் கதாநாயகியாக யாரைப் பரிந்துரைப்பீர்கள்? 

சாரு - பிரியங்கா சோப்ரா, அமிதாப் நடித்த 'சீனி கம்' போன்று எனக்கு 60 வயது பிரியங்காவிற்கு 20 என வைத்து படம் எடுக்கலாம். 

கேள்வி -இதுவரை எத்தனை பேரை லவ் பண்ணியிருக்கிங்க? 

சாரு - 15 -20 பேரை லவ் பண்ணியிருக்கேன். ஒரே ஒரு லவ் மட்டும் சக்ஸஸ் ஆகி கல்யாணத்தில முடிஞ்சிருக்கு. 

கேள்வி - உங்கள் கதைகளில் எதில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? 

சாரு - 'எக்ஸைல்' என்கிற எனது நாவலில் தான் அடல்ட்ரிக்கான வாய்ப்பு நிறைய உள்ளது. கமல் அதை சிறப்பாக செய்வார் என்பதால் அது அவருக்கு பொருந்தும். ரஜினிக்கு என்றால் 'காம ரூபக்கதைகள்' பொருத்தமாக இருக்கும். 

கேள்வி - தற்போது திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த ஊர் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? 

சாரு - கண்டிப்பாக மெக்ஸிகோ நாட்டு பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழகான பழுப்பு நிறத்தோல், அர்ப்பணிப்பு நிறைந்த குணம் ஆகியவை காரணம்.

கேள்வி - சாகித்ய அகாடெமி விருதுகள் வழங்கும் அதிகாரம் இருந்தால் யாருக்கு வழங்குவீர்கள்? 

சாரு - விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் விருதுகள் போல இருப்பதிலேயே வயதான இலக்கியவாதி ஒருவரை தேர்வு செய்வேன். 


கேள்வி - ஒருவரை இந்த உலகத்தைவிட்டு மறைய வைக்கும் வாய்ப்பு தரப்பட்டால் யாரை மறைய வைப்பீர்கள்? 

சாரு - இன்றைய தேதியில் மோடியைத்தான் மறைய வைப்பேன். அரசியல் காரணம் எல்லாம் கிடையாது. காசு இல்லாமல் கஷ்டப்படுவதினால் இந்த முடிவு. 

கேள்வி  - பெண்ணாக மாறினால் யாரை உங்கள் துணையாக தேர்வு செய்வீர்கள் ? 

சாரு - ஒருத்தர்லாம் கிடையாது. தமிழ் இலக்கியவாதிகள் அனைவருக்கும் லவ் அப்ளிகேஷன் போட்டு ஒரு வழி செய்து விடுவேன்.  முதலில் ஜெயமோகனைத்தான் காதலிப்பேன். 

அடுத்ததாக சாரு ரேபிட் ஸ்பீட் கேள்விகளை தொடுக்க ஜெயமோகன் அளித்த பதில்...

சாரு நிவேதிதா - நடிகர் கமலை அடிக்கடி சந்திக்கிறீர்கள். இருவருமே அதிகம் பேசிக்கொண்டே இருப்பவர்கள் என்பதால் அந்த சந்திப்பு எப்படி இருக்கும்? 

ஜெயமோகன் - அப்போது நான் அமைதியாக இருந்துவிடுவேன்

சாரு நிவேதிதா - ரஜினி, கமல் ஆகிய இருவரின் நெகடிவ் பாயின்ட்கள் என்ன? 

ஜெயமோகன் - ரஜினிக்கு அவரின்  பாப்புலாரிட்டி,  கமலுக்கு அளவுக்கு அதிகமான முன்னோடித்தன்மையினால் கிராமிய யதார்த்தம் புரியாமல் இருப்பது. 

http://www.vikatan.com/news/politics/77385-jeyamohan-speaks-politics-in-book-release-function.art?artfrm=editor_choice

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.