Jump to content

பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்


Recommended Posts

wirathu

 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது.

மியான்மாரில் வாழும் சிறுபான்மை ரொகிங்யா முஸ்லீம் சமூகம் மீதான மியான்மார் அரசாங்கத்தின் கண்டிக்கத்தக்க நடவடிக்கையே இதற்கான காரணமாகும். இந்த உண்மையை அறிந்த சிலர் இது தொடர்பில் அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய அரசிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சிறிலங்காவைப் போலவே, மியான்மாரில் வாழும் பௌத்தர்களுக்கும் சமாதானம் என்பது தொலைவிலேயே காணப்படுகிறது. இந்த மக்களின் ஒரு சாரார் யுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

சிறிலங்காவில் வாழும் சிங்கள பௌத்த அரசாங்கமானது 2009ல் 160,000 இற்கும் மேற்பட்ட இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த தமிழ் மக்களைப் படுகொலை செய்தது.

மியான்மாரில் வாழும் ரொகிங்யா முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையானது சிறிலங்காவில் இடம்பெற்றது போன்றே நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது இந்த மக்கள் மத்தியில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

மியான்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் ஆசிய நாடானது றக்கின் பௌத்தர்கள் வாழும் ஒரு நாடாகும். இந்த நாடானது பிரித்தானியாவின் கொலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரத்துவ ஆட்சியானது பல பத்தாண்டுகளாக மியான்மிரில் இடம்பெற்றது.time

மியான்மாரின் அரசியல் வரலாற்றில் றக்கின் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த ஆங் சாங் சூயி மிகவும் பிரபலமானவராவார். இவர் உண்மையில் ரொகிங்யா முஸ்லீம் சமூகத்திற்காக எதையும் செய்யவில்லை. அத்துடன் இவர் ஒடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட போது ரொகிங்யா முஸ்லீம் சமூகத்திற்காக குரல்கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் இவர் மீது மியான்மாரில் வெறுப்பும் ஏற்பட்டது. பூமியில் வாழும் மக்களில் மிகவும் துன்புறுத்தப்பட்ட மக்கள் என ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட ரொகிங்யா முஸ்லீம்கள் நாடற்ற மக்களாகவே வாழ்கின்றனர்.

மத வெறுப்புக்கள் மியான்மாரின் பௌத்தர்களின் தோற்றமாகவே எப்போதும் இருந்து வருகிறது என்பது 2012ல் ரொகிங்யா முஸ்லீம்களால் பௌத்த பெண்மணி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போது இவ்விரு மதத்தவர்களுக்கும் இடையிலான விரோதம் மேலும் தீவிரமுற்றது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் இறந்த உடலமானது ஒளிப்பதிவு செய்யப்பட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின்னர் ரொகிங்யர் அல்லாத முஸ்லீம் ஆண்கள் பலர் காடையர்களால் பேருந்து ஒன்றிலிருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டு வீதிகளில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர். பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பல மணித்தியாலங்களின் பின்னரே காடையர்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பர்மிய ரொகிங்யர்கள் மீதான இனப்படுகொலையானது பர்மிய றக்கின் பௌத்தர்களாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.  மறுபுறத்தே, அமெரிக்கா தன் மீதான செப்ரெம்பர் 11 தாக்குதலை முஸ்லீம் விரோதத்தைத் தூண்டுவதற்காகப் பயன்படுத்தியது.

இத்தாக்குதலை அமெரிக்காவின் கூட்டணி நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த விமானக் கடத்தல்காரர்களேயே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் அமெரிக்கா தனது முஸ்லீம் விரோதப் போக்கிற்கு செப்ரெம்பர் 11 தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டது.

அமெரிக்காவானது தனது செல்லப் பிள்ளையான ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய கூட்டணி நாடுகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தானின் பெருமளவான இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. 2001 செப்ரெம்பர் 11 அன்று அமெரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தலிபான் சிறிதளவேனும் பங்குபற்றாத போதிலும் ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடாத்தப்பட்ட யுத்தத்தில் 1.5 மில்லியன் ஈராக்கிய மக்கள் நிர்மூலமாக்கப்பட்டனர்.

அமெரிக்காவால் தலைமை தாங்கப்பட்ட மேற்குலக இராணுவப் படைகளின் அடுத்த தாக்குதல் மையமாக லிபியா காணப்பட்டது. இலவசக் கல்வி மற்றும் உபர் மலிவான எரிவாயு காணப்பட்ட லிபியா மீதான தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் இலக்காக சிரியா தெரிவு செய்யப்பட்டது.  அமெரிக்காவின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட டயஸ் என அழைக்கப்படும் ஈராக்கிய இஸ்லாமிய அரச கிளர்ச்சிவாதிகளின் (ISIL)  தாக்குதல்களாலும் சிரியா பாதிப்படைந்துள்ளது.

அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ISIL கிளர்ச்சிவாதிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகத் தெரிவித்தபோது அமெரிக்கர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

wirathu

‘ரமாடி என்கின்ற மத்திய ஈராக்கிய நகரானது அமெரிக்காவின் வசம் வீழ்ந்ததால் ஈராக்கிய அரசாங்கம் யுத்தத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே நான் கடந்த மாதம் மேலதிக நகர்வுகளில் ஒன்றாக அன்பர் மாகாணத்தைச் சேர்ந்த சுன்னி கிளர்ச்சி வாதிகள் உட்பட ISIL  படைகளுக்குப் பயிற்சி அளிப்பதை துரிதப்படுத்துமாறு நான் கட்டளையிட்டேன்’ என அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவின் அறிவித்தலையே கடந்த ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய அரசின் பல தீவிரவாதப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கும் என பெரும்பாலானவர்கள் எதிர்வு கூறினர். ஆனால் சுன்னி இஸ்லாமின் இரண்டு பிரிவுகளான வகாபி மற்றும் சலாபி போன்றன அமெரிக்காவிற்கு ஆதரவளித்தன.

மியான்மாரில் வாழும் ரொகிங்யா மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பல்வேறு குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். அந்தவகையில் அவர்களின் பாதிப்புக்களை நான் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்.

மியான்மாரில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. சில பள்ளிவாசல்களில் சிறுவர்களும் இருந்துள்ளனர். றோகின்யர்களின் முழுமையான கிராமங்களும் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய உடைமைகளும் அழிக்கப்பட்டன. மொபெட்களில் பயணிக்கும் பௌத்தர்கள் தமது கைகளில் கூரிய ஆயுதங்களுடன் றோகின்ய முஸ்லீம்களைப் படுகொலை செய்யும் காட்சிகள் பதிவாக்கப்பட்டுள்ளன.

பர்மாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும் நான் ஆவணப்படுத்தியுள்ளேன். மியான்மாரைச் சேர்ந்த பௌத்த தீவிரவாதிகள் தமது பௌத்த மதவாதத்தைக் காண்பிப்பதற்காக தமது மத அடையாளத்தை (swastikas)  தாம் அணியும் ரீசேட்டுக்களில் பொறித்திருப்பார்கள்.

swastika

மியான்மாரில் வாழும் றோகின்ய முஸ்லீம்கள் மீது பல ஆண்டுகளாக அந்நாட்டு பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராகவே தற்போது ISIL  தீவிரம் பெற்றுள்ளது. இத்தீவிரவாத அமைப்பிற்குள் தற்போது றோகின்ய முஸ்லீம்கள் உள்வாங்கப்பட்டு மியான்மாரின் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

ஆனாலும் றோகின்ய முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை என மியான்மார் அரசாங்கம் மறுத்து வருகிறது.

மியான்மாரின் பௌத்த அடிப்படைவாத  தலைவராக விளங்கும் விராது என்பவர் முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்களைக் குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.

2013 ஜூலை மாதம் வெளியாகிய ‘ரைம்’ சஞ்சிகையின் முகப்பில் விராதுவின் முகம் பொறிக்கப்பட்டிருந்ததுடன் ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ எனவும் தலைப்பிடப்பட்டிருந்தது.

ஆனாலும் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த சஞ்சிகையின் பதிப்பின் முகப்பில் ஒரு சுவரை மூன்று பேர் வர்ணம் தீட்டுவது போன்ற காட்சி பதிவாக்கப்பட்டிருந்ததுடன் அதன் கீழ் ‘எங்களை சேவை எப்படிக் காப்பாற்ற முடியும்’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

நவீன வரலாற்றை அமெரிக்கர்கள் குழிதோண்டிப் புதைக்கின்றனர் என்பதற்கு இதைவிட வேறெந்த சிறந்த சாட்சியமும் இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். இவ்வாறான நடைமுறை காரணமாகவே அமெரிக்கர்கள் அறியாமையில் வாழ்கின்றனர். இதனாலேயே ISIL மியான்மாரை நோக்கி வருவதுடன் முற்றிலும் வேறுபட்ட பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆங்கிலத்தில் – Tim King
வழிமூலம்      – Salem-News
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2017/01/09/news/20563

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.